"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, April 1, 2024

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருவாசகமும், திருப்புகழும்...!!

                                                            இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் இந்த மாத சேவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளோம். ஏப்ரல் மாத தொடக்கமான இன்று வெயிலின் தாக்கத்தை நம்மால் தாங்க முடியவில்லை. அலுவலக பணியில் இருக்கின்ற நமக்கு இப்படி என்றால் பலதரப்பட்ட சேவைகளில் வெயிலில் வேலை அன்பர்களை நினைத்துப் பார்க்கும் போது நமக்கு கடினமாக தான் உள்ளது. நம் வீட்டிற்கு வந்து சிலிண்டர் போடுபவர்கள், தபால்காரர்கள், கொரியர் தருபவர்கள் என இது போன்ற அன்பர்களிடம் நலம் விசாரித்து குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று மனதார கேட்டு தண்ணீர் கொடுங்கள். இது மட்டுமல்லாது மற்ற ஜீவ ராசிகளான பறவை, நாய்,பூனை, கோமாதா என அனைத்திற்கும் நம்மால் இயன்ற அன்னம்,நீர் கொடுங்கள். இதனை யொட்டியே இந்த ஏப்ரல்,மே,ஜூன் மாதம் வரை நீர், மோர் சேவை என தொடர்ந்து வருகின்றோம். இது மிக மிக தேவையான ஒன்று ஆகும். 

இத்துடன் இன்றைய பதிவில் குருநாதர் அருளிய உத்தரவான திருவாசகம், திருப்புகழ் பற்றி காண உள்ளோம்.




20/10/21  பௌர்ணமி அன்று  ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரை காசி.

யானே என்பதற்கிணங்க யான் எழுதிய சிவ புராணத்தையும் ஓதுக.ஓதுக! ஓதுக! ஓதிக்கொண்டே இருக.

=========================================================

11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.

என் தந்தை ஈசனே திருவாசகத்தை எழுதினான் எழுதினான் என்பதற்கிணங்க அனைத்து விஷயங்களும் அதிலேயே அடங்கி உள்ளது.அது ( திருவாசகம் )  பெரும் பொக்கிஷம் ஆனாலும் அதனை கூட உணராமல் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.

=========================================================

14/12/2021 அன்று  ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

அனுதினமும் பின் திருவாசகத்தை  இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும். இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது. இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.

- அகத்திய மஹரிஷி




அடுத்து திருப்புகழ் பற்றி காண உள்ளோம்.

குருவே போற்றி அருணகிரி நாதர் திருப்புகழ் பற்றி கூறுங்கள்

அப்பனே எதையென்று உணர எதை எவை என்று கூட அப்பனே அதிகாலையில் பாடிட்டே வாருங்கள் அதன் நிலைமை புரியும் என்பேன்!!! அப்பனே யான் சொல்லிவிடுவேன் அப்பனே... நீயும் கேட்டு விட்டாய் அப்பனே சொல்லிவிட்டால் இவ்வளவுதானா என்று விட்டு விடுவாய் அதனை நீ பாடி வா!!! எதையென்று பின் மாற்றங்கள் வருவதை நீயே எண்ணி விடுவாய்!! அதன் தன்மையை புரிந்து கொள்வாய்!! அப்பனே!!!!



அவ்வப்போது நம் தளத்தில் திருப்புகழ் தலங்கள் தரிசனம் பெற்று வருகின்றோம். மேலும் நம் தளத்தில் நடைபெறும் கூட்டு வழிபாட்டில் முருகவேள் பன்னிரு திருமுறை மூலமாக திருப்புகழ் படிக்க வாய்ப்பு கிடைத்து. மீண்டும் மாலை வழிபாட்டில் திருப்புகழ் படிக்க முருகப் பெருமானிடம் வேண்டுகின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்மில் தோன்றுவது இது தான். இது மட்டும் தான்.


முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!



இந்த நிலையில் நமக்கு சில திருப்புகழ் பாடல்கள் மிக மிக நெருக்கமாக அமைகின்றது. அவற்றை மீண்டும் படித்து அமுதம் பருகுவோமாக!

திருப்புகழ் 170 நாத விந்து  (பழநி)


தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

......... பாடல் .........

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

இந்த திருப்புகழ் மதுரை பசுமலை அகத்தியர் கோயிலில் நாம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.



அடுத்து  அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கில் அடியார் ஒருவர் பாடிய திருப்புகழ் படிக்க உள்ளோம்.

குருநாதர்:- அப்பனே, ஏன் ஆடினாய்,? அப்பனே இவையே உன்னால் நிற்க முடியவில்லையே அப்பனே வாழ்க்கை எப்படியப்பா வாழ்வாய்? அப்பா. அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இப்படித்தான் மனிதன் பிறந்து விடுகின்றான். பின் வாழத்தெரியாமல் வாழந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. அப்பனே இப்பொழுது சொன்னானே , ஆடினானே இதுபோலத்தான் அப்பா. ஆடிக்கொண்டிருக்கின்றான் மனிதன். கர்மாவில் மிதந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. ஆடாமல் நிற்கவேண்டும் என்றால் அப்பனே எங்களை நிச்சயம் சரண்டதல் அதாவது எங்களை சரணடையத் தேவை இல்லை. நீங்கள் புண்ணியம் செய்து கொண்டிருந்தாலே யான் உங்களை நோக்கி வருவோம். அப்பனே (ஒரு) பாடலைப்பாடு முருகனை நோக்கி.

அடியவர்:- (முருகன் பாடலை பாட ஆரம்பித்தார் அடியவர். ஆனால் கால் ஊன்றிவிட்டு - திரு.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள - வாதினை அடர்ந்த  (பழமுதிர்ச்சோலை) என்ற பாடலை பாட ஆரம்பித்தார்.)

குருநாதர்:- அப்பனே, நிறுத்து. அப்பனே கால்களை யான் ஊனச்சொன்னேனா என்ன?

அடியவர்:- (மறுபடியும் இந்த அடியவர் குருநாதர் உத்தரவை ஏற்று ஒரு காலில் நின்று கையை தூக்கி பாட ஆரம்பித்தார். அந்த திருப்புகழ் பாடல் படித்து முருகனை உளம் உருகி தொழுது உய்யுங்கள்.

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ...... திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.



அடுத்து மீண்டும்  அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 05.09.2023 உரைத்த வாக்கில் அம்மை ஒருவருக்கு குருநாதர் அருளிய வாக்கில் நாம் அனைவரும் இந்த திருப்புகழை அனுதினமும் பாடி, முருகப் பெருமான் அருள் பெறுவோமாக!

அடியவர்:- ( அம்மை ஒருவருக்கு வாக்கு கேட்ட பொது )

குருநாதர்:- அம்மையே ஏதாவது ஒரு பாடலை பாட வேண்டும்.

அடியவர்:- ( அம்மை அவர் கந்த வடிவேலவன் அருளால் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள முத்தைத்திரு என்ற பாடலை மிக அருமையாக பாட ஆரம்பித்தார். அந்த மகிமை புகழ் பெற்ற மகத்தான பாடலை அடியவர்களுக்கு பகிர்கின்றோம். இந்தப்பாடல் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.)

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

(கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி பாடல் முடியும் வரை கேட்டார்கள். இந்த அம்மை செய்த பாக்கியம்)

குருநாதர்:- அம்மையே இவை தன் யான் சொல்லுகின்றேன் அம்மையே. யாருக்கும் சில அறிவுரைகளே இல்லை அம்மா.  அனுதினமும் அம்மையே அதாவது இல்லத்திலேயே தீபம் ஏற்றி ஒரு மண்டலம் வரை (48 நாட்கள் இந்த பாடலை) இதை உரைத்து அனைவரையும் பாடச்சொல்லிட்டு மீண்டும் வாக்குகள் கேட்கச்சொல். அதன் உள்ளே சில விசயங்கள். அனைவருமே கர்மாவில் இருக்கின்றார்கள் அம்மையே. அதனை (யான்) மாற்றி அமைக்கின்றேன் என்று நீ கூற வேண்டும். எழுந்து நில்.

அடியவர்:- (இந்த அம்மை அங்கு உள்ள அடியவர்களுடம் பின் வருமாறு உரைத்தார்கள்)  48 நாளைக்கு உங்க வீட்டில் தினமும்  தீபம் ஏற்றி, இந்த முத்தைத்திரு என்ற பாடலை பாடுங்கள். 48 நாள் முடிந்த பின் வாக்குகள் குருநாதர் ஐயாவிடம் கேளுங்கள்.

குருநாதர்:- அம்மையே நீயே பாட வேண்டும் இல்லத்தில் கூட.


அனைவரும் மூன்று திருப்புகழ் பாடல்கள் படித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். மீண்டும் மீண்டும் முருகப் பெருமானை மனதில் நினைத்து, திருப்புகழ் படித்து, பாடி மெய் உணர்வோமாக!

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டிப் பணிவோம்.



திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!!  - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

 திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்  - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_4.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர் - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

No comments:

Post a Comment