"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, July 13, 2021

வேண்டத் தக்க தறிவோய்நீ

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்றைய தின மாணிக்கவாசகர் குரு பூசை அனைத்து தலங்களிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதனையொட்டிய பதிவாக வேண்டத்தக்கது அறிந்த இறை பற்றி சில துளிகளை இங்கே காண உள்ளோம். நம் அருளாளர்கள் வழங்கிய முத்துக்களை தினசரி பாராயணம் செய்வதை நம் கடமையாக கொள்ள வேண்டும். பதிகங்கள் அனைத்தும் அருளாளர்கள் வழங்கியவை என்று சொல்வதை விட இறையே அருளாளர்களால் வழங்கியது என்று தெளிவாக புரிகின்றது. அதுவும் இந்த பெருந்தொற்றுக்காலத்தில் தினசரி பதிகங்கள் படிக்கும்படி நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்குரைத்து உள்ளார் திருநீலகண்ட பதிகம், கோளறு பதிகம் போன்ற பதிகங்கள், திருப்புகழ், கந்த ஷஷ்டி கவசம் போன்றவற்றை தினமும் பாராயணம் செய்வது நமக்கு எந்நாளும் நன்மையே தரும்.


அந்த வகையில் நம்மை ஈர்த்த திருவாசகம் - சிவபுராணம் குழைத்த பத்தில் இருந்து ஒரு பாடல் 


வேண்டத் தக்க தறிவோய்நீ

    வேண்ட முழுதுந் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ

    வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள்செய்தாய்

    யானும் அதுவே வேண்டின்அல்லால்

வேண்டும் பரிசொன் றுண்டென்னில்

    அதுவும் உன்றன் விருப்பன்றே.


பாடலை ஒரு அல்ல..பல முறை படித்து பாருங்கள். உங்களுக்குளாகவே அன்பு பிறக்கும்.நாம் வேண்டத்தக்கது அறிந்த, வேண்டியவற்றை தருகின்ற இறைவனே..உன்னைக் காண விரும்பிய பிரமன், திருமால் என்பவருக்கும் அருமையாய் நின்ற வனாகிய நீ நீயாகவே விரும்பி, என்னையாளாகக் கொண்டனை. என் பொருட்டு நீ விரும்பி எதனை அருள் செய்தனை; அதனையே யானும் விரும்புவதல்லது, நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உளதாகு மெனில் அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பே யன்றோ?

ஆம். இந்த அன்பே தான் அகத்தியமும்,சத்தியமும் ஆகும். இதனை அடைவது தான் இந்த பிறவியின் நோக்கமும் ஆகும்.  நம் தளம் சார்பில் நேற்று காலை திருநின்றவூரில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மாணிக்கவாசகருக்கு வழிபாடு செய்ய விரும்பினோம். நேற்று காலை கோயிலில் தொடர்கொண்டு நம் விருப்பத்தை தெரிவித்தோம். இதோ. நம் அனைவரின் விருப்பம் நிறைவேறி இங்கே தரிசனம் காண இருக்கின்றோம்.







அடடா..என்ன ஒரு தரிசனம். காண கண்கள் போதவில்லை. 

அழுதால் உன்னை பெறலாமே என்று மனம் எங்கும் தரிசனம்.

யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே

இங்கே மாணிக்கவாசகர் கூறுவதை கவனித்து பார்க்கும் போது  மாணிக்க வாசகரின் அன்பு பொய் என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் ! என்று எண்ண தோன்றுகின்றது. பொய்யான நம்முள் இருந்து அழுது,அழுது தினமும் தொழுது,தொழுது மெய்யைக் காண மாணிக்கவாசகரிடம் வேண்டுவோம். 

நம் தளம் சார்பில் சிவபுராணம் அச்சிட்டு தருவது வழக்கம்,  இனிமேல் தரிசனம் செய்யும் கோயில்களில் சிவபுராணம் அச்சிட்டு தர உள்ளோம். நீங்களும் படித்து அருள் பெறுங்கள்.





மேலும் நாம் தற்போது வரை தரிசனம் செய்த சில கோயில்களில் இலுப்பெண்ணெய் தந்துளோம். நம்முடன் இணைந்து உறுதுணையாக இருக்கின்ற அனைவருக்கும் நன்றி கூறி பதிவை முழுமை செய்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

அகத்தீசனே... சரண் சரணம் - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post.html

குரு உபதேசம் - ஓம் அகத்தீசாய நம! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post_14.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html



No comments:

Post a Comment