"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 5, 2019

சுகமளிக்கும் சுரைக்காய் சித்தர் - 117 ஆம் ஆண்டு குருபூஜை மற்றும் கலச பூஜை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆலய தரிசனம் நம்மை தினமும் தெம்பாக வைக்கின்றது. நம் புற செயல்களை சரிசெய்து சரியை, கிரியை போன்ற அட்டாங்க யோகத்தின் அடிப்படையை செப்பனிடுகின்றது. அவ்வப்போது நாம் சித்தர்கள் அருளும் உயிர்நிலைக் கோயில்களையும் தரிசனம் செய்து வருகின்றோம். நம்மை ஈர்த்து ஆட்கொள்ளும் சதானந்த சுவாமிகள், குழந்தைவேலர் என தரிசனம் செய்து வருவதோடு கிடைத்தற்கரிய சேவையில் உழவாரப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

இதுவரை, பஹிர் முகமா - வெளியில, சன்னதியில இருக்கற, சிலாரூபங்களைத்தான் நாம தரிசனம் பண்ணியிருக்கோம். ஆனா, உள்ளூக்குள்ளேயே அந்தப் பரம்பொருளைக் கண்டுபிடிச்சு, அதிலேயே லயிச்சுக் கிடந்தவங்களைப் பார்க்கறது இன்னும் விசேஷம். ஏன்னா, மகான்களோட சன்னதியிலே கண்ணுக்குத் தெரியாத அதிர்வலைகள் உண்டு. அங்கே போனா, மனசு அலைபாயறது குறையும்; பதற்றம் விலகும்; புத்தி நிதானப்படும். இப்படி ஆயிட்டா, நம் பேச்சு, செயல், நினைப்பு எல்லாமே மற்றவர்களின் பிரியத்துக்கு உரியதாய்டும். அதான் இந்த உயர்நிலைக்கோயில்களின் தரிசனம்.

அந்த வரிசையில் இன்று "சுரைக்காய் சித்தர் சுவாமி"






இவரோட பேரு ராமசாமி. விருதுநகர் மாவட்டத்துல இருக்கற, கழுகுமலைல இருந்து சங்கரன் கோயில் போற வழில, "வாகைக்குளம்'ங்கிற ஊர்ல பிறந்தவர். தன்னோட சுரைக்குடுக்கையில் இருந்து அவர் எடுத்துக் கொடுக்கற எதுவும் மருந்து தான். நிறைய மூலிகைகள் பத்தித் தெரிஞ்சவர். சுரைக்காயுடன் காணப்பட்டதால் சுரைக்காய் ஸ்வாமிகள்னு மக்கள் சொல்லிட்டாங்க.'



"சுரைக்காய் ஸ்வாமிகள் தலையைச் சுத்தி முண்டாசு மாதிரி கட்டியிருப்பார். சில நேரங்கள்ல நெத்தியில் திருமண் இட்டுக் கொண்டிருப்பார். சிலசமயம் விபூதி இருக்கும். சமயத்துல எதுவுமே இருக்காது. ஆனா கையிலே ஒரு சுரைக்குடுக்கை; ஒரு கம்பும் வைச்சிருப்பார்
தமிழக எல்லை, ஆந்திர எல்லையோரத்தில் புத்தூர் என்கிற மலைப் பிரதேசத்தில் வாழ்ந்த சுரைக்காய்ச் சித்தர்.நீண்டு அடர்ந்த சடைமுடியோடும் சிறிய கோவணத்துடனும், தீட்சண்யமான பார்வையோடும் காணப்பட்ட சித்தருக்கு….

சுரைக்காய்தான் பிரதானப் பொருள். அவர் சாப்பிடுவது, தண்ணீர் அருந்துவது எல்லாம் காய்ந்த சுரைக்காய் குடுவையில்தான்முதலில் இவர் பித்துப் பிடித்தவர் போல் புத்தூர், திருப்பதி, நகரி போன்ற இடங்களில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். மெல்ல மெல்ல அவரின் அமானுஷ்ய சக்தியும்,மூலிகை மருத்துவர் என்பதும் தெரிய வரபுத்தூர் மலையில் குடில் அமைத்துக்கொண்டு தன்னைத் தேடி வரும் நோயாளிகளுக்கு மூலிகை சாற்றையும், திருநீறு கலந்த தீர்த்தத்தையும் சுரைக்காய்க்  குடுவையில் தருவார். அதனால்தான் அவருக்கு சுரைக்காய்ச் சித்தர் என்ற பெயர் வந்திருக்கிறது.

இதோ நம்மை வரவேற்கும் உயிர்நிலைக்கோயில் முழுதும் சுரைக்காய்கள் தான்.





இங்கு  அன்றாடம் வழிபாடு  நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கினர் நாள்தோறும் பல தொலைவிடங்களில் இருந்து வந்து வழிபட்டு அவர் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த இடத்தில் தியானம் செய்கிறபோது பிற இடங்களில் ஏற்படாத ஒருமுனைப்பட்ட ஒருமுகப்பாடு கைகூடுகிறது. மக்கள் சிலர் சித்தரின் நினைவாக சுரைக்காய்களை கட்டுகின்றனர்.இங்கு சுரைக்காய் வாங்கி வந்து, மனதில் வேண்டி சமர்ப்பித்தால், நேர்மையான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
சித்தர் வாழ்ந்திருந்த காலத்தில் காட்டுமரங்களை வெட்டிவந்து கொளுத்தி குளிர்காய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது மக்களும் தீயைச் சூழ்ந்து உட்காருவர். அதன் தொடர்ச்சியாக இன்றும் வேப்பமர விறகுகள் கொளுத்தப்படுகின்றன. மக்கள் உடல் நோயை தீர்க்கும் வெற்றியைத் தந்திடும் என்ற நம்பிக்கையில் அதன் சாம்பலை உடலில் தடவிக் கொள்கின்றனர். பிள்ளை இல்லாதோர் வேண்டி பிள்ளை பிறந்தால் பிள்ளையின் எடைக்கு எடை காசு தருகின்றனர். பேய்பிசாசு பிடித்தோர் பில்லிசூனிய பாதிப்புடையோர் அதிலிருந்து விடுபட இங்குவருகின்றனர். திருமணத் தடை, குடும்பச்சிக்கல் நீங்க வேண்டியும் மக்கள் சித்தர் சமாதிக்கு வருகின்றனர். இக்கோவில் தனியாரால் பேணப்படுகிறது. காலை 6 முதல்12 மணி வரையும், மாலை 3.30 முதல் 8.30 வரையும் கோவில் திறந்திருக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவதால் நாள் முழுதும் கோவில் திறந்திருக்கும். அன்று பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் நண்பகலிலும் இரவிலும் அன்னதானம் உண்டு. இங்கு செல்ல ஊத்துக்கோட்டை வழியாக பேருந்து போக்குவரத்து உள்ளது.                   
    











நாம் அன்று இரவில் தரிசனத்திற்காக சென்றிருந்தோம். அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு வந்தோம். மற்றுமொரு அமாவாசை அல்லது பௌர்ணமி நாளில் சென்று சுரைக்காய் சித்தரை வணங்கிட குருவருள் துணை புரியட்டும்.



வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சுரைக்காய் சித்தர் அருள் பெரும்பாடு வேண்டுகின்றோம்.

ஸ்ரீமத் சுரக்காய சுவாமியே நமஹ

- மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

நம்மை ஆண்டாள் - ஆண்டாள் திருவடிகளே சரணம் ! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_2.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

No comments:

Post a Comment