"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, July 28, 2023

திருவாசகம் முற்றோதுதல் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் கிராமம், தஞ்சாவூர் - 06.08.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் குழு சார்பில் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றது. மோர் தானம் 100 நாட்களை கடந்து சென்று கொண்டு உள்ளது. வியாழன் தோறும் நம் குழு சார்பில் 10 பேருக்கு அன்னசேவை செய்து வருகின்றோம். இந்த நிலையில் மீண்டும் குருவருளால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருவாசகம் வகுப்பில் இணைந்து திருவாசகத் தேனை பருகி வருகின்றோம். இது குருவருளால் நடைபெற்று வருகின்ற செயல் ஆகும். சில முறை திருவாசகம் படித்து இருந்தாலும் திருவாசகத்திற்கான பொருள் நமக்கு பிடிபடவில்லை. 

முதலில் அடுத்த வார ஞாயிற்றுக் கிழமை 06.08.2023 அன்று தஞ்சாவூரில் உள்ள நெடார் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா அழைப்பிதழை கண்டு இன்புறுவோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற வேண்டி பணிகின்றோம்.


குருவருளால் வருகின்ற 06.08.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம் நெடார் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் அகிலமே பழமலைநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் சார்பாக நடைபெற உள்ளது. அடியார் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற வேண்டி அன்புடன்  அகத்தியர் அடியார்கள் சார்பில் அழைத்து மகிழ்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு: 7904612352

காணொளி அழைப்பிதழ் கீழே பகிர்ந்துள்ளோம். அனைவரும் கண்டு மகிழுங்கள்.




இது தொடர்பாக இறை, குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான்  நாடி வாக்குகள் நமது ஆழ் சிந்தனைக்கு இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நன்றி: - சித்தன் அருள் வலைதளம் , நாடி அருளாளர்  திரு.ஜானகிராமன் அய்யா  அவர்கள்.

=========================================================


20/10/21  பௌர்ணமி அன்று  ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரை காசி.

யானே என்பதற்கிணங்க யான் எழுதிய சிவ புராணத்தையும் ஓதுக.ஓதுக! ஓதுக! ஓதிக்கொண்டே இருக.

=========================================================

11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.

என் தந்தை ஈசனே திருவாசகத்தை எழுதினான் எழுதினான் என்பதற்கிணங்க அனைத்து விஷயங்களும் அதிலேயே அடங்கி உள்ளது.அது ( திருவாசகம் )  பெரும் பொக்கிஷம் ஆனாலும் அதனை கூட உணராமல் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.

=========================================================

14/12/2021 அன்று  ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

அனுதினமும் பின் திருவாசகத்தை  இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும். இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது. இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.

- அகத்திய மஹரிஷி

=========================================================


பன்னிரு திருமுறைகளை  பொருள் தெரிந்து தான் படிக்க வேண்டும் என்று முதலில் நாம் நினைப்பது தவறு. முதலில் இவற்றையெல்லாம் படிக்க துவங்க வேண்டும். பொருள் தெரிந்தால் தான் படிப்பேன் என்றால் அப்படியே காத்துக் கொண்டிருக்க வேண்டியது தான். நம் தமிழ் வேதங்களை படிக்க ஆரம்பித்தால் நாளடைவில் நம் தரத்திற்கேற்ப பொருள் புரிய நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இப்படி தான் நமக்கு குருவருளால் மன்னார்குடி ரெங்கசாமி ஐயா அவர்கள் மூலம் தினந்தோறும் காலையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் திருவாசகம் படித்தும்,கேட்டும் உணர்ந்தும் வருகின்றோம். மாணிக்கவாசக பெருமானார் கூறியது போல கீழே கண்டு நீங்கள் திருவாசகத்திற்கான விளக்கம் பெறலாம்.




ஆம். திருவாசத்திற்கான மெய்ப் பொருள் விளக்கம் சிவமே ஆகும். சிவம் என்றால் அன்பு தானே? அன்பே சிவம் என கொண்டு ஐம்புலன்களிலும் நாம் உணர்ந்து, ஊனினை உருக்கி, நம் உள்ளொளி பெருக்கி இறையைப் தினமும் போற்றி வந்தால் நாமும் சிவத்தை உணரலாம். மிகப் பெரும் செல்வமாக இருப்பது சிவமே ஆகும். தற்போது திருவாசகம் நூலை தொட்டாலே சிவத்தை தொடுவதாக உணர்கின்றோம்.

திருவாசகம் நமக்கு எப்படி அருளைத் தருகின்றதோ, அதே போன்று குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் பாதங்களை பணிகின்றோம். அப்படித் தான் தஞ்சாவூரில் உள்ள நெடார் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் தரிசனம் சென்ற ஞாயிற்றுக் கிழமை தல யாத்திரையில் நமக்கு வரமாக கிடைத்தது . சென்ற ஆண்டில் நமக்கு இந்த திருக்கோயில் பற்றி கூறினாலும், இந்த ஆண்டில் தான் நேரில் தரிசனம் பெறும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. அடடா. ஓராண்டை வீணாக்கி விட்டோமே என்று தோன்றியது. ஆம். நேரில் கோயிலை கண்டு நாம் அழுது விட்டோம். 

நாம் நேரில் இந்த ஆலயம் கண்டு கண்ணீர் சிந்தும் அளவிற்கு கோயில் சிதிலமடைந்து உள்ளது. மழை பெய்தால் கோயிலினுள்ளே நீர் வந்து விடும். கோயிலின் மேற்புறத்தில் மிக பெரிய ஓட்டை .இதன் வழியே ஆகாயத்தை காண முடிகின்றது. நாமெல்லாம் எப்படி வசதியாக வீட்டில் இருக்கின்றோம். ஆனால் பெருமானார் ஓட்டை உள்ள திருக்கோயிலில், மின் விளக்கு வசதியின்றி சொல்வதற்கே வார்த்தை வர வில்லை. இந்த கோயில் தரிசனமும், கோயில் சிறப்பை பற்றி குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் கூறிய வாக்குகளையும் அடுத்த பதிவில் காண்போம்.


அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


வீரபாண்டி - ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் - திருவாசகம் முற்றோதல் பெருவிழா - 23.07.2023 - https://tut-temples.blogspot.com/2023/07/23072023.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர் - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

திருவாசகத் தேன் - 01- சிவபுராணம் - https://tut-temples.blogspot.com/2022/02/01.html

பிரார்த்தனை எனும் மகா சக்தி!  - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_17.html

இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html

சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

நேர்மறை விமர்சனத்தோடு வாழ்வோம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_29.html

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_75.html

அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர்  - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

No comments:

Post a Comment