"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 28, 2024

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

                                                                இறைவா..அனைத்தும் நீயே..

                                                                 சர்வம் சிவார்ப்பணம்... 


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

என்று நாம் முருகப் பெருமானை துதிக்க உள்ளோம். ஏற்கனவே சில பதிவுகளுக்கு முன்னர் இதே தலைப்பில் 22/7/2024 அன்று நந்தியம்பெருமான் முருகனை அழைத்த வாக்கினை பகிர்ந்தோம்..முருகப் பெருமானை எப்படி எல்லாம் நந்தியெம்பெருமான் அழைத்து, நமக்கு வழிகாட்டுகிறார் என்பது புரிய வேண்டும் என்பதற்காக மீண்டும் ஒருமுறை இன்றைய பதிவில் முருகப் பெருமான் அருள் பெற உள்ளோம்.

22/7/2024 அன்று நந்தியம்பெருமான் முருகனை அழைத்த வாக்கு!!!

முருகா !!! வா ! வா ! என்று அழைத்த ஸ்தலம் மாதம்பே முருகன் கோயில் கொழும்பு ரோடு புத்தளம். ஸ்ரீலங்கா. 

ஆதி குருவான மகேஸ்வரனை வணங்கி மனதில்!!!

தோன்றுவதெல்லாம் இடமே முருகா !! உந்தன் இடமே!!!

உந்தன் இடமே!!! ஈசனுக்கும் பின் பார்வதி தேவிக்கும் என் மனதில் நீயும் பின் குடிகொண்டு கணபதியின் பேரருளாலே சொல்கின்றேன் பின் நந்தியனே!!!!!!!!!

அடையன் இடையன்

இதைப்போல் உருவாகும் என்பது 

என்பது என்ன கேள்வி 

கேட்டாலும் முருகா !!

உனை பாட மனம் இல்லையோ!!!!!


மனமிருந்து தத்தளிக்கும் 

மனிதர்களுக்கு இடமில்லையோ ??

இடமில்லையோ ??


உலகத்தில் ஏற்றோர் பின் தாழ்வோர்.... தாழ்வு பணிந்து 

ஏற்றோர் இடமில்லையே!!!


முருகா !! உன் நிலை தன் நிலை அறிந்து மக்களை 

தன் பக்கத்தில் ஈர்த்து

முருகா !! உன்னை காண 

ஓடோடி வந்து! ஓடோடி வந்து !

மனிதனை மனிதனைக் காண 

ஓடோடி வா!!!


முருகா!! உன் திருநாமம் கொண்டு மனிதன் இயங்குகின்ற பொழுதுள்!!

கலியுக வரதனே வா !! வா!!!

முத்து குமரனே வா வா

அல்லல் அறுக்கும் கலியுக வரதனே வா!! வா !! 

மனிதனுக்கு அருள் ஈந்து கொடுக்க வா வா !










முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

என்று முருகப் பெருமானை போற்றி துதிப்போம்.

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

குருநாதர் அகத்திய பெருமான் லங்கா யாத்திரைக்கு செல்க என்று உத்தரவு தந்திருந்தார்... இதில் பஞ்ச ஈஸ்வர தலங்களான 

திரு கோனேஸ்வரம் திருநகுலேஸ்வரம்

திருக்கேதீஸ்வரம் 

திரு முன்னேஸ்வரம்

நாகபூசணி தீவு ஆலயம் 

மாதம்பே முருகன் கோயில் இங்கு எல்லாம் செல்ல வேண்டும் என்று ஜீவநாடியில் உத்தரவு தந்திருந்தார்.

இதில் முருகனின் கண்டி கதிர்காமம் ஏற்கனவே கதிர்காமத்திற்கு உத்தரவு இருந்தாலும் இந்த முறை வாக்குகளில் அடுத்த முறை செல்ல சொல்லி உத்தரவு தந்தார் 

மற்றும் பஞ்ச ஈஸ்வர தலத்தில் ஒன்றான தொண்டீஸ்வரம் அங்குதான் உள்ளது .

குருநாதர் இலங்கை யாத்திரையில் இன்னும் பல புனிதமான இடங்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்ல வைத்து அங்கும் வாக்குகள் நல்கினார். 

இலங்கை வாக்குகளில் அனைத்திலும் இந்த உலகத்தின் மற்றும் இலங்கை தேசத்திற்கு வரும் ஆபத்து குறித்து குருநாதர் அனைத்து வாக்குகளிலும் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை வாக்குகளில் கூறியிருந்தார். 

இந்த உலகத்திற்கு பெரிய பெரிய துன்பங்கள் வரும் அதிலிருந்து காப்பாற்ற முருகனால் மட்டுமே முடியும் என்று வாக்குகளை குருநாதர் கூறியிருந்தார்

குருநாதர் நல்லூர் கந்தசாமி ஆலயத்திலும்

சிவவாக்கியர் திருக்கேதீஸ்வரத்திலும்

முருகன் வந்து அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் போல குறிப்பாகவும் வாக்குகள் தந்திருந்தார்கள்.

இதில் முத்தாய்ப்பாக மாதம்பே முருகன் கோயில்..... அதிக பழமையான காலங்களும் வரலாறும் இல்லை இந்த ஆலயம் எழுப்பி 15 வருடங்கள் ஆகின்றன. 

வள்ளி தெய்வானையோடு இந்த ஆலயத்தில் முருகன் வீற்றிருக்கின்றார். 

இந்த ஆலயத்திற்கு யாத்திரையில் கடைசியாக செல்ல முடிந்தது. 

அதற்கு முன்பாக முன்னேஸ்வரம் ஆலயத்தில் வழிபாடு செய்து விட்டு வெளியே வரும் பொழுது ராஜகோபுரத்திற்கு எதிரே அடியவர்கள் வாகனத்தை நோக்கி ஒரு செவலை நிறத்தில் ஒரு கால் ஊனமுற்ற பசு வாகனத்தினருகே வந்தது. 

முன்னேஸ்வரம் ஆலயத்தில் விஷு சித்திரை கனி போல பல்வேறு பழங்களை கோடையில் வைத்து இறைவனை பூஜிக்கும் வழிபாட்டு முறை அங்கு உள்ளது அதனால் அப்படி பூஜை செய்து திருப்பிக் கொண்டு வந்த பழங்கள் அப்படியே இருந்தது.

அந்த பழங்களை அந்தப் பசு அடியவர்களிடமிருந்து வாங்கி உண்டது. 

அடியவர்களும் அந்த பசுவினை வணங்கி விட்டு !!!

மாதம்பே முருகன் ஆலயத்திற்கு சென்று முருகனை போற்றி!!! தொழுது வணங்கிய பொழுது முருகப்பெருமான் தான் அணிந்திருந்த மாலையை பூக்களை சரசரவென கீழே சொரிந்து அருள் செய்தார். 

அதன் பிறகு ஆலயத்திற்கு உள்ளே ஓரிடத்தில் அமர்ந்து அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் அவர்கள் நாடி சுவடியை பிரித்த பொழுது... நந்தியெம் பெருமான் ஜீவனாடியில் வந்து முருகனை வா வா !!! என்று பாடலாக பாடினார். 

திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் நாடி வாசிக்கும் பொழுது தொடர்ச்சியாக சில புண்ணிய சேத்திரங்களில் அதிவேகமாக வாக்குகள் வரும் !!

மூச்சு கூட விடாமல் திரு ஜானகிராமன் அய்யா வாக்குகள் படிப்பார். சில ஆலயங்களில் ஒரு நொடிக்கு மூன்று வார்த்தைகள் வேகமாக அதி வேகமாக ஜீவனாடியில்  அக்ஷ்ரங்கள் பொன்னிற எழுத்துக்கள் வரும்!!! அவ்வளவு வேகத்தையும் ஜானகிராமன் ஐயா அவ்வளவு வேகத்தில் அதனை ஓதுவார். 

நந்தி எம்பெருமான் ஜீவ நாடியில் வந்து பாடலாக பாடுவதை அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் அய்யாவும் அவருடைய குரலும் உடல் மொழியும் மாறி பாடலாகவே பாடினார் அற்புதமாக இருந்தது அந்த கணங்களும் அனுபவமும். 

இந்த உலகத்தை காப்பாற்ற முருகா வரவேண்டும் நீ வந்து காப்பாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் வாக்குகளாக இலங்கை யாத்திரை வாக்குகள் இருந்தது. இதை அடியவர்கள் தொடர்ந்து கவனித்து படித்து வருபவர்களுக்கு புரிந்திருக்கும். 

சமீபத்தில் கூட பெங்களூரு சத்சங்கத்தில் பக்தர்கள் அனைவரும் ஆறுபடை வீடுகளுக்கும் தோரணமலை தோரணமலை செல்வதற்கு முன் குற்றாலத்தில் நீராடி சென்று முருகனை வழிபட வேண்டும் என்று வாக்குகள் தந்திருக்கின்றார். 

(பெங்களூர் சத்சங்க வாக்குகளும் விரைவில் வெளிவரும்)

முருக வழிபாடு அனுதினமும் கந்தர் அனுபூதியும் கந்த சஷ்டி கவசமும் ஓதி வர வேண்டும் என்றும் உத்தரவு தந்திருக்கின்றார் குருநாதர். 

நந்தியெம் பெருமான் வா வா என்று பாடலாக பாடி முருகனை அழைத்த இந்த வாக்கினை அனைவரும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து அவரவர் பூஜை அறையில் வைத்துக்கொண்டு முருக வழிபாட்டினை மேற்கொள்ளும் பொழுது அனுதினமும் பாடலாக பாடி பிரார்த்தனை செய்யலாம். 

அகத்தியர் பக்தர்கள் இசைஞானம் உள்ளவர்கள் இந்த பாடல் வாக்கினை இசை அமைத்து சமூக வலைத்தளங்களிலும் அடியவர்களுக்கும் பகிரலாம். நந்தியம்பெருமானின் முருகா  வா வா என அழைத்த பாடல் உலகமெங்கும் பரவட்டும். அனைத்து ஆலயங்களிலும் கூட்டுப் பிரார்த்தனைகளிலும்  ஒலிக்கட்டும்.

திருப்புகழ் முற்றோதல் நிகழ்வின் போதும் படித்து பாடி வணங்கலாம்

மாதம்பே முருகன் ஆலயத்தில் நந்தியெம்பெருமான் வாக்கு தந்த பிறகு குருநாதர் அகத்தியர் பெருமானும் வந்து அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் கந்தனும் வந்து விட்டான்... ஆசிகள் ஆசிகள் இன்னும் யான் வழி நடத்துவேன் என்று வாக்குகள் நல்கினார். 

அதற்கு முன்பு குருபூர்ணிமா அன்று நாக பூசணி ஆலயத்தில் குருநாதரிடம் குரு பூர்ணிமா தின வணக்கங்களையும் நமஸ்காரங்களையும் நன்றிகளையும் தெரிவித்த பொழுது 

அப்பனே எதை என்று கூற யான் சொல்லியதை கேட்டாலே!!!!! யான் சொல்லியவற்றை நல்முறையாக கடைப்பிடித்து வந்தாலே....அப்பனே அதுவே எந்தனுக்கு நீங்கள் காட்டும் நன்றி அப்பா..... வேறொன்றும் எங்களுக்கு தேவையில்லை அப்பனே 

மனிதர்கள் கஷ்டங்கள் இல்லாமல் வாழ யாங்கள் வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றோம் அதை கடைபிடித்தாலே போதுமானது அப்பா... என்று ஆசீர்வாதம் செய்தார். 

புதுப்புது வியாதிகள் நுண்ணுயிர்கள் தாக்குதல் கதிர் வீச்சு தாக்குதல் பூமி சுற்றும் வேகம் பூகம்பங்கள் நிலச்சரிவு மழை வெள்ளம் என தற்போது இந்த உலகத்தை வாட்டி எடுத்து வருகின்றது. 

குருநாதர் அகத்தியப் பெருமான் கூறியபடி ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்து தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்துக்கொண்டு குருநாதர் வாக்குகளில் கூறும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து ... இந்த உலகத்தில் மாற்றங்கள் ஏற்பட அனைவரும் சேர்ந்து குருநாதர் அகத்தியர் பெருமான் சொல் பேச்சு நடப்போம். 

முருகன் வரட்டும் இந்த உலகத்தை காக்கட்டும்!!!!

இலங்கை யாத்திரை குருநாதர் திருவருளால் இனிதே நடந்தேறியது!!!! சுபம் !!!!

சமீபத்தில் பெங்களூரில் நடந்த சத்சங்கத்தில் அப்பனே ஆவணி மாதம் முழுவதும் என் பக்தர்கள் அனைவரும் விநாயகர் அகவலை ஓதி வர வேண்டும் என்பேன் அப்பனே... கணபதியின் அருளும் கிட்டும் என்பேன் அப்பனே... என்று வாக்குரைத்து இருக்கின்றார்.. முழு வாக்குகள் விரைவில் வரும் பக்தர்கள் அனைவரும் குருநாதருடைய உத்தரவை சிரமேற்று விநாயகர் அகவலை படித்து... கணபதியில் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

 திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/10/2019.html

 சஷ்(ட்)டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/10/1.html

 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... குரு பெயர்ச்சி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_24.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 13- தேனி கணேச கந்த பெருமாள் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/13.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html


முன்னவனே யானை முகத்தவனே - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_16.html

மூத்தோனை வணங்கு - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2021/09/blog-post_9.html

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_59.html

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி, விநாயகர் சதுர்த்தி - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் பாதம் போற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_22.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_35.html

 விநாயகர் சதுர்த்தி தின விழா ...தொடர்ச்சி (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1_30.html

 TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/tut_29.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html




No comments:

Post a Comment