அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று ஐப்பசி பௌர்ணமி. அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். சோற்றுக்குள் சொக்கன் இருப்பதை உணர்த்தும் வழிபாடு இன்றைய அன்னாபிஷேகம் ஆகும். இன்றைய சேவையாக வழக்கம் போல் பெருகமணி என்னும் தொன்மை வாய்ந்த திருத்தலத்தில் உள்ளதே பழையூர் ஆலய அன்னாபிஷேகத்திற்கு நம் தளம் சார்பில் சிறு தொகை கொடுக்க குருவருளால் பணிக்கப்பட்டோம். மேலும் இன்று தேனியில் 10 அன்பர்களுக்கு 4 இட்லி, சாம்பார் கொண்ட உணவுப் பொட்டலங்கள் காலை உணவாக குருவருளால் பணிக்கப்பட்டோம்.
மேலும் இன்றைய நன்னாளில் 14 மகளிருக்கு ரூ.3500 க்கு ( ரூ.250 க்கு ஒரு சேலை) என குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டு, நம் தளத்தின் சார்பில் தீபாவளி சேவை ஆரம்பித்துள்ளோம். கொடு..கொடு..கொடுத்து பழகு..தர்மம் செய். தர்மம் செய் என்பதை நாம் வாழ்வின் அடிநாதமாக கொண்டாலே போதும். கொடுத்தால் தான் பெற தகுதி பெற முடியும். முடிந்தால் பொருள் கொடுங்கள். இல்லையென்றால் உடல் உழைப்பை சேவைகளில் கொடுங்கள்.இதுவும் முடியவில்லை என்றால் மனதார வாழ்த்துங்கள். அதுவும் நல்ல காரியங்கள் செய்பவர்களை மனதார வாழ்த்துங்கள். வாழ்த்துங்கள். வாழ்த்தப்படுவீர்கள். இதனைத் தான் திருமூலர் பின்வருமாறு கூறுகின்றார்.
அடுத்து , ஒரு கைப்பிடி உணவு இட்டு , உணவு உண்டு வந்த பின்னர் தான் , அன்னசேவை செய்து பசிப்பிணி ஆற்ற வேண்டும் என்ற நிலை நோக்கி நம்மால் நகர முடியும். அன்னசேவை செய்வதன் மூலம்
அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
கலி / கலி புருஷன் நம் கண்ணுக்கு தெரியா நிரந்தர (Covid) கொரோனா. நமக்கு தெரியாமலேயே பாதிப்புக்கள் அதிகம்.
2. 11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு
என் தந்தை ஈசனே திருவாசகத்தை எழுதினான் எழுதினான் என்பதற்கிணங்க அனைத்து விஷயங்களும் அதிலேயே அடங்கி உள்ளது.அது ( திருவாசகம் ) பெரும் பொக்கிஷம் ஆனாலும் அதனை கூட உணராமல் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.
3. 14/12/2021 அன்று ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
அனுதினமும் பின் திருவாசகத்தை இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும். இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது. இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.
அப்பனே இதையென்று அறிவிக்கும் அளவிற்கு கூட இன்னும் அப்பனே உச்சம் பெறும் என்பன் அப்பனே அவ் ஓளியானது!! அப்படி உச்சம் பெறும் பொழுது அப்பனே அதிகாலையிலே அவ் ஒளியானது அப்பனே வரும் என்பேன் அப்பனே
ஒவ்வொரு எதை என்று பின் ஆனாலும் இதன் தன்மையையும் ஈர்க்கும் சக்தி விஷ்ணு சகஸ்ரநாமம் எதை என்று கூட திருவாசகம் இவை இரண்டிற்கு மட்டுமே உள்ளது!!!
5. சித்தன் அருள் - 1288 - குருநாதர் வாக்கு - அனைவருக்கும் !
அனுதினமும் அப்பனே கோமாதாக்களுக்கு அகத்திக்கீரை அளித்து வரவேண்டும் மாலை நேரத்தில் வீட்டிலும் தீபம் ஏற்றி திருவாசகம் ஓதி வர வேண்டும் திருவாசகத்தில் இருந்து ஏதாவது ஒரு பதிகம் அனுதினமும் ஓதி வர வேண்டும்!!!! ஓதி வணங்கி பின்பு இனிப்புகளை தானமாக வழங்குதல் வேண்டும்.!!
6. சித்தன் அருள் - 1317 - திருவாசகம் ஓதுக!
அப்பனே நலமாக நலமாக என்னுடைய ஆசிகள் இருக்கும்பொழுது நலமாகவே இன்னும் சிறப்புக்கள் தோன்றும் என்பேன் அப்பனே. நல்முறையாக அப்பனே யானும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் அங்கே வாசகத்தை ( திருவாசகம்) அப்பனே குழந்தைகள் பாடும் பொழுது. அவர்களுக்கும் நல் ஆசிகள். இன்னும் உயரச்செய்ய வேண்டும். யானும் பலமுயற்சிக்கு எதை எதை என்று கூற அப்பனே இதைத்தன் தொடரந்து செய்ய புண்ணியங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே. இன்னும் அதை சுற்றி நல்விதமாக உயர் பெரியோரின் அப்பனே ஆசிகள் கிடைத்து இன்னும் பன்மடங்கு ஆகட்டும் என்பது கூட எனது ஆசிகள் என்பேன் அப்பனே.
7. சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு!
அவை மட்டும் இல்லாமல் எதையன்றி கூறப்பின் இவை என்று கூற திருவாசகம் முற்றோதுதலை நிச்சயம் பின் பௌர்ணமிதனில் இரவு நேரத்தில் நிச்சயம் பின் அவனவன் இல்லத்தில் வைத்தால் நிச்சயம் எதை என்று கூற சந்திர திசை ஒன்றும் செய்யாது!!!
8. சித்தன் அருள் -1186 - அன்புடன் அகத்தியர் - சித்தேஷ்வர் கோவில்!
(திருவாசகம்)
வாசகத்தை!!! வாசகத்தை!!!பின் ஓதுங்கள் !!ஓதுங்கள்!!!என்றெல்லாம் ஆனால் எவந்தனுக்கு அப் புத்தி இல்லையோ!!!!! அவந்தனுக்கு புத்திகள் வளராது!!!
9. சித்தன் அருள் - 1300 - பொதுவாக்கு - 3
30. திருஞானசம்பந்தர் தன்னை பாடினார். சுந்தரர்பெருமான் பொன்னை பாடினார். திருநாவுக்கரசர் என்னை(சிவத்தை) பாடினார். இந்த வரிசையில் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் எப்படி எடுத்துக் கொள்வது குருநாதா?
எப்படி எடுத்துக்கொள்வது? அதாவது, சிவாலயங்களை, எது என்று அறிந்து அறிந்து, அதாவது, இமயமலையில் வீற்றிருக்கும் வேதநாதன் என்று சொல்கிறார்களே, அவந்தனை சென்று பார்க்கச்சொல். (கேதார்நாத்). நிச்சயமாய் இதற்கான பதில் நேரில் சொல்கின்றேன்.
குருநாதர் உரைத்த படி, நாளும் திருவாசகம் ஓதுவோம். சிவத்தை உணர்வோம்.
No comments:
Post a Comment