"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, December 27, 2021

ஸ்ரீலஸ்ரீ செல்லப்ப சுவாமிகள் 121 ஆவது குரு பூஜை - 31.12.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது சித்தர்கள் பற்றியும், சித்தர்களின் குரு பூஜை பற்றியும் பேசி வருகின்றோம்.சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா  என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது. இன்றைய பதிவில் ஸ்ரீல ஸ்ரீ சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் தரிசனமும் குருபூஜை தகவலும் தர உள்ளோம்.


                               


முதலில் 121 ஆவது குரு பூஜை - 31.12.2021 அழைப்பிதழை இங்கே காண்போம். பதிவின் இறுதியில் வழக்கம் போல் மீண்டும் அழைப்பிதழை பகிர உள்ளோம்.


இராமநாதபுரம் மாவட்டம், நல்லான்குடி விலக்கு, எக்கக்குடி கிராமத்தில் உள்ளது சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகளின் ஜீவ சமாதி. இவரது 115 வது குருபூஜை விழா ஜனவரி 6 அன்று நடைபெற்றது. இவர், சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரும், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருநாதருமாவார். செல்லப்ப சுவாமிகளின்  ஜீவசமாதி திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் ஜனவரி 20ம் தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெற்றது. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் மன்னார்குடியில் தோன்றி, கட்டிக்குளம் குவளைவேலி, புதுக்குளம் கிராமங்களில் கோயில்கள் எழுப்பி சித்துகள் பல செய்து, பக்தர்களுக்கு அருள்புரிந்தவர். அவர் வழிவந்த தஞ்சாக்கூர் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள், தங்கள் குரு ராமலிங்க சுவாமிகள் பெயரில் பல இடங்களில் மடங்களை நிறுவினார்.


ராமலிங்க சுவாமிகள் மன்னார்குடியில் தமது தவ வலிமையால் பல அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார். தாம் விரும்பிய இடத்தில், திட்டமிட்டு குறித்த நாளில் ஜீவசமாதி அடைந்து அருள்பாலித்து வருகிறார். மன்னார்குடியில் ராஜ கோபால சுவாமி கோயிலுக்கு ஈசான்யத்தில் பாமணி நதிக்கரையில் அமைந்துள்ள ராமலிங்க சுவாமிகளின் திருக்கோயிலில் குரு பூஜை 2016 ஜனவரி 24 ஆம் தேதி நடைபெற்றது. மதுரையில்  இருந்து மானாமதுரை செல்லும் வழியில் திருப்பாச்சேத்தியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது கட்டிக்குளம் கிராமம். இங்கு மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வந்த குப்பமுத்து வேளாளர் கூத்தாயி அம்மாள் தம்பதியர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருள் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், 1858 ஜூலையில் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மாயாண்டி எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே அவருக்கு இறை ஞானம் கிடைக்கப்பெற்றது.

ஒருநாள், தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு மாயாண்டியைக் கூட்டிச் சென்றபோது, மகனை வெளிக்கூடத்தில் அமர்த்திவிட்டு, கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாருக்கு அபிஷேக, ஆராதனைகளை முடித்து விட்டு வெளியே வந்த அவர் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது கண்டு அதிர்ந்தார். பீதியில், ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து என்று கருவறையை நோக்கிக் குரல் கொடுத்தார். பின் பயத்துடனும் திரும்பிப் பார்த்தால் நாகத்தைக் காணவில்லை. தியானத்தில் இருந்து மீண்டிருந்த மாயாண்டியிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது. என்பதை உணர்ந்து கொண்டார் குப்பமுத்து, இதுபோன்ற சம்பவங்கள் தொடர, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே ஊரார் பார்க்கத் துவங்கினர். பள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிகத் தேடல் மறு பக்கம் என இருந்தார் மாயாண்டி. பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த உறவுப் பெண் மீனாட்சியை மணந்தார். இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு. காலம் செல்லச் செல்ல, மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு, இல்லறம் இனிக்கவில்லை தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு தீட்சை பெற வேண்டுமே! உபதேசிக்க ஒரு குரு வேண்டுமே!

அவரது ஊரில் சூட்டுக்கோல் ராமலிங்கசுவாமிகள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் என்பதால், ராமேஸ்வரயாத்திரை செல்பவர்களும், சாதுக்களும் தரிசனத்துக்கு வருவார்கள். அவர்களுக்கு அறுசுவை உணவு அளித்தும், அடியார்களுக்கு பணிவிடை செய்தும் பெரியோர்களிடம் ஆசி பெற்றார் மாயாண்டி. இவ்வேளையில்தான் ராமேஸ்வரயாத்திரை செய்தார் தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள். அவர், சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளையே குருவாகக் கொண்டு உபதேசம் பெற்று, சஞ்சரித்து வந்தவர். ராமநாதபுரம் திருச்சுழி என்று வெவ்வேறு இடங்களில் ஆரிய சித்துகளைச் செய்து சஞ்சரித்து வந்த செல்லப்ப சுவாமிகள் ஒருநாள், ராமநாதபுரம் கண்மாய் மடக் குழியில் இறங்கினார். வெகுநேரம் அவரைக் காணாமல் அன்பர்கள் தவித்தனர். ஆனால் சுவாமிகள் அப்போது ராமநாதபுரம் அரண்மனை வாசலில் இருந்து கொண்டு ராஜாவுக்கு அவரது நோய்க்கான பச்சிலை மருந்துக்ளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அன்பர்கள் இதைக் கண்டு அதிசயித்துப் போயினர். அன்று முதல் ராமநாதபுரம் ராஜா முத்துராமலிங்க சேதுபதி அவரைப் பெரிதும் போற்றி வந்தார். இத்தகைய சிறப்புகளுடன் திகழ்ந்த செல்லப்ப சுவாமிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மாயாண்டி சுவாமிகள், அவரையே குருவாகக் கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து உபதேசம் செய்து வைத்தார். துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தது. கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

திருத்தலங்கள் பல தரிசித்தார். ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார். மதுரை மீனாட்சி அம்மனும், திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர். இறுதியாக, அவர் வந்து சேர்ந்தது திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை எனப்படும் காகபுசுண்டர் மலைக்கு, அதைத் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கினார். அன்றிலிருந்து மேலும் புனிதம் பெற்றது அம்மலை. மாயாண்டி சுவாமிகளின் சித்து விளையாட்டுகளும் துவங்கின. கட்டிக்குளத்தில் இருந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள், கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும், தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பின்னர் இந்த சூட்டுக்கோல் அவரது சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும், அதன் பின் அவரது சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்த சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.







ஐயாவின் கோயிலில் நடைபெற்ற ஜீவசமாதியில் பௌர்ணமி சிறப்பு பூஜைகள் காட்சிகளை மேலே தந்துள்ளோம். 






ஆன்மிக அன்பர்களே 

ஸ்ரீல ஸ்ரீ சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமி ஜீவசமாதி #எக்ககுடி, திருஉத்தரகோசமங்கை அருகில் இராமநாதபுரம் மாவட்டம்

121 ஆம் ஆண்டு குருபூஜை விழா 
வருகின்ற 30.12.2021 அன்று நடைபெற உள்ளது.

காலை 7.15-9.00 மணிக்கு கணபதி ஹோமம்  
10.15 மணிக்கு லட்சார்ச்சனை  நடைபெறும்

அதனைத் தொடர்ந்து அன்று மாலை 5.30-7.00 மணி  திருவிளக்கு பூஜை நடைபெறும் 

31_12_2021 குருபூஜை அன்று காலை 9.15-10.15 மணிக்கு  ஐயாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெறும், 

அதனைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறும்.  அன்று  பகல் 12 மணி அளவில் சிறப்பு அன்னதானம் நடைபெறும். ஆகையால் பக்தர்கள் அனைவரும் தவறாது அய்யாவின் குரு பூஜையில் கலந்து கொண்டு அவரின் அருளைப் பெற வேண்டுகிறோம். ஒருமுறை வாருங்கள் மறுமுறை அவரே உங்களை அழைப்பார்


இப்படிக்கு,
நிர்வாகத்தினர்,
ஸ்ரீல ஸ்ரீ சூட்டுக்கோல் செல்லப்பா சுவாமி ஜீவசமாதி 
எக்ககுடி,
திருஉத்திரகோசமங்கை அருகில்,
இராமநாதபுரம் மாவட்டம்

வழிபாட்டுத் தலங்கள்: 

சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில், கட்டிக்குளம். கைபேசி: 73736 42020

சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் ஜீவ சமாதி, மன்னார்குடி, கைபேசி: 94435 03926

சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் ஜீவசமாதி, எக்கக்குடி, இராமநாதபுரம், கைபேசி: 94427 51868

மாயாண்டி சுவாமிகள், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி, திருப்பரங்குன்றம், கைபேசி: 94422 72220

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் இல்லம், கட்டிக்குளம், கைபேசி: 90473 12640

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் தவச்சாலை, கட்டிக்குளம் கைபேசி:81221 41659

சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் மடம், கோரிப்பாளையம், மதுரை: கைபேசி: 94436 19244

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மடம், ஆழ்வார்திருநகரி. கைபேசி: 94878 98346

சூட்டுக்கோல் வழிபாட்டுத் தலங்கள் ஒன்று இரண்டு என இல்லை. பல தலங்கள் உள்ளது. மேலே உள்ள தலங்களை பார்க்கும் போது ஒரு முறை அப்படியே ஆன்மிக யாத்திரையாக செல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. விருப்பத்தை குருவிடம் சமர்ப்பித்து விட்டோம்.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

No comments:

Post a Comment