"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 10, 2022

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் திருவாசகம் பற்றி தொட்டு காட்ட உள்ளோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் ஜீவ வாக்கில் திருவாசகத்தின் சிறப்பை கூறி உள்ளார். அதனையும் இங்கே தந்துள்ளோம். குருநாதரின் அருளால் TUT கூட்டுப் பிரார்த்தனையில் தினமும் திருவாசகம் படித்து வருகின்றோம்.திருவாசகம் வேறு,சிவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றாக கொண்டு அடியார்கள் பூசை செய்வது வழக்கம். அன்பர்கள் அனைவரும் தத்தம் இல்லத்தில் திருவாசகம் வைத்திருப்பது நன்று. 

இனி குருநாதர் வாக்கினையும், திருவாசகத்தை தேன் என்று சொல்ல காரணம் பற்றியும் சிந்திப்போம்.



அகத்திய மஹரிஷி பாதம் காப்பு


கலி / கலி புருஷன் நம் கண்ணுக்கு தெரியா நிரந்தர (Covid) கொரோனா. நமக்கு தெரியாமலேயே பாதிப்புக்கள் அதிகம்.

அதை அழிக்க ஒரே வழி திருவாசகம் ஒவ்வொரு இல்லத்திலும் ஓதுதல் அவசியம். ஒவ்வொரு இல்லத்திலும் மன நிறைவு, மகிழ்ச்சி எப்போதும் நிலைக்க திருவாசகம் ஒதுதல் அதி மிக அவசியம். உங்கள் இல்லத்தில் சிவன் அடியவர்களை அழைத்து அவர்களை கொரவித்து , ஈசனாக பாவித்து அன்னம் அளித்து வர, இறைவன் அருளால் மிக்க நலம் விழையும்.

இது தொடர்பாக இறை , குரு நாதர் நாடி வாக்குகள் நமது ஆழ் சிந்தனைக்கு இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நன்றி: - சித்தன் அருள் வலைதளம் , நாடி அருளாளர்  திரு.ஜானகிராமன் அய்யா  அவர்கள்.

=========================================================


20/10/21  பௌர்ணமி அன்று  ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரை காசி.

யானே என்பதற்கிணங்க யான் எழுதிய சிவ புராணத்தையும் ஓதுக.ஓதுக! ஓதுக! ஓதிக்கொண்டே இருக.

=========================================================

11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.

என் தந்தை ஈசனே திருவாசகத்தை எழுதினான் எழுதினான் என்பதற்கிணங்க அனைத்து விஷயங்களும் அதிலேயே அடங்கி உள்ளது.அது ( திருவாசகம் )  பெரும் பொக்கிஷம் ஆனாலும் அதனை கூட உணராமல் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.

=========================================================

14/12/2021 அன்று  ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

அனுதினமும் பின் திருவாசகத்தை  இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும். இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது. இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.

- அகத்திய மஹரிஷி

=========================================================



தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி 

அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - 

 எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் 

எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.


தேன் தன்னில் வைத்த பொருட்களைக் கெடாமல் காக்கும் தன்மை கொண்டது. திருவாதவூர் வண்டு திருப்பெருந்துறை சென்று குருமணியாக  வந்த இறைவனின் பாதமலரிலிருந்து எடுத்த தேன் திருவாசகம். அதுவும் நம்மை (ஆன்மாவை) தன்னுள்ளிருத்தி பக்குவப் படுத்தி கெடாமல் கரை சேர்க்கும். இந்த வாதவூர் வண்டும் தேன் பருகச் சென்று தேனே ஆகிவிட்டது.

அதை நம் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் திருக்களிற்றுப்படியார் நூலில் (சித்தாந்த சாத்திர நூல்) 

பின் வருமாறு பாடுகிறார்

பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயனைத்

தூய வாய்மலராற் சொற் செய்து-மாயக்

கருவாதை யாம்அறியா வாறுசெய்தான் கண்டாய்

திருவாத வூர் ஆளுந்தேன்.


நூலும் தேன்! நூலாசிரியரும் தேன்!. திருவாசகத் தேன்! தந்தவரைத் தேன் என்று சிறப்பிக்கிறார். தித்திக்கும் தேனல்லவா?. அதுவும் திருவாசக நூலில் 51 இடங்களில் தேன் என்று சொல்கிறார். அதுவும் சிவபுராணம் தொடங்கி அச்சோப்பதிகம் வரை 51 பனுவல் தேன்!. என்ன ஆச்சரியம் பாருங்கள்!!.


01. தேன் ஊறி நின்று                சிவபுராணம் -அடி 47

02. தேனார் அமுதே                  சிவபுராணம் -அடி 63

03. தேனமர் சோலை                 கீர்த்திதிருஅகவல் -அடி 73

04. சுவைதருகோல்தேன்             திருஅண்டப்பகுதி -அடி 157

05. இன்தேன் பாய்த்தி                திருஅண்டப்பகுதி -அடி 173

06. கருணை வான்தேன்              திருஅண்டப்பகுதி -அடி 180

07. தேன்ஏயும் மலர்க்கொன்றை              திருச்சதகம் -12

08. தேனொடு பால்கட்டி                             திருச்சதகம் -36

09. தேனைஆன்நெய்யை                          திருச்சதகம் -38

10. தேன் நிலாவிய திருஅருள்               திருச்சதகம் -40

11. தேனே அமுதே                                      திருச்சதகம் -55

12. தேனைப் பாலை                                    திருச்சதகம் -58

13. தேனே அமுதே                                      திருச்சதகம் -85

14. தேனே அமுதே                                      திருச்சதகம் -90

15. அகம்நெக அள்ளூறுதேன்               திருச்சதகம் -98

16. தேனையும் பாலையும்                     நீத்தல் விண்ணப்பம் -21

17. கொழுந்தேன்                                        நீத்தல் விண்ணப்பம் -36

18. பால் ஊறுதேன்                                    திருவெம்பாவை -5

19. தேன் வந்தமுதின்                              திருஅம்மானை -4

20. கருணைத்தேன் காட்டி                      திருஅம்மானை -6

21. தேன் பாய                                               திருஅம்மானை -13

22. தேனையும் பாலையும்                    திருஅம்மானை -14

23. தேனாய் அமுதமுமாய்                    திருஅம்மானை -16

24. தேனார் மலர்க்கொன்றை                திருஅம்மானை -16

25. நந்தாத் தேனைப்                                திருப்பொற்சுண்ணம் -15

26. தேனக மாமலர்                திருப்பொற்சுண்ணம் -17

27 தேனார் கமலமே                                திருக்கோத்தும்பி  -2

28. தேன்உண்ணாதே                               திருக்கோத்தும்பி  -3

29. ஆனந்தத்தேன் சொரியும்               திருக்கோத்தும்பி  -3

30. தேனுந்து சேவடிக்கே                      திருக்கோத்தும்பி  -15

31 தேன்புக்க தண்பணை                   திருச்சாழல் -14

32.  ஆனந்தத் தேனிருந்த                       திருப்பூவல்லி -2

33. தேனாடு கொன்றை                        திருப்பூவல்லி -5

34. தேனுடனாம்                                       திருப்பூவல்லி -11

35.  தேன் தங்கித் தித்தித்து                திருப்பொன்னூசல்  -2

36. தேன்பழச் சோலை                         குயிற்பத்து  -4

37.   தேன்புரையுஞ்                                 திருத்தசாங்கம் -6

38. கோற்றேன் மொழி                         திருத்தசாங்கம் -7

39.  களிதரு தேனே                               திருப்பள்ளியெழுச்சி -9

40 சிந்தைஎழுந்ததோர் தேனே     கோயில் திருப்பதிகம் -8

41. தழங்கருந்தேன்                             அடைக்கலப்பத்து -10

42. தேனைப் பாலை                            புணர்ச்சிப்பத்து  -4

43. மருந்தே பெருந்தேன்                   புணர்ச்சிப்பத்து  -9

44. தேனார் சடைமுடியான்             உயிருண்ணிப்பத்து  -2

45. கோற்றேன் எனக்கென்                உயிருண்ணிப்பத்து  -8

46. தேன்பாய்மலர்                                 உயிருண்ணிப்பத்து  -10

47. தேனினைச் சொரிந்து                  பிடித்தப்பத்து -9

48. தேனாய் இன்னமுதமுமாய்     திருஏசறவு  -10

49. கருணைத் தேன்பருகி                குலாப்பத்து -5

50. தேன் உந்து செந்தீ                       திருவெண்பா -1

51. உகுபெருந்தேன்                             பண்டாய நான்மறை -2


திருவாசகத் தேன் தினமும் பருகி சிவத்தை அனைவரும் உணர்வோமாக! இன்னும் திருவாசகத் தேன் பருகுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

No comments:

Post a Comment