"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, January 19, 2020

குறிஞ்சி ஆண்டவரே போற்றி! போற்றி!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். பழம் நீ என்று அழைக்கப்படும் பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை என பிரசித்தி அனைத்து கோயில்களிலும் முருகனின் சாம்ராஜ்யம் தான். இது மட்டுமின்றி வள்ளிமலை, ஓதிமலை, தோரணமலை, செங்கல்பட்டு அருகே செம்மலை, பெருங்களத்தூரில் உள்ள பச்சை மலை என எடுத்துக் கொண்டாலும் முருகனின் அருள் முன்னின்று கிடைக்கின்றது. இதில் முருகனின் திருநாமம் பல பெயர்களில் இருந்தாலும் குறிஞ்சி ஆண்டவர் என்று போற்றப் படுவது கொடைக்கானலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் குறிஞ்சி ஆண்டவர் தன. இதோ குறைகளை நீக்கும் குறிஞ்சி ஆண்டவரின் நிறைவான தரிசனம் நாம் கண்டோம். அந்த அனுபவத்தின் சில துளிகளை இங்கே பகிர விரும்புகின்றோம்.




மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குறிஞ்சி ஆண்டவர் கோயில். பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது. இது தமிழரின் மலை நிலத்திற்கும், குறிஞ்சி செடிகளுக்கும் இடையேயான பிணைப்பை குறிக்கும் சொல்.



12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் இந்த அரிய வகை குறிஞ்சி மலர்கள் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீல வண்ணத்தில் பூத்துக் குலுங்கும் அழகை ரசித்த ஆஸ்திரேலிய பெண்மணி ஆர்.எல்.ஹாரிசன் என்பவர், இப்பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவரை திருமணம் செய்தார். தனது பெயரை லீலாவதி என மாற்றிக் கொண்டார். கொடைக்கானலில் தங்கிய அவர், அங்கிருந்தே முருகன், தண்டாயுதபாணியாய் வீற்றிருக்கும் பழநி மலையை தினமும் பார்த்து பரவசமடைந்துள்ளார்.

மழைக்காலங்களில் மேகக் கூட்டங்கள் பழநி மலை மற்றும் கோயிலை மறைத்ததால், கொடைக்கானலில் ஒரு பகுதியிலேயே கடந்த 1936ல் ஒரு முருகன் கோயிலைக் கட்டி வழிபட்டுள்ளார். பின்னர் ராமநாதனின் வளர்ப்புப் பெண்ணான பத்மினி, அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோர் இந்தக் கோயிலை பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளனர். இதன் பின்னர், இக்கோயில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தற்போதும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலின் இடதுபுறத்தில் இருந்து பார்த்தால் பழநி மலைக்கோயிலை காணலாம். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், குறிஞ்சி ஆண்டவரான முருகனை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


மலர் வழிபாடு

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மே மாதத்தில் மலர் வழிபாடு நடைபெறும். இதனைக் காண நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவர் கோயில் நடை முழுவதும் அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் குறிஞ்சி முருகனுக்கும் இந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

குறிஞ்சி செடி

குறிஞ்சி ஆண்டவர் கோயில் நடையில் குறிஞ்சி செடிகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இச்செடிகள் பூக்கும். கடந்த 2006ல் குறிஞ்சிப் பூக்கள் நீல நிறத்தில் கொடைக்கானலில் பூத்து குலுங்கின. பச்சைப் புடவையை மாற்றி, நீலக்கலரில் புடவை கட்டி பவனி வருகிறாள் கொடைக்கானல் மலை இளவரசி என இந்த அழகை இப்பகுதி மக்கள் சிலாகிக்கின்றனர்.
12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிஞ்சி மலர் பூக்கும் காலங்களில், இக்கோயிலில் உள்ள முருகனுக்கு பெரும்பாலும் குறிஞ்சிப் பூக்களைக் கொண்டே அலங்காரங்கள் செய்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.



இத்தகு அழகு கொண்ட கொடைக்கானலில் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக நம் முருகப்பெருமான் குறிஞ்சி ஆண்டவர் என்ற பெயரில் இங்கே அழைக்கப்படுகின்றார்.இக்கோவிலை ஐரோப்பாவை சேர்ந்த ஒரு கிறிஸ்துவ பெண்மணி கட்டினார். கொடைக்கானலுக்கு வந்த இவர் இந்து மதத்திற்கு மாறி ராமநாதன் என்ற தமிழரை திருமணம் செய்தார். தனது பெயரை லீலாவதி என்று மாற்றிக்கொண்டார்.





இவர் வசித்த பகுதியில் இருந்து பார்க்கும் போது பழனி முருகன் கோவில் தெரியும். அங்கிருந்தபடியே பழனி முருகனை தரிசித்து வந்தார்.மழை காலங்களில் மேகங்கள் மறைப்பதால் பழனி முருகனை தரிசிக்க முடியாமல் போனது. இதனால் அவர் 1936–ம் ஆண்டு கொடைக்கானலில் இந்த முருகன்கோவில் கட்டி வழிபாடு செய்தார்.



அலைபேசி சரியாக இயங்காத காரணத்தினால் அதிக காட்சி படங்கள் எடுக்க இயலவில்லை. சிறிதளவே எடுத்தோம்.

இந்தக் கோயில் தற்போது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்டுள்ளது.


எந்த கோயிலுக்கு சென்றாலும் மெதுவாக தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் அன்று இருந்த மன நிலை நம்மை வேறுமாதிரி ஆக்கியது. குறிஞ்சி ஆண்டவர் தரிசனம் செய்ய பலவிதமான நிறத்தில் பூக்கள் கோயிலுக்கு வெளியே விற்கிறார்கள். அவற்றில் ஒரு சிறிய கூடை வாங்கி தரிசனம் செய்து அமர்ந்தோம்.


சும்மா விடுவாரா நம் முருகப்பெருமான்? அங்கேயே சிறிது நேரத்தில் அபிஷேகம் காண நமக்கு ஆணை இட்டார். பிறகென்ன ஆனந்த கூத்தாடி அபிஷேகம் கண்டோம்.



சிறிய கோயிலாக இருந்தாலும் பராமரிப்பு சிறப்பாக உள்ளது.








அபிஷேகம் கண்டு அங்கிருந்து மீண்டும் அடுத முருகப்பெருமான் கோயிலுக்கு சென்றோம். யாரவது அடுத்த முருகப்பெருமான் கோயில் என்னவாக இருக்கும் என்று கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்.

குறிஞ்சி மலை ஆண்டவருக்கு அரோகரா...

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

வள்ளிமலை அற்புதங்கள் - (7) - https://tut-temples.blogspot.com/2019/12/7_26.html

வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html

வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

  சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

 முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

No comments:

Post a Comment