"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, January 2, 2024

அசைவம் தவிர்! இதை அனைவருக்கும் பகிர்!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

"அன்பு" வணக்கங்கள் என்று தெரிவித்துள்ளோம். இப்போது பதிவின் தலைப்பை படித்து பாருங்கள். கால மாற்றத்தில் நமக்கான உணவை விடுத்து ஏதேதோ சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். அதிலும் உச்சகட்டமாக பிற உயிரை கொன்று சாப்பிடுவது எப்படி நியாயம்? உயிர் படும் வலி, வேதனை காண வேண்டாமா? இப்படி இருந்தால் எப்படி நன்மை நமக்கு கிடைக்கும்? அசைவ உணவு சாப்பிடுபவர்கள் நம்மை விட நன்றாக இருக்கின்றார்களே என்றெல்லாம் நீங்கள் கேட்பது நமக்கு தெரிகின்றது. இதில் நாம் வீண் வாதம் செய்ய வேண்டாம். சைவமா? அசைவமா? என்ற கேள்வியே வேண்டவே வேண்டாம். சைவம் ஒன்றே ஜீவகாருண்யத்தின் அடிநாதம் என்று உணர்ந்து கொண்டு, அனைவருக்கும் பகிர்ந்து அனைவரும் குருநாதர் கூறும் வழியைப்  பின்பற்றுங்கள்.

குருநாதர் கூறிய அருளுரைகளை அதுவும் குறிப்பாக அசைவம் உண்பதால் ஏற்படும் தீமைகளை இந்தப் பதிவில் அனைவரும் அறியத் தருகின்றோம்.



“இறைவா!!! அனைத்தும் நீ”

உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

23/11/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு பாகம் 1. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம்.பூமலை  பர்கூர். 

அப்பனே இறைவன் அருள் அப்பனே அவைதன் கூட விஷ்ணுவின் அருள் நிச்சயம், அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே!!!!!

பிற உயிர் கொல்லாமை அப்பனே  யார் ஒருவன் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் படைத்ததை அப்பனே எதை என்றும் அறியாமல் கூட தின்னுகின்றானோ அவந்தனுக்கு அருள்கள் கிட்டாதப்பா!!!.

 சொல்லி விட்டேன். அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

ஆனாலும் சில மனிதர்கள் அதை உட்கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!!

அதற்குத் தீர்வு நோய்கள்தானப்பா!!!. 

அப்பனே அவர்களையே கேட்டுப்பார்!!!

அப்பனே. (யார் அசைவம்) உட்கொள்கின்றார்களோ அவர்களை எதை என்றும் அறிந்தும் அறியாமலும் கூட எவ்வளவு நோய்கள்?????? இல்லத்தில் எவ்வளவு பிரச்சினைகள்???????  என்றெல்லாம் கேட்டுப் பாரத்தால் புரிந்துவிடும் அப்பனே!!!. 

இதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே

முதலில் அப்பனே இறைவனை வணங்க தகுதி ஆனவர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே """"""" புலால் உண்ணாமையே !!!!! என்பேன் அப்பனே. 

இதை உண்ணாமலே இருந்தாலே  அப்பனே மற்றவை எல்லாம் தானாகவே வந்து விடும்.அப்பனே  எதை என்று கூற உயர் புத்திகள், உயர் எண்ணங்கள் இன்னும், இன்னும் அப்பனே. 

இவை உண்டுகொண்டே வந்தால் அப்பனே மனிதனின் கிளர்ச்சிக்கள் சில சில  அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே உடம்பில் உள்ளதப்பா. 

இவைதன்  எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அறிந்தும் கூட பின் மற்ற உயிர்களும் செல்லுமானால்  அவ் கிளர்ச்சி மீண்டும் அதிகமாகிவிடும் என்பேன் அப்பனே

இதனால் இன்னும் இன்னும் அப்பனே எதை என்றும் அறிய முடிகிறது காமம் எதை என்று கூட மூளைக்கு ஏறி  அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே கர்மத்தை சம்பாதித்து, இன்னும் போட்டி,. எதை என்று அறிய அறிய பொறாமை , கோபங்கள் இவை எல்லாம் அப்பனே  சேர்ந்து மனிதன் அழிவு நிலைக்கே சென்று சென்று!!!

இதனால் அப்பனே அவன் மட்டும் அழியவில்லை. அவன் பிள்ளைகளும், இன்னும்  எதை என்று அறிய அறிய, இன்னும் அப்பனே அவனைச் சார்ந்து உள்ளவர்களையும் கூட அழித்து இவந்தனையும் அழித்துக் கொண்டு மீண்டும்  அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அவ் ஆன்மா எவை என்று அறிய அறிய பிறவி எடுத்து விடுகின்றது என்பேன். 

இதனால் என்ன லாபம்? 

லாபங்கள் இல்லையப்பா.

இதனால் அப்பனே (பிறவிப்) பெருங்கடலைக் கடந்திட வேண்டும். பெருங் கடல் என்பது இங்கு யான் சொல்வேன் அப்பனே. எதை என்று அறிய அறிய

மனிதன் எவை என்று புரிய புரிய அதனால் புரிந்து கொண்டு வாழுங்கள்!!!.

புரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே!!!. 

புரியாமல் வாழ்ந்தால் அப்பனே இறைவன் ஆசிகளும் கிட்டாது என்பேன் அப்பனே.

=======================================

( சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு வாக்குரைத்த ஸ்தலம். திரயம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம். நாசிக். )

அப்பனே உயிரைக் கொன்று உட்கொண்டு தான் இருக்கின்றார்கள்!!! அப்பனே மனிதர்கள் கூட அப்பனே.

அப்பனே மனிதனை  அப்பனே ஒரு உயிரைக் கொன்று நீ உட்கொள்வது அப்பனே மனிதனை விட  அப்பனே ஒரு மனிதனை கொல்வதை விட அதைவிட பன்மடங்கு அதாவது வாயில்லா ஜீவராசிகளை கொல்வது அப்பனே பாவமப்பா!!!! பாவம்!!!!

அப்பனே பின் தெரிந்தும் தவறுகள் செய்தால் அப்பனே இறைவனிடத்தில் நிச்சயம் மன்னிப்புகள் இல்லை!!!!

(குருநாதர் முன் வாக்குகளில் ஏற்கனவே கூறியிருந்தது!!!! ஒவ்வொரு உயிரையும் இறைவன் படைக்கின்றார் அதன் மரணத்தையும் இறைவன் தான் எழுதுகின்றார் எப்பொழுது பிறக்க வேண்டும் எப்பொழுது இறக்க வேண்டும் என்று அதனால் மனிதனுக்கு ஒரு உயிரை கொள்வதற்கு அனுமதி இல்லை உரிமையும் இல்லை அனைத்து உயிரினங்களும் இறைவனுடைய பிள்ளைகள் இறைவனுக்கு தெரியும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் எப்பொழுது எந்த உயிர் பிரிய வேண்டும் என்று ஆனால் மனிதன் தன் சுயநலத்திற்காக ஒவ்வொரு ஜீவராசிகளை கொன்று தின்றால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்தே தீர வேண்டும்)

சொல்லிவிட்டேன் கஷ்டங்கள் அப்பனே அனுபவித்தே ஆக வேண்டும்!!!

யார் அனுமதி ???

(பிற ஜீவராசிகளை கொன்று குவிப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் மனிதர்களுக்கு)

அப்பனே இறைவன் படைப்புக்களில் அப்பனே..... இறைவனே அனைவரையும் படைக்கின்றான்  அதனால்  இறைவன் படைப்பதை மற்றொருவன் கொன்றால்????

சொல்லிவிட்டேன் அப்பனே எச்சரிக்கையாக இருங்கள் அப்பனே

எவ்வாறு நன்மைகள் செய்ய வேண்டும்??? என்பதை எல்லாம் யோசித்து செய்து கொண்டே இருங்கள் அப்பனே உங்களால் முடிந்தவரை !!!!அப்பனே இவ்உலகத்திற்கு !!!எதை என்று அறிய அறிய!!!

ஒரு உயிரை கொல்லாதீர்கள்!!! கொல்லாதீர்கள்!!! அப்பனே

தெரிந்தும் தவறுகள் செய்யாதீர்கள்!!! அப்பனே

தெரியாமல் எதை என்று அறிய அறிய

இன்னும் ஒருவன் இதை பார்த்து கேள்விகள் கேட்பான் அப்பனே

இன்னும் எதை என்று அறிய அறிய திடீர் திடீரென்று மாண்டு விடுகின்றானே!!!! என்று

(மனிதர்களுக்கு ஏற்படும் திடீர் மரணங்கள்)

அப்பனே இவ்வாறு இயற்கையாக அவை மட்டும் இல்லை அப்பனே திடீரென்று ஆனாலும் அப்பனே மரணம் ஏற்படுவது அதுதான் யான் ஏற்கனவே  உரைத்து விட்டேன் அப்பனே.

(பிற ஜீவராசிகளை கொன்று தின்றால் மனிதர்களுக்கும் திடீர் திடீரென மரணம் ஏற்படும் ஏற்கனவே குருநாதர் கூறியிருந்த வாக்குகள் தான் இதை தற்பொழுது குருநாதர் மீண்டும் நினைவுபடுத்துகின்றார்)

ஆனாலும் அப்பனே தெரிந்து கூட பின் கொலை செய்ய கூடாதப்பா!!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதாவது பிற உயிர்களை கூட அப்பனே அதாவது பேசுகின்ற உந்தனுக்கு தெரியுதப்பா!!! ஆனால் பேசாத ஜீவராசிகள் யாரிடத்தில் சொல்லுமப்பா!!!

அப்பனே  இதை நிச்சயமாய் பயன்படுத்திக் கொள்பவர்கள் அப்பனே நன்று!!!!

அப்படி இல்லையென்றால் அப்பனே நிச்சயம் சொல்லி விடுகின்றேன் இங்கிருந்தே!!!!

(குருநாதர் திடீரென்று வாக்குகளில் சினத்துடன் ஆரம்பித்தார் சுவடி ஓதும் மைந்தன் குரலும் உச்சத்தில் உயர்ந்தது!! முக பாவனைகளும் மாறியது !!!கிட்டத்தட்ட உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு சாபம்)


ஈசன் இடத்திலிருந்தே சொல்கின்றேன் அப்பனே !!!

நிச்சயம் அப்பனே எவை என்றும் அறிய அறிய கை கால்களில் நோய் வரும் அப்பனே!!!!

தொண்டையிலும் நோய் வரும் அப்பனே!!

பின் மூளையிலும் நோய் வரும் அப்பனே என்பேன் அப்பனே

கண்களில் கூட நோய் வரும் என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே இன்னும் சில மனிதர்கள் அனைத்தும் செய்து விட்டு கடைசியில் பின் அனைத்தும் யான் விட்டுவிட்டேன்!!!! இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து விட்டோம் என்று வருபவர்களும் உண்டு என்பேன் அப்பனே!!!

அவர்களுக்குத்தான் தண்டனை!!!!

அப்பனே அனைத்தும் செய்துவிட்டு அப்பனே இறைவனிடத்தில் வந்தால்!!!

இறைவன் என்ன ஆசிகள் கொடுத்து விடுவானா ???? என்ன ??????

அப்பனே நிச்சயம் இல்லை!!!!

மனிதனின் குணங்கள் சரியில்லையப்பா!!!! அவ்வாறு சரியில்லாத குணங்களை பின் சூரியனே வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பல வழிகளிலும் கூட அப்பனே நோய்களை ஏற்படுத்தி விடுவான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!

ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

அதனால் அப்பனே நீங்கள் விதைத்ததை நீங்கள் தான் அப்பனே அறுவடை செய்ய வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே.

===================================


19-12-2023 அன்று கந்தப்பெருமான் அழகன் முருகப்பெருமான் உரைத்த வாக்கு. 


அன்பின் எல்லையாக விளங்கும் என் தாயையும், என் தந்தையையும் பணிந்து வாக்குகள் ஈகின்றேன் குமரனவனே. 

உலகத்தின் அழிவுகள் மிஞ்சி காணப்படும் வருங்காலங்களில். 

அதனைக்கூட அதாவது என் தந்தையே அழிவுகள் ஏற்பட… ஏன் அழிவுகள்???? 

ஏன் அழிவுகள்??????????

என் தந்தையே அனைத்து உயிர்களையும் படைத்திருக்கும் போது, அவ் உயிரினத்தை எல்லாம் கொன்று குவித்து….

ஆனாலும் (ஆதி ஈசன் ) என் தந்தைக்குக் கோபங்கள். ஆனாலும் அதை நிறுத்த அகத்தியனும் கூட பொறுப்பாய், பொறுப்பாய் அப்பா என்றெல்லாம் என் தந்தையிடம் கூட …

அதனால்தான் யான் வந்து உந்தனுக்கு இப்போது செப்பிக் கொள்ள..

அதனால்தான் சித்தர்கள் இன்னும் வந்து வந்து அதனால் சித்தனுக்கே பிடிக்கவில்லை மனிதன் வாழ்வது எப்படி என்பதைக் கூட. 

( அசைவ உணவு தொடர்பாக பின் வரும் இந்த வாக்கு மிக மிக முக்கிய வாக்கு - உலகின் மீது ஆதி ஈசனின் கோபம் ஏன் என்ற வாக்கு) 


ஆனால் இப்பொழுது கூட அழிவுகள், அழிவுகள் என்றெல்லாம் கலியுகத்தில் ஏன் எதற்காக என்று மனிதன் சிறிதாவது சிந்தித்ததுண்டா???????

இல்லை. மனிதன் தான் காரணம் என்று அப்பொழுது எங்கு போய் விட்டது புத்திகள்????????

ஆனால் தன் படைத்த அதாவது என் தந்தை படைத்ததை…….

(பரிதாபமான வாய் பேச முடியாத , ஏதும் அறியாத அப்பாவி ஜீவராசிகள் - எத்தனை ஆடுகள் , கோடிக்கணக்கான கோழிகள், நல்லதை மட்டுமே செய்யும் பசுக்கள், நாட்டு மாடுகள், கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள், நண்டுகள், இன்னும் எத்தனை எத்தனையோ அப்பாவி ஜீவராசிகள். ஆதி ஈசனின் அன்பு செல்லக் குழந்தைகள் ஆன ஜீவராசிகளைக் கொன்று குவித்து, உண்டு….) 


மனிதன் எவை என்றும் அறியாது இது ஈசனுடைய சொத்து என்றெல்லாம் தெரியாமல் கொன்று குவித்திருக்கின்றானே…..

ஆனால் அதுவும் இவையும் இப்படி உணர்ந்து உணர்ந்து நிச்சயம் மனிதனுக்கு கொடுத்தாய் என்றால் நிச்சயம் இப்படித் திரிந்து விடுவான் என்று எண்ணலாமே. ஆனால் எண்ணுவதில்லையே…..

ஒரு உயிரைக் கொல்லக்கூடாது என்பதெல்லாம் சித்தர்கள் எடுத்துரைத்து, எடுத்துரைத்து ஆனாலும் அவ் உயிர்கூட என் தந்தைக்குத்தான் சொந்தம் என்று தெரியவில்லையே. 

பரவாயில்லை என்று போய் விடுகின்றான். 

ஆனால்…பரவாயில்லை என்று பின் சொல்லிவிடுகின்றானே , ( 19, December 2023ல படித்த வாக்கு) இப்பொழுது ( பரவாயில்லை என்று ) சொல்லச் சொல் பார்ப்போம் அழிவதற்குப்பின் பரவாயில்லை என்று. 

அப்பனே புரிந்து கொள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வினைகள் உண்டு என்பதைக் கூட. அதையும் சமநிலைப் படுத்த வேண்டும். 

இப்பொழுது கூட என் தந்தை ( ஈசன் ) மிகுந்த கோபத்தில் தான் உள்ளான் அழித்து விடவேண்டும் என்று கூறி. 

அதனால்தான் இன்னும் கூட தரம் தாழ்த்திச் சென்று கொண்டே இருக்கின்றான் மனிதன்.

மனிதனுக்குக் கொடுத்தாலும் அதை அழிவுக்குத்தான் பயன்படுத்துகின்றான் என்பதைக்கூட. ஏன் தெரியவில்லை. 

ஆனால் ஓர் அழிவு வந்தால்தான் நிச்சயம் பின் தேடித்தேடி.. அழிவுகள்..கஷ்டங்கள்…வந்து கொண்டே இருக்கும் !!!!!!!.


இன்னும் திருத்தலங்கள் நிரம்பி வழியுமப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

அப்பொழுது புரியும் யார் எங்கிருந்து செயல் படுகின்றார்கள் என்பதைக் கூட. 

ஆனாலும் புத்திகள்..புத்திகள் இன்னும் இன்னும் மனிதனுக்குத் தெரியவில்லையே.

எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் எப்படியப்பா யாங்கள் திருத்துவது?

ஆனாலும் இன்னும் மிதிக்கத்தான் போகின்றார்கள் பின் சித்தர்கள் கூட. 

அதனால்தான் பின் சித்தர்கள் யார் என்பதைக்கூடத் தெரியவில்லை. 

அதனால் புரிந்து புரிந்து உண்மைகள் பல வகையும் கூட அறிந்தும் கூட இதனால் நிச்சயமாய் நீ இருக்கும் இடத்தையும் கூட ( அசைவ உணவு அதிகம் உள்ள இடம்) என் தந்தை அழிவுக்கு இவ்தேசத்தை தாவி ஆனாலும் அழிக்க வேண்டும் என்று. 

ஆனாலும் அகத்தியனும்,  (ஈசா, தந்தையே) பொறும், பொறும் என்னால் முடியும் , முடியும் என்றெல்லாம். 

எம்முடைய ஆசிகள். (கந்தன் வாக்கு முற்றே!!!) 


=========================================================================


அகத்தியர்_வாக்கு  - முட்டை சைவமா.! அசைவமா.?


மகான்களிடம் இஃகுதப்ப வினாவை வினவும்பொழுது யாம் மகான்கள் நிலையிலிருந்துதானப்பா கூற முடியும்.! பலமுறை இதுகுறித்து விளக்கி விட்டோம். இது தீண்டத்தகாத பொருள், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள். அஃகுதொடு மட்டுமல்லாமல் பாவத்தையும் சேர்க்கும். இதை விட்டுவிடுவது சிறப்பு. அதற்காக இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழும்போது அதை அனுசரித்துக் கொள்ள வேண்டியது அவனவன் கடமையாகும்.

சித்தர்கள் வழியில் வரவேண்டுமென்றால் கட்டாயம்

"ஜீவ காருண்யம்தான்" அடிப்படையாகும். இதற்காக விதண்டாவாதங்களில் இறங்கக் கூடாது. ஏனென்றால் ஒருவன் ஜீவ காருண்யமாக இருந்துவிட்டு வார்த்தைகளால் பிறரை காயப்படுத்திக் கொண்டிருந்தால் அதுவும் பலனில்லாமல் போய்விடும். எனவே யாராக இருந்தாலும் ஜீவகாருண்யம் அடிப்படையில் தேவை.


அசைவம் சாப்பிடுபவர்களில் பலர் ஜீவ காருண்யத்தோடு நடக்கிறார்கள். அவர்களுக்கு புண்ணிய பலன்கள் சேருமா.?


அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் தனித்தனியாக கணக்கீடு செய்துதான் இறைவன் பலனைத் தருவார். எனவே செய்கின்ற புண்ணியத்திற்கு தகுந்த பலன் உண்டு. செய்கின்ற பாவத்திற்கும் தகுந்த பலன் உண்டு. சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஒருவன் பெற்ற குழந்தைகளில் ஒன்று ஊமையாக இருந்தால், அதை பிறர் இடர் செய்தால் தாயும், தந்தையும் பொறுத்துக் கொள்வார்களா.? அஃகுதப்பத்தானே இறைவனின் படைப்பிலே மனிதனைப்போல் ஆற்றலோ, சிந்தனைகளோ இல்லாமல் படைக்கப்பட்ட எளிய உயிர்களை வாய் ருசிக்காகவும், பழக்கத்திற்காகவும், ஒரு மனிதன் சித்ரவதை செய்து கொன்று தின்றால் இறைவன் அருள் எப்படிக் கிட்டும்.? எனவே கூடுமானவரை எல்லா நல்ல குணங்களும் இருந்தாலும்கூட இஃகுதப்ப ஜீவகாருண்யத்தையும் சேர்த்து ஒரு மனிதன் கடைபிடித்தால் பரிபூரணமான இறைவன் அருள் கிடைக்கும். தாவரங்களை உண்பதே பாவம்தான், தெரியுமா..? இருந்தாலும் மனிதன் உயிர் வாழ்வதற்காக தவிர்க்க முடியாமல் உண்பதால், அந்த பாவத்தை இறைவன் அனுமதித்திருக்கிறார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். தாவரங்களின் மலர்களை, காய்களை, கனிகளை பறிக்கும்போதெல்லாம் மானசீகமாக அதனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, இறைவனிடமும் நன்றி சொல்லிவிட்டு,

"இந்த தாவரத்தின் வாழ்க்கையில் நாங்கள் எங்கள் சுயநலத்திற்காக குறுக்கிட்டு இவற்றை பயன்படுத்திக் கொள்கிறோம். இறைவா.!

எங்களை மன்னித்துவிடு,

விருக்ஷமே.!

என்னை மன்னித்துவிடு.!" என்று கூறிவிட்டு அதை பயன்படுத்துவதுதான் முறையாகும்.


 நன்றி சித்தர் அருட் குடில் .....


 ஓம் அகத்தீசாய நம


=========================================================================


அகத்தியர் வாக்கு:

சைவம் என்ற ஒன்று கிடையாது என்று தாங்களே கூறியிருக்கிறீர்கள்.! இதற்கு என்ன பொருள்.? 


இறை வணங்கி கூறுகிறோம் அப்பா சில விருந்துகளில் அசைவம் என்றால்தான் 

 (மனிதர்கள்) அசைவோம் என்கிறார்கள். இல்லையென்றால் அசையமாட்டேன் என்கிறார்கள்.

இஃகுதப்ப கூறுவது என்னவென்றால் ஜீவகாருண்யம் தான். உயிர்க்கொலை மாபாதக செயல். ஒரு சிசு தாயின் பாலை அருந்துகிறது.

அது அசைவமில்லையா.? என்பதற்காகத்தான் அவ்வாறு கூறினோம். என்றாலும்கூட தெரிந்தே ஒரு உயிரை சுயலாபத்திற்காக சித்ரவதை செய்து கொன்று உண்பது மகாபாவம்.

இன்னொன்று தெரியுமா.? உயிர்க்கொலை செய்வதைவிட மகாபாவம், சிலர் சைவம் என்று கூறிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் இல்லங்களில் பசு மாடுகளை வளர்ப்பார்கள். கன்றுக்கு பாலையே ஊட்ட விடமாட்டார்கள். எத்தனை பெரிய பாவம் தெரியுமா அது.? கன்றை விருப்பம்போல் பால் குடிக்க விடுவதுதான் மிகப்பெரிய புண்ணியம். அதை செய்யாமல், தொடர்ந்து நாங்கள் சைவம், சைவம் என்று கூறிக்கொண்டிருந்தால், அவர்களை சைவமாக இறை ஏற்றுக்கொள்வதில்லை.?


இறையை வணங்குவதோ, சிவபஞ்சாக்ஷரம் கூறுவதோ, நெற்றி நிறைய திருநீறு அணிவதோ, பிரதோஷம் தோறும் ஆலயம் சென்று வழிபாடு செய்வதோ, சிவபுராணம், தேவார, திருவாசகம் ஓதுவதோ மட்டுமல்ல சைவம்.!

சைவம் என்றால் எண்ணத்தில் சைவம் வேண்டும், வாக்கில் சைவம்  வேண்டும், நடத்தையில் சைவம் வேண்டும், பேச்சிலே சைவம் வேண்டும், ஒவ்வொரு செயலிலும் சைவம் வேண்டும். சகலமும் சிவம் என்ற அர்த்தம்தான் சைவம். சகலமும் சிவம் என்றால் அனைத்தும் இறை. அனைத்தும் இறை என்றால் அந்த இறைக்கு யாரேனும் ஊறு செய்வார்களா.? செய்ய துணிவு வருமா.? அப்படித்தான் சகல ஜீவராசிகளையும் இறையாகப் பார்த்து அனைவரையும் மதித்து வணங்கவேண்டும். அவன்தான் சைவ(ம்)ன் .

அப்படியே கீழே உள்ள செய்திகளையும் படித்துப் பாருங்கள். 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கல்பதரு தினம் - கேளுங்கள், நீங்கள் பெறுவீர்கள் - 01.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/01012024.html

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - தொகுப்பு 3 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023-3.html

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - தொகுப்பு 2 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023-2.html

 ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023.html

லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_23.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html


No comments:

Post a Comment