"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, May 20, 2021

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மிக நீண்ட நாட்கள் கழித்து உங்கள் அனைவரையும் இன்றைய பதிவின்  மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டில் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி, பல தடைகளோடு அன்றாட வாழ்க்கையில் இருந்து வருகின்றோம். இப்படி ஒரு அசாதாரண சூழலை நாம் சந்திக்க போகின்றோம் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையில் லோக க்ஷேமம் வேண்டி தினசரி பிரார்த்தனை செய்து கோளறு பதிகம் ஓதி, குருவிடம் சரணாகதி அடையுங்கள். இங்கே மேலும் சில முக்கிய செய்திகளையும் இங்கே பகிர உள்ளோம்.

இன்றைய நன்னாளில் அகத்தியர் வழியில் நம்மை வழி நடத்தி வரும் பொதிய முனிப் பரம்பரை சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா திரு R.V. வெங்கடராமன் சுவாமிகள் பற்றி காண இருக்கின்றோம். 

நாம் அகத்திய வழியில் செய்த பயணத்தில் நம்மை வெகுவாக ஸ்ரீ அகஸ்திய விஜயம் என்ற மாதாந்திர புத்தகம் ஆகும். வழக்கம் போல் நம் தேடல் தொடர்ந்தது. இந்த ஸ்ரீ அகஸ்திய விஜயம் புத்தகம்  மூலம் பல செய்திகள் அறிந்து கொண்டோம். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு விதமாக செய்திகள் இருக்கும். பின்னர் நாம் திருஅண்ணாமலை கிரிவலம் செல்லும் போது ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் இருப்பது கண்டோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இங்கே தரிசனம் பெற்றும் வருகின்றோம். 









நமது உலகிற்கு மட்டுமல்லாது நாம் காணும் எல்லையற்ற எல்லா உலகங்களுக்கும்,கிரகங்களுக்கும், நட்சத்திர மண்டலங்களுக்கும் ஆன்மீக மையமாக இருப்பதே திருஅண்ணாமலையாகும். எல்லா இருப்பிடத்தையும் இதை மையமாகக் கொண்டே கூற வேண்டும். எந்த இடத்திலிருந்தும் வான்வெளி மார்கமாகச் செல்பவர்கள் (astral travel) திருஅண்ணாமலையையே தொடக்க அடையாளமாக (point of origin) வைத்துக் கொள்வார்கள். இருப்பினும் தற்கால ஆன்மீக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திருஅண்ணாமலைக்கும் விலாசம் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் இதைப் புனிதமான தென்னிந்தியாவில் உள்ள தமிழ் நாட்டின் ஒரு ஊராகக் குறிப்பிடுகின்றோம்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்குத் தெற்கே சுமார் 210 கி.மீ. தொலைவில் உள்ளது திருஅண்ணாமலை என்னும் எழில் நகரம். திருஅண்ணாமலை என்பது இங்கு ஊரையும் குறிக்கும், பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் அடிமுடி காணாமுடியாமல் நின்ற ஆதிசிவனின் திருமேனியான திருஅண்ணாமலை என்னும் மலைக் குன்றையும் குறிக்கும். திருஅண்ணாமலையைச் சுற்றி வரும் கிரிவலப் பாதையில் எட்டுத் திசைகளிலும் எட்டு லிங்கங்கள் உள்ளன. இவற்றில் வாயு லிங்கத்திற்கும் குபேர லிங்கத்திற்கும் இடையே அமைந்துள்ளது நமது ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்.

ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் ஸ்தாபகர் ஜோதி அலங்கார பீடாதிபதி திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா திரு R.V. வெங்கடராமன் அவர்கள். 


திரு வெங்கடராமன் அவர்களின் குருநாதர் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமி அவர்கள். தமது குருநாதரிடம் பல்லாண்டுகளாகக் கடுமையான குருகுல வாசம் பயின்று அவருடைய திருவாக்கின்படி அவர் சுட்டிக் காட்டிய இடத்திலேயே உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும், எல்லா உயிரினங்களுக்கும் ஆன்மீகப் பணியாற்றுவதற்காக இந்த ஆன்மீக மையத்தை உருவாக்கி உள்ளார்கள். அன்பு என்னும் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே ஸ்ரீலஸ்ரீ லோபா மாதா அகஸ்தியர் ஆஸ்ரமம். திருஅண்ணமலையைப் பணிந்து நிற்கும் இந்தத் தெய்வீக ஆஸ்ரமத்தின் ஆணி வேராகவும், மரம், கிளை, இலை, மலர், காய், கனி என அனைத்துமாக இருப்பவரும் திரு வெங்கடராமன் அவர்களே.

திரு வெங்கடராமன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தெய்வீகப் பட்டங்கள் யாவுமே மனிதர்களாலோ, ஏன் தேவர்களாலும் கூட அவருக்கு அளிக்கப்பட்டதல்ல. இந்தப் பட்டங்கள், அடைமொழிகள் யாவும் சித்தர்களால் அளிக்கப்பட்டவையே. இந்த அடைமொழிகள் ஒவ்வொன்றுக்கும் ஆழ்ந்த ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு. இவை எல்லாம் நமது குருநாதரின் இப்பூவுலக அவதார தத்துவத்தையும் அவரின் ஆதி உலகத் தோற்ற விளக்கங்களையும் நமக்கு எடுத்துரைப்பவையே.

இவற்றில் சில தத்துவங்களை மட்டும் இங்கே விளக்குகிறோம்.
ஜோதி என்றால் அக்னி, வெளிச்சம், ஞானம், ஆத்மா என்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு. திரு வெங்கடராமன் அவர்கள் சாதாரண மானிட உடல் தரித்தவர் அல்ல. மகான்களுக்கு உடல் என்ற துõல சரீரம் கிடையாது. மற்றவர்கள் கண்களுக்கு அவர்கள் உடலோடு இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறார்கள். அவ்வளவே.
திரு அண்ணாமலை ஜோதி என்று சொன்னால் சுயம்பிரகாசமாய்த் தானாய் தோன்றியது என்றுதானே பொருள். அவ்வாறே சுயம்புவாய், தான் தோன்றியாய், ஆரம்பமோ, முடிவோ இல்லாத, எல்லை இல்லாத அக்னிப் பெருஞ் சுடர் ஜோதியே திரு வெங்கடராமன் என்ற ஜோதி ஆகும்.

திரு வெங்கடராமன் அவர்கள் திருக்கயிலாயப் பொதிய முனிப் பீடத்தை அலங்கரிக்க வந்த உத்தமப் பெருந்தகை ஆவார். அவர்கள் மிக மிகப் புனிதமான திருக்கயிலாயப் பொதிய முனிப்பரம்பரையின் பீடாதிபதியாய்ச் சித்தர்களால் நியமனம் செய்யப்பட்டவுடன் அப்புனிதமான சித்தர் பரம்பரை மேன்மேலும் எல்லையில்லாப்புனிதத்துவத்தை அடைந்தது என்பதை அவருடைய அலங்கார பீடாதிபதி என்னும் சிறப்பான பட்டம் சுட்டிக் காட்டுகின்றது.

திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரையின் 1001வது குரு மகா சன்னிதானமே திரு வெங்கடராமன் அவர்கள். இதன் தலைமைப் பீடாதிபதி ஸ்ரீஅகஸ்தியர் ஆவார். ஸ்ரீஅகஸ்தியரை முதலாகக் கொண்டு பல்லாயிரக் கணக்கான சித்தர் பெருமான்கள் தோன்றி நிறைந்துள்ளனர். ஒரு பீடாதிபதிக்கும் அடுத்த பீடாதிபதிக்கும் இடையே ஆயிரக் கணக்கான சித்தப் பீடக் குருக்கள் தோன்றி நிறைவதுண்டு. இவ்வகையில் பொதுவாக நாம் 1001வது குரு மகா சன்னிதானம் என்று மனிதக் கணக்கில் கூறினாலும் சித்தர்கள் கணக்கில் கோடிக் கணக்கான சித்தர் பிரான்கள் திருக்கயிலாயப் பொதிய முனிப்பரம்பரையில் தோன்றி அலங்கரித்து நிறைந்து கொண்டே உள்ளனர். இது எம்பெரும்பான் சிவபெருமான் திருவருளால் என்றும் தொடரும் ஒர் ஆன்மீக அற்புதமாகும்.
திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரையின் 1000வது குரு மகா சன்னிதானமே ஸ்ரீஅஸ்தீக சித்தராவார். இப்பீடத்தின் 999வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீசதாதப சித்தர் பிரான் ஆவார்.

ஸ்ரீஅகஸ்தியரின் தலையாயச் சீடரான ஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளே ஒவ்வொரு குருமகா சன்னிதானத்தையும் தம் குருகுல வாசத்தில் அரவணைத்து அந்தந்த யுக தர்மங்களைப் போதித்து, நெறிப்படுத்தி அற்புத பணியை ஆற்றி வருகின்றார்கள். ஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் நமது பூவுலகம் மட்டுமல்லாது அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து லோகங்களிலும் குரு தத்துவத்தை உபதேசித்து குரு மகா சன்னதானங்களுக்கு ஒரு வழிகாட்டியாய்த் திகழ்கிறார்.

திரு வெங்கடராமன் அவர்களின் பூர்வீக ஆதி லோகமே குருமங்கள கந்தர்வ லோகம் ஆகும். அங்கே 108 சூரியன்களும் 108 சந்திரன்களும் பிரகாசிக்கின்றன. நமது ஒரு ஆண்டு தேவ லோக வாசிகளுக்கு ஒரு பகல். தேவ லோக வாசிகளுடைய ஒரு வருட காலம் கந்தர்வ லோகத்திற்கு ஒரு பகல். இவ்வாறு அடுத்தடுத்த லோகங்களின் காலப் பரிமாணங்கள் மாறிக் கொண்டே இருக்கும். தேவ லோகம், கந்தர்வ லோகம் இவற்றை எல்லாம் தாண்டிச் சென்றால் வைகுண்டம், கைலாயம், சத்திய லோகம் என்ற பல தெய்வலோகங்களை அடையலாம். இந்த லோகங்களுக்கு எல்லாம் அப்பால் திகழ்வதே குரு மகா சன்னிதானங்களின் குரு மங்கள கந்தர்வ லோகம். இத்தகைய அற்புதமான, தெய்வீகமான, கற்பனைக்கும் எட்டாத சிறப்பு வாய்ந்த லோகத்திலிருந்து நமது நன்மைக்காக, நம்மை இவ்வுலகத் துன்பங்களிலிருந்து மீட்க நம்மிடையே நம்மில் ஒருவராய்த் தோன்றி நம்மைத் தாயினும் சாலப் பரிந்து வழி நடத்துபவரே திரு வெங்கடராமன் என்ற உண்மையை அவருடைய அவதார இரகசியத்திலிருந்து நாம் ஓரளவு ஊகித்துக் கொள்ளலாம்.

இந்த உண்மையின் விளக்கமாய் வருவதே - நீ இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் கடவுள் உன்னை நோக்கிப் பத்து அடி எடுத்து வைப்பார், குரு உன்னை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார் - என்ற ஞான உரையாகும்.

கடவுள் மீது நாம் கொள்ளும் பக்தியில்பல நிலைகள் உண்டு. எவ்வாறு நமது பூமியில் படிப்பிற்குப் பல பட்டங்களும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றனவோ அவ்வாறே மேலுலகம் என்னும் தெய்வீக லோகத்திலும் பக்தி நிலைக்குச் சான்றிதழ்கள் ஆதிசிவனால் வழங்கப்படுகின்றன. கடவுள் பக்தியில் 12 நிலைகள் குறிக்கப்படுகின்றன. இதில் பன்னிரெண்டாவது நிலையாகத் திகழ்வதே அடிமை என்ற தாச பக்தி நிலை. இது வார்த்தைகளால் வர்ணிப்பதற்கு மிகவும் கடினமான ஒர் நிலை. முழுக்க முழுக்க இறைவனிடம் ஐக்கியமாகித் திகழும் ஒர் உன்னத நிலை. இந்த நிலையில் ஒன்பது படித்தரங்கள் இருப்பதாக சித்தர்கள் விளக்குகிறார்கள். இந்த ஒன்பதாம் உயர்நிலையில் திகழ்பவரே நமது குருநாதர் திரு வெங்கடராமன் அவர்கள்.

இவ்வாறு திரு வெங்கடராமன் அவர்கனின் அவதாரத் தோற்ற இரகசியத்தையும், பெருமைகளையும் எடுத்துரைப்பதற்குக் காரணமே நம் பூவுலகம் பெற்றது எத்தகைய பெரும் பேறு என்பதை உலக மக்கள் அனைவரும் உணர்வதாற்காகவே. திரு வெங்கடராமன் அவர்கள் நமது தமிழ்நாட்டிற்கு மட்டுமோ, புனித பாரத நாட்டிற்கு மட்டுமோ ஆன்மீக வழிகாட்டியாக வந்தவர் அல்லர். நமது உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், புழு, பூச்சி, விலங்குகள், தாவரங்கள், தேவர்கள், கந்தர்வர்கள் என அனைத்து நிலையிலுள்ள ஜீவன்களும் கடைத்தேற இறைவனின் வழங்கியே கருணை மழையே திரு வெங்கடராமன் அவர்கள் என்பதை அனைவரும் உணர்ந்து அவர்களின் ஆன்மீகப் பேருரைகளை, வழிகாட்டுதலை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.


ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரமஹ ஸ்ரீதேவி பக்தாய ஸ்ரீவெங்கடராம சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!
ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரமஹ ஸர்ப்ப இரட்சக ஸ்ரீஅஸ்தீக சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!
ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரமஹ காளஹஸ்தீஸ்வர ஸ்ரீசதாதப சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!
ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரமஹ மஹரிஷி மஹேஸாய
கௌஸ்துப புருஷாய ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!

இதோ. சில தரிசனங்களை பெற காத்திருக்கின்றோம்.







யுக யுகமாய் ஒளிர்கின்ற குருபாத பூஜை!
ஜகம் முழுதும் மிளிராதோ குருபாத சேவை!
அகத்தியமே உலகாளும் குருபாத கீதை!
அகஸ்திய விஜயம்தான் அவர் காட்டும் பாதை







இனி ஸ்ரீ ல ஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் குரு பூஜை அருள் பெற இருக்கின்றோம்.









ஓஃம் மகாதேவி ஸ்ரீ லோபாமாதா உடனுறை
மகாகுரு ஸ்ரீ அகஸ்தியர் போற்றி.
ஓஃம் சற்குரு ஸ்ரீ வேங்கடராம சித்தர் போற்றி.
ஓஃம் பரமகுரு ஸ்ரீ அஸ்தீக சித்தர் போற்றி.
ஓஃம் பரமேஷ்டிகுரு ஸ்ரீ சதாதப சித்தர் போற்றி.
ஓஃம் பராபரகுரு மகாசற்குரு
ஸ்ரீ இடியாப்ப ஈச சித்தர் போற்றி.
ஜெய் திருக்கயிலாய பொதியமுனி பரம்பரை...
...சத்குரு மகாதேவா சரணம் சரணம் சரணம்.
ஜெய் திருவேங்கடத்துறை கும்பமுனி பரம்பரை...
...சத்குரு நாராயணா சரணம் சரணம் சரணம். 




மீண்டும் குருவின் தாள் பற்றி குருவைப் போற்றுகின்றோம். 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm

No comments:

Post a Comment