"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 14, 2021

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கோடகநல்லூர் ப்ரஹன்மாதவ பெருமாளுக்கு, இரண்டாவது அபிஷேக பூஜையை நம் நம் குருநாதர்  ஸ்ரீ அகத்திய பெருமான் அவர் எண்ணப்படியே நடத்தி எடுத்துக்கொண்டார். இவ்வுலகில் அதர்மம் வளர்ந்துபோய், காலத்தில் கலியின் விளையாட்டால், விஷம் ஏறிப்போய், மிக ஆபத்தான "கிரகநிலைக்குள்" பூமி அகப்பட்டுக்கொண்டு, காலசர்ப்ப தோஷமும், "தூமகேதுவின்" வரவுக்குள் மனிதம் மிகவே சிரமங்களை அனுபவிக்கும் என்றறிந்து, காலசர்ப்ப தோஷத்தை நிர்வீர்யமாக்க, பெருமாளின் அருள் தேடி, நம்மை ஒன்று சேர வைத்து, அவரை அபிஷேக பூசை செய்து குளிரவைத்தார். இதுதான் நடந்த உண்மை. ஒருமுறை கூட நிதானமாக படித்துப்பார்த்தால், எத்தனை பெரிய விஷயத்துக்கு, நம்மை எல்லாம் அகத்தியப்பெருமான் ஒன்று சேர்த்து, லோகஷேமத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டார் என்பது விளங்கும்.

பூசை முடிந்து, கோவிலை சுற்றி மட்டும் பெய்த மழையே, பெருமாள் நம் பிரார்த்தனையை, மனமகிழ்ந்து, அபிஷேக பூசையுடன் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு ஒரு நற்சான்று.

இந்த வருடத்தின் மற்றொரு நிகழ்ச்சியாக, அனைத்து அடியவர்களும் மனம் மகிழ்ந்து பங்கு கொள்ளும் "நம் குருநாதரின் மார்கழி-ஆயில்ய திருநட்சத்திரம்" வருகிற 23.12.2021 வியாழக்கிழமை அன்று வருகிறது. நம்மை பொறுத்தவரை அந்தநாள் மிக முக்கியமான தினம். ஆம்! அவரது இரண்டாவது முறை வருகிற நட்சத்திர நாள். 2022இல் மார்கழி-ஆயில்யம் வருவதில்லை. 2023இல் ஜனவரி 09ம் தியதி மறுபடியும் வரும். ஆனால் அதை கொண்டாட நாம் ஒரு வருடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அரிய வாய்ப்பை குருநாதர் நமக்கு கொடுத்ததை சரியான முறையில் அவர் பாதம் பணிந்து அன்றைய தினம் ஏதேனும் ஒரு அகத்தியப்பெருமானின் சன்னதியில், அபிஷேக பூசையுடன் சிறப்பாக அமைத்துக்கொள்ளுங்கள்.

யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற எண்ணத்தில், எப்போதும் போல், நம் தலத்தில் இன்று முதல் அகத்தியர் அவதார பெருவிழா அழைப்பிதழ்களை ஒவ்வொன்றாக பகிர உள்ளோம்.

இன்றைய பதிவிலும் அகத்தியம் தான்..அன்பு தான்..ஆனந்தம் தான். ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் அவதார பெருவிழா  என்று நமக்கு அழைப்பிதழ் கிடைத்தது. அழைப்பிதழ் பார்த்ததும் என்னே அகத்தியரின் அருள் என்று தான் உணர்ந்தோம். நாம் அளித்துள்ள அனைத்து அகத்தியர் சார்ந்த பதிவிலும் அகக்தியர் தனியாக இருப்பார், இல்லையென்றால் வேறு சிலரோடு  இருப்பார். ஆனால் கூடுவாஞ்சேரி அகத்தியரும், அரும்பாக்கம் அகத்தியரும் நமக்கு ஒரே அருள்நிலையில் இருப்பதாக உணர்கின்றோம். இருவரும் இருப்பது விநாயகர் கோயிலில். அதாவது கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள அகத்தியர் நமக்கு அருள் செய்து வருகின்றார். அதே போன்று இந்த அழைப்பிதழில் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் பூசை நடைபெற உள்ளது. என்ன ஒரு ஒற்றுமை... 

இந்த அழைப்பிதழ் கண்டதும் நமக்கு கூடுவாஞ்சேரி அகத்தியர் தான் நினைவுக்கு வருகின்றார். இப்போது தான் நமக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ளது. அதுவும் திருஅண்ணாமலை கிரிவலத்தில் நமக்கு இந்த அழைப்பிதழ் கிடைத்தது. வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சென்று வழிபட்டு வந்து மீண்டும் இங்கே பேசுவோம். 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா அழைப்பிதழை கீழே இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு அருள் பெறவும். இதில் நம் குருநாதரின் ஆசியும் உள்ளது. பதிவின் இறுதியில் காணலாம்.



மேலும் இதற்கு முன்னர் இங்கே நடைபெற்ற விழாக்களின் காட்சிகளை இங்கே பதிவிடுகின்றோம். பார்க்கும் போதே ஏக்கம் பிறக்கின்றது. தவமாய் தவமிருந்து குருவினைக் காண வேண்டி நிற்கின்றோம்.








நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!





இது போதுமா? என்றால் போதாது என்றே சொல்ல தோன்றுகின்றது அல்லவா? மீண்டும் குருவின் தரிசனம் இங்கே அனைவரும் பெறலாமா? ஆம்..8 ஆம் ஆண்டு ஸ்ரீ அகத்தியர் அவதார பெருவிழா காட்சிகளை அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.



























கும்பமுனி குருவே சரணம் சரணம் என்று வேண்டி விரைவில் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் தரிசனம் செய்ய வேண்டுகின்றோம். பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல், நாம் பல கோயில்களில் சேவை செய்து வருகின்றோம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அகத்தியர் அவதார பெருவிழா முதல் அழைப்பிதழ் நமக்கு பகிரப்பட்டு வருகின்றது என்றால் குருவின் அருளிற்கு எல்லையேது!





ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html


அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

  வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

No comments:

Post a Comment