"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, August 13, 2020

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் (1)

 அன்பார்ந்த மெய்யன்பர்களே...


நம் தளம் வாயிலாக அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தர்மம்,உதவி என அன்னதானமும், மகேஸ்வர பூசையும் செய்து வரும் தயவு சித்தாஸ்ரமம் நிகழ்வுகளை இங்கே அள்ளித் தெளிக்க இருக்கின்றோம். குருவருளால் தான் இந்தப் பதிவு இங்கே அருளப்படுகின்றது.

அந்த காலத்தில் சிவனடியார்கள் ஏழைகளின் வீட்டிற்க்கு சென்று சாப்பிடுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் பல பணக்காரர்கள் தவம் கிடைப்பார்கள் சிவனடியார்கள் நம்ம வீட்டிற்க்கு வந்து உணவு அருந்திவிட்டு செல்லமாட்டாரா?  என்று பார்த்துக்கொண்டு இருக்கையில், ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாத வீட்டிற்க்கு சென்று உணவை கேட்பார்கள். அந்த ஏழையும் அவர்களின் கையில் கிடைத்த உணவை கொடுத்து சாப்பிடச்சொல்லுவார்கள்.சிவனடியார்கள் சந்தோஷத்தோடு  அதனை சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு சென்றுவிடுவார்கள்.

சிவனடியார்களிடம் இருக்கும் சக்தி அந்த வீட்டில் இருந்த அனைத்து தரித்திரத்தையும் விரட்டிவிடும். பல ஜென்மங்களில் இருந்து வந்த கர்மா அனைத்தும் விலகிவிடும். ஒரு கோடி ஆத்மாக்களுக்கு செய்யும் அன்னதானம் ஒரு சாதுவிற்க்கு நாம் செய்யும் அன்னதானத்திற்க்கு சமம்.
உங்களின் வீட்டிற்க்கு உண்மையான ஆன்மீகவாதியை அழைத்து சாப்பாடு போடவேண்டும். குறிப்பாக அவர்களுக்கு சாப்பாடு தான் போடவேண்டும். கடையில் இருந்து சாப்பாடு வாங்கி போடாதீர்கள். உங்களின் வீட்டில் அமர்ந்து அவர்கள் சாப்பிடவேண்டும். சாப்பாடு போடும் நேரத்தில் உங்களின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு இருக்கவேண்டும்.

ஒரு உண்மையான ஆன்மீகவாதிக்கு மட்டும் சாப்பாடு போட்டுவிட்டால் அந்த ஆன்மீகவாதி நினைத்தால் கூட உங்களுக்கு வரும் செல்வத்தை தடைசெய்யமுடியாது.செல்வம் என்பது இங்கே பணம் மட்டுமல்ல. அதனையும் தாண்டியதே. ஆன்மீகவாதிகளிடம் இருக்கும் சக்தி உங்களுக்கு மிக உயர்ந்த ஒரு ஆசியை வழங்குகிறது.உங்களிடம் இருக்கும் உணவை இன்முகத்தோடு அவர்களுக்கு நீங்கள் போடும்பொழுது அவர்களின் முழுசக்தியும் உங்களுக்கு கிடைக்கும்.இதனை நீங்கள் செய்தால் கோவிலுக்கு கூட போகதேவையில்லை.

இதில் என்ன ஒரு விஷேசம் என்றால் சம்பந்தப்பட்ட உண்மையான ஆன்மீகவாதி உங்களை வாழ்த்துவதைவிட அவர்களிடம் இருக்கும் சக்தி தான் உங்களை வாழ்த்தும்.எத்தனையே ஆன்மீகம் சம்பந்தப்பட்ட செயலில் நீங்கள் இறங்கி இருப்பீர்கள். இதனை நீங்கள் செய்தது உண்டா? செய்யவில்லை என்றால் உடனே செய்யுங்கள்.உண்மையான ஆன்மீகவாதிகளை கூப்பிட்டு சாப்பாட்டை போடுங்கள். செல்வ வளம் உங்களின் வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.எதிலும் முன்னேற்றம் இல்லை அனைத்தும் தடைகள் தான் இருக்கிறது என்று நினைப்பவர்கள் உடனே இதனை செய்து பாருங்கள். அதிர்ஷ்ட காத்து உங்களை நோக்கி வீசும்.இது தான் அன்னதானத்தின் சூட்சுமம், மகேஸ்வர பூசையின் மகத்துவமும் ஆகும்.

இங்கு நடைபெறும் அன்னதானம் பற்றி பேசுவதா? இல்லை மகேஸ்வர பூசை பற்றி பேசுவதா? இரண்டும் அருளோடு செய்யப்படுகின்றது.

                                         

31.07.2020 அன்று பிறந்த நாள் கொண்டாடிய Dr.ஜோதிஅக்பர்சாமி அவர்களின் திருக்கரங்களால் அன்னசேவை சாதுக்களுக்கு செய்யப்பட்டது. அந்த அற்புதக்காட்சிகளை கீழே தருகின்றோம்.






அடுத்து ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஆசீர்வாதம் கிடைத்தது. 


                                             

இந்த கொரோனா தொற்றுக்காலத்திலும் சமூக இடைவெளியுடன் தினந்தோறும் மூன்று வேளைகளிலும் அன்னசேவை தொடர்ந்து இங்கே நடைபெற்று வருகின்றது என்றால் அன்னபூரணியின் பரிபூரண ஆற்றல் இங்கே உள்ளது என்று உணர்த்தப்பட்டு வருகின்றது.













                                           


அடுத்து 2018 ஆண்டில் செய்த சில அன்னசேவை துளிகளை இங்கே பகிர்கின்றோம்.

9.4.18 இட்லி,சாம்பார், பொங்கல், 75 சாதுக்களுக்கு மாலை உணவு வழங்கப்பட்டது.





13. 4.2018  அன்று மாலை மூக்குப்   பொடி சாமி அன்னதானம் இட்லி சாம்பார் கிச்சடி என 68 சாதுக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

















15. 4.2018 அன்று மஹேஸ்வரபூஜை M,Kகுரு.சுதா.ஆஹாஷ் அவர்களை நடத்தப்பட்டது.அவர்களுக்கும் நம் நன்றி.





16.4.18 அன்று மஹேஸ்வரபூஜை பெங்களூர் சதீஸ் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.







இதே போன்று  17.4.18 அன்று மாலைப்பொழுது அன்னதானம் இட்லி,தோசை,சாம்பார்,தேங்காய் சட்னி என  79 சாதுக்களுக்கு வழங்கப்பட்டது.18.4.18 அன்று  இனிப்பு ... லட்டு,இட்லி.. சாம்பார்,சப்பாத்தி ... குருமா என 77. . சாதுக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


19. 4. 2018 அன்று மாலை அன்னதானம் இட்லி கிச்சடி,சாம்பார் என 75  சாதுக்களுக்கும் ,20. 4. 18 அன்று மாலை அன்னதானம் இட்லி,தோசை,சாம்பார்,தேங்காய் சட்னி என 82  சாதுக்களுக்கும் 21,04,2018  மாலைப்பொழுது அன்னதானம் இட்லி.... சாம்பார் ...... சப்பாத்தி ......விஜிடபிள்குருமா..
என 80,,,,,,,சாதுக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. இதே போல் மாலை உணவு அன்னதானம் தினந்தோறும் வெவேறு உணவு வகைகளாக வழங்கப்படுகின்றது. பார்ப்பதற்கு மிக எளிமையாக தோன்றும்.அருகில் இருந்த்து பார்த்தால் தான் இதன் மகிமை புரியும்.மாலை அன்னதானத்தோடு உணவுப் பொட்டலங்களில் திருஅண்ணாமலை ராஜ கோபுரம் அருகில் சென்றும் வழங்கி வருகின்றார்கள்.இது நித்தியமாக நடைபெற்று வருகின்றது.சுமார் 150 பார்சல் உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

06.05.2018 அன்று மஹேஷ்வர பூஜை Dr.ஜோதிஅக்பர்சாமி அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது. Dr.ஜோதிஅக்பர்சாமி அவர்களுக்கு நம் தளம் சார்பில் நன்றி.

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)

- மீண்டும் மற்றொரு பதிவில்  மீண்டும்  தொடருவோம்.

மீள் பதிவாக :-

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_11.html

அறம் செய்ய விரும்பு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_57.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

 இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

 தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html

  நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

No comments:

Post a Comment