"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, May 30, 2021

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் 121 ஆவது குருபூஜை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

வைகாசி மாதம் என்றாலே திருவிழாக்கோலம் தான் என்று தோன்றுகின்றது. வைகாசி விசாகம் முருகப் பெருமானின் அவதாரத் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. அடுத்து வைகாசி ரோஹிணி ஸ்ரீலஸ்ரீ வாத்தியார் சுவாமிகள் குரு பூஜை , வைகாசி அனுஷம் மகா பெரியவா குரு பூஜை, வைகாசி மூலம் திருஞான சம்பந்தர், திருநீலநக்க நாயனார் குரு பூஜை என சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைய வைகாசி தேய்பிறை ஷஷ்டியில் அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு  பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் குரு பூஜை பதிவும் கண்டோம். இந்த வரிசையில் இன்றைய வைகாசி திருவோணத்தில் திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை பதிவு இனி பார்க்க உள்ளோம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் திருச்சியில் ஆலய தரிசனம் செய்தோம். அதில் சில சித்தர் கோயில்களுக்கு சென்றோம். இவை போன்ற சித்தர் கோயில்களுக்கு நாம் ஏதேனும் புண்ணியம் செய்தாலோ அல்லது குருவருள் இருந்தாலோ தான் செல்ல முடியும். சரி..வாருங்கள் ... குழுமியானந்த சுவாமிகள் பற்றி உணர்வோம். பதிவில் சில அற்புத தரிசனக்காட்சிகள் இணைத்துள்ளோம்.



திருச்சி வரகனேரியில் பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் திருக்கோயில் உள்ளது, சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் 2015 ஆண்டில் திருப்பணிகள் நிறைவு பெற்று, குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதனை நாம் நம்மை வரவேற்கும் திருக்கோயிலின் கோபுரம் பார்த்தே அறிய முடிகின்றது. 
உள்ளே சென்றதும் விநாயகரை வணங்கி வழிபட்டு , நம் ஐயாவின் அருள் பெற நேரே செல்லலாம். பொதுவாக சித்தர் பீடம் சென்றால் பொதுப் பிரார்த்தனை வைக்கவும். அனைத்து சித்தர்களும் அருளை வாரி வாரி வழங்கவே காத்திருக்கின்றார்கள். நாம் தான் அவர்களிடம் சென்று ஏதேனும் மாய மந்திரம் போடுவார்களா? என்று தேடி வருகின்றோம். சித்தர்கள் இவற்றுக்கெல்லாம் அப்பாற் பட்டவர்கள். நம் பிரச்சினை எப்போது தீரும் என்று நினைக்காது, அவர்களிடம் பூரண சரணாகதி அடையுங்கள். மெல்ல,மெல்ல நம் நிலை மாறுவதை நீங்கள் அனுபவத்தால் உணர முடியும். 

தங்கள் அருகில் உள்ள சித்தர் உயிர்நிலை கோயில்களுக்கு குறிப்பிட்ட ஒரு நாளில் 7 வாரம் சென்று பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டு வாருங்கள். முடியாதவர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் உதாரணமாக நல்ல குரு கிடைத்து ஆன்மிக நாட்டம் பெற்றிட வியாழன் அன்று காலை பிரம்மமுகூர்த்தம் அல்லது மாலை 5 முதல் 7 மணி வரை ..இதே போல் தொடர்ந்து 7 வாரம் அசைவம் தவிர்த்து வழிபட்டு வருதல் நலம். இதே போல் எந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் சித்தர்களை,ஜீவன் முக்தர்களை கைப் பிடியுங்கள், பின்னர் அவர்களே தங்களை விடாப் பிடியாக பிடித்துக் கொள்வார்கள். 

முதலில் நீங்கள் உங்கள் கையை,அவர்களின் கையோடு பிடிக்க வேண்டும். பின்னர் அவர்கள் நம்மை பிடித்து விட்டால், அது தலைமுறை தோறும் தொடரும். நாம் பிடித்தால் கூட விட்டு விடுவோம். ஆனால் அவர்கள் பிடித்தால் நம்மை விடமாட்டார்கள்.இது தான் சித்தர்களின் கருணை நிலை.


உள்ளே சென்று கணபதியையோ வணங்கினோம். அப்படியே அருகிலேயே ஐயாவின் அருள்நிலை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


மேலே காணும் காட்சியில் ஐயாவின் திருமுகம் ஒளி வெள்ளத்தால் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. நாமும் மறுபடியும், மறுபடியும் காட்சியை பிடித்து பார்த்தோம். ஆனால் ஒளியின் அருளில்...ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் தரிசனம் நமக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது.



நம் உடல் சிலிர்த்தது. பின்னர் அன்று காலை நடைபெற்ற தீப ஆராதனை கண்டு திளைத்தோம்.





அந்த இடமே கருணை மழையில் நனைந்து கொண்டிருந்தது. குருவின் கால் பட்ட இடம் தான் கைலாயம். கையில் உள்ள பணம்,பொருள் இல்லாது( கையில் உள்ளது லாஷ் ஆனால் தான் கைலாஷ் நினைவிற்கு வரும் ) போனால் தான் நமக்கு கைலாயம் தோன்றுமோ? இங்கு மனம் நுண்ணிய அதிர்விற்கு செல்கின்றது. மனக்கசடுகள், மன அழுக்குகள் நீங்குவதை இங்கே கால் வாய்த்த உடனே உணரலாம்.




அப்படியே கோயில் வலம் வரும்போது விநாயகர் அகவல் படித்தோம். தில்லையின் கூத்தனையும், அகிலம் ஆளும் அன்னையையும் தரிசித்தோம். மீண்டும் ஒருமுறை குழுமியானந்தர் தரிசனம் பெற்றோம்.இப்போதும் ஒளி ரூபமே.








காண்பதற்கரிய, கிடைத்தற்கரிய சுவாமிகளின் திருவுருவம் கண்டோம். இதற்காகத் தான் நமக்கு ஒளி தரிசனம் கொடுத்தீரா? என்று மனதுள் கேட்டோம். பதிவின் ஆரம்பத்திலே  பிர்மரிஷியா இல்லை பிரம்மரிஷியா? என்று கேள்வியோடுதான் துவக்கினோம். விடை மேலே கிடைத்து விட்டது. 






வள்ளலார் தரிசனம், நால்வர் அருள்நிலை, திருமுறை வழிபாடு கண்டோம். 
பிர்மரிஷி குழுமியானந்த சுவாமிகளின்  மடாலயத்தில் மாதாந்திர திருவோணம்,மாதாந்திர பூசம், அமாவாசை ஆகிய   நாட்களில் பகல் 12 மணி அளவில் வழிபாடு நடைபெற்று சுமார் 700 பேர் முதல் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்த அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பக்தர்களால் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

கோவில் காலை 06.30 மணி முதல்  11.30 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் 08.00 மணிவரையும் திறந்திருக்கும். காலை  06.30 மணி,காலை  10.30 மணி,மாலை  06.30 மணி,இரவு   08.00 மணி என நான்கு கால பூசைகள் இங்கே செய்யப்பட்டு வருகின்றது.

மாதாந்திர திருவோணம்,  மாதாந்திர பூசம்,  மாதாந்திர அமாவாசை, திருக்கார்த்திகை,  பிரதோஷம், மாதாந்திர பௌர்ணமி,  சங்கட ஹர சதுர்த்தி ஆகிய நாட்களில்  சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் வழிபாடும் நடைபெற்று வருகிறது.வியாழக்கிழமை தோறும் குரு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதுசமயம் ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகளின் வார வழிபாட்டு  குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகிறது. 


சுவாமிகள்  ஜீவ சமாதி   அடைந்த நாளான  தமிழ் வைகாசி  மாதம் திருவோணம் நட்சத்திரம் அன்று மகா குருபூஜை  வருடா வருடம் மிக சிறப்பாக 3 நாட்கள்  விழாவாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்களும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனையும் பொதுமக்களுக்கு  அன்னதானமும் விமரிசையாக  நடைபெற்று வருகிறது. இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும்  சுவாமிகளின் 121 ஆவது குருபூசை விழா இன்று  31/5/2021 திங்கட்கிழமை நடைபெற உள்ளது. தற்போதுள்ள பெருந்தொற்று காரணமாக எளிமையிலும் எளிமையாக இன்று நடைபெற உள்ளது.


பொதுவாக  மேற்படி விழாவானது மூன்று நாட்கள் களை கட்டும். மூன்று நாட்களும்  பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். ஏன் மூன்று நாட்களும் இன்னிசை நிகழ்ச்சி என்றால் சுவாமிகளிடம் வந்து பிரார்த்தனை செய்தால் நல்ல குரல் வளம் பெற்று பாடகர்களான வருவார்கள் என்பது உறுதி. தியாகராஜ பாகவதர் போன்ற பாடகர்கள் இங்கு வந்து சுவாமிகளின் அருள் பெற்ற பின்னரே, கலைத்துறையில்  உச்சம் தொட்டார்கள் என்பது செவி வழி செய்தி ஆகும்.

அன்பர்கள் வீட்டில் இருந்தபடியே ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் நாமம் சொல்லி , மனதில் இருத்தி  குருவருள் பெறுக. நாமும் நம் தளம் சார்பாக நம்மால் முடிந்த கைங்கர்யத்தில் இணைய குருவிடம் வேண்டுகின்றோம். அருகிலேயே ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் தரிசனம் பெற்று வரலாம்.

தொடர்புக்கு :

குழுமிகரை, வரகனேரி,(பொன்னையா மேல்நிலைப் பள்ளி அருகில்) திருச்சிராப்பள்ளி 620 008, தமிழ்நாடு, இந்தியா

Ph: 0431-34268547  E.Mail : kulumiananthaswamy@gmail.com

 - அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.

 ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் 184 ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/05/184.html

 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html


நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 22.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/22022021.html

பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை 13 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் - 28.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/13-28022021.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருமாலிருஞ்சோலை தரிசனம் பெறலாமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_19.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சோலைமலை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_88.html

சோலைமலை வந்து கந்த பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_20.html


களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_23.html

இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html 

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

No comments:

Post a Comment