"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, January 27, 2022

குரு தரிசனம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்றைய நாளில் நாம் இரண்டு அருளாளர்களின் குரு பூஜை பற்றி நம் தலத்தில் பேசி இருந்தோம். திருநீலகண்ட நாயனார், ஸ்ரீ தாயுமான சுவாமி குருபூஜை பற்றி இதற்கு முந்தைய பதிவுகளில் கண்டோம். மேலும் பல குருமார்களின் குருபூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. அவற்றையும் ,இன்றைய குருபூஜை அருள்நிலையையும் இங்கே குரு தரிசனமாக இன்றைய குருநாளில் சமர்ப்பிக்கின்றோம். அட..இன்னொரு ஆச்சரியமான செய்தி..இன்றைய கூட்டுப் பிரார்த்தனையில் சிவபுராணம், கோளறு பதிகத்தோடு, 108 குருமார்கள்/மகான்களின் காயத்ரி மந்திரம் கூறும் பேறு பெற்று, உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். மேலும் இன்று திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் அஷ்டோத்ரம் கூறி நல்லதே நடக்க வேண்டினோம். இது தான் குருவருள் நம்மை வழிநடத்தும் அருள்நிலை ஆகும். சரியாக குருநாளில் இவை அனைத்தும் நடக்கின்றது என்றால் குருவின் அருளாலே குருவின் தான் என்றும் பணிகின்றோம்.

குருவே பிரம்மா, விஷ்ணு, சிவனும் ஆவார் .பரபிரம்மத்தின் அவதாரமே " குரு".அவர் பிரம்மாவைப் போல நம்மைப் புதிதாகப் படைக்கிறார்.சிவனைப் போல நம் வாசனைகளை அழிக்கிறார்.எல்லா வழியிலும் விஷ்ணுவைப் போன்று நம்மை காக்கிறார்.ஆகவே அவர் ( குருவே ) மும்மூர்த்தியும் ஆகிறார் .

1. ஸ்ரீ மத் கள்ளியடி குருநாதர் பிர்மம் - 81 ஆவது குரு பூஜை 

















மதுரை அழகர் கோவிலுக்கு அருகேயுள்ள 'பில்லிச்சேரி' எனும் கிராமிய மண்ணில் 1874ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ஆடி 28 ஆம் நாள் அழகிய சிங்கருக்கும் ராமாயி அம்மாளுக்கும் 'சபாபதி' என்னும் திருநாமத்துடன் மதுரையம்பதி மண்ணின் மைந்தராய் அவதரித்தார்.
தனது 16ஆம் அகவையில் சபாபதி வீட்டிலிருந்து வெளியேறி நாற்பது மைல் தொலைவில் உள்ள வட மதுரைக்கு வந்து சேர்ந்தார்கள்.
குள்ளமான உருவம் உடைய சுவாமிகள் முழங்காலுக்கு மேலே வேட்டி மட்டும் உடுத்திக் கொண்டு கையில் தடி ஒன்றை வைத்தபடி மிக எளிமையான தோற்றமுடன்  ஒருவேளை உணவு மட்டும் உண்பவராகவும் இருந்து வந்தார்கள்.

குரு தேடல்:-

பின்னர் சுவாமிகள் அங்கிருந்து காஞ்சிபுரத்தில் கோனேரிக்குப்பம் என்னும் இடத்தில் இருந்து வந்த ஸ்ரீலஸ்ரீ ஞானதேசிகரின் சீடராக சேவை புரிந்து வந்து பின் மீண்டும் வடமதுரைக்கே வந்து சேர்ந்தார்கள்.

கள்ளியினடி தவம்:-

சுவாமிகள் கள்ளி மரத்தின் அடியில் பத்மாசனமிட்டு அமர்ந்து தவமியற்றி வந்தனர். ஒப்பற்ற மகானின் தவநிலையை அறிந்திராத  அப்பகுதியில் இருந்த குழந்தைகள் சுவாமிகள் மீது கல்லெறிந்து கேலிசெய்து விளையாடி மகிழ்ந்தனர். அதுகுறித்து சற்றும் கவலை இல்லாதவராக சுவாமிகள் கள்ளிப்புதரில் அமர்ந்து தொடர்ந்து தவமியற்றி வந்தார். ஒரு நாள் மிகவும் பலத்த பெருமழை பொழிந்து ஊரெங்கும் வெள்ளக்காடாக மாறிய போதும் சுவாமிகள் மீதும் சுவாமிகள் அமர்ந்து தவம் இயற்றிய கள்ளிப்புதரினைச் சுற்றிலும் ஒரு சொட்டு  மழைத் துளி கூட பொழியாதது கண்டு வியந்து சுவாமிகளின் தவ ஆற்றலைக் கண்ட மக்கள் அதுமுதல் சுவாமிகளைக் "கள்ளியடி சுவாமிகள்" என்று அழைக்க ஆரம்பித்தனர்.
 
ஸ்ரீலஸ்ரீ கள்ளியடி பிரம்மம் சுவாமிகள் கும்பகோணம் ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகளின் பெருமை மிக்க சீடர்களுள் ஒருவராக கள்ளியடி பிரம்மம் சுவாமிகளும் சில காலம் தொண்டாற்றி வந்தார்கள்.

சூட்சுமக் காட்சி:-

சுவாமிகளைப் புகைப்படம் எடுக்க அவரது தொண்டர்கள் விரும்பி புகைப்படம் எடுத்தபோது அதில் தனது ஸ்தூல உடலோடு சூட்சும தேகத்தையும் பக்தர்களுக்குக் காட்டியருளி அற்புதம் புரிந்த மகான் ஆவார்.

குருவிற்கு பூஜை:-

சுவாமிகள் தனது குருவான ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகருக்கு வருடந்தோறும் குருபூஜை நடத்திப் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்ததோடு வறியோர்களின் பசிப்பிணியைப் போக்கி ஜீவகாருண்யத்தைக் கடைபிடித்து வந்தார்கள்.

தண்ணீர் ஊற்று:-

ஒருமுறை புதுப்பட்டியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு குடிநீருக்குக் கூட மக்கள் அல்லல்பட நேர்ந்தபோது சுவாமிகள் அவ்வூரில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு கிணறு வெட்ட சுவாமிகளின் அருளால் கிணற்றில் நல்ல தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகியது.சுற்றுப்புற கிராம மக்களும் அந்நீரின் சுவையை அனுபவித்துப் பேரானந்தம் அடைந்து பயன்பெறத் துவங்கினர்.
  
இது போல் சுவாமிகள் சென்று தங்கும் ஊர்களில் முதலில் ஒரு விநாயகர் கோவிலும் அதன் அருகில் 'தர்மக் கிணறு' என்னும் பெயரில் ஒரு கிணறும் அமைப்பார்கள்.இவ்விதம் சுவாமிகள் சிலுவத்தூர்,வடமதுரை,எரியோடு முதலான ஏழு ஊர்களில் விநாயகர் கோவிலும், குடிதண்ணீர்க் கிணறும் மக்கள் பயன்பெறும் வகையில் சுவாமிகள் அமைத்துள்ளார்கள்.

சமாதிக் கோவில்:-

சுவாமிகள் தான் முக்தியடையும் நாளை முன்கூட்டியே பக்தர்களுக்கு அறிவித்ததோடு சமாதிக் கோவிலையும் தானேயே கற்களால் கட்டிக் கொண்டு அதனுள் அமரும் முன் தனது சீடர்களிடம் சில குறிப்புகள் சொல்லியபின் அன்ன ஆகாரமின்றி 15 நாட்கள் தொடர்ந்து தவமியற்றி வந்தவர் 'விக்ரம ஆண்டு தை 8ம் நாள் விசாகம் நட்சத்திரத்தில் இரவு 7.31க்கு தாம் முன் குறிப்பிட்டபடியே ஜீவ முக்தி அடைந்தார்கள்.

ஜீவ முக்தி:-

சுவாமிகளின் ஜீவ முக்தித் திருநாளான தை விசாகத்தன்று மக்களிடமிருந்து பெறப்படும்  அரிசியினை ஒன்று சேர்த்து சமைத்து குருவிற்குப் படைத்து அதனைப் பிரசாதமாகப் பூஜைக்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானமாக வழங்குவார்கள்.

மகா அன்னதானம்:-

சுவாமிகளின்  குருபூஜை நாளன்று அருகிலுள்ள பற்பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். கடும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக அமர்ந்து மகா அன்னதானப் பிரசாதத்தினைப் பக்தி பரவசமுடன் உண்டு செல்வர்.

குருபூஜை:-

ஸ்ரீலஸ்ரீ கள்ளியடி பிரம்மம் சுவாமிகளின் 81வது குருபூஜை  26.01.2022 புதன்கிழமையன்று புதுப்பட்டியில் நடைபெற்றது.

அமைவிடம்:-

திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் 18 கிலோ மீட்டரில் உள்ள வடமதுரையிலிருந்து நத்தம் சாலையில் ஐந்து கிலோமீட்டரில் உள்ளது புதுப்பட்டி கிராமம் உள்ளது.

2. பகவான் ஸ்ரீ ராமசாமி சித்தர் 35 ஆவது மஹா குருபூஜை 






சிவத் தேடலும்,சித்தர் தேடலும் ஆன்மத் தேடல்கள் உள்ளோர்க்கு சொல்ல ஒண்ணா மனப்பரபரப்புக்கு உள்ள தேடல்கள் ஆகும். தமது அற்புதசக்திகளை வெளியில் காட்டிக் கொள்ளாது இன்றும் நம்மோடு கலந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சித்த சக்திமிக்கோர் பலர். அவர்களது அறிய சக்திகளை நாம் உணர்ந்து கொள்ளும் தருணத்தில் நம்மை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றிருப்பார்கள்.அப்படிப்பட்ட ஜீவ முக்தர்களுள் ஒருவரே ஒட்டன்சத்திரம் இராமசாமி சித்தர் ஆவார்.

இராமசாமி சித்தர் அவர்கள் ஒட்டன்சத்திரத்தில் ஒரு பாத்திரக் கடை வாசலில் வெகுகாலமாக வசித்து வந்திருக்கிறார்கள். அக்கடைக்கு அருகே இருந்த ஒரு அசைவ உணவகத்தில் இருந்து அவருக்கு டீயும்,பிரியாணிப் பொட்டலமும் அன்றாடம் வந்துவிடுமாம்.

பிரியாணியில் வந்த கோழி:-
   
சித்தர்கள் அசைவ உணவை உண்பார்களா? என்று நாம் சிந்திப்போம். ஆனால் சுவாமிகள் தன்னை நாடிவரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்ப்பதற்கு அவர்களையே பிரியாணிப் பொட்டலம் வாங்கி வரச் செய்து அதனை உண்பது போல பாவனை செய்து காட்டி அவர்களின் பிணிகளையும்,கர்ம வினைகளையும் அறுத்தெறிந்து இருக்கிறார்கள்.

   ஒருமுறை ராமசாமி சித்தர் அவர்கள் கோழி பிரியாணியை சாப்பிட்டு முடித்ததும் அதே கோழியை சுவாமிகள் சாப்பிட்ட தட்டில் உயிரோடு வரவழைத்து  அக்கோழியைத் துரத்தி அனுப்பினார்கள்.
   சுவாமிகளின் பெயரும் அவரது ஊரும் அறியாமல் இருந்த போது அப்பகுதி மக்கள் அவரை சித்தர் ஐயா என்றும் சாமி என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.அவரது பெயர் ராமசாமி என்று  அறியப்பட்டது எப்படி என அறிந்து கொள்வோம்.

சாது சொன்ன பெயர்:-
 
உள்ளூரைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர் ஒருவரது தலைமையில் சிலர் வடதேச யாத்திரைக்குப் புறப்பட்டனர்.அவர்கள் ரிஷிகேஷை அடைந்ததும்  சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல், "ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்தவன் எல்லாம் இங்கே வாங்கடா!"என்று அதிகாரமாகக் கூப்பிட்டது. குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க அங்கு ஒற்றைக்காலில் நின்றபடி தவக்கோலத்தில் சாது ஒருவர் இருந்தார். "உங்களை எல்லாம் நான் தான் கூப்பிட்டேன். ராமசாமி சித்தர் எப்படி இருக்கான்?" என்று  அந்த சாது விசாரிக்க, "அப்படி யாரும் எங்க ஊரில் இல்லையே" என்று ஊர்க்காரர்கள் சொல்ல, "பாத்திரக்கடை வாசலில் எந்நேரமும் உட்கார்ந்து இருப்பானே அவன் தான் ராமசாமி சித்தர். அவனுக்கு வயசு 550 ஊருக்குப் போனதும் அவனிடம் ரிஷிகேஷில் நடராஜ சாமி ரொம்ப விசாரிச்சான் என்று சொல்லுங்க"என்றார் என்று சொல்லிவிட்டு சாது மீண்டும் தவத்தில் மூழ்கி விட்டார்.இராமசாமி சித்தரதே வயதைக் கேட்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த அவர்கள் யாத்திரையை முடித்துக் கொண்டு ஒட்டன்சத்திரம் திரும்பினார்கள். தாங்கள் புறப்பட்ட இடத்திலேயே யாத்திரையை முடித்தவர்கள் தங்கள் இல்லம் திரும்ப முற்பட்டபோது "ரிஷிகேஷ் போனவன் எல்லாம் இங்கே வாங்கடா" என்று பாத்திரக் கடை வாசலில் இருந்து ராமசாமி சித்தர் ஓங்கி குரல் கொடுத்தார். அப்போதுதான் அவர்களுக்கு ரிஷிகேஷில் நடராஜ சாமி சொன்ன தகவல்கள் நினைவுக்கு வந்தவர்களாய்ச் சித்தர் முன்பு சித்தரின் மகிமையை உணர்ந்தவாறு பயபக்தியுடன் நின்றனர்.

   "ரிஷிகேஷில் ஒற்றைக்காலில் தவம் செய்யும் நடராஜ சாமி என்னை விசாரித்ததை ஏண்டா என்கிட்ட சொல்லாம போறீங்க?"என்று ராமசாமி சித்தர் கோபமாகக் கேட்டதும் கூட்டத்தினரின் தலைமையான சோமசுந்தரம் பிள்ளை, "அவசரத்தில் மறந்து விட்டோம்" என்று சொல்ல ராமசாமி சித்தர்  சிரித்தபடியே அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்.

சர்க்கரைப் பொங்கலான பிரியாணி:-

மற்றுமொருமுறை  ஆச்சாரமான அந்தணர் குடும்பத்துப் பெண்ணான ராஜம்மாள் என்பவர்  இறைவழிபாட்டிலும், மகான்களின் தரிசனத்தையும்,மகான்களின் அதிர்ஷ்டானங்களையும் தேடித் தேடி தரிசிப்பவர்.பழனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சித்தர்களைப் பற்றி கேள்விப்பட்டு பாத்திரக்கடை அருகில் வந்து நின்ற ராஜம்மாள் ராமசாமி சித்தரைப் பணிந்து வணங்கினாள். அவளிடம் ராமசாமி சித்தர் "பக்கத்து ஓட்டலில் பிரியாணி பொட்டலம் ஒன்று வாங்கி வா"என்றார். தயங்கியவாறே சென்ற அப்பெண்மணி பிரியாணிப் பொட்டலத்தை வாங்கி வந்து சித்தரிடம்  வைத்து விட்டுச் சற்றுத் தள்ளி நின்று கொண்டவளை ராமசாமி சித்தர் தன் அருகே அழைத்து, "பொட்டலத்தைத் திறந்து கையில் எடுத்துக் கொடு" என்றார். மிகுந்த தயக்கமுடன் கண்களை மூடியவாறு பொட்டலத்தைப் பிரித்து சித்தர் இருக்கும் திசையை நோக்கி நீட்டினார் அப்பெண்மணி. "நீயே கண்களைத் திறந்து பாரம்மா. உன் கையிலிருக்கும் பொட்டலம் என்னவென்று" என்றார் சித்தர்.அதன் பிறகு கண்களைத் திறந்து பார்த்த ராஜம்மாளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் உண்டானது. காரணம், பொட்டலத்தில் இப்போது இருப்பது பிரியாணி அன்று. நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல். கோவில் பிரசாதம் போல நெய் மணக்கும் பொங்கலை நம்ப முடியாது சுவாமிகளையும், சர்க்கரைப் பொங்கலையும் மாறி மாறிப் பார்த்த ராஜம்மாளிடம், "எடுத்து சாப்பிடு. அய்யர் வீட்டுப் பொம்பளைக்கு பிரியாணி தருவேனா அம்மா"என்ற சித்தர், உன் கையால் ஒரு கவளம் சர்க்கரை பொங்கல் கொடு" என்று கேட்டு வாங்கி சாப்பிட்டு அப்பெண்மணியை ஆசீர்வதித்து அனுப்பினார்.

  இராமசாமி சித்தர் தான் ஜீவசமாதி அடையும் நாளை முன்கூட்டியே அறிந்தவராய் தன்னை வழக்கமாக வந்து தரிசிக்கும் ஒரு அன்பரிடம் "பாதையை மறைக்காத; குழிக்குள் இறங்கு" என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். இதன் காரணத்தை அறியாத அன்பரும் குழப்பத்துடன் இருக்க, சரியாக ஒரு வாரத்திலேயே ராமசாமி சித்தர் சமாதி ஆகிவிட்டதைக் கேள்விப்பட்ட உடனேயே சித்தரின் உடலை ஜீவசமாதி வைக்கும் இடத்திற்கு சென்றார்.அன்று சித்தர் சொன்ன வார்த்தையில் அர்த்தம் புரிந்தவராய் தான் கொண்டு சென்ற ஒரு சிகப்புத் துண்டை அவரது மேல் உடம்பில் போர்த்தி சித்த புருஷனை அடக்கம் செய்த பேறு தனக்குக் கிட்டியதை நினைத்தவாறு ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்குப் பேருந்தில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார். ஒரு நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விருப்பாச்சி மேடு என்னும் இடம் வந்ததும் சாலையின் இடது புறம் ராமசாமி சித்தர் அவர்கள் நடந்து சாலையில் நடந்து போய்க் கொண்டிருப்பதைக் கண்டார்.அவரது மேல் உடம்பில் அன்பர் தான் போர்த்திய சிகப்புத் துண்டைப் போர்வை போல் போர்த்திய நிலையில் நடந்து சென்று கொண்டிருந்ததைக் கண்டார். மறுநாள் அவரது சமாதிக்கு சென்று பார்த்தபோது அங்கு சுவாமிகளை சமாதி செய்வித்த இடத்தில் அவரது தலை பகுதிக்கு நேராக அரை அடி நீளத்துக்கு ஒரு வெடிப்பு ஒன்று காணப்பட்டது. சுவாமிகள் தனது அருள் ஆற்றலை மட்டும் அங்கேயே வைத்துவிட்டு சரீரத்துடன் வேறு பிரதேசத்திற்குச் சென்று விட்டதை உணர்ந்தார். 'சித்தர்களுக்குச் சமாதி நிலை என்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. அவர்கள் என்றென்றும் அழிவின்றி வேறு வேறு இடத்தில் உலவிக் கொண்டு இருப்பார்கள்' என்பதை உணர்ந்து கொண்டார்.அதன்படி சுமார் இரண்டு மாதங்கள் கழித்து கேரளாவில் ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைப் பார்த்ததாக நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டறிந்தார். ராமசாமி சித்தர்  முஸ்லிம் அன்பர் ஒருவர் அன்போடு கொடுத்த குல்லாய் ஒன்றை எப்போதும் தலையில் அணிந்திருப்பார்கள். அந்த நிழற்படம் சுவாமிகளின் சமாதி பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. சித்திரை சமாதி வைத்த இடத்தின் அருகே பிரம்மாண்டமான ஆலமரம் உள்ளது. அதன் அடியிலேயே  சுவாமிகளின் சமாதிக் கோவிலை அழகுற அமைத்து சமாதி பீடத்தின் மீது சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வைத்து சிறப்புற ஒட்டன்சத்திரத்து மக்கள் இன்றளவும் பக்தியோடு  பூஜித்து வருகின்றனர்.

   ஸ்ரீலஸ்ரீ இராமசாமி சித்தர் பீடம் மிகுந்த அருளாற்றலுடன் திகழ்ந்து வருவதை அங்கு நேரில் சென்று அனுபவத்தால் உணரலாம்

குருபூஜை:-

நேற்று  தை மாதம் 13ம் நாள் 26.01.2022 புதன் கிழமை அன்று சுவாமிகளின் 35ம் ஆண்டு குருபூஜை சிறப்பாக நடைபெற்றது.

அமைவிடம்:-

ஸ்ரீலஸ்ரீ இராமசாமி சித்தர் கோவில்,நாகனம்பாடி பைபாஸ் சாலை, தீயணைப்பு நிலையம் அருகில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.


3. ஸ்ரீ பவழங்குடி சித்தரின் 215 வது குருபூஜை விழா 





4. தவத்திரு, விபூதி வள்ளல் எ. தனபால் சுவாமிகளின் நேற்று  (26.01.2022. புதன்கிழமை)  நடைபெற்ற 40- ஆம் ஆண்டு குருபூஜை விழா



 ஸ்ரீ உண்ணாமலை அம்மன் உடனாகிய ஸ்ரீ அண்ணாமலையார் அருள்பாலித்து வரும் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், எ.தனபால் சுவாமிகள் அவதாரம் செய்து நல்ல ஞான  ஆசிரியரிடம் ஞானகல்வி பயின்று அதனை கிராமங்கள், நகரங்கள், கோயில்கள், மடங்கள், தோறும் இடைவிடாது பக்தி சொற்பொழிவு, நாடகம் நடத்தி அருட்பிரகாச வள்ளல் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்க. நெறியில் நின்று  இணைந்து பக்தர்களுக்கும் நல்வழிகாட்டி பக்திக்கு  உகந்த விபூதி வழங்கி விபூதி வள்ளல் என பெயர் பெற்றார். தனபால் சுவாமிகள் பூண்டி மகான், கிருபானந்த வாரியார், கருமாரப்பட்டி வெள்ளையானந்த சுவாமிகள், ஆகிய மகான்கள் காலத்தில் வாழ்ந்து  அவர்களிடம்  நெருங்கி பழகியவர்.
 
சமாதிக் கோயில் அமைந்துள்ள இடம்:  நமத்தோடு  கிராமம், (தெள்ளராம்பட்டு) சேத்துப்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.                               

5. ஓம் ஸ்ரீலஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மா

இன்று  (27.01.2022) வியாழக்கிழமை  22-ஆம் ஆண்டு குருபூஜை விழா காணும்  மஹா சித்து  புருஷனி ஓம் ஸ்ரீலஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மா.  
                         



அம்மாவின் மகிமைகள்:

சென்னை-1,  தம்பு செட்டி தெரு, எண்.330, மெட்ராஸ் ட்ரான்ஸ்போர்ட் ஆபிஸ் திண்ணையில் அழுக்கு மூட்டைகளுடன் கைகள் நிறைய வளையல்கள், வாட்ச், கழுத்தில் நிறைய மணி மாலைகளுடன் முகம் முழுவதும் விபூதி குங்குமத்தை பூசி கொண்டு சாட்ஷாத் தம்பி செட்டி காளிகாம்பாள் அவதாரமாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி தீராத வினைகள் எல்லாம் தீர்த்து வைத்து தினம் வரும் குறைந்தது நூறு போ்களுக்காவது அன்னதானமும், டீ,  மோர், குளிர்பானம், முதலியவைகளை  வாங்கி கொடுத்து ஏழை முதல் தன வந்தவர்கள் வரை அனைவரையும் ஒரே சீராய் அன்பளித்து வந்த அம்மா அவர்கள் தம்பு செட்டி தெருவில் கிட்டத்தட்ட 30 வருடமாய் சாதனைகள் பல செய்து வந்தார்கள் கடைசியில் அம்மா ஜீவ முக்தி அடையும் நேரத்தில் 42 கோடி மக்கள் பாவத்தை செய்யிராங்க என்னால் தாங்க முடியவில்லை நான் உடனே போய் என் மக்களை காப்பாற்ற போகிறேன் என் கூறிக்கொண்டே உணவு அருந்தும் வேளையில் 30.01.2000 ஞாயிற்றுக்கிழமை, அன்று தை மாத அனுஷ நட்சத்திரத்தில் ஜீவ முக்தி அடைந்தார்கள். அம்மா 30 வருடம் வாழ்ந்த தம்பு செட்டி தெருவில்  ஆலயம் எழுப்பபட்டுள்ளது.    

அம்மாவின் சமாதி அமைந்துள்ள இடம் :

சென்னை- செங்குன்றம் சாலையில் உள்ள புழல் சிறைச்சாலை அருகே காவாங்கரை மயானத்தில் சமாதி உள்ளது. (காவாங்கரை கண்ணப்பர் ஜீவசமாதி ஆலயம் அருகில்) அம்மாவின் குருபூஜை விழா தை மாத அனுஷ நட்சத்திரப்படி காவாங்கரை  சமாதியில்   குருபூஜை இன்று நடைபெற்றது.

இன்றைய குருநாளில் ஒரே பதிவில் பல குருநாதர்களின் தரிசனம் நாம் அனைவரும் இங்கே பெற்று இருக்கின்றோம் என்றால் குருவின் அருளிற்கு எல்லையேது! பதிவின் தலைப்பிற்கு ஏற்றாற்போல குரு தரிசனம் நமக்கு திரு தரிசனமும் தருவதை உணர முடிகின்றது.


ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

இன்று தை விசாகம் - ஸ்ரீ தாயுமான சுவாமி குருபூஜை - 26.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/26012022.html

 ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 100 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 20.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/100-20012022.html

ஸ்ரீலஸ்ரீ செல்லப்ப சுவாமிகள் 121 ஆவது குரு பூஜை - 31.12.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/61-20122020.html

பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

 பராபரக் கண்ணி தந்து , எங்களுக்கு தாயும் ஆன பரமே போற்றி - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_24.html


கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/98-10022020.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html

 சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html


சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html



No comments:

Post a Comment