"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 3, 2022

ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஆடி பெருக்கு நன்னாளில் மீண்டும் அனைவரையும் இந்தப் பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்றைய நாளில் நதி வழிபாடு மிக மிக சிறந்த வழிபாடாக அமைகின்றது. இதனை உணர்த்தவே ஆடிப்  பெருக்கு நாளில் அனைத்து நதிகள்,ஆறுகளில் மிக சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. காவேரி ஆறு பாயும் அனைத்து ஊர்களிலும், இதே போன்று தாமிரபரணி பாயும் அனைத்து ஊர்களிலும் இன்றைய நாளில் வழிபாடு நடைபெற்று வருகின்றது. இதற்கு முந்தைய பதிவில் காவிரித் தாய் தரிசனம், பாபநாசம்,கோடகநல்லூர் போன்ற ஊர்களில் தாமிரபரணித் தாய் தரிசனம் பெற்றோம். இன்றைய பதிவில் மீண்டும் அன்னையின் தரிசனம் தொடர உள்ளோம்.

நதியை நாம் அன்னையாக போற்றுகின்றோம் . எனவே இந்த ஆடி மாதத்தில் சக்தி வழிபாடாக இந்த நதி வழிபாடு இன்னும் உயிர்ப்பு பெறுகின்றது. அன்னையை ஸ்ரீ  மகாலட்சுமி தாயாக இன்று போற்றி வழிபடுவோம்.

இந்த ஆண்டு மாசி மக கும்ப ஹோம பௌர்ணமி திருவிழாவிற்கு பாபநாசம் சென்றோம். அப்போது அங்கே இது போன்று வண்ணவிளக்கு அலங்காரத்தில் தாமிரபரணி தாயை கண்டு தரிசித்து மகிழ்ந்தோம். குருநாதரின் பெயரை இது போல் கண்டோம். இது பற்றி மேலும் பாபநாசத்தில் காணலாம் என்றார்கள். அடுத்து அன்று காலை ஹோமம் முடித்து , வீட்டிற்கு கிளம்பும்போது தாமிரபரணி அன்னை காண சென்றபோது,வண்ண விளக்கு அலங்காரத்தில். அடடா..சொல்ல வார்த்தைகள் இல்லை. நீங்களே பாருங்கள்.













ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!! என்று போற்றிக் கொண்டே இருந்தோம். அடுத்து நாம் திருநெல்வேலி மாவட்ட நவகைலாய யாத்திரையில் தாமிரபரணி தாயின் தரிசனம் இங்கே காண இருக்கின்றோம்.







முதலில் சூரியன் ஸ்தலமான பாபநாசம் சென்று அங்கே தாமிரபரணி தாயை வணங்கி, மலர் தூவி வழிபாடு செய்தோம். அங்கே உள்ள ஆற்றி கரையில் உள்ள பரம்பொருளை கண்டீர்களா? அப்பப்பா. அன்றைய நவகைலாய யாத்திரை இங்கிருந்து தான் துவங்கியது. அடுத்து சேரன்மகாதேவி நோக்கி சென்றோம்.





சேரன்மகாதேவியிலும் தாமிரபரணி தாயை தரிசித்து மலர் கொடுத்து வழிபாடு செய்தோம். அங்கே நமக்கு சிறு சத்சங்கம் திரு.வமுஷ்கர் ஐயா அவர்கள் வழங்கினார். சந்திரன் அம்சமான சேரன்மகாதேவியில் ஸ்ரீ அம்மைநாதர் தரிசனம் பெற்றோம். அடுத்து கோடகநல்லூர் நோக்கி சென்றோம்.





செவ்வாய் ஸ்தலமான கோடகநல்லூரில் பெற்ற அருள் கண்டு குருநாதர் திருவடி என்றும் பணிகின்றோம். அந்த அனுபவத்தை தனிப்பதிவில் காண்போம். வழக்கம் போல் மலர் தூவி தாமிரபரணி அன்னையை கோடகநல்லூரில் வழிபட்டு மகிழ்ந்தோம். அடுத்து மணிமூர்த்தீஸ்வரம் தரிசனம் கீழே காணலாம்.


அடுத்து முறப்பநாடு தாமிரபரணி தரிசனம் பெற்றோம். உங்கள் பார்வைக்கு கீழே சமர்ப்பிக்கின்றோம்.




அடுத்து திருவைகுண்டம் தாமிரபரணி தாயின் தரிசனம் பெற்று, மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்ததை கீழே நீங்கள் காணலாம்.






அடுத்து தென்திருப்பேரை தலத்தில் ஸ்ரீ கைலாசநாதர் தரிசனம் பெற்று விளக்கேற்றி வழிபாடு செய்து மகிழ்ந்தோம். இங்கிருந்து ராஜபதி செல்லும் வழியில் இருந்த தீர்த்தத்தில் மலர் தூவி வழிபாடு செய்தோம்.






அடுத்து எட்டாவது தலமான ராஜபதி சென்றோம். அங்கே கோயிலுக்கு எதிரே உள்ள தாமிரபரணி அன்னையிடம் மலர் கொடுத்து வழிபாடு செய்தோம்.





ஒன்பதாம் தலமான சேர்ந்தபூமங்கலம் கண்டு, அங்கே தீபமேற்றி, சிவபுராணம் படித்து, லோக க்ஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்தோம்.



பின்னர் சேர்ந்தபூமங்கலம் தாமிரபரணி தாயை தரிசித்து மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்தோம்.










இவ்வாறாக நவகைலாய யாத்திரையில் குருவருளால் பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர்,குன்னத்தூர்,முறப்பநாடு,திருவைகுண்டம்,தென்திருப்பேரை,ராஜபதி மற்றும் சேர்ந்தபூமங்கலம் தளங்களில் உள்ள எம்பெருமானை தரிசனம் செய்து, நம் தளம் சார்பில் வஸ்திரம், தேன்,திருநீறு போன்ற பூஜை பொருட்கள் கொடுத்து வழிபட்டது கண்டு மெய் உருகி நிற்கின்றோம். அதே போல் ஒவ்வொரு தலத்திலும் சிவபுராணம் புத்தகம் வழங்கினோம்.




மேலும் ஒவ்வொரு தலத்திலும் தீபமேற்றி , லோகஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்தோம். சில காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.
















எப்படி இருக்கின்றது அன்பர்களே! மேலும் ஒவ்வொரு தலத்திலும் உள்ள தாமிரபரணி தாய்க்கு நன்றி கூறி, மலர் இட்டு வழிபாடு செய்தோம். ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தால் குருவருள் கண்டு மகிழ்கின்றோம். குருவின் தாள் என்றும் பணிகின்றோம். இந்த மனநிலையில் நம் நாட்டில் உள்ள அனைத்து நதிகள்/ஆறுகளை இன்று போற்றி .மகிழ்வோம்.


ஓம் ஸ்ரீ குருவே சரணம் 
ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹ 


ஓம் ஸ்ரீ தமிழக நதி தீர்த்தங்களே  போற்றி 

ஓம் ஸ்ரீ காவிரித் தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ தாமிரபரணித் தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ வைகைத் தாயே போற்றி
ஓம் ஸ்ரீ அமராவதித் தாயே போற்றி 

ஓம் ஸ்ரீ    அடையாறே போற்றி 
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான அமராவதி ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   அரசலாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   அர்ச்சுணன் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   ஓடம்போக்கி  ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான பவானி ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   சிற்றாறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சின்னாறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   செஞ்சி ஆறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   செய்யாறு   தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கபினி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சின்னாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   தாமிரபரணியின் துணையாறான கடனாநதி தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   கல்லாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கோரையாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கெடிலம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கொள்ளிடம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   குடமுருட்டி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   குண்டாறு ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   குந்தா ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   அமராவதியின் துணையாறான குதிரையாறு ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   அமராவதியின் துணையாறான குழித்துறை ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   நங்காஞ்சி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கெடிலம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கோமுகி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   கோதையாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   மலட்டாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான அமராவதி ஆறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வைகையின் துணையாறான மஞ்சளாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தாமிரபரணியின் துணையாறான மணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வெள்ளாற்றின் துணையாறான மணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான திருமணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பாம்பாற்றின் துணையாறான மணிமுத்தாறு தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பாம்பாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   மோயாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   முல்லை ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான நொய்யல் ஆறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தாமிரபரணியின் துணையாறான     பச்சை ஆறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பரளி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   பாலாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான     பாலாறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   பரம்பிக்குளம் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   பைக்காரா  ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சங்கரபரணி  ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சண்முகா நதி தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சிறுவாணி ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணை ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   சண்முகா நதி தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   பாலாறின் துணையாறான  நீவா ஆறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வைகையின் துணையாறான  உப்பாறு   தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   கிருதுமால் ஆறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   வைகையின் துணையாறான  வைப்பாறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   வெண்ணாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   வெட்டாறு தீர்த்தமே போற்றி
ஓம்  ஸ்ரீ   காவிரியின் துணையாறான  சனத்குமார நதி  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணையாற்றின் துணையாறான    மார்கண்ட  நதி  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணையாற்றின் துணையாறான    வாணியாறு  தீர்த்தமே போற்றி 
ஓம்  ஸ்ரீ   தென்பெண்ணையாற்றின் துணையாறான    கம்பையநல்லூர் ஆறு  தீர்த்தமே போற்றி 

ஓம் ஸ்ரீ இந்திய நதி தீர்த்தங்களே போற்றி 

ஓம் ஸ்ரீ கங்கைத்   தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ கோதாவரித்  தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ இந்திராவதி  தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ மஞ்சித நதி  தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ கிருஷ்ணா நதியே   தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ துங்கபத்ரா தாயே போற்றி 
ஓம்  ஸ்ரீ நர்மதை தாயே போற்றி 
ஓம் ஸ்ரீ  மகாநதியே போற்றி 
ஓம் ஸ்ரீ தபதி நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ தாமோதர் நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ மாண்டவி நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ ஜாவேரி  நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ சிந்து நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ சட்லஜ் நதியே போற்றி 
ஓம் ஸ்ரீ பிரம்மபுத்திரா தாயே போற்றி 

ஓம் ஸ்ரீ அனைத்து நதி தீர்த்தங்களே போற்றி! போற்றி!!

ஓம் ஸ்ரீ குருவே சரணம் 
ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹ

மீண்டும் குருவின் பொற்பாதங்கள் பணிகின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

-மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

 சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html

ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்! - https://tut-temples.blogspot.com/2022/07/blog-post_31.html

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_10.html

ஆடிப்பூரம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_11.html

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - திருஆடிப்பூரம் வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_23.html

 கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_92.html

நம்மை ஆண்டாள் - ஆண்டாள் திருவடிகளே சரணம் ! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_78.html

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/2020.html

 மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_17.html

 ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

No comments:

Post a Comment