"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, April 22, 2024

வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!!

                                                               இறைவா.! அனைத்தும் நீயே..!!

                                                               சர்வம் சிவார்ப்பணம்...!!!

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

அனைவருக்கும் சித்ரா பௌர்ணமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.  இன்றைய நன்னாளில் மதுரை மாநகரம் விழா கோலம் பூண்டுள்ளது. மதுரை என்றாலே அன்னை மீனாட்சி தான். அதே போன்று இன்றைய பதிவில் வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! என்று அன்னையை போற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது என்றால் குருவருள் துணை தான்! குருவருளால் ஒவ்வொரு ஆலய தரிசனமும் நமக்கு கிடைத்து வருகின்றது. ஒரு ஆலயம் செல்வதை நம்மால் நிர்ணயம் செய்ய இயலாது. அவனருளால் மட்டுமே ஆலய தரிசனம் நமக்கு கிடைக்கும். அதுவும் சித்த மார்க்கத்தில் குருவின் அருளின்றி இது கிடைக்காது. அது போன்று தான் மதுரை, திருச்சுனை ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் ஆகும். பல வருடங்களாக நாம் கேள்விப்பட்டபோதிலும், எப்போ நாம் தரிசனம் செய்ய இருக்கின்றோம் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்த போது நமக்கு நேரில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 

இந்த ஆலய தரிசனம் நாம் காணும் முன்னர் நமக்கு  பதிவாக இந்த பாடல் கிடைத்தது. திருச்சுனை ஸ்ரீ அகத்தீஸ்வர பாடக வல்லி அருள் மாலையை பாடி நாம் அனுதினமும்  வழிபாடு செய்வோமாக!

அடுத்து மதுரையில் எங்கே? என்று தேடினோம். அகத்திய அடியார் திரு.ஈஸ்வரன் ஐயா அவர்கள் மூலமாக இந்த திருக்கோயிலுக்கு ஒரு அரிசி சிப்பம் வாங்கி கொடுத்து, திருமதி  பாண்டியம்மாள் அவர்களிடம் அலைபேசியில் பேசி, ஆசி பெற்றோம். ஆனாலும் எப்போது தரிசனம் என்று மனதுள் ஏங்கிக் கொண்டிருந்தோம்.  இந்த காத்திருப்பு வீண் போகவில்லை.

சென்ற ஆண்டில் செப்டம்பர் மாதம் மதுரையில் 04.09.2023 அன்று மதுரை பரமசிவம் ஐயா வீட்டில் பொது நாடி வாக்கு கேட்கப்பட்டது. அன்றைய தினம் மாலையில் திருமதி  பாண்டியம்மாள் அவர்களுக்கு நம் குருநாதர் வாக்கு உரைத்தார்.     

அங்கு இந்த அம்மா வந்த உடனேயே அகத்தியப்பெருமானின் வாக்குரைத்தல், இவரை நோக்கி திரும்பியது. அப்பொழுது இவர் யார் என்பது அடியேனுக்கு தெரியாது. ஆனால், அகத்தியப்பெருமான் இவருக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், இவரை ஆசிர்வதித்ததையும், அங்கிருந்த அனைவரிடமும் "உங்களால், உங்களிடம் இருக்கும் சிறிதளவு செல்வத்தையேனும் இவருக்கு கொடுங்கள்!!" என்றதையும், குழுமியிருந்த அடியவர்கள் அனைவரும், இது ஒரு மிகப்பெரும் பேறு என நினைத்து பங்குபெற்றதையும், "இது போதுமா? இன்னும் வேண்டுமா?" என்ற அகத்தியப்பெருமானையும்.......

அடியேனின் மனக்கண் முன் காட்டினார். கண்ட காட்சியினால் ஒரு நிமிடத்தில் உடல் முழுவதும் சிலிர்த்தது! 

இந்நிகழ்வு கடந்து சென்ற பின்னர், திருச்சுனை கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று குருநாதர் அருளால் உந்தப்பட்டோம்.


பின்னர் ஒரு நாளில் அன்னசேவைக்கு தேவையான அரிசி,பருப்பு, ரவை,கோதுமை போன்ற பொருட்களை வாங்கி கொண்டு காலை புறப்பட்டோம். ஆனால்  முதன் முதலாக சென்ற அனுபவம் மதியம் 2  மணிக்கு மேல் கோயிலை சென்று அடைந்தோம். 



கோயிலுக்கு மேலே படியேறி .சென்றோம். கோயிலை பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது. மலை மேல் கோயில் ..இங்கே சற்று வித்தியாசமாக இருந்தது. நாம் சென்ற பொழுது கும்பாபிஷேகத்திற்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனவே நம்மால் கோயிலின் உள்ளே முழுமையாக பார்க்க இயலவில்லை.
















இங்கே நீங்கள் பார்ப்பது தான் அன்னக்கூடம் ஆகும். இங்கே தான் திருமதி.பாண்டியம்மாள் அவர்கள் அன்னசேவை பணி ஆற்றி வருகின்றார்கள்.















அன்னக்கூடத்தில் தரிசனம் செய்து வழிபாடு செய்தோம். பின்னர் அன்னப்பிரசாதம் உண்டோம். என்ன ஒரு சுவை..உண்மையிலே அமுது உண்டோம் என்று சொல்லலாம்.



அகஸ்தியர் அருளிய திருச்சுனை





இந்த கோவிலின் பின்புறமாக அகத்தியர் அமர்ந்து தவம் செய்த பாறையும், அவர் உருவாக்கிய சுனையும் உள்ளது. அருமையான தீர்த்தம். அகத்தியப்பெருமான் உருவாக்கிய இந்த சுனை நீரில் அனைத்து மூலிகைகளும் கலந்திருப்பதாக கூறுகிறார்கள். கோவிலில் அபிஷேகத்துக்கும், நிவேதனத்திற்கும் இந்த நீரைத்தான் உபயோகிக்கிறார்கள். சொட்டு நீரை எடுத்து பருகிப் பார்த்தேன். அருமை, அற்புதம் என்றே கூறத் தோன்றியது. முதல் நான்கு படிகள் வரை நீரில் காண முடியும். அதன் பின் ஒன்றும் தெரியாது. விசாரித்த பொழுது ஒரு வளர்ந்த யானையே இறங்கி காணாமல் போய்விட்ட ஆழம் என்றார்கள். பாறையும், பல ஆண்டுகள் பழகியதானதால், ரொம்பவே வழுக்குகிறது. நீச்சல் தெரிந்தால் நல்லது. சுனை முழுவதும், தாமரை பூ இலையும், வெள்ளை தாமரைப் பூவும் நிறைய அளவுக்கு நீரை மறைத்துள்ளது.

அகத்தியப்பெருமான் இறைவன் முன் ஏகாந்தமாக த்யானத்தில் அமர்ந்து இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.






















கோயிலை வலம் வந்து முடித்த பின்னர், கோயிலினுள்  சென்று தரிசனம் செய்தோம்.


இறைவன் பெயர் :ஸ்ரீ அகத்தீஸ்வரர், இறைவி ஸ்ரீ பாடகவள்ளி அம்பிகா. ஒவ்வொருவர் தனித்தனி சன்னதி என, நால்வர்கள், தக்ஷிணாமூர்த்தி. துர்கை, சண்டிகேஸ்வரர், கணபதி, முருகர் வள்ளி தெய்வயானை, அகத்தியரும் போகரும், வித்யாசமான கால பைரவர் கையில் பிட்சை பாத்திரத்துடன், நவகிரகங்கள் கொடி மரத்துக்கு வெளியில். கிழக்கு நோக்கிய இறைவன் சன்னதி. மிகுந்த அமைதியும், உள்ளே புகுந்து அனைவருக்கும் பூசை செய்யும் வாயு பகவானும், அனைத்து எண்ணங்களையும் மனதில் நின்று அழித்து, அவர் பாதத்தில் பிடித்து நிறுத்தும் அகத்தீஸ்வரர் சன்னதியும். குன்று கோவிலை அடைய கீழிருந்தே மிக அகலமான, நீளமான படிகள். எப்படிப்பட்டவரும் நிதானமாக எளிதில் ஏறி விட முடிகிற தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.






மனதை மயக்கும் சூழ்நிலை கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மதுரையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு 500 அடி உயர சிறு பாறை குன்றின் மேல் அமைந்திருந்தது, கோவில். அகத்தியப்பெருமான்  தவமிருந்த பாறையும், நித்ய பூசைக்காக அவர் உருவாக்கிய தீர்த்தமும், அருமையான சூழ்நிலையை உருவாக்கியது.

என்ன தான் நாம் வார்த்தையில் சொன்னாலும், நேரில் சென்று அனுபவித்தால் தான் நாம் சொல்லும் செய்தியின் உண்மை புரியும். 

சுருக்கமாக கூறினால், மிக மிக அருமையான சூழ்நிலை, குருநாதர், இறைவன் அருள், அகத்தியப்பெருமான் உருவாக்கிய வற்றாத மூலிகை சுனை, குருவருள் பெற்றவர் வழங்கும் அன்னம் பாலிப்பு, அமைதியை தேடிப்போகிறவர்களுக்கு இங்கேயே இருந்துவிடலாம் என்கிற மனநிலையை கொடுத்துவிடும். ஒருமுறை சென்று வாருங்கள் நம் குருநாதர் இடத்துக்கு!

இவர் செய்கிற அன்னம் பாலிப்புக்கு அகத்தியப்பெருமானே உதவி செய்கிறார் என்பதே உண்மை. நாமும் இயன்ற அளவு இவருடன் ஒன்று சேர வேண்டும் என்பது அடியேனின் சிறிய வேண்டுகோள். அப்படி பங்குபெற விரும்புகிறவர்களுக்கு தகவலாக 

இவர் பெயர்:திருமதி பாண்டியம்மாள், தொடர்பு எண்: 9047261080 [UPI கிடையாது}

வங்கி கணக்கு விவரங்கள் - 

பெயர் : பாண்டியம்மாள்
வங்கி : இந்தியன் வங்கி
வங்கி எண் : SB A/c 546978137 
IFSC CODE : IDIB000K079
கிளை :கருங்காலக்குடி

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 4 - https://tut-temples.blogspot.com/2024/04/4.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html

 திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_19.html

 குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html

 காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html


 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2  - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

No comments:

Post a Comment