"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, August 4, 2019

அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி திருவடி சரணம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!





உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக, உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக விளங்கும், என் முருகா, வந்து அருள் புரிவாய்.

அகாலங்களை தவிர்க்க, அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெற வாருங்கள்.




தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள அகரம் என்ற ஊரில் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி அருள் பாலித்து வருகின்றார். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயில் ஆகும். இந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது மிக மிக விசேஷம் ஆகும்.கோயிலில் முருகப் பெருமான் வள்ளி,தெய்வானையோடு காட்சி தருகின்றார்.சுமார் 5 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி முருகப் பெருமான் காட்சி தருவது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும். குருவை கண்டால் அனைத்தும் துன்பங்களும் சூரியனைக்  கண்ட பனி போல் விலகி விடும். அது போல் தான் அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெற உள்ளோம்.

சரி.இந்த கோயிலின் சிறப்புகள் ஒவ்வொன்றாக காண்போமா?

அகரம் ஊருக்கு சென்று, தென்பெண்ணை ஆற்றில் குளித்து, ஓம் சுப்ரமண்யாய நமஹ என்று முருகப்பெருமானை அழைத்து, எவரொருவர் வழிபடுகின்றாரோ, அவருக்கு அகலா நிகழ்வுகள் மற்றும் அகால மரணம் எதுவும் நடைபெறா.

அகரம் ஊரில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக யாருக்கும் அகால மரணம் ஏற்படவில்லை. குறிப்பாக யாரும் பாம்பு தீண்டி இறக்கவில்லை.

இந்த தலம் சர்ப்ப தோஷ பரிகாரத்  தலம் ஆகும். பாம்பு தீண்டி யாராவது இங்கு வந்தால், தீண்டிய பாம்பின் விஷம் ஏறாது, மேலும் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அளித்து, முருகப் பெருமானிடம் வேண்ட, உடல் சுகம் பெறுவது .

இந்த தலத்தில் வரும் பாம்புகளுக்கு விஷம் இருக்காது என்பது திண்ணம்.

முன்னரே சொன்னது போல் இங்கு முருகப் பெருமான் தம்பதி சகிதமாக வள்ளி,தெய்வானையோடு காட்சி தருகின்றார். எனவே யோகம் வேண்டியும் போகம் வேண்டியும் இங்கே வழிபடலாம். இங்குள்ள தென்பெண்ணையாற்றில் குளித்து விட்டு, இங்குள்ள முருகப்பெருமானிடம் வேண்ட, ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கப் பெறுவது உறுதி.

கல்யாணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், புத்ர பாக்கியம் பெறவும் இங்கு வேண்டுவது உடனடி பலன் தரும்.

இங்கு ஞானம் வேண்டியும் வழிபடலாம் என்பது கூடுதல் சிறப்பு.

காட்சிப்பதிவுகளாக தல வரலாற்றை இங்கே தருகின்றோம்.

















இனிவரும் பதிவுகளில் அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெறுவோம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

2 comments:

  1. Replies
    1. குருவருளால் குருவின் தாள் பணிந்து

      தங்களின் வருகைக்கு நன்றி ஐயா

      ரா.ராகேஷ்
      கூடுவாஞ்சேரி

      Delete