"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, November 15, 2023

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய குருநாள் பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம் 

ஓம் குரு வழியே ஆதி ஆதி

ஓம் குரு மொழியே வேதம் வேதம்

ஓம் குரு விழியே தீபம் தீபம்

ஓம் குரு பதமே காப்பு காப்பு


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 4)

இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


(பகுதி 4 - வாக்கு ஆரம்பம்) 

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அதனால் உன் வழியில் சென்று கொண்டே இருங்கள் அப்பனே. யான் தருகின்றேன் மாற்றத்தை. அவ்வளவுதான் அப்பனே. ஓர் தந்தைக்கு தெரியும் அப்பனே தன் பிள்ளையை எப்படி காப்பாற்ற , எப்படி பக்குவங்கள் படுத்தப்படுத்த என்பதெல்லாம். அதனால் அப்படித்தான் கொடுப்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே. இதனால் அப்பனே பின் பொய் கூறலாம். அப்பனே அவ்பரிகாரங்கள் செய்தால் இது நடக்கலாம் என்று. இவ்பரிகாரங்கள் செய்தால் அவை நடக்கலாம் என்று. அவ்பரிகாரங்கள் செய்தால் உந்தனுக்கு அனைத்தும் கிட்டும் என்று. இவ் பரிகாரங்கள் செய்தால் திருமணம் நடக்கும் என்று. ஆனால் நடக்காதப்பா நடக்காது. எல்லாம் பொய்களப்பா. இதை தெரிந்து கொள்ளுங்கள் முதலில்.

ஆனால் நடக்கும். ஆனாலும் அப்பனே பின் மீண்டும் கஷ்டங்கள் வந்து விடுமப்பா. ஆனாலும் பின் மீண்டும் ஓடி ஒடி அங்கு ( பரிகாரம் செய்ய ) சென்றுவிடுவீர்கள் அப்பனே. இதுதான் அப்பா உங்களுடைய தரித்திரம் என்பேன் அப்பனே.

அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இதனால் நிச்சயம் அகத்தியன் இருக்கின்றான். அகத்தியன் பார்த்துக் கொள்வான். என் தந்தை இருக்கின்றான், என்னை பக்குவப்படுத்துவான் என்றெல்லாம் நீங்கள் உணர்வீர்கள். ஏன்? எதற்க்காக இவ்வளவு நேரம் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அனைவருக்குமே கஷ்டங்கள்தானப்பா. அதனால்தான் ஓடி ஒடி இங்கு வந்து உட்கார்ந்து விட்டீர்கள் அப்பனே.

அதனால் அப்பனே உண்மை நிலையை அறியுங்கள் அப்பனே. உண்மை நிலை அறியாவிடில் துன்பம்தானப்பா. அப்பனே பின் உங்கள் முதுகின் பின்னாலே துன்பத்தை (கர்மாவை) வைத்துக்கொண்டு சென்று கொண்டே இருக்கின்றீர்கள் அப்பனே. ஆனால் அத்துன்பமும் உங்கள் பின்னாலே வந்து கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் அதற்கு ஒருவனும் கூட அப்பனே லாயக்கு இல்லாதவன். (யாங்கள் மனிதர்களுக்கு பல முறை) சொல்லிச் சொல்லி (மனிதர்கள்) மீண்டும் மீண்டும் (கர்ம) துன்பத்தில் நுழைந்து நுழைந்து, அப்பனே அத்துன்பத்தை முதலில் இறக்கி வையுங்கள் அப்பனே. எப்படி இறக்க வேண்டும் என்று யாராவது கேட்டானா? யாரும் இல்லையப்பா? ஒருவொருவனுக்கும் இன்னும் பொருள் தேவை, இன்னம் பணம் தேவை, இன்னும் புகழ் தேவை, இன்னும் என்னென்னவோ தேவை அப்பனே. அனைத்தும் கொடுத்து விட்டால் இறைவன் எதற்கப்பா? கூறுங்கள் நீங்களே அப்பனே.

அதனால் அப்பனே இனிமேலும் என்பக்தர்கள் அப்பனே சொல்லிக் கொடுங்கள் அனைவருக்குமே அப்பனே. “யாருக்காவது , ஒரு உயிருக்காவது அப்பனே நன்மை செய்ய வேண்டும் அனுதினமும்” என்று கூற யானே உங்களிடத்தில் வந்து இச்சுவடியை (மும்மூர்த்திகளால் ஆசிர்வாதம் பெற்ற உலகின் ஒரே ஜீவநாடியை) வைத்து எதை என்று அறிய அறிய உங்களுக்கே வாக்குகள் தெரிவிக்கின்றேன் அப்பனே நன்முறைகளாக. ( அகத்தியரின் பக்தர்கள் இந்த உத்தரவை அவர்கள் சிரசில் ஏற்று குறைந்த பட்சம் 1008 பேர்களுக்காவது  நேரில் எடுத்து கூறுங்கள். அதிகம் முடிந்தவரை உலகெங்கும் இந்த மகத்தான நல் வாக்கை எடுத்து சொல்லுங்கள்).

பிழைத்துக்கொள்ளுங்கள் அப்பனே. பிழைக்கத்தெரியாமல் வாழுகின்றீர்களே என்பதுதான் அப்பனே எதை என்று அறிய அறிய சித்தர்களுக்கும் கூட ஏக்கம் என்பேன் அப்பனே. அதனால்தான் எப்படி இவர்களை வாழ வைப்பது, எப்படி என்பதை எல்லாம் யாங்கள் காட்டுக்குள்ளே சென்று தவங்கள் மேற்கொண்டு அப்பனே இறைவனை எப்படி என்பதை கூட அப்பனே சித்தர்கள் பலபேர் சொல்லி விட்டார்கள் ஏற்கனவே அப்பனே இறைவன் எங்கிருக்கின்றான் என்பது தெரியாமல் யாங்கள் படாதபாடுகளா?

யுகங்கள் யுகங்களாக பட்டு பட்டு இறைவன் எங்கிருக்கின்றான் என்பதை எல்லாம் தேடி அலைந்து, அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே கடைசியில் பார்த்தால் அப்பனே இப்பொழுது யான் சொல்லமாட்டேன். அப்பனே பின்பற்றிக் கொள்ளுங்கள். வாழ கற்றுக் கொள்ளுங்கள். அப்பனே அனைத்தும் தெரிவிக்கின்றேன். எவை என்று அறிய அறிய இறைவன் எங்கிருக்கின்றான் என்பதைக்கூட சொல்லிவிட்டால் அப்பனே எதை என்றும் புரியாமலே ஆனால் சொல்லி விடுகின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன். அப்பனே யான் தெரிவித்து விட்டேன்.

இதனால் நன்மையை செய்யுங்கள் எதையும் எதிர்பார்க்காமல். அனைவருமே கர்மத்தை எதை என்று கூற பெட்டியில் சேமித்துக் கொண்டே இருக்கின்றீர்கள். ஆனால் இது என்ன செய்யும் என்பதை எல்லாம் யாருக்குமே தெரியவில்லை அப்பனே.

எவை என்றும் அறியாமல் அப்பனே ஏன் திருத்தலங்கள் இவ்வளவு இருக்கின்றன?. ஏன் அமைக்க வேண்டும்? ஏன் எதை என்று அறிய அறிய இவ்தேசத்திலே இவ்வளவு திருத்தலங்கள் இருக்கின்றது என்பதை யாராவது ஒருவன் பின் அறிந்திருக்கின்றானா? நிச்சயம் இல்லையப்பா. அவை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைப்பேன் அப்பனே.

இன்னும் இன்னும் அமானுஷ்ய சக்திகளெல்லாம் இவ்வுலகத்தில் இருக்கின்றது. அவை எல்லாம் அப்பனே கர்மா ஏற்றினால் (அதிகரித்தால்) அப்படியே அப்பனே நம் உடலை பின் சேராமல் அப்பனே எவை என்றும் தெரியாமல் அப்படியே இருக்கின்றதப்பா. அவை எல்லாம் வரும் காலங்களில் அப்பனே நிச்சயம்.

ஆனாலும் நீங்கள் கஷ்டம் என்று வந்து விட்டீர்கள் அப்பனே. ஆனாலும் உங்கள் கீழே எத்தனையோ பேர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது தெரியுமா அப்பனே? ஆனால் இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா நீங்கள் சுய நலவாதிகள் என்று கூட. அப்பனே இச்சுயநலவாதி குணம் வேண்டாமப்பா. எந்தனுக்கு அவை வேண்டும், இவை வேண்டும்.

அப்பனே உந்தனுக்கு கீழே உள்ளவர்களை பற்றி யோசி. அவர்களுக்கு ஏதாவது உதவி செய். அப்பனே தானாகவே நீ முன் வந்து விடுவாய் அப்பனே. இதனால் தனக்காக வேண்டும் இன்னும் அனைத்தும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் பிள்ளைகளுக்கு வேலை வேண்டும். இன்னும் படிப்புக்கள் வேண்டும். இன்னும் எதை எதையோ வேண்டும் என்று நீ கேட்டுக் கொண்டிருந்தால் கூட இறைவன் தர மாட்டான் அப்பா. மற்றவர்களைப் பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில்  இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.

(வணக்கம் அகத்தியர் அடியவர்களே, மேலே சொன்ன இந்த வாக்கின் படி உலகைக்காக்கும் இறைவன் பகவான் மகாவிஷ்ணுவான நாராயணரே மதுரையில் தொழுநோயால் வாடும் எழை எளியோர்களுக்கு சேவை செய்யும் அகத்தியர் அடியவர் ஒருவரிடம் மதுரை பசுமலையில் உள்ள அகத்தியர்  ஆலயத்தில் கை ஏந்தி யாசகம் கேட்டு உணவு உண்டார். அந்த மகத்தான நிகழ்வின் பதிவு கீழே உங்களுக்காக


இதனால் ஓடி ஓடிச்சென்று மக்களுக்கு கட்டாயம் உதவுங்கள். இறைவன் உங்களை நோக்கி நிச்சயம் வருவார். தான் எப்படிப் போனாலும் கவலை இல்லை, பிறர் வாழ வேண்டும் என்ற உங்கள் தன் சுய நலம் அற்ற நல் மனமே இறைவனை உங்களிடம் வர வைக்கும். குரு வாக்கை ஏற்று பிறர் நலம் காண்பதே உங்கள் அனுதினம் பூசை ஆகட்டும்!

என் பக்தர்கள் கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றார்கள் என்பேன். இதனால் சுவடிகளை வைத்து வைத்து அப்பனே (அனைவரையும்) ஏமாற்றி ஏமாற்றி அப்பனே சித்தர்களே இல்லை (என்ற) நிலைமைக்கு அதாவது இன்னும் இன்னும் அப்பனே சித்தன் ஏதும் சொல்லவில்லையே. இன்னும் சித்தன் வரவில்லையே என்பதை எல்லாம் பொய்களாக்கி அப்பனே அவை செய்தால் இப்பரிகாரம் செய்தால் எவை என்று அறிய அறிய அப்பனே காசுகள் பெருக்கிக் கொண்டு அவன்தனும் அப்பனே கர்மத்தை சேரத்துக்கொண்டு, மற்றவர்களையும் கர்மத்தில் விழ வைத்து அப்பனே வாழ்ந்து கொண்டிருக்கின்றானே மனிதன் அப்பனே மிக அறிவாளியப்பா. மனிதனப்பனே, பொய்கள் சொல்வதில் அறிவாளியப்பா, கெட்டிக்காரனப்பா மனிதன். இதில் யான் இப்படித்தான் யான் சொல்ல வேண்டும்.

அப்பனே மீண்டும் சொல்கின்றேன் மனிதன் எதில் கெட்டிக்காரன் என்றால் பொய் சொல்வதில் அப்பனே. நடிப்பதில் அப்பனே. பக்தியை செலுத்தி நடிப்பதில் மிக வல்லவனப்பா. வல்லவனுக்கு அப்பனே ஒன்றும் உதவாதப்பா.

என் பக்தர்களுக்கு முதலில் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். அப்பனே பக்குவங்களே இல்லை அப்பா. அவ் பக்குவங்கள் வராவிடில் யான் என்ன சொன்னாலும் நடக்காதப்பா விதியில் உள்ளதுதான் நடந்திடுமப்பா. அப்படி என்றால் கஷ்டங்கள் வந்து கொண்டேதான் இருக்குமப்பா.

அதனால் யான் சொல்லியவற்றை சரியாகவே இறைவன், மனிதன் எவை என்று கூற (இறைவன்) மனிதர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கின்றான் என்று கூற அப்படி வாழந்தால்தான் விதியும்கூட மாறுமப்பா, மாறுமப்பா. அப்படி இல்லை என்றால் யான் என்ன சொல்லிக் கொண்டிருந்தாலும்  பிரயோஜனம் இல்லை அப்பா.

அப்பனே பல வழிகளிலும் கூட பல தொண்டுகள் என்னால் பல பல வழிகளிலும் கூட, அப்பனே பல பல யுகங்களில் கூட ஆற்றி ஆற்றி மனிதனை திருத்தி உள்ளேன். ஆனால் கலியுகத்தில் இருக்கின்றானே மனிதன் பொய் சொல்வதில் அப்பனே பின் அறிவுள்ளவனப்பா. மற்றவைகளில் அறிவில் பின் எதை என்று கூற அதனால்தான் அப்பனே கஷ்டங்கள் கொடுக்காமல் என்னால் நிச்சயம் திருத்த முடியாதப்பா. கஷ்டங்கள் கொடுத்து கொடுத்துத்தான் யான் நிச்சயம் திருத்த்துவேன் சொல்லிவிட்டேன் அப்பனே.

இதை நிச்சயம் அனைவரையும் அதனால்தான் அப்பனே யானே இங்கு உங்கள் அனைவரையும் அழைத்தேன் இங்கு. (இந்த வாக்கு 4.9.2023 அன்று மதுரையில் ஒரு அடியவர் வீட்டில் உரைத்த போது 50க்கும் மேற்பட்ட பல அடியவர்கள் வந்திருந்தனர்). ஏனென்றால் நிச்சயம் இதை (இந்த அதி முக்கிய நாடி வாக்கு அதனை யான் உங்களுக்கு) தெரிவித்து அப்பனே மற்றவர்களுக்கும் பின் நீங்கள் தெரிவிக்க வேண்டும் அப்பனே.

மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே. ஓர் நாளைக்காவது, ஓர் வேளையாவது நீ என்ன நண்மைகள் இருக்கின்றாய் என்பதை கூட நீ யோசிக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்போதுதான் இறைவன் உந்தனுக்கு நன்மை செய்வான் என்பேன் அப்பனே. பின்பு நீயே (யாருக்கும்) நன்மை செய்யவில்லை உந்தனுக்கு ஏன் இறைவன் நன்மை செய்ய வேண்டும் கூறுங்கள் அப்பனே.

இவை எல்லாம் நிச்சயம் தெரிவித்தாலே அப்பனே மனிதனுக்கு புரியாததை அப்பனே நீங்கள் தெரிவித்தாலும் அதனுடனும் கர்மா என்பேன் அப்பனே. இங்கு ஒருவன் அப்படித்தான் என்பேன் அப்பனே. கர்மா சேர்த்துக் கொண்டிருக்கின்றான் அப்பா.எவை என்று கூற இதில் தர்ம காரியங்கள் யான் செய்தேனே என்று. இல்லையப்பா. பின் அனைத்தும் கர்மாக்கள் அப்பனே.

இனிமேலும் நிச்சயம் இதை ( மதுரையில் உரைத்த இந்ந நாடி வாக்குகளை பிறரிடம்) செப்பு அப்பனே. யான் சொல்லியதை (கேட்டு, உணரந்து) அப்பனே மனிதன் மாறட்டும். திருந்தட்டும்.

(தர்மத்தின் கரம் ஓங்க, தர்மம் செழிக்க, இறைவன் மகிழச்சி கொள்ள, சித்தர்கள் கருணை மழை என்றென்றும் மனிதர்களிடையே பொழிய - அனைத்து அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களும் இந்த நல் வாக்கினை பலருக்கும் அவசியம் எடுத்து சொல்லுதல் அவசியம். பல தளங்களில் இந்த வாக்கினை பதிவு இடுங்கள் என சிரம் தாழ்த்தி அனைத்து நல் உள்ளங்களை வேண்டிக்கொள்கின்றோம்)

அப்பனே மனிதன் புத்திகள் வளரட்டும். அப்பனே யான் ஒன்றைச்சொல்கின்றேன். அப்பனே வளர வளர புத்திகள் வளர வேண்டும் ஆனால் புத்திகள் வளர்வதில்லையே அப்பனே.ஆனால் கர்மங்கள்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது அப்பனே. இப்படி இருக்க அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் எப்படியப்பா தடுக்க முடியும்? அதனால் நன்கு உணர்ந்தீர்கள். அதனால் உங்கள் அனைவரையுமே யான் பார்த்து ஆசிகளும் கொடுத்திருக்கின்றேன் அப்பனே.

இதனால் அப்பனே சேவைகள் எதை என்று அறிய அறிய அகத்தியனை நம்பினால் அப்பனே அகத்தியனை மட்டும் நம்புங்கள் அப்பனே. பின்பு எதை என்று அறிய அறிய பின் (பிற ஏதும் அறியாத மனிதர்கள் வாரத்தைகளை) நம்பிவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நரகம்தான் அப்பனே. நரகத்தில் என்னென்ன நடக்கின்றது என்பதை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் வரும் வரும் காலங்களில். ஏனென்றால் என் பக்தர்கள் அப்பனே பல யுகங்கள் அனைத்தும் தெரிவித்து எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள். ஆனால் கலியுகத்தில் அவ்வாறு இல்லையப்பா. அதனால்தான் துன்பங்கள். அதனால் என் பக்தர்களுக்கு வரும் காலங்களில் எப்படி மனிதன் பிறக்கின்றான். எப்படி வாழுகின்றான். எப்படி எல்லாம் கர்மத்தை சேர்த்துக் கொள்கின்றான். மீண்டும் பிறவிக்குள் நுழைகின்றான். என்னிடத்தில் அவ் ஆன்மா எப்படி வருகின்றது என்பதை எல்லாம் உரைக்கின்றேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

No comments:

Post a Comment