"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, September 16, 2023

முன்னவனே யானை முகத்தவனே - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தள வாசகர்களுக்கும், நம் சேவைகளில் பங்கு கொண்டு உறுதுணையாய் இருக்கின்ற அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 



நம் தளத்திற்கும், விநாயகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனென்றால் இன்று வரை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் அருளாலும், முருகப் பெருமான் ஆசியாலும் நம் தளத்தின் சேவைகள் தொடர்ந்து வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மோட்ச தீப வழிபாடு, உழவாரப் பணி தவிர ஏனைய சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

நம்  தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு ஆரம்பித்த புதிதில் முதன் முதலாக விநாயகர் சதுர்த்தி வழிபாடு கொண்டாடிய விதம் இன்னும் நம் நெஞ்சில் இனிப்பாக இருக்கின்றது. 

மூத்தோனை வணங்குகின்றோம். தற்போது நாம் சந்தித்து வரும் பல பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட மூத்தோனை வணங்குவோம். கிரக ரீதியாகவும் பார்க்கும் போது ராகு,கேது கோள்களின் ஆதிக்கத்தினால் தான் வைரஸ் காய்யச்சல் பரவி வருகின்றது என்றும் சொல்கின்றார்கள். விநாயகர் கேதுவின் அம்சம் ஆவார்.நம் குருநாதர் அகத்திய பெருமானும் கேதுவும் அம்சம் ஆவார். எனவே குருவாகவும், திருவுமாகவும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ அகத்தியர் தரிசனமும், ஸ்ரீ விநாயகர் தரிசனமும் ஒருங்கே இங்கே பெற முடிகின்றது. 

 ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று பாடி ஸ்ரீ விநாயகர் பாதம் பற்றுவோம். போற்றுவோம்.

 விநாயகர் தரிசனம் இல்லாது நாம் எந்த காரியம் செய்ய இயலாது, குலம் காக்கும் குல தெய்வத்திடமும், வினை தீர்க்கும் விநாயகரிடமும் அனுமதி இன்றி நாம் ஒரு அடி  கூட எடுத்து வைக்க இயலாது. எனவே தான் எந்த செயல் செய்தாலும் விநாயகரிடம் அனுமதி வாங்கி செய்ய வேண்டும் என்றார்கள் நம் முன்னோர்கள். சிதறு காய் உடைப்பது போன்றது. விநாயகர் ஒரு முழுமுதற் கடவுள். விநாயகர் என்றால் வினைக்கு நாயகர் என்று பொருள். தான் செய்யும் வினைகளுக்கு தானே காரணகர்த்தாவாக இருப்பவர். அதனால் தான் அவரிடம் மட்டும் தோப்புக்கரணம் போடுகின்றோம். வேறெந்த இறைத்தன்மைக்கும் இந்த தோப்புக்கரணம் இல்லை.இப்போது பள்ளிகளில் இது உண்டா? என்றும் தெரியவில்லை. ஆனால் இன்று மேலைநாடுகளில் சூப்பர் பிரைன் யோகா என்று தோப்புக்கரணம் சொல்லித்தரப்படுகின்றது. தப்பு செஞ்சா தண்டனைக்காக என்று தோப்புக்கரணம் இல்லை.

தோப்புக்கரணத்தின் பயன்கள்.. மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன நாடிகள் சுத்தம் பெறுகின்றன.

நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள்.

தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும். தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.

தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கைவிரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் –  மூலாதாரத்தில் - சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில்
செய்ய முடியாது என்பதே உண்மை.


இதனை நாம் இரண்டு உழவாரப்பணிக்கு முன்னர் செய்து பார்த்து உணர்ந்தோம். தோப்புக்கரணம் ஒன்றே போதும்  நம் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். இது தான் தோப்புக்கரணத்திற்கான அறிவியல் காரணமும் கூட..எதிர்கால சந்ததிக்கு இது போன்ற அறிவியலோடு பக்தியை ஊட்டுங்கள்.அப்போது தான் நம் இந்து தர்மம் வளரும். அடுத்து கூடுவாஞ்சேரி ஆலய விநாயகர் பற்றி பாப்போம். இங்கு இடம்புரி விநாயகர் இருக்கின்றார். வலம்புரி விநாயகர் இருக்கின்றார். இடர்களை நீக்கும் இடம்புரி கணபதியையும் , வளங்களை அருளும் வலம்புரி கணபதியையும் ஒரு சேர வணங்கிட  கூடுவாஞ்சேரி விநாயகரை தரிசியுங்கள்.

அடுத்த சில தரிசன அருள்நிலைகளை கண்டு , அனைவரையும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு அழைக்கின்றோம்.











மேலும் ஒரு அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.


வாய்ப்புள்ள அன்பர்கள் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் கலந்து கொண்டு, இல்லத்திலும் விநாயகரை வரவேற்று ஒளவைப் பாட்டி கூறியது போல் , கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி, சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டும் , சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டும் அருள்நிலை பெற வேண்டுவோம்.

திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

மூத்தோனை வணங்கு - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2021/09/blog-post_9.html

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_59.html

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி, விநாயகர் சதுர்த்தி - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் பாதம் போற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_22.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_35.html

 விநாயகர் சதுர்த்தி தின விழா ...தொடர்ச்சி (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1_30.html

 TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/tut_29.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

No comments:

Post a Comment