"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, May 24, 2020

பராபரக் கண்ணி தந்து , எங்களுக்கு தாயும் ஆன பரமே போற்றி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 
தென்கயிலாயம் என போற்றப் பெற்று வருகின்றது  திருச்சிராப்பள்ளி .

நன்று உடையானை தீயது இலானை , சென்று அடையாத் திருவுடையானை என்பார் திருஞானசம்பந்தர்

கட்டு நீத்தவர்க்கு இன்னருள் செய்பவர் என்பார் திருநாவுக்கரசர்

தாயான ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ என்பார் மணிவாசகர். 

திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை நரிச்சிராது நடக்கும் என்பது அப்பர் அரும் தமிழ் .

இன்றைய பதிவில் திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் பற்றியும், அங்கே அருள் பாலித்து வரும் தாயுமானவர் சுவாமிகள் பற்றியும் அறிய தருகின்றோம்.



திருச்சி என்றால் மலைக்கோட்டை என்பதும், மலைக்கோட்டை என்ற உடன் உச்சிப் பிள்ளையார் கோயிலும் தான் நினைவிற்கு வரும். இவற்றைத் தாண்டி அங்கே நமக்குத் தாயாய் விளங்கும் தாயுமானவர் திருக்கோயில் அழகாய் பிரம்மாண்டமாய், நின்று பேசுகின்றது.

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது ஐதிகம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்.

இத்திருக்கோயிலின் தல வரலாறு கீழே

    எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.
    திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) வழிபட்ட இடமாதலின் இஃது 'திரிசிராப்பள்ளி ' என்று பெயர் பெற்றது.


    உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.

வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு.


    தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்கு கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வரமுடிய வில்லை. இதனிடையே, அவளுக்கு பிரசவ வலி உண்டானது. தன்னைக் காக்கும்படி திரிசிராநாதரிடம் வேண்டினாள் ரத்னாவதி. அப்போது, சிவன் அவளது தாயின் வடிவில் சென்று, பிரசவம் பார்த்தார்.

காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், "தாயுமானவர்' என்று பெயர் பெற்றார்.

இத்தலத்தின் சிறப்புகள் ஒன்றா? இரண்டா? நீங்களே படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

  •     இத்தலத்திற்கு தென் கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு.
  •     மலையடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரைத் தொழுதுதான் மலையேற வேண்டும்.
  •     வழியில் நூற்றுக்கால் மண்டபமுள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் உள்ளது.
  •     மலையின் உச்சியில் "பிள்ளையார் " உச்சிப் பிள்ளையார் கோவில் உள்ளது.
  •     தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
  •     சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
  •     தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌனகுரு சுவாமிகள்.
  •     சைவ எல்லப்ப நாவலர் இத்தலத்திற்குத் தல புராணம் (செவ்வந்திப் பிராணம்) பாடியுள்ளார்.
கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது. சிவனுக்கு பூஜையின்போது சன்னதிக்குப் பின்புறத்தில்தான் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து, தேவாரம் பாடுகின்றனர்.








இனி  தான் தாயுமான சுவாமிகள் பற்றி அறிய உள்ளோம்.


தாயுமானவர் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார்:கேடிலியப்பர், தாயார்: கெஜவல்லி அம்மையார். இவர் வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தாயுமானவர் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.



தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு.பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.








தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

 ஆழ்வார்களைப் போன்று காதல் துறைகளின் வாயிலாக உயர்ந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தினார். கண்ணி என்றழைக்கப்படும் இரண்டடிப் பாடல் வகையை இவர் கையாள்கிறார். இவரது பாடல்கள் அனைத்தும் தாயுமானவர் பாடல்கள் என்ற நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. சிற்சில இடங்களில் சித்தர் கருத்தை ஒத்துப் பாடும் இவர், தம் காலத்தில் சமயப் போராட்டங்களையும் பூசல்களையும் கண்டு மனம் வெறுத்துச் சமரச ஒளியையே அதிகம் பாடியுள்ளார். தேசோமயானந்தம், கருணாகரம், பரஞ்சோதி, பரதெய்வம் போன்ற சொற்கள் இவர்க்கே உரியவை. “சும்மா இருக்க அருளாய்” என்று இறைவனிடம் வேண்டுபவர்,

    எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
    அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
                             (பராபரக்கண்ணி - 221)

என்று பாடுகிறார்.









தான் செய்யும் இறைவழிபாட்டை,

    நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
    மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே
                             (பராபரக்கண்ணி -151)

என்று கூறுகிறார். ஆனந்தக் களிப்பு, பைங்கிளிக் கண்ணி, ஆகாரபுவனம் என்பன கண்ணி வடிவில் அமைந்தவை. மொத்தம் 1452 பாக்களை 56 பிரிவுகளில் இவர் பாடியுள்ளார்.

    பொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும்
                பொய்யெனவே
    மெய்யநினை மெய்யெனவே மெய்யுடனே
           காண்பேனா - காண்
                    (காண்பேனா கண்ணி - 6)



                                    கோயில் மேல்புறம் வரைந்த கலைவண்ணம்










இது போன்ற, பித்தத்தை தெளிய வைத்து, சித்தம் உணர்த்தும் சித்தர் பாடல்களை இங்கே, இனிவரும் பதிவுகளில் அளிக்க சித்தர்களின் ஆசி வேண்டுகின்றோம்.













இந்த கோயிலுக்கு நீங்கள் சென்றால், மலையடிவார மாணிக்க விநாயகர், எம் பெருமானாய் தாயுமானவர், மகான் தாயுமானவர், உச்சி பிள்ளையார் கோயில் என ஒன்றுள் பலவாய், பலவற்றுள் ஒன்றாய் உள்ள தரிசனம் பெற முடியும். ஏகப்பட்ட கண்கவர் கலைவண்ணங்களை கருத்தாய் கவரவும் முடியும்.

சரி. இனி நாம் நேரே இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் சென்று தாயுமான சுவாமிகள் தரிசனம் பெற இருக்கின்றோம். 


இதோ ஸ்ரீ தாயுமான சுவாமி தபோவனம் வந்து விட்டோம்.



உள்ளே செல்ல இருக்கின்றோம்.


உள்ளே சென்றதும் ஸ்ரீ தாயுமானசுவாமி பற்றிய செய்தி இருந்தது. உங்கள் அனைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.


இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த ஜீவ ஆலயம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை உணர முடிகின்றது. இதோ. உள்ளே ஒவ்வொருவராக சென்று கொண்டு இருக்கின்றார்கள்.



இதோ. நாமும் உள்ளே சென்று விட்டோம். மாயையின் பிடியில் இருந்து தப்பித்து உள்ளே சென்றது போன்ற உணர்வு. வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தின் மரபில் சில மகான்களை கண்டோம். நீங்களும் கண்டு உணருங்கள்.






இந்த தரிசனத்தை தனித்தனியே தந்திருக்கலாம் என்று தற்போது நினைக்கின்றோம்.


இதோ. அடுத்து தாயாய் விளங்கும் பரமான தாயுமான சுவாமி தரிசனம் பெற இருக்கின்றோம். நம் மனதில் பல கூச்சல், சப்தம், ஆட்டம், ஓட்டம் என இருந்தது. வெற்று ஆரவாரம் எதுவும் இங்கில்லை. பேரமைதி இருந்தது. இது நம்மை ஈர்த்தது. நம் ஊன் எப்போது உருகும் என்று காத்திருந்தோம்.


உள்ளொளி பெருக்கும் தரிசனம். அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவின் இந்த இடத்தில் நமக்கு மூலத்தின் ஆதாரத்தில் சிறிய உணர்வாக அழுத்தம் பெற முடிகின்றது. இங்கேயே இப்படி ஒரு அனுபவம் என்றால் நேரில் சென்று மீண்டும் மனதில் தரித்து பரத்தில் சிக்க , தரிசிக்க மனம் விரும்புகின்றது.




தாயுமானவரே போற்றி 
தந்தையுமானவரே போற்றி 
எந்தையே போற்றி 
பரமே போற்றி 
சிவமே போற்றி 







‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!”
நெஞ்சகமே கோயில் ; நினைவே சுகந்தம்; அன்பே
மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய் ! பராபரமே!
அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டு விட்டால்
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே !
தாயுமானப் பெம்மான் தன்அடியை ஏத்துதற்குக்
காயும் வினைஅகலும் காண்.

என்று மீண்டும் மீண்டும் பாடி தாயுமானவர் பதம் போற்றுவோம்.

அன்பைப் பெருக்கி ஆருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
கன்றினுக்குச் சேதா கனிந்து இரங்கல் போல் எனக்கு
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே !
சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கு
அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே !
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே !
சீர் ஆரும் தெய்வத் திரு அருள்ஆம் பூமிமுதல்
பார் ஆதி ஆண்ட பதியே பராபரமே !

வித்து இன்றி யாதும் விளைவது உண்டோ?
நின்அருளாம்
சித்து அன்றி யாங்கள் உண்டோ? செப்பாய் பராபரமே!
சின்மயானந்த குருவே !                 
அங்கை கொடுமலர் தூவி அங்கமது புளகிப்ப
அன்பினால் உருகி விழிநீர்
ஆறாக, ஆராத முக்தியினது ஆவேச
ஆசைக் கடற்குள் மூழ்கிச்
சங்கர ! சுயம்புவே ! சம்புவே ! எனவும் மொழி
தழுதழுத்திட வணங்கும்
சன்மார்க்க நெறி இலாத் துன்மார்க்கனேனையும்
தண் அருள் கொடுத்து ஆள்வையோ?
துங்கமிகு பக்குவச் சனகன் முதல் முனிவோர்கள்
தொழுது அருகில் வீற்றிருப்பச்
சொல்லரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே
சொரூப அநுபூதி காட்டிச்
செங்கமல பீடம் மேல் கல்ஆல் அடிக்குள் வளர்
சித்தாந்த முக்தி முதலே !
சிரகிரி விளங்கவரு தட்சிணாமூர்த்தியே !
சின்மயானந்த குருவே !


இன்றைய ஒரே பதிவில் திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயிலில் அருள்புரியும் தாயுமான சுவாமிகள் பற்றியும், அவரின் பூரண அருள் தரும் ஸ்ரீ தாயுமான சுவாமி தபோவனம் தரிசனமும் பெற்றுள்ளோம் என்றால் குருவின் கருணைக்குத் தான் எல்லை உண்டோ? 

மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

 பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html

 குருவே சரணம் - ஸ்ரீ ல ஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_23.html

 ஆதிசிவத்துள் ஐக்கியமான சித்தர்காடு சித்தர்கள் - ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் பதமே போற்றி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_20.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

 ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_28.html

ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_90.html

சிறப்பான வாழ்வு தரும் சித்தர்காடு - ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் பதமே போற்றி -  https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_16.html

சித்தர்கள் அறிவோம்! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_13.html
 
பாண்டிச்சேரி சித்தர்களின் பாதம் பற்றுவோம் - https://tut temples.blogspot.com/2020/03/blog-post_53.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி... - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_14.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

இன்றைய சித்திரை திருவாதிரையில்... விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_78.html


வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html


No comments:

Post a Comment