"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, May 14, 2024

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன்

                                                               இறைவா..அனைத்தும் நீயே..

                                                                  சர்வம் சிவார்ப்பணம்...  


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் இந்த மாத அதாவது மே மாத சேவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளோம். நாட்கள் செல்ல செல்ல வெயிலின் தாக்கத்தை நம்மால் தாங்க  முடியவில்லை. அலுவலக பணியில் இருக்கின்ற நமக்கு இப்படி என்றால் பலதரப்பட்ட சேவைகளில் வெயிலில் வேலை அன்பர்களை நினைத்துப் பார்க்கும் போது நமக்கு கடினமாக தான் உள்ளது. நம் வீட்டிற்கு வந்து சிலிண்டர் போடுபவர்கள், தபால்காரர்கள், கொரியர் தருபவர்கள் என இது போன்ற அன்பர்களிடம் நலம் விசாரித்து குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று மனதார கேட்டு தண்ணீர் கொடுங்கள். இது மட்டுமல்லாது மற்ற ஜீவ ராசிகளான பறவை, நாய், பூனை, கோமாதா என அனைத்திற்கும் நம்மால் இயன்ற அன்னம், நீர் கொடுங்கள். இதனை யொட்டியே இந்த ஏப்ரல்,மே,ஜூன் மாதம் வரை நீர், மோர் சேவை என தொடர்ந்து வருகின்றோம். இது மிக மிக தேவையான ஒன்று ஆகும்.

இன்றைய பதிவில் குருநாதர் அருளிய உத்தரவை நாம் உறுதிமொழியாக ஏற்க வேண்டும். அதனை அப்படியே சித்தன் அருள் வலைத்தளத்தில் இருந்து அப்படியே தருகின்றோம். அனைவரும் இதனை குருநாதர் அகத்திய உபதேசமாக கொண்டு வாழ வேண்டும் பிரார்த்தனை செய்வோமாக!

29/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் கோயமுத்தூரில் முல்லை நகர் வடவள்ளியில் அமைந்திருக்கும் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான் ஆலயத்தில் வைத்து பொதுமக்கள் கலந்து கொண்ட சத்சங்கத்தில் குருநாதர் நல் உபதேசங்கள் செய்தார்

அதாவது பொதுமக்கள் பெருமளவு கூடி இருந்தாலும் யார் யார் என்னென்ன தான தர்மங்கள் செய்தார்கள் என்பதை கேட்டறிந்து கேட்டறிந்து புண்ணியத்தின் தான தர்மத்தின் மகத்துவத்தை அனைவரும் உணரும்படி உபதேசம் செய்து நல்வாக்குகள் தந்தருளினார்

அதில் முக்கியமாக ஒரு கட்டத்தில் ஒரு அடியவரை எழுப்பி யான் கூறுவதை அப்படியே மக்களிடம் உறுதி மொழியாக சொல்லும்படி அனைவரையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வைத்தார்.

இந்த உறுதி மொழி அனைத்து அடியவர்களும் சாஷ்டாங்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோயம்புத்தூரில் நடந்த முழு சத்சங்கமும் பொதுவாக்கில் விரைவில் வெளிவரும் அதற்கு முன்பாக அவசர உத்தரவாக இந்த உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குருநாதர் அகத்திய பெருமான் தினசரி அனைவரும் எடுக்க வேண்டிய

உறுதிமொழி 

வாக்குரைத்த ஸ்தலம்:- ஸ்ரீ லோப முத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் திருக்கோயில் வடவள்ளி முல்லை நகர் மருதமலை அடிவாரம் கோயம்புத்தூர்.

அகத்திய மாமுனிவர் வாக்கு:- 

எதை என்று அறிய அறிய யான் சொல்லிக் கொடுக்கின்றேன். அதை அவர்களிடத்தில் சொல்.
  1. தர்மம் செய்வேன்
  2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
  3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
  4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
  5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
  6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
  7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும். 
  8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
  9. பிறருக்காக உழைக்க வேண்டும்
  10. பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே



                           


                         

                      

25/7/2022 அன்று உலகை ஆளும் நமச்சிவாயன் உரைத்த பொதுவாக்கு - ஈசனின் சினமும் பார்வதி தேவி முருகன் பிள்ளையார் அழுகுணி சித்தர் காகபுஜண்டர் அகத்தியரின் சமாதானமும். வாக்குரைத்த ஸ்தலம் : அமர்நாத் பனிலிங்கம். 

இவை மட்டும் இன்னும் ஏராளமான அழிவுகளும் காத்துக் கொண்டே இருக்கின்றது நிச்சயம் ஆனாலும் பொய்கள் போட்டிகள் பொறாமைகள் இவைதான் மனிதனிடத்தில் அவை மட்டும் இல்லாமல் கொள்ளையடித்தல் இன்னும் ஏராளம் பொய் சொல்லுதல் பக்தி என்று ஏமாற்றுதல் பிழைப்பு நடத்த தெரிந்த மனிதா உந்தனக்கு எப்பேர்பட்ட எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வருவது என்பதை கூட நீ உணரவில்லையே!!!!

அதை உணர்ந்து விட்டால் நீ நிச்சயம் மனிதன்!!!

வேண்டாம்!!!

நிச்சயம் மனிதனிடத்தில் புத்திகள் இல்லை.

நீ பார்த்துக் கொண்டே இருக்கின்றாய். பின் எந்தனுக்கு சமமானவன் நீயும் கூட!!!

ஆனால் எப்படிப்பட்ட மனிதன் வருகின்றான் உன்னிடத்தில்  என்று நீ பார்த்தாயா??? செந்தூருக்கும் (திருச்செந்தூர்) யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். பின் நலன்கள் வேண்டி எப்படி எல்லாம் வருகின்றார்கள் தீய எண்ணத்தோடு வருகின்றார்கள் பொய் பொறாமை குற்றங்கள் இவையெல்லாம் வஞ்சகம் இதை என்று கூற அடுத்தவர் நலனை பார்க்காது பின் அடுத்தவரை எப்படி கெடுக்க வேண்டும் என்று போட்டி பொறாமைகள் ஒருவன் உயர்ந்து விட்டால் அவன் மீது இன்னும் பொறாமைகள் இவையெல்லாம் கேட்டுத்தான் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

யாரிடம் போட்டி பொறாமைகள் ,பிற உயிர்களைக் கொல்லுதல், இவையன்றி பிறரை குற்றம் சாட்டுதல்!!! இவையெல்லாம் நிச்சயம் பின் இருந்தால் சனியவன் பிடித்துக் கொண்டு உங்களை ஆட்டுவிப்பான்.

இவைதன் வைத்துக்கொண்டு போட்டி பொறாமைகள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய எதை என்று தெரியாமலே மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே!!!

அதாவது பின் எதை எதையோ என்று அறிய அறிய யான் பெரியவன் எதை என்று அறிய அறிய பின் என்னிடத்தில் இருக்கின்றான் இறைவன் பின் மற்றொரு இடத்தில் இல்லை என்பவை எல்லாம் அப்பனே பொய்களப்பா.

இறைவன் அனைவருக்குமே சமம்.

ஆனாலும் அப்பனே போட்டி எதை என்று அறிய அறிய  மனிதனுக்குள் மனிதனாகவே(மனிதருக்குள் மனிதர்கள்) அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய 

இறைவனும் சிரித்துக்கொண்டிருக்கின்றான் அப்பனே.

இப்படி பின் எதை என்று கூற பொறாமைகள், போட்டிகள் இவ்வாறு படுத்திக்கொண்டு அப்பனே!!!

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

ஏற்கனவே தெரிவித்தும் விட்டேன் அப்பனே. எதை என்றும் அறிய அனைத்தும் தெரிந்தவன் அமைதியாக இருப்பான் அப்பனே.

எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாமல் கூட போட்டி, பொறாமைகள் பிறர் மீது பின் குறை கூறுதல் இவை எல்லாம் இருந்தால் அப்பனே எவ் மந்திரத்தை ஜெபித்தாலும் அப்பனே பிரயோஜனம் இல்லையப்பா. பிரயோஜனம் இல்லை.

அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே

மனமது செம்மையானால் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப்புரிய பின் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்.

எதை என்று அறிய அறிய எதற்காக ???? யான் சொன்னேன் அப்பனே!!!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே அதனால் பிரயோஜனம் உள்ளவனாக வாழுங்கள் அப்பனே எவை என்று கூட போட்டி பொறாமைகள் இன்னும் எதை எதையோ கலியுகத்தில் மனிதன் அப்பனே அதனால் அப்பனே அவையெல்லாம் எதை என்று கூட தூக்கி எறியுங்கள் தூரே!!! அப்பனே எவை என்று கூட!!

நல் மனதை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் கூட இருக்க வேண்டும் அப்பனே அப்பொழுது நல் மனதாக இருக்க வேண்டும் எதை என்றும் அறிய அறிய இருந்தாலும் பல கவலைகள் வருகின்றது என்றால் அப்பனே நிச்சயம் சோதிப்பான் அப்பனே இறைவன்... எதை என்று கூட!!!!

அதில் தான் தோல்வி அடைந்து விடுகின்றான் மனிதன்!!!

எப்பொழுது எப்பொழுது மனிதன் அழிய வேண்டும் என்றெல்லாம் மனிதர்களுக்குள்ளேயே போட்டி பொறாமைகள் என்றெல்லாம் அப்பனே யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே

ஆனால் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் கலியுகத்தில் பிறந்து விட்டாலே!!!.............

அப்பனே பாவம் செய்தவன் தான் கலியுகத்தில் பிறப்பான் அப்பனே சொல்லிவிட்டேன்... எதை என்றும் அறிய அறிய அப்பனே அப்பொழுது எப்படியப்பா???? கஷ்டங்கள் வராது?????

அதனால்தான் சித்தர்கள் எதை என்று அறிய அறிய நல் ஒழுக்கத்தை காண்பித்து அப்பனே எதை என்று கூட அறிவுகளோடு வாழுங்கள் எதை என்று அறிய அறிய போட்டி பொறாமைகள் நீக்குவதோடு அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே யாங்களே சில விஷயத்தில் கூட நன்மைகளைப் பாய்த்து அப்பனே பின் பல புண்ணிய வழிகளை தேடச் செய்து அப்பனே நன்மைகளாகவே கொடுக்கின்றோம் அப்பனே.

இதனால் அப்பனே தவறுகள் செய்யாதீர்கள் தவறுகள் செய்யாதீர்கள் பக்திகளில் நுழைந்து... என்றெல்லாம் கூறிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அதைத்தான் செய்கின்றான் அப்பனே

கஷ்டங்களை அள்ளித் தருவானப்பா ஈசன் சொல்லிவிட்டேன்!! அப்பனே!!


இதற்கு முன்னர் கூறிய தொகுப்பில் குருநாதர் கூறியபடி தர்மம் செய்வோம் என்று சூளுரைத்த நாம், தர்மம் செய்வதற்கு ஆதாரமாக உள்ள அன்பை இதயத்தில் இருத்தி , நம்மிடம் உள்ள போட்டி,பொறாமைகளை நீக்குவோமாக!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

 சித்திரை மாதம் பேசுகின்றேன் - இன்னும் 10 நாட்களே உள்ளன!  - https://tut-temples.blogspot.com/2024/05/10.html

 அகத்திய மாமுனிவர் வாக்கு - உயர்தர புண்ணியம் பெறுவது எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post.html

 என்றும் குருநாதரின் வழியில்...இறைவா.! அனைத்தும் நீ..!! சர்வம் சிவார்ப்பணம்...!!!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_30.html

 மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_29.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி..! தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_26.html

 சிவசித்தர் திருமூலர் வாக்கு - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_24.html

 அகத்திய பிரம்மரிஷி வாக்கு - வள்ளலார் வழியில் சுத்த சன்மார்க்கம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_23.html

வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 4 - https://tut-temples.blogspot.com/2024/04/4.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html

 திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_19.html

 குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html

 காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html


 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2  - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

No comments:

Post a Comment