"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, November 20, 2023

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் வாலைத் தாயின் பாதம் பணிந்து வருகின்ற வியாழன் அன்று மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகத்திற்கு அனைவரையும் வருக! வருக!! என்று அழைத்து மகிழ்வதுடன், கும்பாபிஷேகத்திற்கு தங்களால் முடிந்த பொருளுதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். ஏனெனில் ஆலய திருப்பணியில்  ஈடுபட்டால் நம்  தீவினைகள் முற்றிலுமாய் நீங்கப்பெறும்

கூடவே நல்வினைகள் சேரும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடல், உடலுழைப்பு  தரல், இடம் அல்லது மனை தரல்,குளம் தூர்வாரல்,கல்,மண் அளித்தல் ஆகிய எல்லாம் மிகமிக சிவபுண்ணிய செயல்களாம்.

நம்பழம் பாடல் பகரும் இப்படி:

"புல்லினால் கோடியாண்டு,புதுமண்ணால் பத்துகோடி
செல்லுமா ஞாலந்தன்னில்  செங்கல்லால் நூறு கோடி 
அல்லியங்கோதைமின்னே ஆலயம்  மடங்கள் தம்மை 
கல்லினால் புதுக்கினோர்கள் கயிலை விட்டு அகலாரன்றே" 

"கோவிலுக்கு ஒரு செங்கல் வழங்குதல், அந்த செங்கல் எத்தனை நாட்கள் கோவிலில் இருக்குமோ அத்தனை நாட்கள் நீங்கள் கைலாயத்திலோ அல்லது வைகுண்டத்திலோ வாசம் செய்யும் புண்ணியம்"!

இந்த சிந்தனையுடன் ஆலய திருப்பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.



சிவ சிவ! ஓம் வாலைத்தாய் திருவடிகள் போற்றி 

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் திருப்பணிக்கு உதவிட வேண்டுகிறாேம்!  

ஆலயம் : அருள்மிகு பெரிய புனமங்கை என்கிற பாலா திரிபுரசுந்திரி ஆலயம். 
ஆலயம் உள்ள ஊர் : கொடிமங்கலம் (மதுரையில் இருந்து 10 கி.மீ தாெலைவு) 
வட்டம் : மதுரை மேற்கு 
மாவட்டம் :மதுரை 

ஆலயத்தை பற்றி :மதுரை மாநகரில் இருந்து சோழவந்தான்  செல்லும் வழியில் உள்ள ஊர் கொடிமங்கலம் .இங்கு அருள்மிகு வாலைத்தாய் ஆலயத் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அருள்மிகு வாலைத்தாயின் உத்தரவின் பேரிலும், வழிகாட்டுதல்களிலும் ஆலயம் கருங்கல்லில் எழுப்பட்டு 23 நவம்பர் 2023 கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது 

அடியார்கள் தங்களால் இயன்ற அளவில் உதவிட வேண்டுகிறாேம்! 

கலசவிழாவிற்கு இன்னும் 01 நாட்களே உள்ள நிலையில் அருள்மிகு வாலைத்தாய் ஆலயத் திருக்குடமுழுக்கிற்கு இன்னும் ரூ. 1,00,000/- தேவைப்படுகிறது!

ஆலய கும்பாபிஷேகம் செய்ய கீழ்கண்ட பணிகளுக்கு உபயதாரர்களிடம் இருந்து நன்கொடை பொருட்கள்களாகவோ பணமாகவோ வேண்டப்படுகிறது

ஆலயத் திருக்குடமுழுக்கின்பாேது உள்ள பணிகளும் மற்றும் தேவைப்படும் பாெருட்களும் :

1. யாக சாமான் பாெருட்கள் (07 குண்டம், 04 கால பூசை) ரூ. 1,00,000/-யாகசாமான் பாெருட்கள் தேவைப்படுவதால் அடியார்கள் தங்களால் இயன்ற அளவில் உதவிட வேண்டுகிறாேம்! 

ஆலயத்திருப்பணிக்கு உதவிட வங்கி கணக்கு விபரம்:
Name : SPPMSKSMK Trust 
Acc No :1261172000003400
Bank : Karur Vysya Bank
IFSC : KVBL0001261
Branch : Sivakasi

Google Pay No : 9498106039 (T Rathinasabapathy)
Whats App No. 9498106039
FACEBOOK ID suba_saba2005@yahoo.co.in 
ஆலயத் தொடர்புக்கு  : திரு. ரத்தினசபாபதி - 94981 06039, 70102 42321
திரு. தங்கவேலு - 9486028863 

திருச்சிற்றம்பலம்!





மேலே அழைப்பிதழ் இணைத்துள்ளோம். அனைத்து இறை அன்பர்களும் கலந்து கொண்டு வாலைத்தாயின் அருள் பெற வேண்டி பணிகின்றோம்.

மேலும் சென்ற நவராத்திரி வழிபாட்டில் கூடுவாஞ்சேரியில் நாம் பெட்ரா வாலைத்தாய் தரிசனம் கண்டு மகிழ உள்ளோம்.

நமக்கு அருளப்பட்ட கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் நவராத்திரி வழிபாட்டில் பாலாம்பிகை தரிசனம் கண்டு இன்புறுவோம்.


நேற்று நமக்கு கிடைத்த பாலாம்பிகை தரிசன நாளில் நம் தளம் சார்பில் சிறிய சேவை செய்ய குருவருளால் பணிக்கப்பட்டோம். அதைப்பற்றி காணும் முன்பு, குருநாதர் நமக்கு அருளிய மந்திர உபதேசத்தை சித்தன் அருள் வலைத்தளத்தில் இருந்து தருகின்றோம்.

18. பெண்கள், பெண் குழந்தைகள், தற்போதுள்ள சூழ்நிலையில் பத்திரமாக வெளியே சென்று வர எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும்? எந்த கடவுளை வணங்க வேண்டும்?

அப்பனே! எது என்று அறிய! அறிய! பாலாம்பிகை தேவியை வணங்கச்சொல்! போதுமானது! அப்பனே, எதை என்று அறிய, அறிய, எதை என்று கூற, கூற "ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக, வருக" என்று ஜெபிக்க, குழந்தை ரூபத்தில் வந்து கொண்டே இருப்பாள் அவள். நிச்சயம் தெரிவித்துவிடு அப்பனே!

மந்திர உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் மேற்காணும் வாக்கில் குருநாதர் அருளிய உபதேசத்தை கருத்தில் கொண்டும், தினமும் 108 முறையோ அல்லது தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் அனுதினமும் கூறி வரவும். இதனை குடும்பத்தில் உள்ள அனைவரும் சிரத்தையாக பின்பற்றி வர வேண்டுகின்றோம்.






சித்த மார்கத்தில் நுழைந்து நடப்பவர்களுக்கு எல்லா நாட்களும் சிறந்ததாயினும், இறை அருளை கூட்டவும், சித்தர்கள் அருகாமையை உணரவும், சக்தியை வாலையாக வழிபடுவது இன்றியமையாத ஒன்று. சக்தி இல்லையேல் சிவமில்லை என்று உணர்ந்த சித்த பெருமக்கள், வாலை என்கிற சிறு வயது பெண்ணாக அம்பிகையை வணங்கி, பூசித்து அவள் அருள் பெற்றுக்கொள்கிற ஒரு மாதமாக "ஆடி" மாதத்தை வகுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த மாதத்தில், மனிதர்களாகிய நாமும் வாலையை பூசிக்கும் விதமாக செவ்வாய்/வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவில்களில் அலங்காரம் பூசை கண்டு தொழுது அவளருள் பெறுவது இயல்பு. சக்தியை, 9 வயது பெண்ணாக (பூப்பெய்தா பருவத்தில்) அனைத்து விதத்திலும் அலங்கரித்து பூசை செய்வது சிறப்பு. ஒரு சிலர், வயதுக்கு வராத ஒரு சிறுமியை வீட்டில் அழைத்து, ஒரு குழந்தை தன்னை அழகு படுத்திக்கொள்ள என்னென்ன தேவைப்படுமோ, அத்தனை பொருட்களையும் வாங்கி, ஏதேனும் ஒரு கோவிலில் சன்னதியில் வைத்து பூஜித்து, அந்த குழந்தைக்கு கொடுப்பார்கள். இதுவும், வாலை அம்மன் அருளை பெற மிக எளிய வழியாகும்.

இனி, வாலைக்குமரியை பற்றிய ஒரு தொகுப்பை பார்ப்போம்.

வாலையம்மன்: சித்தர்களின் ரகசிய பெண் தெய்வம் வழிபாடு. யார் அந்த வாலையம்மன்? வாலைப் பெண் தெய்வம் எனப்படும் பாலாவின் சிறப்பு என்ன? சித்தர்கள் எவ்வாறு பூஜித்தனர்?

அண்டமெல்லாம் விளங்கும் ஒப்பற்ற சக்தியாக இருக்கக் கூடிய அன்னை பராசக்தியின் பல்வேறு ரூபங்களை நாம் பூஜித்து வருகிறோம்.

இருப்பினும் நமது செந்தமிழ்நாட்டில் வாழ்ந்தும், வாழ்ந்து கொண்டும் இருக்கின்ற சித்த புருஷர்கள் இறை நிலையை அடைய யோக முறைகளையும், பூஜை முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.
 
சிவ வழிபாடு அனைத்து சித்தர்களும் செய்து வந்தது நாம் அனைவருமே அறிவோம். இருப்பினும் அந்த சித்த நிலையை அடைய வேண்டிய சக்திகளை பெறுவதற்கு சில இரகசிய வழிபாட்டு முறைகளை செய்து வந்துள்ளனர்.

அப்படி அவர்களின் வழிபாட்டில் இருந்த ஒப்பற்ற சக்திகளை வழங்கிய வழிபாடே “வாலையம்மன்“ (பாலா) வழிபாடு ஆகும்.

காளி ஞானத்தின் வடிவமா? காளி வழிபாடு எப்படி தோன்றியது?

நம் தமிழ் இலக்கியங்களில் உள்ள பிள்ளைத் தமிழ் பருவங்களில் “வாலை பருவம்” ஒரு பருவம் உண்டு. ஒன்பது வயது நிரம்பிய பெண் குழந்தையை வாலை என்று கூறுவர்.

இந்த வாலையம்மன் வழிபாடும் சிறு பெண் குழந்தை வழிபாடே ஆகும். பெண்மை என்றாலே சக்தி, வீரம், ஞானம், தாய்மை, கருணை என அனைத்து குணங்களும் நிரம்பியிருக்கும்.

பெண் குழந்தை என்றாலே அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை வழங்கும். இதனை தான் பாலாவும் செய்கிறாள்.

அன்னை லலிதா திரிபுரசுந்தரி பண்டாசுரவதத்தின் போது தன் படைகளை திரட்டி மந்திரி மற்றும் படைத் தளபதியாக மாதங்கி மற்றும் வாராகியை வைத்து யோகினி சேனைகளுடன் சென்று போர்ப்புரிந்தாள்.

முதலில் போருக்கு வந்த பண்டாசுரனின் புத்திரர்களை அழிக்க லலிதா தன்னுள் இருந்து ஒரு சிறு பெண்ணை தோன்றச் செய்து அனுப்பி வைத்தாள்.

அக்குழந்தையும் அனைவரையும் மாய்த்து வெற்றியுடன் திரும்பியது. அச்சிறு குழந்தை தான் பாலாம்பிகை. இவளே வாலாம்பிகை, வாலையம்மன், அசோக சுந்தரி, பாலா திரிபுரசுந்தரி, பாலா என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகிறாள்.

வாலையம்மன் (பாலா) சின்னஞ்சிறு குழந்தையாவாள். இவள் குணங்களும் குழந்தைத் தனமாகவே இருக்கும்.

குழந்தையை கொஞ்சி அழைத்தவுடன் ஓடி வருவது போல ஓடி வருபவள். இவளின் வடிவாமானது சொல்லுதற்கரிய பேரழகு பொருந்திய ஒன்பது வயது குழந்தையாகும்.

கையில் ஜெபமாலை, சுவடிகள் கொண்டு அபய வரத அஸ்தத்துடன் பட்டு பாவாடை, ஆபரணங்கள் அணிந்து வெண்தாமரையில் வீற்றிருப்பவள். ஞானமே வடிவாக இருப்பவள் ஆவாள். ஸ்ரீ சக்ர வடிவமானவள், ஸ்ரீபுரத்தில் அன்னை லலிதாவுடன் எப்போதும் இருப்பவள்.


இவளை உபாசனை செய்பவர்களுக்கு ஞானம், தனம், வாக்குவன்மை, சித்து, அறிவு என அனைத்தும் கைகூடும்.

இவளைப் பற்றி பிரமாண்ட புராணத்தில் லலிதா மகாத்மியத்தில் 26-ஆம் அத்தியாத்தில் விரிவாகக் கூறியுள்ளனர்.

இந்த வாலாம்பிகை வழிபாடானது சித்தர்களின் வழிபாட்டில் பெரிய ரகசியங்களை கொண்டதாகும். யோக முதிர்ச்சி, சித்துக்களில் கைதேர்ந்த சித்தர்கள் அனைவரும் வாலையின்றி அந்நிலையை அடைய இயலாது.

இதனை வாலை கொம்மி போன்ற பாடல்களில் சித்தர்களே உணர்த்தி உள்ளனர். கொங்கணவர் தனது வாலை கொம்மியில்,

“வீணாசை கொண்டு திரியாதே 
இது மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு 
காணாத வாலையைக் கண்டுகொண்டால் 
காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே”

என்ற பாடலின் மூலம் வாலையை கண்டு வணங்கினால் ஆகாயத்தை கூட ஆளலாம் என்று எடுத்துரைக்கிறார். மேலும் கருவூராரும் வாலையை போலே ஒரு தெய்வம் இல்லையென கூறியுள்ளார்.

சித்தர்களின் முதல்வரான அகத்தியரும் லலிதா சகஸ்ரநாமத்தில் “பாலா லீலா வினோதினி” என்று இவளை குறிப்பட்டுள்ளார். திருமூலர், போகர் என அனைத்து சித்தர்களும் வாலையம்மனை வழிபட்டுள்ளனர்.

இந்தக் குழந்தையை வழிபட்டு தான் சித்தர்கள் சித்திகளை பெற்றனர் என்பது நமக்கு தெளிவாகிறது.

பாலா பரபிரம்மத்தை காண நம்மை கைப்பிடித்து அழைத்து செல்பவள். இவளை மூல மந்திரங்கள் மூலம் ஜெபம் செய்ய சீக்கிரமே நம்வசப்படுபவள்.

மூன்று வித மான மூல மந்திரத்தின் மூலம் இவளை துதிக்கின்றனர்.

பாலா திரியட்சரி மூல மந்திரம்

“ஓம் ஐம் க்லீம் சௌ” என்ற மந்திரம் பாலாவின் மூல மந்திரம் ஆகும்.

ஐம் என்பது பிரம்மா, வாணி பீஜம் ஆகும். க்லீம் என்பது விஷ்ணு, லட்சமி மற்றும் காளி பீஜமாகும்.

சௌம் என்பது சிவன், சக்தி மற்றும் முருகன் பீஜமாகும். எனவே பாலாவை இம்மந்திரத்தால் வழிபட கல்வி, செல்வம், வீரம் என அனைத்தும் கிடைக்கும்.

பாலா சடாட்சரி மூல மந்திரம்

“ஓம் ஐம் க்லீம் சௌ
சௌ க்லீம் ஐம்”

திரியட்சரி மூல மந்திரம் பலித்தமான பின்பு சடாட்சரியால் வழிபடலாம்.

பாலா நவாட்சரி மூல மந்திரம்

“ஓம் ஐம் க்லீம் சௌ

சௌ க்லீம் ஐம்

ஐம் க்லீம் சௌ”

சடாட்சரி மூல மந்திர பலத்தமான பின் நவாட்சரி மூல மந்திரத்தால் வழிபடலாம்.

பாலா தியான மந்திரம்

"அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா
இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா!!!"

என்று அவளை தியானித்த உடனே குழந்தையாய்  ஓடி வருபவள்.

பாலா திரிபுரசுந்தரியை அக கண்ணினாலே கண்டு தான் சித்தர்கள் பூஜித்தனர். எனவே பாலாம்பிகைக்கு கோயில்கள் மிக குறைவாகும்.

நம் தமிழகத்தில் ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோவில் பாலா பீடம் நெமிலி என்ற ஊரில் அமைந்துள்ளது. மேலும் சில இடங்களில். லலிதா திரிபுரசுந்தரி கோயிலில் பாலாவிற்கான சன்னதி அமையப் பெற்றுள்ளது.


நாம் ஏற்கனவே கூறியபடி, நேற்றைய நாளில் நம் தளம் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி உபயம் செய்ய குருவருளால் பணிக்கப்பட்டோம்.






குருவருளால் நேற்று இசை நிகழ்ச்சி நடத்திய 15 குழந்தைகளுக்கு நம் தளம் சார்பில் சிறு அன்பளிப்பு வழங்கப்பட்டது. சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நேற்றைய சேவையில் சிறு குழந்தைகளுக்கு சிறு அன்பளிப்பு, நேற்றைய தரிசனத்தில் பாலாம்பிகை அருள் வெளிப்பாடு, இன்றைய பதிவிலும் குருவின் உபதேசமாக பாலாம்பிகை மந்திரம். இவற்றையெல்லாம் பார்க்கும் போது காரணமின்றி காரியமில்லை. அனைத்தும் இறையருளால் நடைபெற்று வருகின்றது.தாயே! அனைத்தும் நீயே! என்று வேண்டுவதை ஒன்றே போதும்!


கலியுகத்தின் ஒப்பற்ற சக்தி பாலாம்பிகை. நாம் வாழுகின்ற இக்கலியுகத்தில் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகி வ​​ருகிறோம். நற்கதிக்கான வழி தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறோம்.

இந்த நரக வாழ்வில் இருந்து விடுபட்டு நற்பேறு அடைய வழிக்காட்டுபவள் பாலாம்பிகையே ஆவாள். அவள் பாதம் பணிந்து சரணாகதி அடைந்து எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வோம்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

 வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

 அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html


வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html

 இன்றைய கும்பாபிஷேக அறிவிப்புகள் - 13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/13072022_12.html

 பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_9.html

பாக்கம் பாளையம், அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_29.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

No comments:

Post a Comment