உணவிற்காக
உயிர்ப்பலி இடுவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். இதற்கு நாம் சைவ உணவு
உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அனைவரும் இது போன்று மாறி விட்டால்
உணர்விற்காக உயிர்ப்பலி இடுவது அறவே நின்று விடும். இதனை வலியுறுத்தும்
விதமாக குருநாதர் அருளிய வாக்கினை இனி காண உள்ளோம்.
சித்தன் அருள் - 1506 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 18!
அடியவர்:- பூமியில வெப்பம் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றது. நல்ல மழை பெய்து இந்த ஊர்களை எல்லாம் இறைவன் காப்பாற்றவேண்டும்.
குருநாதர்:-
அம்மையே பூமியில் கெட்டவர்கள் அதிகமாகிக்கொண்டே போய் இருக்கிறார்கள்
அம்மையே. அப்பொழுது அவர்களால் சில நல்ல மனிதனுக்கு துன்பம் ஏற்படும் பொழுது
பின் இங்கு அமர்ந்தானே (அசைவம் உண்டவர், அவரை பின் சென்று அமரச்சென்னார்
குருநாதர் முன்பு ) அவன்தனும் மற்ற ஒரு உயிரை கொன்று கொன்று சாப்பிட்டு
என்றும் அறியாமலேயே , பின்பு இப்பொழுது வளராது கஷ்டங்கள் ( என நினைத்து
அசைவம் உண்டு) பின்பு ( துன்பங்கள் ) வந்தால் ஐயோ யான் எவை என்று கூற
இறைவனை நோக்கி படையெடுப்பது பின் அப்பொழுது ( துன்பங்கள் வந்த பின் அசைவம்
சாப்பிடுவதை ) விட்டு விடுவது. அதனால் இப்போதே விட்டு விட்டால் அம்மையே
இதன் ரகசியத்தை தெரிந்து கொள்.
நாடி அருளாளர் :- ( குருநாதர் வாக்கை, அந்த அடியவரை அசைவம் சாப்பிட வேண்டாம் என உரைத்தார்கள் )
அடியவர்:- சரிங்க ஐயா
குருநாதர்:- அப்பனே விட்டுவிடுகிறேன் என்று சொல்லி விட்டாய் அப்பனே. ஆனால் உன்னால் விட்டு முடியாது அப்பா யான் சொல்கிறேன்.
அடியவர்கள்:- ( சிரிப்பு )
குருநாதர்:- அப்பனே ஆசை அறுமின். அப்பனே முதலில் எதன்மீது மற்ற எவை என்று கூற ஜீவராசிகள் மீது அப்பனே தெரிந்துகொள்ளுங்கள்.
( முதலில் மற்ற ஜீவரீசிகளை/அசைவ உணவு உண்ணும் ஆசையை அறுக்க வேண்டும்)
அப்பனே
நன்றாக தின்னுவது அப்பனே கடைசியில் பார்த்தால் நோய்கள்
சம்பாதித்துக்கொள்வது பின்பு இறைவன் இடத்தில் அய்யய்யோ நோய் வந்து விட்டதே
என்று (வேண்டுவது) , மருத்துவர் கூட ( சென்று சிகிச்சை ஆனாலும்) அப்பனே
ஒன்றும் செய்ய முடியாது அப்பா.
அப்பனே
தெரிந்து கொள்ளுங்கள். அதனால் அப்பனே தான் தான் செய்த தவறுகள் பின்
தன்னையே பின் பாதிக்கும் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. ஆனால் அது தெரியாமல்
இறைவனிடத்தில் வந்து புலம்புவது வீணே என்பேன் அதனால் தன்னைத் தான் உணர
வேண்டும். தன்னை உணர்ந்தால் தானே வெற்றி. அப்படி இல்லையென்றால், அப்பனே
யாரோ ஒருவன் பிறர் நலனை விரும்பி விரும்பி வருகின்றானோ ( அவன்தனக்குத்தான்
இறைவன் அனைத்தும் செய்வான், அவனே வெற்றியாளன் ) சொல்லி விட்டேன்.
குருநாதர்:-
அதற்கான தண்டனை என்ன என்று கூற பின் (இங்கு) யார் யார் (அசைவம்)
உண்ணுகின்றார்களோ அவர்களை அழைத்து (அசைவம் சாப்பிடுவது தவறு என்று ) சொல்.
அடியவர்கள்:- (அசைவம் சாப்பிடும் அனைத்து அடியவர்களையும் அழைத்தார்கள். அவர்களை அங்கு முன் வரிசையில் நிற்க வைத்தார்கள்.
அடியவர்:-
எல்லா உயிர்களுக்கு இறைவனுடைய அம்சமாக இருக்கின்றது. எந்த உயிர்களுக்குமே
ஏற்ற தாழ்வு இறைவனிடம் கிடையாது. மனிதன் உயர்ந்தவன் வேற உயிருக்கு வந்து
தாழ்ந்தது அப்படின்னு ஏற்ற தாழ்வு (இறைவனிடம் ) கிடையாது. இருந்தபோதிலும்
அது அது செய்த கர்மாவுக்கு ஏற்ற மாதிரி அது வந்து மனித தேகத்தில் வந்து
பிறந்து இருக்கு. அப்ப மனிதனால் மட்டுமே இறையோட இருந்தா கலக்க முடியும்
என்பது எனது புரிதல்/நம்பிக்கை. அப்போ மத்த விலங்குகளால் அடைய முடியாதா
என்று கேட்டால் மற்ற விலங்குகள் வந்து கர்மவை கழிக்கிறதுக்காக
பிறந்திருக்கு. அப்போ அதற்கும் உங்களுக்கு உள்ள எல்லா அவஸ்தை , உங்களுக்கு
உள்ள கஷ்டம் எல்லாமே அதுக்கு உண்டு. அப்ப அத நீங்க என்ன செய்றீங்களோ
அதற்குள்ள அதுமிச்ச காலம் அதோட கர்மாவை நீங்கள் வாங்கியது போல் ஆகும்.
இப்போ உங்களை கிள்ளும் போது எவ்வளவு வலி அவஸ்தையா இருக்கும். அப்ப அத
கழுத்தறுத்து கொல்லும் பொழுது அதுக எவ்வளவு அவஸ்த்தையா இருக்கும்.சில
உயிர்களுக்கு ஞானம் பெற்ற உயிர்கள் நீங்க கழுத்தை அறுக்க தன் தலையை
கொடுக்குமாம். எதுக்குன்னு கேட்டால் சீக்கிரம் கர்மாவை கழித்து இறைவனை
அடைவதற்கு. அது ரொம்ப புரிதலான ஒரு சில ஆன்மாக்கள், உயிர்கள் இருக்கு
அப்படி ஒரு ஞானம் இருக்கு என்று நான் கேள்விபட்டு இருக்கின்றேன். அப்ப அது
வந்து என்ன செய்யும் என்றால், நீ அசைவம் சாப்பிடுகின்றீர்கள் என்றால் தலைய
வெட்டு அப்டின்னு வந்து தலைய குடுக்குமாம். அப்போ அதன் கழுத்தை வெட்டும்
போது மிச்ச காலம் எவ்ளோ கஷ்டப்பட வேண்டியது இருக்கோ அந்த கஷ்டத்த நீங்க
அனுபவிச்சே ஆகனும்.
அப்போ
அதுக்கு நீங்க விமோசனம் குடுக்குற மாதிரி அதனுடைய கர்மாவை நீங்க
சுமக்குறீங்க. அப்ப அதனுடைய கர்மாவை நீங்க சுமக்கும்போது உங்களுக்கு எப்படி
இறையருள் கிடைக்கும். இறைய நீங்க அடையவே முடியாது. மறுபடியும் தண்டனை
தேகம் ( பிறவி ) பெற்றே ஆக வேண்டும்.
இறைய
அடைய வேண்டும் என்றால், அது தண்டனை பெற்ற தேகத்துடன் இந்த உலகத்தில் வந்து
அது இயற்கையோட இயற்கையா கழிச்சுட்டு அடுத்த பிறப்புக்கு வந்துட்டு
போகுது. அப்போ உங்களுக்கு லைட்டா ஒரு குண்டுசியால குத்தினால் எவ்வளவு
அவஸ்தையா இருக்கு வலிக்குது. அப்ப அத நீங்க வெட்டும் போது வலிக்குது
என்பதை உங்க உள் மனசு சொல்லுவதில்லை.. அப்புறம் என்ன சுயநலம் உங்களுக்கு
அந்த ஆசை உங்க நாக்கு ருசிக்காக உணர்ந்துதான் வேண்டும் என்று தெரிஞ்சுதான்
தப்பு பண்ணுகின்றீர்கள். அது தப்பு இல்லை என்று உங்களை நீங்களே ஏமாத்திக்
கொண்டு இருக்கீங்க அப்டின்னு உங்களுக்கு தெரியும். அது வெட்டும் போது
அதற்கும் வலிக்கும் என்பது உங்களுக்கு நல்லா தெரியும். அது தெரிஞ்சு ஏன்
அதை செய்கின்றீர்கள்?. அது என்ன செய்ய போகுது நம்மள? அத சாப்பிடலாம்னு
உங்கள நீங்களே காமெடி சொல்லி ஏமாத்திட்டு இருக்கீங்க. அப்ப அதனால
உங்களுக்கு பாதிக்கப்படுவீங்க அப்படின்ற உணர்வு வந்துருச்சுனா நீங்க இத
பண்ண மாட்டீங்க. அப்போ அதை அறுத்து சாப்பிடும் போது அதனுடைய பாதிப்பு
உங்களுக்கு வரும் அப்படின்ற உணர்வு உங்களுக்கு இல்ல. இப்ப வெட்டி
சாப்பிடுகின்றோம் அது எல்லாம் ஒன்றும் இல்லை. அதுக்குத்தானே படைக்கப்பட்டு
இருக்கு அப்டின்னு உங்கள நீங்க ஏமாத்திக்கிட்டீங்க. உண்மையில் உங்க ஆழ்
மனதில் இருந்து அந்த உயிர் பலி பண்ணும் போது அதனுடைய வலியும் அதனுடைய
அவஸ்த்தையும் அதனுடைய கஷ்டங்கள் உங்களுக்கு நல்லா தெரியும். அப்படினு போது
அதுக்குள்ள எல்லாமே நீங்க அனுவித்தேதான் தீரனும். இது அடியேன் புரிதல்.
குருநாதர்:- அப்பனே ஏன் வயிற்று வலி வந்திருக்கிறது எதை என்று அறிய அப்பனே ( ஒரு அடியவரை அழைத்து ) எடுத்துரை.
அடியவர்:-
நம்ம உணவு வந்து இயற்கையாவே சாப்பிடுவது இல்லை. நம்ம சாப்பாட்டுக்கு
முக்கியத்துவம் கொடுக்குறதில்ல. நம்ம உயிர் வாழ்வது சாப்படுவதில்தான்
உள்ளது. . அப்ப நம்ம ஆரோக்கியமாக இருக்கனும் என்று உணர்வதே இல்லை. ஒரு
formalityக்காக வேக வேகமாக சாப்பிட்டு ஓடுவது.அப்போ இப்படித்தான்
சாப்பிடணும். இப்படித்தான் வாழனும் என்று வாழ்வில் கோட்பாடு மாற்றும் போது
அசைவம் சாப்பிடுவதனால, இல்ல சாப்பிடாம ஏற்ற இறக்கமாக சாப்பிடுவது, செயற்கை
சாப்பிடுவது. இயற்கையா சாப்பிடுவதுல்லை. அப்ப மாதம் ஒருமுறை பேதி
கொடுப்பது. அப்ப எந்ந முறையுமே நம்ம உடம்புக்காக செய்வதே கிடையாது. நல்
எண்ணெய் தேய்து குளிக்கனும். பேதி கொடுக்கனும். இவ்வளவும் நமக்கு தெரியும்.
எல்லாத்துக்கும் அறிவுரை சொல்வோம் ஆனால் பண்ண மாட்டோம். இப்ப வயிற்று வலி
வருதுன்னா வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையா இருக்கும். யோசித்தால்
உங்களுக்கு கண்டிப்பாக தெரியும்.
சித்தன் அருள் - 1508 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 20!
அடியவர்:- பிற உயிர்களை கொன்று தின்று விட்டு நான் அகத்தியனுடைய சிஷ்யன் , சித்த சிஷ்யன் என்று வருகின்றார்களே….
குருநாதர்:-
அப்பனே அப்படி பட்டவர்களை யான் ஏற்றுக்கொள்வதே இல்லை. ஆனாலும் பொய்
சொல்லலாம். யான் அகத்தியன் சீடன் என்று எல்லாம், ஆனால் அப்பனே அவை எல்லாம்
வெறும் பொய்கள் அப்பா. அப்படி பட்டவர்களிடம் சென்றாலும் கூட நீங்களும்
கர்மாவை பின் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே.
அதனால்தான் நம்பிவிடாதே, யாரையும் நம்பிவிடாதே. கோடி கோடி திருடர்களப்பா.
பக்திகளாக இருந்தும் பின் (அசைவம்) அதை தின்றால் அப்பனே அவன் தன் அறிந்தும்
அறிந்தும் கூட நாயைவிட கீழானவன் சொல்லிவிட்டேன் அப்பனே. ஆனால் ஒருநாள்
நிச்சயம் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். அம்மையே கேட்டாயே, (அசைவம்) இதை
எல்லாம் சாப்பிட்டால் அம்மையே இப்பொழுது கூறினாயே (சர்கரை நோய்) அந்நோய்
தானாகவே வந்து விடும். ஆனாலும் சில மாறுதல்களும் உண்டு. அதனை பற்றியும்
செப்புகின்றேன் அம்மையே. அதனால் அதை உண்ணாதவரை (அசைவம் சாப்பிடாதவர்களை)
என்னிடத்தில் அழைத்து வா அம்மையே. ஆனால் உத்தனுக்கு மட்டும்தான் யான்
சொன்னேன். மற்றவர்களுக்கு இல்லை.
அடியவர்:- எல்லா தவறும் செய்றாங்க. அசைவம் சாப்பிடுகின்றனர்.
குருநாதர:-
அம்மையே ஒன்றை சொல்கின்றேன். அனைவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
நேற்றைய பொழுதிலும் (4.9.2023) சொல்லி விட்டேன். இறைவன் மனிதனுக்கு
அனைத்தும் கொடுக்க தயாராகவே இருக்கின்றான். ஆனாலும் நிச்சயம் மனிதன் பின்
அதை பெற்றுக்கொண்டாலும் சரியான வழியில் உபயோகிக்கத் தெரியாமல் அழித்து
விடுவான். அதனால்தான் அம்மையே இறைவன் கூட மௌனத்தை காத்துக்
கொண்டிருக்கின்றான் அம்மையே அனைத்தும் , அனைத்தும் என்று. அம்மையே இது
போலத்தான் நாராயணனும் ஏமாந்தான் அம்மையே. நாராயணனை பற்றி தெரியுமா
தெரியாதா?
இதற்கு
முன்னர் கூறிய தொகுப்பில் குருநாதர் கூறியபடி தர்மம் செய்வோம் என்று
சூளுரைத்த நாம், தர்மம் செய்வதற்கு ஆதாரமாக உள்ள அன்பை இதயத்தில் இருத்தி ,
நம்மிடம் உள்ள போட்டி,பொறாமைகளை நீக்கி, இனி உயிர்ப்பலி இடுவதை
தவிர்ப்போமாக!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html
அந்த
நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி
உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html