அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
திரும்பி பார்க்கும் இடமெல்லாம் மகாளய பட்சம் என்பதே பேச்சாக உள்ளது.
நாமும் நம் தளம் சார்பில் மகாளய பட்சம் பற்றி இந்தப் பதிவில் பேச
விரும்புகின்றோம். நம்முடைய ஆதி வழிபாடாக முழுமதி வழிபாடும், மறைமதி
வழிபாடும் நிறைந்து இருக்கின்றது. அதான் பௌர்ணமி வழிபாடும், அமாவாசை
வழிபாடும் ஆகும். நம் தளத்தில் வழக்கமாக மகாளய பட்சம் பற்றி பதிவு செய்வது வழக்கம். சென்ற ஆண்டில் நாம் மகாளய பட்சம் பற்றி பதிவு செய்யவில்லை. ஆனால் குருவருளால் வழக்கமாக மகாளய பட்சம் சேவை நடைபெற்றது. இந்த ஆண்டில் இன்று முதல் மகாளய பட்சம் ஆரம்பமாகின்றது. இதனையொட்டி வழக்கம் போல் சேவைகள் இந்த காலத்தில் நடத்தி தர குருவிடம் வேண்டி பணிகின்றோம்.

குருவருளால் இன்றைய பிரதமை திதியில் இரவு திருச்சி அகிலாண்டேஸ்வரி கோயிலில் அன்னம்பாலிப்பு செய்ய உள்ளோம்.
ஆடி
அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மூன்றும் விசேஷமாக
கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும்,
தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது. பௌர்ணமி வழிபாடு
குறிப்பாக இல்லறத்தின் தேவைகளுக்காக செய்ய வேண்டிய ஒன்றாகும். அமாவாசை
வழிபாடு முக்தி போன்ற மறைபொருள் தேவைகளுக்கு செய்ய வேண்டியது. அதற்காக
அமாவாசை வழிபாடு பற்றி அஞ்ச வேண்டாம். நம் முன்னோர் அருள், பித்ரு தோஷம்
போன்றவற்றிற்கு அமாவாசை வழிபாடு சிறப்பாக அமைகின்றது.
நம்மைப் பொறுத்தவரை அமாவாசை வழிபாடு நம் TUT குழுவின் உதவியின் மூலம்
அன்னதானமாக நடைபெற்று வருகின்றது. முதலில் நாம் அகத்தியர் வனம் மலேஷியா
குழுவினர் துணையோடு அன்னதானம் செய்ய ஆரம்பித்தோம். கூடுவாஞ்சேரி மற்றும்
சுற்றுப்புறங்களில் செய்த அன்னதானம், பின்பு சென்னை வேளச்சேரி மற்றும்
சுற்றுப்புறங்களில் விரிந்தது. சென்ற மாதம் சைதையில் செய்தோம். இந்த மாதம்
சென்னையை விட்டு, எம்பிரான் அருளும் திருஅண்ணாமலையில் செய்தோம். அனைத்தும்
குருவருளால் மட்டுமே. நாம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று
முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. ஆனால் நடப்பவை அனைத்தும் மிகச் சிறப்பாக
நடைபெற்று வருகின்றது. இது அன்னதானத்தில் மட்டும் அன்று, உழவாரப் பணி
ஆகட்டும், அகத்தியர் ஆயில்யம் பூஜை ஆகட்டும், தல யாத்திரை ஆகட்டும்.
அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு தொடங்கிய
அன்னதான சேவை, நம் குழுவின் உறவுகளால், அமாவாசையில்
செய்தாலும் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, அமாவாசை தோறும்
அன்னசேவை எங்களால் முடிந்த ஒரு 10 பேருக்கு செய்து வருகின்றோம். இதோ
அடுத்து புரட்டாசி அமாவாசை வரப் போகின்றது. மறந்தவர்களுக்கு மகாளய
பட்சம் என்று பொதுவாக சொல்வார்கள்.
மகாளய
பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள்,பிரதமை திதியில்
துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும்
அமாவாசையை மகாளயம், மஹாளயம், மாவுளி அமாவாசை எனக்கூறுவர்.
அமாவாசைகளில்
மிகச்சிறப்பு வாய்ந்தது இந்த மகாளயம் தான். மா என்றால் மிகப்பெரியது
என்று பொருள் அதனால் தான் நம் முன்னோர்கள் மகாளயம் என்றார்கள். பட்சம்
என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து
இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
நமது
மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு
செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும்,
அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.
கடக்க முடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன் போல
பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.
எனவேதான்
பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக் கொள்வதற்காக
நாம் அணிந்து கொள்ளும் பாதுகாப்பு கவசத்துக்கு ஒப்பாகும். ஒவ்வொரு
திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும்
என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை
குறிப்பதாகும். மகாளய பட்சம்
என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களை குறிப்பதாகும்.மகாளயம்
என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும்
பொருளாகும். மகான்கள் பாதி மாதம் பூமியில் வந்து வாழுகின்ற காலம் என்பதை
மகாளயபட்சம் என்று கூறுகிறார். இந்நாள்களில் இறந்து போன முன்னோர்கள் ஆவி
ரூபத்தில் கோயில்களின் தீர்த்தங்களில் நீராடி தங்களுடைய சக்திகளைப்
பெறுவார்கள் என்றும், அவர்களின் சந்ததியினர் வாழிடங்களுக்குச் சென்று
தங்களுக்கு அவர்கள் அளிக்கும் உணவினை ஏற்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.
அதனால் இந்த
நாள்களில் நீர்த்தார் நீர்கடன் அளிப்பதையும், வழிபடுவதையும் இந்துக்கள்
வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதினைந்து நாள்களில் மாளய
அமாவாசை முக்கிய நாளாகும்.
நமது
மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு
செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும்,
அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.
எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே
காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும். ஒவ்வொரு திதியிலும்
அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர்
வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால்
பல்வேறு பலன்கள் நம்மைச்
சேர்கின்றன.
மகாளய பட்சத்தின் போது ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள்.
நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை.
அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.
மகாளய பக்ஷ்த்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.
முதல் நாள் - பிரதமை - பணம் சேரும்
2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல்
13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.
மகாளயபட்ச சேவை குருவருளால் இன்று முதல் சிறப்பாக நடைபெற குருவிடம் வேண்டி பணிகின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் இந்த தொண்டில் இணைய வேண்டுகின்றோம்.
திருச்சிற்றம்பலம்!
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment