"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, September 1, 2020

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 02.09.2020 முதல் 17.09.2020 வரை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆவணி மாதத்தில் நாம் பயணித்து கொண்டு இருக்கின்றோம். சார்வரி ஆண்டு முதல் நாம் தொற்றுக்கிருமியால் அவதிப்பட்டு வருகின்றோம்.  இது ஒருபுறமிருக்க, தமிழ் நாட்காட்டியில் இந்த ஆண்டில் நாம் குழப்பத்தில் இருக்கின்றோம். ஆடி மாதத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடினோம். அதே போன்று  கிருஷ்ண ஜெயந்தியும் அமைந்தது. மகாளய பட்சமும் பொதுவாக புரட்டாசியில் தான் வரும். இந்த ஆண்டில் ஆவணியில் மகாளய பட்சம் வந்துள்ளது. இதில் நவராத்திரியும் ஐப்பசி 1 ஆம் தேதியில் வருகின்றது. ஏன் இத்தனை குழப்பங்கள்? இதனை எப்படி கணக்கீடு செய்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்? என்றெல்லாம் நமக்கு தோன்றுகின்றது. நவகோள்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் என்று நாம் பொதுவாக பேசி கணக்கில் கொண்டு வருகின்றோம். ஆனால் இந்த தமிழ் மாத நாட்காட்டி இவற்றை தாண்டி, இன்னும் துல்லியமாக நம் முன்னோர்களால் கணக்கீடு செய்யப்பட்டு பஞ்சாங்கமாக தந்துள்ளார்கள். 

நாம் ஏற்கனவே சொன்னது போல் பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை:  வாரம்,திதி,கரணம், நட்சத்திரம்,யோகம் ஆகும். அப்பப்பா..கேட்பதற்கே தலை சுற்றுகிறது அல்லவா? நம் ரிஷிகள் அளித்த இந்த பஞ்சாங்கத்தை நாம் கடைபிடிக்க வேண்டும் அல்லவா? இப்படியொரு நாட்காட்டி நம் தமிழ் நாட்காட்டி ஆகும்.

சரி விசயத்திற்கு வருவோம். மகாளய  பட்சம் மிக மிக முக்கியமான வழிபாடு ஆகும். இன்றைய ஆவணி மாத பௌர்ணமிக்கு பின்னர் மகாளய  பட்சம் வருகின்றது.

திரும்பி பார்க்கும் இடமெல்லாம் மகாளய  பட்சம் என்பதே பேச்சாக உள்ளது. நாமும் நம் தளம் சார்பில் மகாளய  பட்சம் பற்றி இந்தப் பதிவில் பேச விரும்புகின்றோம். நம்முடைய ஆதி வழிபாடாக முழுமதி வழிபாடும், மறைமதி வழிபாடும் நிறைந்து இருக்கின்றது.  அதான் பௌர்ணமி வழிபாடும், அமாவாசை வழிபாடும் ஆகும். பௌர்ணமி வழிபாடாக அண்ணாமலை கிரிவலம் நாம் சென்று வருவது வழக்கம். சென்ற ஆவணி பௌர்ணமியும் கிரிவலம் சென்று ,ஒவ்வொரு லிங்கத்திலும் தூய பசு நெய் கொண்டு விளக்கேற்றி, லோக ஷேமத்திற்காக வேண்டிக்கொண்டு வந்தோம். அடுத்து அமாவாசை வழிபாடு என்று பார்த்தோமானால் நாம் நம் தளம் சார்பில் செய்து வரும் மோட்ச தீப வழிபாடு ஆகும்.










இதே போன்று தான் அமாவாசை அன்னதானம் செய்து வருகின்றோம். சென்ற ஆடி  அமாவாசை அன்று நாள் முழுதும் மூன்று பொழுதும் அன்னதானம் செய்தோம்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மூன்றும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது. பௌர்ணமி வழிபாடு குறிப்பாக இல்லறத்தின் தேவைகளுக்காக செய்ய வேண்டிய ஒன்றாகும். அமாவாசை வழிபாடு முக்தி போன்ற மறைபொருள் தேவைகளுக்கு செய்ய வேண்டியது. அதற்காக அமாவாசை வழிபாடு பற்றி அஞ்ச வேண்டாம். நம் முன்னோர் அருள், பித்ரு தோஷம் போன்றவற்றிற்கு அமாவாசை வழிபாடு சிறப்பாக அமைகின்றது.






நம்மைப்  பொறுத்தவரை அமாவாசை வழிபாடு நம் TUT குழுவின் உதவியின் மூலம் அன்னதானமாக நடைபெற்று வருகின்றது. முதலில் நாம் அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் துணையோடு அன்னதானம் செய்ய ஆரம்பித்தோம். கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் செய்த அன்னதானம், பின்பு சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் விரிந்தது. சென்ற மாதம் சைதையில் செய்தோம். இந்த மாதம் சென்னையை விட்டு, எம்பிரான் அருளும் திருஅண்ணாமலையில் செய்தோம். அனைத்தும் குருவருளால் மட்டுமே. நாம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. ஆனால் நடப்பவை அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இது அன்னதானத்தில் மட்டும் அன்று, உழவாரப் பணி ஆகட்டும், அகத்தியர் ஆயில்யம் பூஜை ஆகட்டும், தல யாத்திரை ஆகட்டும். அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு தொடங்கிய அன்னதான சேவை, நம் குழுவின் உறவுகளால், அமாவாசையில் செய்தாலும் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, அமாவாசை தோறும் அன்னசேவை எங்களால் முடிந்த ஒரு 10 பேருக்கு செய்து வருகின்றோம். இதோ புரட்டாசி   அமாவாசை வரப் போகின்றது.
மறந்தவர்களுக்கு மகாளய  பட்சம் என்று பொதுவாக சொல்வார்கள். 


இன்னும் சற்று ஆழ்ந்து பார்க்கலாமா?



02.09.2020 முதல்  17.09.2020 வரை மகாளய  பட்சம் வருகின்றது. மகாளயம்' என்றால் பெரிய கூட்டம் என்று பொருள்.மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் காலமே(நேரமே) மகாளய பட்சம் ஆகும்

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள்,பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையை மகாளயம், மஹாளயம், மாவுளி அமாவாசை எனக்கூறுவர். 

அமாவாசைகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது இந்த மகாளயம் தான்.  மா என்றால் மிகப்பெரியது என்று பொருள் அதனால் தான் நம் முன்னோர்கள் மகாளயம் என்றார்கள். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். கடக்க முடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன் போல பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கும். 

எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக் கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் பாதுகாப்பு கவசத்துக்கு ஒப்பாகும். ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது.

பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களை குறிப்பதாகும்.மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும். மகான்கள் பாதி மாதம் பூமியில் வந்து வாழுகின்ற காலம் என்பதை மகாளயபட்சம் என்று கூறுகிறார். இந்நாள்களில் இறந்து போன முன்னோர்கள் ஆவி ரூபத்தில் கோயில்களின் தீர்த்தங்களில் நீராடி தங்களுடைய சக்திகளைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் சந்ததியினர் வாழிடங்களுக்குச் சென்று தங்களுக்கு அவர்கள் அளிக்கும் உணவினை ஏற்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.  

அதனால் இந்த நாள்களில் நீர்த்தார் நீர்கடன் அளிப்பதையும், வழிபடுவதையும் இந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதினைந்து நாள்களில் மாளய அமாவாசை முக்கிய நாளாகும்.

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும். மஹாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 2ம் தேதி பிரதமை திதியில் இருந்தே பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிக்கத் தொடங்கலாம். ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது. 

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் 
சேர்கின்றன. 

மகாளய பட்சத்தின் போது ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள்.

தர்ப்பணம் ஆரம்ப நாள் 02.09.2020 (புதன்கிழமை)

முதலாம்  நாள் - பிரதமை_பணம் சேரும்

இரண்டாம்  நாள் - துவிதியை_மகப்பேறு

மூன்றாம் நாள் - திரிதியை_நினைத்தது நிறைவேறுதல்

நான்காம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்

ஐந்தாம் நாள் - பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்

ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்

ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்

ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.

பத்தாம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.

பதினொன்றாம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி

பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்

பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.

பதினைந்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.



எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.

இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மகாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அனைத்து முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், நண்பர்களுக்கும், முகம் தெரியாதவர்களுக்கும் கூட அன்று தர்ப்பணம் செய்யலாம் என்பது மகாளயத்தின் சிறப்பு. 

நாம் மகாளய  பட்சம் அன்று திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்று கொண்டு இருந்தோம். அங்கு நமக்கு ஒரு வாய்ப்பாக அன்னசேவை கிடைத்தது. அன்று தொடங்கிய அன்னசேவையை வரும் 28.09.2019 வரை செய்ய விழைகின்றோம். மனிதர்களுக்கு என்று மட்டும் அல்ல; நமக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த வழியில் செய்து வருகின்றோம். இந்த மகாளய  பட்ச காலத்தில் தர்ப்பணம் செய்யுங்கள். தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் இம்மாத அமாவாசை  அன்று நடைபெறும் மோட்ச தீப வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.

 ‘மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை’ என்று சொல்வது வழக்கம். ஒரு சிலருக்கு தன்னுடைய தாய் தந்தையரின், முன்னோர்களின் இறந்த திதி தெரியாமல் இருக்கும். அவர்கள் மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால் நன்மைகள் விளையும் என்பதால் ஏற்பட்ட சொல் அது.

முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள் மகாளய அமாவாசை என்பதை மறந்து விடாதீர்கள். இதுவரை திதி கொடுக்க மறந்தவர்கள்,  மகாளய  பட்ச காலத்தில்  திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் ஏற்றுக்கொள்வர். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும், தைமாதம் வரும் அமாவாசையை ‘தை அமாவாசை’ என்றும், புரட்டாசி மாதம் வரக்கூடிய அமாவாசையை ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பு வாய்ந்தவைகளாகச் சொல்வர்.

இனி சென்ற ஆண்டில் நாம் செய்த நிகழ்விலன் துளிகளை தருகின்றோம்.

இன்றோடு 3ம் நாள் TUT சேவை தொடர்ந்துள்ளோம்.

1ம் நாள் – 14.09.2019 - பிரதமை
திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சுமார் 50 பேருக்கு அன்னசேவை செய்தோம்.
















2ம் நாள் – 15.09.2019 - துவிதியை

அருள்குடிலில் பைரவரர்களுக்கு சுமார் 20 பாக்கெட் பிஸ்கட் கொடுத்தோம்.






3ம் நாள் – 16.09.2019 - திரிதியை 
கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதியில் சுமார் 10 பேருக்கு இன்று காலை உணவு கொடுத்தோம்.





வழக்கம் போல் இந்த பாட்டிக்கு உணவு கொடுப்பது வழக்கம். காலை உறக்கத்தில் இருந்தபடியால் நாம் அவர்களின் அருகில் உணவு வைத்துவிட்டு வந்தோம்.

வீட்டில் நீங்கள் முதல் உணவை எடுத்து கொஞ்சம் காகத்திற்கு வைத்து, உங்கள் முன்னோரை நினைத்து இந்த மகாளய  பட்ச காலத்தில் வழிபாடு செய்து வாருங்கள்.

இம்மாத வழக்கமான சேவைகளோடு மகாளய பட்ச சேவைகளும் நம் தளம் சார்பில் குருவருளால் செய்ய உள்ளோம். நித்தம் 5 அன்பர்களுக்கு உணவு கொடுக்க உள்ளோம், மேலும் பசுக்களுக்கு உணவு, போர்வை தானம், குடை தானம், வஸ்திர தானம், தீப எண்ணெய் தானம் செய்ய உள்ளோம்,வாய்ப்புள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்யும் படி வேண்டுகின்றோம்.


நம் அன்னசேவை பணிக்காக இம்மாதம் திருவோணத்தில் சமையல் பாத்திரங்கள் நேற்று வாங்கி உள்ளோம். போர்வை தானம், குடை தானம், வஸ்திர தானம் செய்வதற்கு நாம் ஆயத்தம் பெற்று விட்டோம். இதனை பற்றி குருவிடம் தெரிவித்த போது, நமக்கு சிறப்பாக ஆசி வழங்கி உள்ளார்கள்.







மேலும் வருகின்ற சனிக்கிழமை அன்று நென்மேலி லஷ்மி நாராயண பெருமாள் கோயில் என்று பித்ரு பூஜை செய்ய உள்ளோம். யாரேனும் சங்கல்பம் செய்ய விரும்பினால் நம்மை தொடர்பு கொள்ளவும்.

- மீண்டும் சந்திப்போம் 

முந்தைய பதிவுகளுக்கு:-

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html

மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html
ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_21.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html
ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html
மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm
திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

 பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

 தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment