"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, January 31, 2020

ஸ்ரீலஸ்ரீ அப்பா பைத்திய சாமி திருவடி சரணம் - 20 ஆம் ஆண்டு குரு பூசை அழைப்பிதழ் (01.02.2020)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

நம் தலத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றோம். பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள், திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமிகள், சுப்புலாபுரம் சற்குரு சுவாமிகள், திருவொற்றியூர் வீரராக சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், மதுரை சோமப்பா சுவாமிகள், பாண்டிச்சேரி தேங்காய் சுவாமிகள், ராம பரதேசி சுவாமிகள், வண்ணார பரதேசி சுவாமிகள் என கண்டு வருகின்றோம். இது சிறு துளியே. பெரு வெள்ளம் போன்றவர்கள் சித்தர்கள். 

சித்தர்களின் தரிசனம் கிடைக்காதா என்று யாரும் ஏக்கம் கொள்ள வேண்டாம். இல்லறமாகிய நல்லறத்தை நீங்கள் சிறப்பாக நடத்தி வந்து, தங்களின் விருப்பத்தை தங்களின் அருகில் உள்ள உயிர்நிலை கோயிலில்களில் அல்லது தினசரி வழிபாட்டில் வைத்தால் போதும். அனைத்தும் குருமார்களின் ஆசியோடு சிறப்பாக நடைபெற துவங்கும். சித்தர் மார்க்கம் பார்க்க எளிமையாக தோன்றும்.வெகு எளிதில் யாருக்கும் எட்டாது . புலப்படாது. சித்தன் அருள் பெறுவதும் எளிதன்று. யாரும் பயப்பட வேண்டாம். உங்களை பயமுறுத்துவதும் நம் நோக்கம் அல்ல. சித்தர்கள் விரும்புவது அமைதியைத் தான்.

சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது. 


இன்றும் நாம் ஒரு சித்தரின் மகத்துவம் அறிய இருக்கின்றோம்.





சித்தர்கள் வாழ்ந்த பூமியில், புதுவையில் சில காலம் வாழ்ந்தவர் தான் சற்குரு ஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள்.அவருடைய குருவான மகான் ஸ்ரீ அழுக்கு சாமியார் ஒருமகானின் அவதாரம் என்பது இறைவனின் வழிகாட்டுதலுக்கும் தீர்மானத்துக்கும் உட்பட்டே அரங்கேறுகிறது

 அப்படி இறைவனால் தீர்மானிக்கப்பட்டு பூமியில் தோன்றிய போற்றத்தக்க ஓர் அவதாரம்தான் தவத்திரு.அப்பா பைத்தியம் சுவாமிகள்.

 சற்குரு ஸ்ரீ அப்பா பைத்திய சுவாமிகளின் இயற்பெயர் முத்து. ஜமீன் பரம்பரையில் பிறந்தவர். செல்வச்செழிப்பில் வளர்ந்தவர். 1859-ம் வருடம் சித்திரைத் திங்கள் 28-ம் நாள் புனர்பூச நட்சத்திரத்தில் கரூவூர் ஜமீன் குடும்பத்து வாரிசாக அவதரித்தார்.

 சுவாமிகளுக்கு ஐந்து மாதமிருக்கையில்-பாட்டனார், தன் பேரன் இவ்வுலகை பரிபாலனம் செய்ய வந்துள்ளான் என்று ஜாதகம் கணித்துக் கூறினார். எட்டு மாத குழந்தையான சுவாமிகளை கண்டுணர்ந்த -பசிக்கு ஒதுங்கிய பரதேசி ஒருவர் இது தெய்வக்குழந்தைஎன்று அருள்வாக்கு சொல்லி மறைந்தார்.

 சுவாமிகளின் எட்டாவது மாதத்தில் தன் தாயையும்,பதினாறாம் வயதில் தந்தையையும் இழந்தார்.

 தான் என்னதான் சித்தப்பா சித்தி யின் அரவணைப்பில் வளர்ந்திருந்தாலும் -சொந்த பந்தங்கள் அன்பு காட்டினாலும் தன் தந்தையை இழந்தவுடன் தான் தனிமையாகி விட்டதாக உணர்ந்தார். 
இறைவன் மேல் கோபம் கொண்டார்.

 பூஜை அறையில் இருந்த படங்களை போட்டு உடைத்தார். கையில் கிடைத்த சில தங்க நகைகளையும், சிறிது பணத்தையும் எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.

எங்கு போவது என்று தெரியவில்லை இருந்தாலும் பழனி செல்லும் வண்டியை பிடித்து பழனி மலையை அடைந்தார்.

 கையில் இருந்த பணத்தைக் கொண்டு தேங்காய் வாங்கி முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து மகிழ்ந்தார்.



 சற்குரு ஸ்ரீ அப்பா சுவாமிகள் மலையிலிருந்து இறங்கி வெகுதூரம் நடந்து சென்று ஒரு விநாயகர் கோயிலில் வந்து அமர்ந்து கொண்டு அழுதார். அப்போது ஆடையில்லாமல், பிச்சைக்காரர் போன்று அழுக்கான தோற்றமளித்த ஒருவர் வந்து நீ யார் ? ஏன் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாய் ? உன் தாய்-தந்தையர் எங்கே ? என்று வினவினார். 

அவர் தான் தவத்திரு ஸ்ரீ அழுக்கு சுவாமிகள். எனக்கு ஊரும் இல்லை, பேரும் இல்லை- தாயும் இல்லை, தந்தையும் இல்லை என்று பயந்து கொண்டே கூறினார் சுவாமிகள். நெஞ்சை தடவி கொடுத்து பயப்படாதே எங்கே போகிறாய் ? என்று கேட்டார் அதற்கு சுவாமிகள் எனது தாய் தந்தை இருக்கும் இடத்தை நோக்கி போகிறேன் என்றார்.

 .உனது தாய் தந்தை இருக்கும் இடத்திற்கு, நான் அழைத்து செல்கிறேன் என்னுடன் வா என்று சொல்லி சுவாமிகளை மூன்று நாட்கள் காடு,மலை எனறு எங்கெல்லாமோ அழைத்துச் சென்றார்.

 கடைசியில் ஒரு குகைக்கு வந்தடைந்து -அதனுள்ளிருந்து ஒரு ஏட்டுச் சுவடியை கொண்டு வந்து கொடுத்து சுவாமிகளை படிக்கச் சொன்னார். சுவாமிகள் தனக்கு படிக்கத் தெரியாது என்று சொல்லவே அழுக்கு சுவாமிகள் எப்படி படிக்கவேண்டும் என்று இரண்டு நாள் சொல்லிக் கொடுத்தார். 

மூன்றாம் நாள் சுவாமிகள் கோபம் கொண்டு இதுவெல்லாம் எனக்குத் தேவையில்லை -எனக்கு என் பெற்றோர் தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து உண்ணாமல்-உறங்காமல் ஆடையின்றி பாறை மேலேறி படுத்துக் கொண்டார். 

அழுக்கு சுவாமிகள் என்ன உணவு கொண்டு வந்து கொடுத்தாலும் சுவாமிகள் சாப்பிடாமல் இருந்தார்.. ஆனாலும் அழுக்கு சாமிகள் குழந்தையின் பசிக்கு ஆகாரம் கொண்டு வந்து தருவதை நிறுத்தவில்லை.குழந்தை அவரை அடித்தது-கடுஞ்சொல் பேசியது . எதையும் அவர் பொருட்படுத்தவில்லை..நீ ஆண்டவன் குழந்தை -உன் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் நீ நாட்டுக்கு நல்லது செய்ய வந்து பிறந்துள்ளாய்என்று சொல்லி அவருக்கு உணவும் தந்து உடையும் உடுத்தி விட்டார். 

அவரை வணங்கிய மக்களை குழந்தை தான் தெய்வம்- அதை வணங்குங்கள் என்று சுவாமிகளின் பிறப்பின் இரகசியத்தை அறிவித்து சில நாட்களில் சமாதியானார். தனக்கு இருந்த ஒரே ஒரு ஆதரவும் மறைந்த பின் சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி சென்றார்.

 காடு மலைகளை சுற்றி திரிந்தார். பின் பழனி,திருச்சி,விராலி மலை என்று பல இடங்களுக்கும் சென்று மக்களுக்கு ஆசி வழங்கினார்.

 சில காலத்திற்கு பிறகு பழனியில் புளிய மரத்தின் அடியில் இருக்கும் பாறையின் மேல் குழந்தை படுத்து இருந்தது . சாது மடத்தில் ஐந்தாயிரம் பேருக்கு சாப்பிட அன்னதானம் செய்து கொண்டு இருந்த பெரியவர் ஒருவர் குழந்தையைக் கண்டு இது தன் சகோதரனின் குழந்தைஎன்று உணர்ந்து அப்பா அப்பாஎன்று கதறி அழுதார். 

குழந்தை கிடைக்க வேண்டி ஊரெல்லாம் கோயில் கோயிலாக அன்னதானம் செய்து வந்த அவர், தம் குடும்பத்து வாரிசு-ஒருபைத்தியக்காரனைப் போல காடு மலையெல்லாம் திரிகிறதே என்று வேதனைப்பட்டு கதறினார். 

தன்னுடன் வந்துவிடுமாறு கெஞ்சினார். குழந்தை கேட்கவில்லை. தனக்கு உலகம் முழுதும் தாய்-தந்தையர்கள் உள்ளனர்-அதனால் அவர்களை தேடி தேசாந்திரம் செல்வதாக கூறிக் கிளம்பியது. சுவாமிகள் ஊர் ஊராக சென்றார்.

 மக்களின் குறைகளை தீர்த்து வைத்தார். தன்னை நாடி வந்தவர்களுக்கு இன்னருள் புரிந்தார். தன்னை மனதினில் இருத்தி தியானிப்பவர்களுக்கு கஷ்டங்களைப் போக்கி நல்லாசி வழங்கினார். பக்தர்கள் அவரை அப்பா அப்பாஎன்று தான் கூப்பிடுவார்கள். ஆனால் சுவாமிகள் தன்னை ஒரு பைத்தியம் என்று தான் சொல்லிக் கொள்வார்கள். அதனால் அவர் அப்பா பைத்தியம் சுவாமிகள்என்றே கொள்ளப்பட்டார்.

 சுவாமிகள் நிறைவாக தமது 141-ஆம் வயதில் சேலத்தில் உள்ள சூரமங்கலம் என்ற ஊரில் சற்குரு மாளிகை” (தருகவிலாஸ்) எனுமிடத்தில் பிரமாதி ஆண்டு 11.02.2000 தை அன்று 28-ம் நாள் அசுவினி நட்சத்திரத்தில் சமாதியானார்.

சுவாமிகளின் கோவில் விஷீ ஆண்டு ஐப்பசி திங்கள் 25-ஆம் நாள் 11.01.2001 அன்று தெய்வ தமிழ் முறைப்படி திருமுழுக்கு நீராட்டு விழா இனிதே நடைபெற்றது.  இன்றும் சுவாமிகள்பலர் கனவில் தோன்றி பல நற்செய்திகளையும் நல்லாசிகளையும் வழங்கி பலர் வாழ்வில் மறையாத தெய்வமாக வலம் வநது கொண்டிருக்கிறார்.




இப்பொழுதும் சனிக்கிழமைகளில் மதியம் வரும் அனைவருக்கும் வாழை இலை போட்டு அன்னதானம் சிறப்பாக வழங்கப்படுகிறது.  சுவாமிகளின் 20 ஆம் ஆண்டு குரு பூசை விழா 01.02.2020 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறும்படி வேண்டுகின்றோம்.




ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் போற்றி. போற்றி 

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தலை வணங்கி வருக! கேட்டது கிடைக்கும்!! - ஸ்ரீ ல ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் தரிசிப்போம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_9.html


ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/98-10022020.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html

 சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

No comments:

Post a Comment