"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, May 8, 2024

தர்மம்.! தர்மம்..!! தர்மம் ஒன்றே கர்மம் தீர வழி...!!!

                                                              இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் இந்த மாத அதாவது மே மாத சேவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளோம். நாட்கள் செல்ல செல்ல வெயிலின் தாக்கத்தை நம்மால் தாங்க  முடியவில்லை. அலுவலக பணியில் இருக்கின்ற நமக்கு இப்படி என்றால் பலதரப்பட்ட சேவைகளில் வெயிலில் வேலை அன்பர்களை நினைத்துப் பார்க்கும் போது நமக்கு கடினமாக தான் உள்ளது. நம் வீட்டிற்கு வந்து சிலிண்டர் போடுபவர்கள், தபால்காரர்கள், கொரியர் தருபவர்கள் என இது போன்ற அன்பர்களிடம் நலம் விசாரித்து குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று மனதார கேட்டு தண்ணீர் கொடுங்கள். இது மட்டுமல்லாது மற்ற ஜீவ ராசிகளான பறவை, நாய், பூனை, கோமாதா என அனைத்திற்கும் நம்மால் இயன்ற அன்னம், நீர் கொடுங்கள். இதனை யொட்டியே இந்த ஏப்ரல்,மே,ஜூன் மாதம் வரை நீர், மோர் சேவை என தொடர்ந்து வருகின்றோம். இது மிக மிக தேவையான ஒன்று ஆகும்.

இன்றைய பதிவில் குருநாதர் அருளிய உத்தரவை நாம் உறுதிமொழியாக ஏற்க வேண்டும். அதனை அப்படியே சித்தன் அருள் வலைத்தளத்தில் இருந்து அப்படியே தருகின்றோம். அனைவரும் இதனை குருநாதர் அகத்திய உபதேசமாக கொண்டு வாழ வேண்டும் பிரார்த்தனை செய்வோமாக! 


   அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விதியிலே, ஒரு மனிதனுக்கு, அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும்கூட, நல்லவனாக இருந்துவிட்ட அல்லது இருக்கின்ற காரணத்தினாலேயே இறை தரிசனமோ அல்லது சித்தர்கள் தரிசனமோ கிடைக்கவேண்டும் என்பது இல்லை. அல்லது, ஓலை மூலம்தான் சித்தர்களின் வாக்கை அறிந்து முன்னேறவேண்டும் என்ற நிலையும் இல்லை. வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. இஃதொப்ப காலத்திலே பக்தி மார்க்கமும், பரிபூரண சரணாகதி தத்துவமும், அஃதோடு தக்க ஏழைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதும், அந்த தர்ம குணத்தை எப்படியாவது இறையிடம் போராடி பெற்று, இன்னும் கூறப்போனால், மனித அறிவு ஏற்றுக்கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்களை நாங்கள் கூறினாலும் அதில் உச்சகட்டமாக இங்கு வருபவர்கள் வெளியில் ஏளனம் செய்வது "ருணம் பெற்று அறம் செய்" என்று நாங்கள் கூறுகின்ற கருத்தை, அதுவும் எல்லோருக்கும் நாங்கள் கூறவில்லை, சிலருக்கு சிலவற்றை மனதிலே வைத்து கூறுகிறோம். அந்த தர்மத்தை, எவனொருவன் தன்முனைப்பு இல்லாமல் செய்கிறானோ அவனுக்கு எஃதும் கூறவேண்டியதே இல்லையப்பா. அந்த தர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு எத்தனை இடர், எதிர்ப்பு, சோதனை, வேதனை வந்தாலும், "நீ தர்மம் செய்தாயே? அவன் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டான். அவனைப்போன்ற ஏமாற்றுக்காரனுக்கெல்லாம் நீ ஏனப்பா உதவி செய்கிறாய்?" என்று இன்னொருவன் வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும்கூட "என் கடன் தர்மம் செய்து கிடப்பதே" என்று எவன் தொடர்ந்து தர்மவழியில் வருகிறானோ அவனுக்கு எஃதும் கூறவேண்டாம். இறையே அவனை வழிநடத்தும். அதைதான் நாங்களும் தர்மம், தர்மம், தர்மம் என்று பலருக்கும் பலமுறை கூறுகிறோம். ஆனால் கேட்க விடவேண்டுமே அவனவன் கர்மா!




அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தர்மம் தருவதே தருமம். தர்மத்தில் யார் தருகிறார், யார் பெறுகிறார் என்பதே உயிரப்பா. தன்னிலை உணர்ந்து, தானாய் தருவதே தருமம். தருமமோ தர்மம். பிறர் நிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம். தருமமோ தர்மம். தர்மம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாது செய்வதே, தருமம். தர்மத்தால் வரும் பயன் எண்ணா செய்வதே தருமம். பேதங்கள் நோக்காது செய்வதே தருமம். உறவு, நட்பு, பகை நோக்காது செய்வதே தர்மம். அப்பனே தருமம், அன்னைக்கு அன்னையே தருமம். அவர்தம் பாதம் பணிந்து கடமை ஆற்றுதலே தர்மம். அகத்தில் சாந்தம் பொங்க, வதனத்தில் சாந்தம் தவழ செய்வதே தர்மம். அதனை உணர்ந்து, உணர்ந்து உள்ளம் பூரித்து செய்வதே தர்மம். தர்மத்தை தடுக்காதிருப்பதே தர்மம். பற்றில்லா செய்வதே தர்மம். அறப்பண்போடு செய்வதே தர்மம். தன்னலம் விட்டும், பிறர் நலம் பேணும் உயர் தன்மையே தருமம். தன் இனமில்லா, பிற உயிர்களுக்கும் செய்வதே தருமம். தன்னை அறிந்து தனக்குள் இறையை அறிந்து வாழ முயல்வதே தருமம். கர்மம் குறைப்பதே தருமம். சட்டம் உரைப்பதே தருமம். நாட்டம் தவிர்ப்பதே தர்மம். இட்டம் (இஷ்டம்) பலிப்பதே தருமம். இட்டம் (இஷ்டம்) அடைவதே தருமம். இறை சட்டம் மதிப்பதே தருமம். நல்திட்டம் காண்பதே தருமம். மிகு உணர்வினை கட்டுப்படுத்துவதே தர்மம். இலகுவாக வாழ்வை மாற்றித்தருவதே தர்மம். தன் நிலை தாண்டி மேல் உயரவைப்பதே தர்மம். தன் நிலைக்கு மேல் உயர்த்துவதே தர்மம். தன்னையறிய உதவும் தர்மம். தன்னலமில்லா பொதுநலத்தை வளர்ப்பதே, தர்மம். தன்னை, தன்னிலிருந்து வேறாகப் பிரித்துக் காட்டுவது தர்மம். உறவு தாண்டிச் செய்வதே தர்மம். உளைச்சலின்றி செய்வதே தர்மம். உயிர் காக்க உதவுவது தர்மம். உள்ளன்போடு செய்வது தர்மம். தன்னை, தனக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதே தர்மம். இதுபோல் தொடர்ந்து இவ்வழியில் வந்து செய்யும் தருமத்தால் குறையும் கருமம். இதனை உணர்ந்தாலும், உணராவிட்டாலும் இவ்வாறு செய்வதே தருமம். தினம் நாளும் செய்வதை வகுத்து, வகுத்து, பிரித்துப் பிரித்து பார்த்து, அதில் உள்ள தன்மையை நுட்பத்தை அறிந்து ஏற்க முயல்வதே தருமம். ஆசிகள்

29/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் கோயமுத்தூரில் முல்லை நகர் வடவள்ளியில் அமைந்திருக்கும் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான் ஆலயத்தில் வைத்து பொதுமக்கள் கலந்து கொண்ட சத்சங்கத்தில் குருநாதர் நல் உபதேசங்கள் செய்தார்

அதாவது பொதுமக்கள் பெருமளவு கூடி இருந்தாலும் யார் யார் என்னென்ன தான தர்மங்கள் செய்தார்கள் என்பதை கேட்டறிந்து கேட்டறிந்து புண்ணியத்தின் தான தர்மத்தின் மகத்துவத்தை அனைவரும் உணரும்படி உபதேசம் செய்து நல்வாக்குகள் தந்தருளினார்

அதில் முக்கியமாக ஒரு கட்டத்தில் ஒரு அடியவரை எழுப்பி யான் கூறுவதை அப்படியே மக்களிடம் உறுதி மொழியாக சொல்லும்படி அனைவரையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வைத்தார்.

இந்த உறுதி மொழி அனைத்து அடியவர்களும் சாஷ்டாங்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோயம்புத்தூரில் நடந்த முழு சத்சங்கமும் பொதுவாக்கில் விரைவில் வெளிவரும் அதற்கு முன்பாக அவசர உத்தரவாக இந்த உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குருநாதர் அகத்திய பெருமான் தினசரி அனைவரும் எடுக்க வேண்டிய

உறுதிமொழி 

வாக்குரைத்த ஸ்தலம்:- ஸ்ரீ லோப முத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் திருக்கோயில் வடவள்ளி முல்லை நகர் மருதமலை அடிவாரம் கோயம்புத்தூர்.

அகத்திய மாமுனிவர் வாக்கு:- 

எதை என்று அறிய அறிய யான் சொல்லிக் கொடுக்கின்றேன். அதை அவர்களிடத்தில் சொல்.
  1. தர்மம் செய்வேன்
  2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
  3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
  4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
  5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
  6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
  7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும். 
  8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
  9. பிறருக்காக உழைக்க வேண்டும்
  10. பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே

( அகத்திய மாமுனிவர் பக்தர்கள், அடியவர்கள் இதனைத் தினமும் அதி காலையில் ஒரு மந்திரம் போலச்சொல்லுங்கள். அனைவரிடத்திலும் சொல்லுங்கள். அன்ன சேவை , வழிபாடுகள் மற்றும் அனைத்துபொது இடத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். செயல் படுத்துங்கள். இந்த வாக்குகள்உங்கள் எண்ணமாகட்டும். உங்கள் எண்ணங்கள் சொல்லாகட்டும். உங்கள் சொல் அனைத்தும்குருநாதர் காட்டிய வழியில், செயல்களாகட்டும். இதை அனைவரும் கடைப்பிடித்தால் அடுத்த முறைபிரச்சினை என்று இறை அருளால் வராது)

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏன் நீங்கள் பிரச்சினை பிரச்சினை என்றுஎன்னிடத்தில் வந்து பின் அப் பிரச்சினை நீக்கு , இவ் பிரச்சினை நீக்கு என்று ( கேட்கின்றீர்கள் ). ஆனாலும் அப்பனே ( உங்களின் ) அவ் பிரச்சினை ( எல்லாம் ) நீக்குவதற்கு அப்பனே உன்னிடத்தில்என்ன உள்ளது என்பதைக்கூட அப்பனே கூறுங்கள் அப்பனே? 

சிறு புண்ணியங்கள் இருந்தால்தான் அப்பனே அதையும் நீக்க முடியும் என்பேன் அப்பனே. அப்பனேஉயிரே போகின்றது என்ற கண்டம் வருகின்றது ( என்றாலும் கூட ) ஆனாலும் அப்பனே அறிந்தும்கூட அதை நீக்குவதற்கும் புண்ணியங்கள் அவசியமாகின்றது. ( நீங்கள் செய்யும் ) அப்புண்ணியங்களை வைத்து பிரம்மாவிடம் பேசுவேன் அப்பனே யான்!!! அறிந்தும் கூட இவ்வாறு அவன்புண்ணியங்கள் செய்திருக்கின்றான் என்று. 

ஆனால் நீங்கள் செய்யவே இல்லை அப்பனே. அப்பொழுது எப்படியப்பா பிரம்மாவிடம்எடுத்துக்கூறி  ( யான் செய்ய இயலும்?)

அப்பனே பிரம்மன் கேட்கின்றான் அப்பா “அகத்தியனே, அறிந்தும் கூட உன்னை ஏதோ ஒருஅறிந்தும் கூட சுய நலத்திற்காகவே வணங்குகின்றார்கள். புண்ணியமே செய்வதில்லை. ஆனால்மக்களுக்காக விதியை மாற்று, மாற்று என்று நீங்கள் சொல்கின்றீர்கள்” என்று. 

அப்பனே யான் தலை குனிய வேண்டியதாயிற்று அப்பனே!!!!!!!

( நமது அன்பு குருநாதர் இப்படி நமக்காகப் பிரம்மனிடத்தில் தலை குனிய வைக்கலாமா? அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி  வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். இந்த உறுதிமொழிப்படி இனி நாம் அனைவரும் நடந்து நம்அன்பு குருத் தந்தையின் பெருமையைக் காப்போம். உலகில் தர்மம் செழிக்க உத்வேகத்துடன்உழையுங்கள். அகத்திய மாமுனிவர் அருளால். உங்கள் பிரச்சினைகள் தவிடு பொடியாகிவிடும். வாருங்கள் அன்பு அடியவர்களே, உறுதிமொழி வழி நடந்து அன்பு அகத்தீசருக்கு பெருமை சேர்ப்போம்.)









ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

 சித்திரை மாதம் பேசுகின்றேன் - இன்னும் 10 நாட்களே உள்ளன!  - https://tut-temples.blogspot.com/2024/05/10.html

 அகத்திய மாமுனிவர் வாக்கு - உயர்தர புண்ணியம் பெறுவது எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post.html

 என்றும் குருநாதரின் வழியில்...இறைவா.! அனைத்தும் நீ..!! சர்வம் சிவார்ப்பணம்...!!!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_30.html

 மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_29.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி..! தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_26.html

 சிவசித்தர் திருமூலர் வாக்கு - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_24.html

 அகத்திய பிரம்மரிஷி வாக்கு - வள்ளலார் வழியில் சுத்த சன்மார்க்கம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_23.html

வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 4 - https://tut-temples.blogspot.com/2024/04/4.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html

 திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_19.html

 குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html

 காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html


 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2  - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

No comments:

Post a Comment