"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 29, 2020

தலை வணங்கி வருக! கேட்டது கிடைக்கும்!! - ஸ்ரீ ல ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் தரிசிப்போம்


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

நம் தலத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றோம். பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள், திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமிகள், சுப்புலாபுரம் சற்குரு சுவாமிகள், திருவொற்றியூர் வீரராக சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், மதுரை சோமப்பா சுவாமிகள், பாண்டிச்சேரி தேங்காய் சுவாமிகள், ராம பரதேசி சுவாமிகள், வண்ணார பரதேசி சுவாமிகள் என கண்டு வருகின்றோம். இது சிறு துளியே. பெரு வெள்ளம் போன்றவர்கள் சித்தர்கள். 

சித்தர்களின் தரிசனம் கிடைக்காதா என்று யாரும் ஏக்கம் கொள்ள வேண்டாம். இல்லறமாகிய நல்லறத்தை நீங்கள் சிறப்பாக நடத்தி வந்து, தங்களின் விருப்பத்தை தங்களின் அருகில் உள்ள உயிர்நிலை கோயிலில்களில் அல்லது தினசரி வழிபாட்டில் வைத்தால் போதும். அனைத்தும் குருமார்களின் ஆசியோடு சிறப்பாக நடைபெற துவங்கும். சித்தர் மார்க்கம் பார்க்க எளிமையாக தோன்றும்.வெகு எளிதில் யாருக்கும் எட்டாது . புலப்படாது. சித்தன் அருள் பெறுவதும் எளிதன்று. யாரும் பயப்பட வேண்டாம். உங்களை பயமுறுத்துவதும் நம் நோக்கம் அல்ல. சித்தர்கள் விரும்புவது அமைதியைத் தான்.

சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது. 

இதனால் தான் நாம் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். தமிழ்நாடே ஒரு புண்ணிய பூமி தான். இங்கே தான் நம் அம்மையப்பர் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தி காட்டி உள்ளார். இங்கே தான் மிக மிக அதிக அளவில் மகான்கள் தரிசனம் தருகின்றார்கள். 18 சித்தர்கள் நம்மை இங்கே தான்.. இங்கு மட்டும் தான் உணர்த்தி வருகின்றார்கள். சைவம் என்ற பண்பாடு உருவானதும் இங்கே தான். தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் நாம் பல வித கோயில்கள், மகான்கள் தரிசனம் பெற முடிகின்றது. சென்னையை எடுத்து கொண்டால் ஒரு நாள் போதாது.

சென்னை ஒரு ஆன்மிக பூமி. பற்பல அற்புதங்கள் நிகழ்ந்து வரும் அருள் நிறைந்த ஊர்.திருஒற்றியூர் என்றாலே வடிவுடையம்மன் ஆலயமும்,பட்டினத்தாரும்,வள்ளலாரும் நினைவிற்கு வருவார்கள்.இந்த புனித தலத்தில் நம் பாதம் பட இறை அருள் வேண்டும். ஒட்டுமொத்த ஆன்மிக சங்கம் இங்கே கிடைக்கின்றது.ஒன்றா..இரண்டா ? என அடுக்கும் அளவிற்கு சித்தர்களின் அருள்மழையில் நனைய முடிகின்றது.

வடிவுடையம்மன் கோவில் தரிசனம் பெற நமக்கு ஒரு நாள் தேவை. அந்த அளவிற்கு நாம் தரிசனம் செய்ய வேண்டும்.இங்கே 2 ன் சிறப்பு உள்ளது. இறைவன்,இறைவி,தல மரம்,தீர்த்தம் என இரண்டு இரண்டாய் உண்டு. எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். இங்குள்ள ஈசன் மாணிக்க தியாகர் என்று அழைக்கப்படுகின்றார். 27 நட்சத்திர லிங்கங்கள் இங்கே காணலாம். திரிபுர சுந்தரியான அம்பாளைப் போற்றி ஸ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்ற போற்றிப்பாடல்களை இயற்றிய பிறகு வடிவுடை அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி, திருவொற்றியூர் டோல் கேட் ரோட்டில் உள்ள பரஞ்சோதி மகான் தர்கா,சங்கர மடத்துறவி மகா தேவேந்திரர் அதிஷ்டானம்,அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குபேரனால் வழிபடப்பட்ட கோவில்,தக்ஷிணாமூர்த்தி கோவில்,எண்ணூரில் பன்னண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு முத்தாரம்மன், சுயம்பு சித்தர்,பாடகச்சேரி பைரவ சுவாமிகள் அப்புடு சுவாமிகள்,ரோமச மகரிஷி சுயம்பு உருவம்,காக புஜண்டர் ஜீவசமாதி,பட்டினத்தார் சுவாமிகள் ஜீவசமாதி,வீரராகவ சித்தர் ஜீவசமாதி, குணங்குடி மஸ்தான் தர்கா என அருள் நிறைந்த ஊரே திருஒற்றியூர். காண கிடைக்க வேண்டுகின்றேன் திருஒற்றியூர் தரிசனம் !!!

அதே போல் பாண்டிச்சேரி என்று எடுத்துக்கொண்டால் சுமார் 50க்கும் மேற்பட்ட அருளாளர்களின் ஜீவா ஆலயங்கள் காண முடிகின்றது. கும்பகோணம், தஞ்சாவூர் என்று பார்த்தால் பாடல் பெற்ற தலங்கள் தரிசனம் பெறலாம். மதுரை என்று பார்த்தால் மீனாட்சி அம்மன் தரிசனம் மட்டும் என்று நினையாது, இரண்டு முருகனின் படை வீடுகள், ராமதேவர் கோயில், சோமப்பா கோயில் என்று பட்டியல் நீளும். இதில் நெல்லை பக்கம் சென்றாலே நம் குருநாதரின் புனிதம் காணும் அளவில் அள்ள, அள்ள மனம் நிறையும் தரிசனம் கிடைக்கின்றது.

இந்த வரிசையில் திருச்சியும் கணக்கில் கொள்ளலாம். பாடல் பெற்ற தளங்களும், சித்தர் கோயில்களும் நிறைந்து காணப்படுகின்றன. இன்று நாம் திருச்சியில் உள்ள ஒரு சித்தர் ஜீவாலயம் கண்டு அருள் பெற இருக்கின்றோம்.



2018 ஆம் ஆண்டில்  நாம் திருச்சி செல்ல நேரிட்டது. அப்போது இரண்டு நாள் பயணமாக திட்டம் வைத்து சென்றோம். சனிக்கிழமை திருப்பட்டூர், திருநெடுங்களம், எறும்பீஸ்வரர், தாயுமானவர்,உச்சிப்பிள்ளையார்,உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் என சென்று வந்தோம். அடுத்த நாள் காலை நம் குழுவின் உறவும், அகத்தியர் வழிபாட்டை நமக்கு உணர்த்திய திரு.செல்லப்பா அண்ணனை தொடர்பு கொண்டு நம் திருச்சி பயணத்தை பற்றி சொன்னது தான் தாமதம், அவர் உடனே வீட்டிற்கு வரும் படி அன்பு கட்டளை இட்டார். பின்பு அவர் வீட்டிற்கு சென்று காலை உணவு முடித்து அன்றைய தினம் சித்தர்கள் மற்றும் ஜீவன் முக்தர்கள் யாத்திரையாக மாற்றிவிட்டார். அனைத்தும் நாம் அருள் பெற வேண்டிய புண்ணிய ஷேத்ரங்கள். அவை ஸ்ரீ கட்டக்கழி சுவாமிகள் ஜீவசமாதி,ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் மடாலயம்,ஸ்ரீ ல ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் மடாலயம், பொன்மலைப் பரதேசி மடாலயம் என நீண்டது. 

நாம் தரிசித்த கோயில்கள் அனைத்தும் நாம் ஏற்கனவே காண வேண்டும் என்று குறித்து வைத்து இருந்தோம். ஆனால் அன்று எதிர்பாராதவிதமாக நமக்கு அருள் நிறைந்த ஆனந்த தரிசனமாக அமைந்து விட்டது. மற்ற பொதுவான கோயில்களுக்கு என்று வேண்டுமானாலும் நாம் செல்லலாம். இவை போன்ற சித்தர் கோயில்களுக்கு நாம் ஏதேனும் புண்ணியம் செய்தாலோ அல்லது குருவருள் இருந்தாலோ தான் செல்ல முடியும். இதோ இன்றைய பதிவில் தலை வணங்கி வருக! கேட்டது கிடைக்கும்!! என்று நம்மை அழைக்கின்றார் ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள்.

திருச்சி வரகனேரியில் உள்ளது ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் மடாலயம். எந்த ஒரு ஆரவாரமும் இன்றி அமைதியின் ஊற்றாக உள்ளது. தற்போது சித்தர்கள் கோயிலிலும் நன்கு கூட்டம் உள்ளது. ஆனால் கூட்டத்தை தவிர்த்து இது போன்ற அமைதி ஊற்றெடுக்கும் ஆலயம் சென்று ஆன்ம பலம் பெறுங்கள்.


தலை வணங்கி வருக! கேட்டது கிடைக்கும்!! என வரவேற்கும் கோயிலின் உள்ளே சென்றோம். சிறிய அளவில் தான் கோயில் இருந்தது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா என்று கேட்பது போன்று சுவாமிகளின் அருள்நிலை நன்கு இங்கே உணர முடிந்தது.







இங்கே ஐயாவின் உயிர்ப்பின் மேலே லிங்க பிரதிஷ்டை. ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமானாக இங்கே இருக்கின்றார்.






இங்கே உணர்வின் நெகிழ்ச்சி அன்பாக வெளிப்படுகின்றது. நாம் சென்ற நேரம் யாரிடமும் சுவாமிகள் பற்றி கேட்க முடியவில்லை. அடுத்த முறை சந்திப்பில் இன்னும் விபரங்கள் தர விரும்புகின்றோம்.சித்தர்கள்,மகான்கள் தமது பெயர்,புகழ் சொல்வதை விரும்பமாட்டார்கள்.இவை அனைத்தும் நமக்காக தான்.நாம் அழைக்கின்ற நேரத்தில் அவர்கள் வரமாட்டார்கள். அவர்கள் அழைக்கும் நேரத்தில் தான் நாம் அங்கே செல்ல முடியும். அது போன்ற ஒரு சக்தி களமாக அருள்மிகு மாணிக்கம் சுவாமிகள் மடாலயம்  விளங்குகின்றது.

இங்கே சிவனாரின் மேலே யார் என்று கவனித்தீர்களா? அடடா. நம் குழுமியானந்த சுவாமிகள் என்று நீங்கள் சொல்வது நம் காதில் விழுகின்றது. அடுத்து வரும் பதிவுகளில் மீண்டும் சிந்திப்போம்.


- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.



மீள்பதிவாக:-

ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/98-10022020.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html

 சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

No comments:

Post a Comment