"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, May 31, 2021

இன்றைய குரு பூஜையில் நால்வரின் பதம் பணிவோமாக!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய நாளில் நால்வரின் பாதம் பணிவோம் என்ற தலைப்பில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நால்வர் என்றதும் இங்கே நாம் பேசும் நால்வர் வேறு. ஆம்! இன்று 4 மகான்களின் குருபூஜை காண உள்ளோம். ஏற்கனவே இரண்டு மகான்களின் குருபூஜை தகவலும், தரிசனம் பெற்றுள்ளோம். அடுத்து இரண்டு மகான்களை இந்த பதிவில் காண இருக்கின்றோம்.

இன்று குருபூஜை காணும் மகான்கள்.

1. பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்

2. திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள்

3. ஸ்ரீ  சற்குரு நாத மாமுனி சுவாமிகள் 

4. ஶ்ரீலஶ்ரீ பழனி சாக்கடை சித்தர்

இப்பொழுது பதிவின் தலைப்பு சரியாக இருக்கின்றது அல்லவா? சரி..இனி ஸ்ரீ  சற்குரு நாத மாமுனி சுவாமிகள் பற்றி காண உள்ளோம்.

திருச்சி மாவட்டத்தில் திருவானைக்கோவில் ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடத்தில் அகத்தியர் மரபு வழித் தோன்றலான ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர் 1915, ம் வருடம் எண் கோண வடிவிலான கருங்கல் 12 அடி ஆழத்தில், நிலவறை அமைத்து அதனுள் அமர்ந்து நிர்விகல்ப சமாதி இயற்றி 48 நாட்கள் [ஒரு மண்டலம்] காற்று,நீர்,உணவு இன்றி தவம் இயற்றி தெய்வீக இறை ஆற்றலை பூரணமாக வடித்துள்ளார்.








 இத் திருத்தலத்தில் ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர் 1915,ம் வருடம் தவம் இயற்றிய பிறகு ஒவ்வொரு வருடமும் குருபூஜை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

 ஸ்ரீ சற்குரு சுவாமி அவர்கள் மக்களிடையே உள்ள சாதி சமயம், உயர்வு தாழ்வு, ஆணவம் அகந்தை, என்ற அறியாமையை நீக்கி, எளிய மக்களும் இறைஞானப் பேரருளைப் பூரணமாகப் பெற்று பிறவிப் பயனை எளிதில் அடைவதற்காக அகத்தியர் சித்தர் குரு சீட பரம்பரையில் 9 - வது குருவாக அவதரித்தவர்.இவர் 19 – வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தின் பொதிகை மலை, சுருளி மலை, நீலகிரி மலை, வெள்ளியங்கிரி, பழனி மலை, போன்ற பல்வேறு மலைகளிலும், திருச்சி,தேனீ,நீலகிரி,பழனி போன்ற பல்வேறு ஊர்களில் பூமிக்கடியில் மற்றும் தண்ணீருக்கடியில் பல நாட்கள் வெளியே வராமல் இராஜயோக தவம் செய்து பொதுமக்கள் நன்மையடையும் விதமாக அருளாற்றல் நிரம்பிய பல தவ மையங்கள் அமைத்துள்ளார்.








ஸ்ரீ சற்குரு மகான் அமைத்த அற்புத இராஜயோக தவ மையங்களில் ஒன்றுதான் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் அமைந்துள்ள ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடம் ஆகும்.

ஶ்ரீலஶ்ரீ பழனி சாக்கடை சித்தர்

சாக்கடை சித்தர் என்பவர் பழனி மலையின் அடிவாரமான அய்யம்புள்ளி பகுதியில் வாழ்ந்து மறைந்த சித்தராவார்.இப்பெயரைக் கொண்டே பல்வேறு சித்தர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். கரூர் மாவட்டம் குளித்தலை நகரிலும் சாக்கடை சித்தர் என்றொருவர் இருந்துள்ளார்.

சாக்கடை சித்தரின் இயற்பெயர்  தெரியவில்லை. இவர் வடநாட்டிலிருந்து தனது 55 வயதில் பழநிக்கு வந்தார்.பழநிமலையில் முருகன் கோயிலுக்கு செல்லுகின்ற அய்யம்புள்ளி சாலையில் சாக்கடை மேடையின் மீது கூடாரமிட்டு வாழ்ந்தார். சாக்கடை நீரைப் பகுவதையும், அதிலேயே குளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தமையால் சாக்கடை சித்தர் என பக்தர்கள் அழைத்தனர்.

யாரிடமும் பேசாமல் இருப்பார். இவரை வழிபட்டால் நல்லது நடக்கும் என உள்ளூர் வெளியூர் பக்தர்கள் பலரும் வணங்கி வருகின்றனர்.





மீள்பதிவில் மீண்டும் இன்றைய குருமார்களின் குருபூஜை இணைப்பை தருகின்றோம் மீண்டும் படித்து குருவிடம் சரணாகதி அடையுங்கள்.

ஓம் குருவே சரணம்! ஓம் குருமார்களின் பதம் போற்றி!!

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் 121 ஆவது குருபூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/121.html

அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

No comments:

Post a Comment