"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, October 6, 2023

அகத்திய பெருமானின் அருள்வாக்கு! தெய்வத் தீவு ( இராமேஸ்வரம்) செல்வதின் முக்கியத்துவம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் மகாளயபட்ச சேவை கடந்த 6 நாட்களுக்கும் மேலாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நம்மால் இங்கு ஆவது ஒன்றும் இல்லை. இறைவா! அனைத்தும் நீயே !! என்று மனதுள் இருத்தி ஒவ்வொரு நாளும் தற்போது கடந்து வருகின்றோம். இந்த நிலையில் சித்தன் அருள் தளத்தின் வாயிலாக தெய்வத் தீவாக கருதப்படும் இராமேஸ்வரம் செல்வதின் முக்கியத்துவத்தை இன்றைய பதிவில் தருகின்றோம். அன்பர்கள் நன்கு கவனித்து, உள்வாங்கி இராமேஸ்வரம் வழிபாடு செய்யும்படி வேண்டி பணிகின்றோம்.





28/09/2023 (வியாழன்) அன்று அகத்திய மாமுனிவர் இட்ட உத்தரவு - ஜீவநாடி வழியாக :

 மகாளய பட்ச காலங்களில், வருகிற மகாளய அமாவாசை அடுத்து வரும் மூன்றாம் பிறை தரிசன நாள் வரை (17/10/2023 - செவ்வாய்) செய்ய வேண்டிய தர்மகாரியங்களாக அகத்திய மாமுனிவர் உரைத்த ஜீவநாடி வாக்கு :

 29/09/2023 (வெள்ளி) முதல் 17/10/2023 (செவ்வாய்) வரை செய்ய வேண்டிய தர்மகாரியங்கள் :
1. தினந்தாேறும் காேமாதாக்களுக்கு அகத்திக்கீரை உணவாக அளிக்க வேண்டும்.
2. தினம் இயலாதவர்களுக்கு உணவு (அன்னதானம்) அளிக்க வேண்டும்.
3. தினம் வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு, நீர் வழங்கிடுதல் வேண்டும்.
4. இந்த புரட்டாசி மாதத்தில் கங்கை, காவேரி, தாமிரபரணி, நர்மதா, காேதாவரி பாேன்ற புண்ணிய நதிகளில் நீராட வேண்டும்.
5. காக்கும் கடவுளான பெருமாளை (விஷ்ணு பகவான்) இந்த புரட்டாசி மாதத்தில் நல் முறையாக விரதம் இருந்து வழிபட்டு வர வேண்டும். எதற்கென்றால் காக்கும் கடவுள் (பெருமாள்) விஷ்ணு முக்தி பெறாத ஆன்மாக்களை முக்தி பெற செய்வார்.
6. எந்த உயிரையும் கொல்லாமல் கொன்று புசிக்காமல் ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்து வரவேண்டும்.

 இவ்வாறு அகத்திய மாமுனிவர் கடந்த 28/09/2023 (வியாழன்) அன்று ஜீவநாடி மூலம் வாக்கு உரைத்துள்ளார்.மகாளய பட்ச காலங்களில் (29/10/2023 - வெள்ளி) தொடங்கி, அமாவாசை வரை செய்திட்டு அப்பனே அமாவாசை பின் மூன்றாம்பிறை வரை செய்து மூன்றாம் பிறை தரிசனம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே! இப்படி என் (அகத்தியன்) பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!  -சுபம்- 
குருவே சரணம்! 

குறிப்பு : 29/09/2023 (வெள்ளி) முதல் 17/10/2023 (செவ்வாய்) வரை, இந்த நற்காரியங்களை செய்ய, பக்தர்களுக்கு அகத்திய மாமுனிவர் ஜீவநாடி வாயிலாக உத்தரவு இட்டுள்ளார்.

அகத்திய பிரம்ம ரிஷி பாதம் காப்பு 

ஒரு மனிதனை மிக வேகமாக கீழே அதள பாதாளத்தில் தள்ளிவிடுவது 3 முக்கிய கர்மாக்கள். 
இந்த மூன்றும் அவனது வாழ்க்கை எனும் பாத்திரத்தில் உள்ள 3 பெரிய ஓட்டைகள். (கீழே கொடுக்கப்பட்டுள்ள சதவிகிதம் ஒரு தோராயமே - புரிதலுக்காக) 
1) பித்ரு கர்மா (70%) ( இந்த தளத்தில் உள்ளது போல் வழிபட இந்த மிகப்பெரிய ஓட்டை குரு அருளால் அடைபடும்) 
2) வம்சத்தின்/குலத்தின்/பரம்பரையின் பூர்வ பாவங்கள் (15%) 
3) அந்த தனி மனித ஆத்மாவின் பூரவ ஜென்ம பாவங்கள்.(15%)

இந்த  ஓட்டைகளை அடைக்காமல் எந்த மகத்தான முன்னேற்றமும் ஒரு மனிதனின் வாழ்வில் சாத்தியமாகாது. ஓட்டை பாத்திரத்தில் நீர் ஊற்றுவது போல. நம்மை தாக்கும் எதிரிகள் இந்த மூவர் கூட்டணி . அதள பாதாளத்தில் உள்ள நம் அனைவரின் வாழக்கையில் அதி மிக உச்ச இமாலய வெற்றி கொள்ள இந்த மூவரையும் அழிக்க வேண்டியது அவசியம். குருநாதர் இதனை பல வாக்குகளில் உணர்த்தி, அறிவுறுத்தி நம் அனைவரையும் நல் வாழ்வு வாழ வைக்க அருளுகின்றார். நாம் அனைவரும் குருநாதருக்கு ஒரு எறும்பு போல. இருப்பினும் நமக்கு , மனித குலத்திற்க்கு இந்த வழிமுறைகளை அருளுகின்றார். சித்த கருணாமூரத்தியான அகத்திய பிரம்ம ரிஷியின் கருணையோ கருணை.  

இந்த தளத்தில் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த படி அனைவரும் அடிக்கடி இராமேஸ்வரம் சென்று வழிபட்டு வெற்றி வாகை சூடுங்கள். உங்கள் குடும்பத்தில் சந்தோசங்கள் பொங்கி வழியட்டும். தலை நிமிர்ந்து பெருமையுடன் வாழ்க வளமுடன். குரு இருளால் இந்த வாக்கை அடுத்தவருக்கு எடுத்து சொல்லி புண்ணியத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இந்த வாக்கை அனைத்து தளங்களிலும் இட உதவுங்கள். தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் கொண்டு சேரக்க உதவுங்கள். இந்த மகத்தான செய்தியை அனைவருக்கும் பரப்புவது தமிழகமே கூடி ஒரு பெரிய தேர் இழுப்பது போல. ஓவ்வொருவரும் குறைந்த பட்சம் 108 நபர்களுக்கு பேசி புரிய வையுங்கள். அனைவரும் நன்றாக வாழட்டும். 

உலகம் இதுவரை அறியாத இராமேஸ்வர ரகசியம். எப்படி ஒருவர் வாழ்வில் சந்தோசங்கள் உண்டாகும் என்ற அதி சூட்சும ரகசிய வாக்கு. இந்த வாக்கை அனைத்து இனைய தளங்களிலும் பகிர வேண்டுகின்றோம். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருடமும் அவசியம் பகிரவும். அவர்களிடம் எடுத்து கூறவும். மகத்தான, மகிமை புகழ் வாக்கு. அனைவரும் இதனை பின்பற்றி அவர்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ உதவுங்கள் ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!! 


(சமீபத்தில், அடியவர் ஒருவர் இராமேஸ்வரம் செல்வது குறித்த கேள்வியை குருநாதர் அகத்தியப் பெருமானிடம் நாடியில் கேட்ட போது, உலகோர் நன்மைக்காக இதுவரை உலகம் அறியாத இரகசிய வாக்கு ஒன்றை அருளினார். அந்த வாக்கு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்)




ஆதி ஈசனின் பொற்கமலத்தைப்பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அம்மையே, அப்பனே அனைவரும் கேட்டுக்கொள்ளுங்கள். இராமேஸ்வரத்திற்கு எதற்கு போகச் சொன்னேன்? எதை என்றும் அறிய அறிய அதுவே கடைசி எதை என்றும் அறிய அறிய பின் ஈர்ப்புத்திறன் அதாவது எதை என்றும் புரியாமல் அளவிற்கும் கூட தனுஷ்கோடி எதை என்றும் புரியப்புரிய அங்குதான் இவ் ஆன்மாக்கள் (முன்னோர்கள்) அனைத்துமே தேங்கி நிற்கும். ஒரு சக்தியானது எதை என்றும் கூற இவ் ஆன்மாகளை அங்கு இழுத்துக் கொள்ளும். எதை என்றும் கூற அடுத்த படியாக எவை என்றும் பின்பற்ற அங்கு சென்றால் எதை என்றும் அறிய அறிய (தனுஷ்கோடி) அருகே சென்றால் உங்களுக்கும் எதை என்று அறிய அவ்சக்திக்கும் நிச்சயம் ஈர்ப்பு விசை ஏற்பட்டு மீண்டும் எதை என்று கூற அவ் ஆன்மா (முன்னோர்கள்) ஆனது உன்னிடத்தில் வந்து பின் பிறவி எடுக்க வில்லை என்றாலும் எதை என்றும் பின்பற்றி நிச்சயம் வேறு வேறு உயிருக்கு அதாவது எதை என்றும் புரியப்புரிய அப்படியே அவ் ஆன்மா மாறிவிடும் (பிறவி எடுத்துவிடும்) . (அப்படி பிறவி எடுக்கவில்லை) இல்லை என்றால் எதை என்றும் அறிந்து அறிந்து அங்கு நீ செல்கின்றாயே உள்ளே (அன்னை பர்வதவர்த்தினி உடனுறை ஆதி ஈசன் இராமநாத சுவாமி) ஈசனிடத்தில் பின் அது சரணாகதி (முக்தி) அடைந்து விடும். இது யாருக்குமே தெரிவதில்லை. அதனால்தான் அங்கு போகச் சொல்கின்றேன். போகச் சொல்கின்றேன்.

(முதலில் தனுஷ்கோடி அடிக்கடி சென்று பின் ஆதி ஈசன் இராமநாத சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து மனிதர்கள் வாழ்வில் சந்தோசங்கள் ஏற்படும்)


(இங்கு மீண்டும் அம்மை ஒருவர் இது தொடர்பாக கேட்க)

அதனால் அம்மையே எதை என்றும் அறிய அம்மையே எதை என்றும் புரியப்புரிய பல கஷ்டங்கள் (உந்தனுக்கு உள்ளது) அம்மையே அவ் ஆன்மா அங்கு அலைந்து கொண்டு இருந்தது என்பேன். எதை என்றும் அறிய அறிய (இது போல இராமேஸ்வரத்திற்கு ) அதாவது (அடிக்கடி) சென்று கொண்டே இரு. (அவ் ஆன்மா உன்னிடத்தில் வந்து உன்னை ) ஈர்க்கும். இறைவனிடத்தில் விட்டு விடு. அப்பொழுதுதான் (உனக்கு) சந்தோசங்கள் (உனது வாழ்வில் உண்டாகும்).

அடியவர் கேள்வி:- எனது தம்பி ஈசனிடம் முக்தி அடைந்து விட்டாரா?

அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய (உனது தமையன் முக்தி அடையாமல்)  அலைந்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. (இராமேசுவரத்திறக்கு அடிக்கடி) சென்று கொண்டே இரு அப்பனே. எவை என்று கூற யான் பார்த்துக் கொள்கின்றேன். அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இதன் ரகசியங்களும் முன்னே எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது புரிகின்றதா? அப்பனே. அங்கேயே தான் இருக்கின்றான் அப்பனே.



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சித்தன் அருள் - 1353 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2023/09/1353.html

ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 - https://tut-temples.blogspot.com/2023/09/26102023.html

 சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

4 comments:

  1. முதலில் தனுஷ்கோடி பிறகு இறை தரிசனம். தர்பணம் எப்பொழுது தரவேண்டும் என்று கூறவும். நன்றி.ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா தாயார் சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி

    ReplyDelete
    Replies
    1. குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் தர்ப்பணம் செய்வது பற்றி கூற வில்லை. எனவே தர்ப்பணம் செய்ய வேண்டாம். இங்கே குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் கூறிய படி தனுஷ்கோடி அடுத்து ராமேஸ்வரம் தரிசனம் - வழக்கமான வழிபாடு. இது போன்று குறைந்தது 3 மூன்று மாதத்திற்கு ஒரு முறை சென்று வழிபட்டாலே போதுமானது.

      Delete
  2. நன்றி அய்யா

    ReplyDelete
    Replies
    1. ஒம் ஶ்ரீ குருவே சரணம்

      Delete