"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, August 1, 2023

திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் சென்ற மாதம் திருமந்திரம் 3000 முற்றோதுதல் பற்றிய அழைப்பிதழ் பகிர்ந்து இருந்தோம். குருவருளால் நாம் நேரில் சென்று திருமந்திரம் முற்றோதுதலில் கலந்து அருள் பெறும் வாய்ப்பு கிட்டியது. பொதுவாக முற்றோதுதல் என்றாலே திருவாசக முற்றோதுதல் தான் நாம் கண்டு,கேட்டு இருக்கின்றோம். ஆனால் ஞான நூல்கள் அனைத்தையும் முற்றோதுதல் செய்வது நம் மரபு என்று கூறலாம்.அந்த வகையில் சென்ற மாதம் நடைபெற்ற முற்றோதுதல் அருள்நிலைகளையும், நாம் நேரில் தரிசித்த ஆலய தரிசனத்தையும் (மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் ) இன்றைய பதிவில் காண இருக்கின்றோம்.


அன்றைய தினம் சுமார் காலை 9 மணி அளவில் மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலை அடைந்தோம். மலைக்கோயில் என்பதால் நமக்கு இன்னும் ஈர்ப்பு உண்டானது. மேலும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் என்றதும் நாம் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். சிறிய மலைக்கோயில் தான் என்றாலும் மிக வெகுவாக ஆற்றல் இருப்பதை உணர்ந்து கொண்டோம்.





இதோ கோயிலின் உள்ளே நுழைய இருக்கின்றோம்.


நாம் கொஞ்சம் தாமதமாகத் தான் சென்றோம். நாம் சென்ற நேரத்தில், முற்றோதுதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது.. முதலாம் தந்திரம் ஓதிக் கொண்டு இருந்தார்கள்.


நாமும் திருமந்திர புத்தகத்தை கொண்டு, அவர்களோடு சேர்ந்து ஒவ்வொரு மந்திரமாக படிக்க ஆரம்பித்தோம். திருமந்திரத்தை பாடல் என்றோ, பதிகம் என்றோ சொல்லக்கூடாது. மந்திரம் ஒவ்வொரு பாடலையும் மந்திரம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நூலின் பெயர்  அது தானே. மேலும் படிக்க படிக்க நமது மனதை திறப்படுத்தி விடும் என்பதாலும் திருமந்திரம் என்று கூறி வருகின்றோம். பின்னர் அங்கே திருமூலர் பெருமான் கண்டு, வழிபாடு செய்தோம்.







திருமூலர் பெருமானை காண, காண கண்கள் குளிர்ந்தது. திருமந்திரத்தை கேட்க, கேட்க இன்பம் கொண்டோம். ஐம்புலன்களும் நம்மை சிவபரம்பொருளின் பேரருளில் திளைக்க வைத்தது. பின்னர் மீண்டும் திருமந்திரம் படிக்க ஆரம்பித்தோம்.



சுமார் 9 மணி அளவில் காலை உணவாக பொங்கல், இட்லி என உண்டோம். வயிற்றுக்கு உணவாகவும், செவிக்கு உணவாக திருமந்திரமும் என்ற நிலை தொடர்ந்த வண்ணம் இருந்தது. 


அடுத்து ஆலய தரிசனம் காண்போமா?

கோயிலினுள் உள்ளே சென்றதும் நந்தியெம்பெருமான் தரிசனம் பெற்றோம்.



அங்கே உள்ள மண்டபத்தில் தான் திருமந்திரம் 3000 முற்றோதுதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.




மிக அமைதியான, இயற்கை வளம் சூழ்ந்த, மரங்கள் சூழ்ந்த, சிறு குன்றின் மேல் அமைந்துள்ள பழமையான சிவாலயம்.பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் அமைதியான அற்புதமான ஆலயம்.இந்த புராதனமான மலைக்கோவில் பல்வேறு இறை இரகசியங்களை தன்னுள் கொண்டு விளங்குகின்றது.இங்கு இறைவன் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுயம்புவாக உள்ளார்.நல்ல அழகான தோற்றம்.இறைவி ஸ்ரீ வடிவுடை நாயகி பெண் குலத்திற்கு பல்வேறு நல்ல வரங்களை அருளும் தாயாக உள்ளார்.தாய்மைப்பேறு வேண்டுவோரும்,அடைந்தோரும் வாழ்வில் ஒருமுறையாவது கட்டாயம் வழிபடவேண்டிய கோவில்.




தற்போது தான் கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதால் கோயில் நம்மை இன்னும் பல வண்ணங்களில் கவர்ந்தது. பல வண்ணங்கள் நம் எண்ணங்களை கவர்ந்தது. இது நம் மனதையும் , எண்ணங்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது என்றே கூறலாம். மலைக்கோயில் வேறு என்பதும் , குருநாதர் தரிசனம் பெற்ற கோயில் என்பதும் கூடுதல் சிறப்பாக நாம் கருதினோம்.





கோயில் வாயில் அருகில் மதிய உணவு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.



ஸ்ரீதண சிருஷ்டி ரகசியத்தை ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு அம்பாள் சொன்ன திருத்தலம் இது.இங்குள்ள அம்பாள் சன்னிதியின் கோபுரத்தில் ஸ்ரீதண சக்ரம் இருப்பதாக ஒரு ஐதீகம்.இங்கு சூர்ய பகவானும் சந்திர பகவானும் தனித்தனி கருவறையில் ஒரே மண்டபத்தில் மிக அருகில் இருவரும் உள்ளனர்.இது ஒரு வித்தியாசமான அமைப்பு.இங்கு முருகப்பெருமான்,பைரவர்,நவகிரகங்கள்,நந்தி,சண்டிகேஸ்வரர் மற்றும் கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீ மகாவிஷ்ணு தேவர் சிலை ரூபங்கள் மிக தத்ரூபமாக உள்ளது.கோவில் மலையைச் சுற்றிலும் மரங்கள்.கோவில் பிரகாரத்தை சுற்றும்போது அத்துணை ரம்யம், அழகு மற்றும் அமைதி.இதை இங்கு வழிபடும் ஒவ்வொரு வரும் நன்கு உணரலாம்.

அகத்தீஸ்வரர் பாட்டு கண்டு மகிழ்ந்தோம். பாடி, படித்து மகிழ்ந்தோம்.





மதியம் சுமார் 2 மணி அளவில் அன்னம்பாலிப்பு நடைபெற்றது. அறுசுவை உணவு மிக சுவையாக இருந்தது. மறுபுறம் முற்றோதுதல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. 


மதிய உணவை முடித்து மீண்டும் நாம் ஒரு முறை ஆலய தரிசனம் செய்தோம்.




இங்கு கன்னிமூலை கணபதி நீண்ட பிரகாரத்தில் உள்ளார்.கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீ தக்க்ஷணாமூர்த்தி மிக அழகாக உள்ளார். இவருக்கு எதிரே உள்ள தூனில்தான்  ஸ்ரீ தாயுமான சுக சித்தர் உருவம்  உள்ளது.இவரை வணங்குவது போல எதிரே உள்ள தூணில் பெண் உருவம்.தாயுமான சுக சித்தர் இந்த ஆலயத்தில் நெடுங்காலும் தவம் இயற்றி வந்துள்ளார்.இவர் இடுசுரை கர்ப்பம் என்ற தவ வலிமை கொண்டவர்.இவர் இந்த தவ வலிமையைக் கொண்டு கர்ப்பம் தாங்க முடியாதவர்கள்,கருச்சிதைவு ஆகுபவர்களது கருவினை தனது வயிற்றுக்கு மாற்றிக்கொண்டு சில நாட்கள் கழித்து மீண்டும் அந்தக் கருவினை உரிய தாயின் கர்ப்பத்திற்குள் குழந்தையாக மாற்றி விடுவார்.இந்த அற்புத தவப்பயனைக் கொண்டு பல்வேறு தாய்மார்களுக்கு நல்அருள் புரிந்துள்ளார்.இந்த உத்தம சித்தபுருஷரை இன்றும் நாம் இந்த கோவிலில் கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீ தக்க்ஷணாமூர்த்திக்கு எதிரே உள்ள தூணில் தரிசிக்கலாம்.






வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று ஓதி மகிழ்ந்தோம்.













சுமார் மாலை 5 மணி அளவில் ஒன்பதாம் தந்திரத்தில் உள்ள திருமந்திரம் ஓதிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு சிவன் அடியார் சிவ நடனம் புரிந்தார். சுமார் 30 நிமிடம் சிவத்திரு.சந்திரசேகரன் ஐயா ஆடிய சிவநடனம் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது. 




பின்னர் நாம் சிவ மல்லிகா அம்மையாரிடம் கூறிவிட்டு, அங்கிருந்து திருச்சியில் உள்ள திருமூலர் தரிசனம் பெற அங்கிருந்து புறப்பட்டோம். நிறைவாக கலந்து கொண்ட அன்பர்களுக்கு இனிப்பு,காரம் கொடுத்தார்கள். அன்றைய தினம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல் திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! ஒரு சேர ஒரே நாளில் பெற்றோம். 

திருமூலர் அருளிய திருமந்திரம் பாராயணம் செய்வோம். திருமந்திரத்தையே வாழ்க்கையெனக் கொண்டு சிவத்தை பூஜித்து வாழ்வோம்! 


இறைவன் : ஸ்ரீ அகத்தீஸ்வரர்

இறைவி      : ஸ்ரீ வடிவுடை நாயகி

மாவட்டம்    : திருச்சி

பழமை   : சுமார் 1500 வருடங்களுக்கு மேல்

கோவில் முகவரி மற்றும் தொடர்புக்கு

அருள்மிகு ஸ்ரீ வடிவுடைய நாயகி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம்

ஆண்டார்கோவில் பஸ் நிறுத்தம்,

திருச்சி-மணப்பாறை செல்லும் வழியில்  மணப்பாறையில் உள்ளது.

மணப்பாறை 

திருச்சி மாவட்டம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

திருவாசகம் முற்றோதுதல் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் கிராமம், தஞ்சாவூர் - 06.08.2023 - https://tut-temples.blogspot.com/2023/07/06082023.html

வீரபாண்டி - ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் - திருவாசகம் முற்றோதல் பெருவிழா - 23.07.2023 - https://tut-temples.blogspot.com/2023/07/23072023.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர் - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

திருவாசகத் தேன் - 01- சிவபுராணம் - https://tut-temples.blogspot.com/2022/02/01.html

பிரார்த்தனை எனும் மகா சக்தி!  - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_17.html

இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html

சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

No comments:

Post a Comment