இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
கோடை காலம் துவங்கி விட்டது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் அளவை நம்மால் தாங்க முடியவில்லை. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகி விடும். இந்த வெயில் காலத்தில் வெளியில் உடல் உழைப்பில் இருக்கும் அன்பர்களை நினைத்து பார்க்கும் போது , எப்படி வெயிலின் தன்மை இருக்கும். மனிதர்களாகிய நமக்கு இப்படி என்றால் மற்ற ஜீவ ராசிகளான பறவைகள், விலங்குகளுக்கு எப்படி இருக்கும்? தண்ணீர் மற்றும் உணவுகளுக்கு மற்ற ஜீவன்கள் என்ன செய்யும்? இந்த கோடைகாலத்தில் நாம் செய்ய வேண்டிய கடமைகளை நம் குருநாதர் அருளிய வாக்கில் இருந்து நாம் பெற உள்ளோம்.
நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து இந்த சேவையை திறன் பட செய்து நம் அப்பன் குருநாதர் அகத்தியர் பெருமானின் பேரருளை பெறுவோம்
இந்தப் பதிவை கண்ணுறும் அன்பர்கள் தங்களால் இயன்ற அளவில் கோடை கால சேவை செய்து, குருநாதரின் உள்ளத்தில் இடம்பிடிக்க வேண்டும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment