"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, November 26, 2025

அன்புடன் அகத்தியர் - கந்தக் குறவள்ளி மலை வாக்கு!

                                                              இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

                                                                        சர்வம் சிவார்ப்பணம்...




               

சித்தன் அருள் - 1819 - அன்புடன் அகத்தியர் - கந்தக் குறவள்ளி மலை வாக்கு!

15/9/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: கந்த குற வள்ளிமலை கிருஷ்ணகிரி.

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலன்கள்!!!

அப்பனே வரும் காலங்களில் நிச்சயம் அப்பனே மனிதர்களுக்கு தரித்திரம் தான் என்பேன்!!

இதனால் அப்பனே நிச்சயம் பலமாக பின் இறைவனை பின் பிடித்து பிடித்து சென்றால்தான் அப்பனே பின் வெற்றி நல்கும். 

அப்பனே ஆனாலும் அப்பனே பின் தன் சுயநலத்திற்காகவே இறைவனை பின் வணங்குவார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!

இதனால் அப்பனே  பின் அன்பும் அப்பனே நிச்சயம்""""இறைவா நீதான் அனைத்தும் !!!! என்று அப்பனே பின் வணங்கி வந்தாலே போதுமானதப்பா. 

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் பின் அக்கிரமங்கள் பின் அநியாயங்கள் இன்னும் இன்னும் அப்பனே நீண்டு போகுமப்பா!!!

இதனால் அப்பனே பின் ஏன்? எதற்கு? பின்  எவை என்று அறிய அறிய இவ் மலையில் பின் முருகன் அழகாகவே பின் அனைத்து தெய்வங்களும் கூட பின் குடிகொண்டு எவை என்று அறிந்தும் கூட!!!

ஏன்? எதனால்? என்பதையெல்லாம் அப்பனே இப்பொழுது யான் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!

இதையென்றும் அறிய அறிய அப்பனே!!! இவ் நிலத்தை அப்பனே பின் சில ஆண்டுகளுக்கு முன்பே அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பே அப்பனே ஒரு அரசன் ஆண்டு வந்தானப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட இதனால் பின் அவ் அரசன் அப்பனே அனைத்து மக்களையும் கூட தன் வசப்படுத்தினான். 

யான் என்ன சொல்கின்றேனோ!!!!!  அனைவரும் அதைத்தான் கேட்க வேண்டும் மக்கள் என்றெல்லாம்!!!! 

பின் இறை பக்தியும் பின் அதாவது அன்பும் ஆதரவும் அதாவது இன்னும் இன்னும் பின் முருகன் மீது பக்திகள் இங்கெல்லாம் (அந்த நாட்டில் மக்கள் அனைவரும் முருகன் மீது பக்திகள்) அப்பனே!!!!

இதனால் அப்பனே பின் அதாவது மன்னனுக்கு சில கர்வம் ஏற்பட்டது!!!

பின் அதாவது முருகனை பின் அறிந்தும் கூட யான் இங்கு இருக்கின்றேன் . 

எங்கு இருக்கின்றான்??? முருகன்!!! என்றெல்லாம்

(அதாவது அந்த அரசன் நான் தான் இங்கு இருக்கின்றேன் நான்தான் உங்களுக்கு கடவுள் முருகன் எங்கு இருக்கின்றான் என்றெல்லாம்) 

ஆனால் மக்கள் அனைவருமே பின் மலைகளில் ஏறி ஏறி முருகா முருகா என்றெல்லாம் அழைக்கின்றார்கள் 

ஆனாலும் இப்படியே பின் முருகனை வணங்கினால்???

ஆனால் நம்தனை மறந்து விடுவார்கள்... மீண்டும் பின் அறிந்தும் கூட. 

அதனால் நிச்சயம் அறிந்தும் கூட யான் தான் பின் இறைவன் என்றெல்லாம் நிச்சயம் அறிந்து அவ் மன்னனும் கூட. 

இதனால் தளபதியாரை அழைத்து... நிச்சயம் பின் அதாவது முருகனை அனைவரும் வணங்குகின்றார்கள் அல்லவா!!!!

நிச்சயம் தளபதியாரே!!! இப்படியே சென்று கொண்டிருந்தால் நிச்சயம் நம் தன்னை அனைவரும் மறந்து விடுவார்கள்!!!

நிச்சயம் பின் அதாவது உலா வந்து அனைத்து மக்களிடமும் எதை என்று கூட சொல்!!!

மன்னன் தான் இனிமேல் பின் இறைவன்...

பின் முருகனை எல்லாம் வணங்கக்கூடாது!!! என்று மன்னன் உத்தரவிட்டான்!!

இதனால் அறிந்தும் கூட பின் அனைத்து இடங்களிலும் கூட அதாவது இங்கும் இதன் பக்கத்தில் சார்ந்துள்ள இடங்களில் எல்லாம் சென்று பின் அறிந்தும் கூட பின் அதாவது பம்பை (தண்டோரா)அடித்து அறிந்தும் கூட இனிமேல் பின் முருகனை யாரும் வணங்க கூடாது!!

அப்படி வணங்கி வந்தால் நிச்சயம் அனைவருக்கும் மரண தண்டனை தான் பின் மன்னனும் கொடுப்பான்.

அதனால் மன்னன் தான் இங்கு இறைவன்... பின் அதாவது மன்னன் என்ன? சொல்கின்றானோ!? அதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும் என்றெல்லாம்! 

நிச்சயம் அதாவது ஏற்கனவே அவந்தனுக்கு கர்வம் அதிகம். 

இதனால் நிச்சயம் அவ் மன்னனும் கூட அறிந்தும் எதை என்றும் அறிய அறிய இப்படி ஒரு கட்டளையை இட்டான்.

இதனால் நிச்சயம் அறிந்தும் கூட மக்கள் பின் எப்படி? அறிந்தும் கூட அதாவது பின் மனிதனை எப்படி? தெய்வமாக ஏற்றுக்கொள்ள முடியும்???? என்றெல்லாம்!!

இதனால் அவ் மன்னனும் கூட பின் பல ஊர்களிலும் கூட சென்று சென்று என்னை மட்டும் வணங்க வேண்டும் 
இதனால் நிச்சயம் பல பெண்களையும் கூட காயப்படுத்தி மனதை காயப்படுத்தி எதை எதையோ பேசினான்.

அதாவது பெண்கள் அனைவருமே எந்தனுக்கு அதாவது அறிந்தும் கூட பின் கால்களுக்கு அபிஷேகங்கள் செய்ய வேண்டும்... அப்படி செய்யாதவர்கள் அங்கேயே பின் அறிந்தும் கூட மரண தண்டனை என்று. 

இதனால் பின் அறிந்தும் கூட அனைவரும் பின் வந்து வந்து வந்து நிச்சயம் பின் அதாவது இறைவனை நீங்கள் எப்படி வணங்குகின்றீர்களோ... அதேபோலத்தான் எந்தனுக்கும் கூட ஆராதனைகளும் கூட.. அதாவது பாதாபிஷேகங்கள் கூட செய்ய வேண்டும் என்று நிச்சயம் அறிந்தும் கூட. தளபதியாருக்கு உத்தரவிட்டான்.

அதேபோல் மக்கள் அறிந்தும் கூட பின் அதாவது இங்கெல்லாம் பின் அறிந்தும் கூட பல திருத்தலங்களில் முருகன் அறிந்தும் கூட. 

அங்கெல்லாம் அந்த திருத்தலங்களுக்கெல்லாம் தடையிட்டான் (திருத்தலங்களுக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்தான்) எவை என்று கூட காவலாளிகளை கூட காவலுக்கு வைத்தான்... முருகன் இடத்திற்கு பின் செல்பவர்களை எல்லாம் அங்கேயே நிச்சயம் அடித்து உதைத்து பின் மரண தண்டனையை கொடுங்கள் என்றெல்லாம். 

இதனால் பின் அச்சப்பட்டனர் மக்கள். 


திருத்தலங்களுக்கு செல்வதற்கு பதிலாக மன்னனிடம் தான் செல்ல வேண்டும்.. மன்னனுக்கு தான் அபிஷேகங்கள் செய்ய வேண்டும் என்றெல்லாம். 

இதனால் மன்னனும் இன்னும் கர்வம் கொண்டான். 

பின் அதாவது முருகா!! அறிந்தும் எதை என்றும் அறிய அறிய..... உன்னை வணங்கினார்களே.... நிச்சயம் மக்களை எங்கு வந்து நீ காப்பாற்றினாய்?????

அதாவது நீ எங்கு இருக்கின்றாய்???

பார்த்தாயா!!!! யான் அரசன்!!! அறிந்தும் கூட எந்தனுக்குத் தான் இப்போது அபிஷேகங்கள் செய்கின்றார்கள்!!! அப்பொழுது நிச்சயம் நீ எங்கு இருக்கின்றாய்???
யான் இங்கு இருக்கின்றேன் என்று..


ஆனாலும் இதைப் பார்த்த நிச்சயம் அறிந்தும் கூட பின் வள்ளி!!! எதை என்று கூட நிச்சயம் இதை என்றும் அறிந்தும் கூட கோபமுற்றாள்!!!

பின் அதாவது முருகனை அதாவது அறிந்தும் கூட பின் எதை என்றும் அறிந்தும் கூட திருத்தணிகை மலைதனில் நின்று எதை என்று அறிய அறிய... பின் இதை என்று கூட 

முருகனைப் பார்த்து வள்ளி!!

அன்பானவனே!!! உன்னை நோக்கி அதாவது நீ எவ்வளவு சக்தி என்பதையெல்லாம் பின் யான் அறிவேன்!!!

ஆனாலும் இப்படிப்பட்டவன் ஒருவன் இருக்கின்றான் அல்லவா!!! இவனை முதலில் பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய.... இவந்தனைக் கொன்றால் தான் மக்களுக்கு பின் தீர்வுகள்!!! அதாவது பின் நல்படியாகும்!!

ஆனால் முருகனோ!!!!

பின் வள்ளியிடம் நிச்சயம் பின் வள்ளியே!!!!! சிறிது நில்லும்!!!!

உடனடியாக தண்டனைகள் கொடுத்து விட்டால் பின் நிச்சயம் அவந்தனுக்கு ஒன்றுமே தெரியாமல் போய்விடும். 

அதனால் சிறிது சிறிதாக பின் தண்டனை கொடுப்போம் என்று!!!

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் இதை என்றும் புரிந்தும் கூட!!! 


வள்ளி தேவி முருகனைப் பார்த்து

அதனால் நிச்சயம் அன்பானவனே!!!! இப்படி எல்லாம் நீ பேசக்கூடாது!! நிச்சயம் பின் அதாவது உனை நிச்சயம் இப்படி பேசுபவனை யானே தண்டிக்கின்றேன் என்று நிச்சயம் அதாவது... முருகா நீ அமைதியாக இருந்தாலும் யான் நிச்சயம் செல்வேன் என்று கோபமுற்று நிச்சயம் அறிந்தும் கூட வள்ளி அதாவது அறிந்தும் இதை என்று கூட பின் அதாவது திருத்தணிகை மலையில் இருந்து பின் எதை என்று அறிய அறிய ஓடோடி இங்கு வந்து விட்டாள். 

அறிந்தும் கூட இதனால் பின் அவ் மன்னனும் கூட கொடுமைப்படுத்தினான் பெண்களை. 

நிச்சயம் பின் அறிந்த இவைதன் கூட.... அதாவது அனுதினமும் நிச்சயம் பின் அதாவது மன்னனும் யான் முன் சொன்ன மாதிரி உத்தரவிட்டான் அறிந்தும் கூட 

பெண் இதனால் அதிகாலையிலே பெண்கள் அனைவரும் வந்து அதாவது மன்னனின் கால்களுக்கு அபிஷேகம் செய்ய பின் அனைத்தும் பின் இறைவனுக்கு எப்படி எல்லாம் செய்கின்றீர்களோ அப்படியே செய்ய வேண்டும் யான் தான் இறைவன் என்று.

இதனால் அதாவது பின் பெண்களோடு வள்ளியும் நின்றாள் வரிசையில் கூட.

அறிந்தும் கூட எதை என்றும் கூற இவை என்று கூற அப்பனே... ஒன்றும் ஒன்றும் கூற இதனால் நிச்சயம் இன்னும் இன்னும் மாற்றங்கள் இவ்வுலகத்தில் அப்பனே.

இப்படித்தானப்பா கலியுகத்தில் கூட செய்து கொண்டிருக்கின்றார்கள் பல மனிதர்கள்...

அப்பப்பா!!! இறைவனுக்கு அப்பனே அதாவது இறைவனின் நிலையை அறியாமல் அப்பனே பின் மனிதன் தான் தெய்வம் என்று நினைத்துக் கொண்டு பல பேர் இருக்கின்றார்களப்பா!!!!

இது எவ்விதத்தில் நியாயம்??? எவ் விஷயத்தில் சேரும்???? இதனால் அப்பனே எங்கு போய் முடியும்???

அப்பனே இதற்கு இறைவன் என்ன தண்டனை ?? என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே... அதாவது தம் தன் குடும்பம் எப்பொழுதுமே பின் முன்னுக்கு வர முடியாதப்பா!!!

எப்பொழுது?? பின் மனிதனை தெய்வமாக பின் யார் ஒருவன்? ஏற்றுக்கொள்கின்றானோ? அவந்தனுக்கு எப்பொழுதுமே ஆசிகள் இல்லையப்பா!!! இவ்வுலகத்தில் எப்பொழுதும் கூட.... சொல்கின்றேன் அப்பனே!!!

இதனால் மனிதன்! மனிதன்!! தான்!!

தெய்வம்! தெய்வம்!! தான்!! சொல்லிவிட்டேன் அப்பனே!!

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே மனிதனுக்கு பல வழிகளிலும் கூட அப்பனே மரியாதைகள் இன்னும் அப்பனே கால்களுக்கு அபிஷேகங்கள் அப்பனே!!!

இவையெல்லாம் அப்பனே மனிதனின் தரித்திர செயல்கள் என்பேன் அப்பனே!!

ஆனாலும் சித்தர்கள் இவைதனை ஏற்றுக்கொள்ள முடியாதப்பா!!!

அறிந்தும் கூட!!!

எதை என்று கூட!!!.... ஆனாலும் அப்பனே சரியாகவே  வரிசையில் நின்று நிச்சயம் வள்ளியும் கூட அறிந்தும் கூட நின்றாள்!!!

நின்றாள் !!அப்படியே!!

பின் அதாவது இவள்தன் புதுமையாக புதிதாக இருக்கின்றாளே!!!

 யார் இவள்???? என்று நிச்சயம்!! உன் பெயர் என்ன??? என்று வள்ளியை பார்த்து மன்னனும் கேட்டான்!!

அதற்கு வள்ளியும் கூட முழித்தாள்!!!! அறிந்தும் கூட அதாவது அமைதி காத்தாள்!!!

பின் அதாவது (அரசபையில் அரசன் சேவகனை அழைத்து) புலவனே!!! வா!!!  

இவள் ஒருத்தி மட்டும் எப்படி? தைரியமாக நிற்கின்றாள் ஒரு பெண்ணானவள்... இவளை பின் சிறையில் அடையுங்கள் என்று...

நிச்சயம் அப்படியே செய்வதற்கு வந்தபோது 




என்னை தொடாதீர்கள் என்று வள்ளியும் கூட!!!

இதனால் அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய இப்பொழுதும் கூட வள்ளியை சிறையிட்ட அவ் மலை.... இவ் மலையின் மறுமுனையிலே இருக்கின்றதப்பா!!!

(கந்த குற வள்ளி மலையின் நேர் எதிரே இருக்கும் மற்றொரு மலையில் உள்ள குகையில் தான் பெண்ரூபத்தில் வந்த வள்ளி தேவியை சிறையில் அடைத்திருந்தான் மன்னன்)


இதனால் அப்பனே அங்கு ஒரு குகை.... பின் அறிந்தும் கூட வள்ளியினை கூட அப்பனே பின் அடைத்து விட்டனர் குகையில் கூட அப்பனே 

இதையென்று அறிந்து அறிந்து.... இதனால் முருகனும் கூட பின் அப்பனே அறிந்தும் எதை என்றும் உணர்ந்தும் கூட 
முருகனும் கூட அமைதி பொறுத்தான். 

இதனால் பின் வள்ளியும் கூட இங்கிருந்தே பின்...

முருகா!!!!! என்று அறிந்தும் பின் எதை என்று அறிய அறிய!!

முருகன்
பின் அதாவது பின் நீ என் சொல் பேச்சு கேட்கவில்லையே என்று...

ஆனாலும் வள்ளிக்கும் கூட நிச்சயம் பின் அறிந்தும் கூட சக்திகள் இருக்கின்றது...

ஆனாலும் ஏன்!!?? இங்கு பின் அவ் சக்திகளை காட்டவில்லை என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட.... பார்ப்போம் என்று!!!

இதனால் அப்பனே எதை என்று கூட உணர்ந்து உணர்ந்து. 

ஆனாலும் மன்னனும் அப்பனே பின் மாலை வேளையில் கூட அப்பனே...... சிறையில் ஒரு பெண் இருக்கின்றாளே.... அவள் தனக்கு என்ன கர்வம்??!! பின் யான் தான் கடவுள் என்று சொன்னேன்!!!! வணங்கச் சொன்னேன்!!!

ஆனால் என்னையும் வணங்கவில்லை பின் கால்களுக்கு அபிஷேகங்கள் செய்யச் சொன்னேன்.. பின் அறிந்தும் கூட அவள் செய்யவில்லை... அவளுக்கு எவ்வளவு கர்வம்??? என்று நினைத்துக் கொண்டு! பின் அவளிடத்தில் சென்றான்!!(குகைக்கு மன்னன் சென்றான்) 

சென்று பின் மெதுவாக பெண்ணே!!! நீ யார்?? உன் பெயர் என்ன??? அறிந்தும் கூட ஏன் அனைத்து பெண்களும் என் கால்களில் பின் விழுகின்றார்கள்!! விழுந்து வணங்குகின்றார்கள். 

 ஆனால் நீயோ எதை என்றும் புரியாமல் இருக்கின்றாய்... இதனால் உந்தனுக்கு நாளையே யான் மரண தண்டனை ஈய (தர) போகின்றேன் என்று!!!!

கந்தக் குறவள்ளி மலை வாக்கு பாகம் இரண்டில் தொடரும்.

 சித்தன் அருள் - 1820 - அன்புடன் அகத்தியர் - கந்தக் குறவள்ளி மலை வாக்கு - 2!

                   

               

கந்த குற வள்ளிமலை வாக்கு பாகம் 2.

ஆனாலும் பின் வள்ளியோ!!! அறிந்தும் கூட மடையனே!!! பின் அதாவது மன்னனாக இருக்கின்றாயே!!!! ஆனால் உந்தனுக்கு புத்திகள் இல்லையே!!!! ஆனால் உன் நேரம் நெருங்கி விட்டது என்று!!

ஆனால் மன்னனுக்கும் கோபம் அறிந்தும் பின் எதை என்றும் அறிந்தும் கூட பின் அப்படியா???

ஏன் எதை என்று அறிய அறிய பின் உன்னை என்ன செய்யப் போகின்றேன்!!!! என்று!!!
புலவர்களே வாருங்கள் சேவகர்களே வாருங்கள் வாருங்கள் என்றெல்லாம் நிச்சயம் அழைத்தான்... அனைவரையும் இங்கே வர சொல்லுங்கள் என்று...
இதனால் எதை என்றும் புரிந்தும் கூட புரியாமலும் கூட 

ஆனாலும் வள்ளியும் கூட பின் மன்னனே சற்று பொறும்!!!!!

கர்வம் வேண்டாம்!!!

இறைவன் இறைவன் தான்!!!
மனிதன் மனிதன் தான்!!!

நிச்சயம் பின் எப்பொழுதும் நீ அதாவது எவ்வளவு பக்திகள் செலுத்தினாலும் நிச்சயம் நீ இறைவன் ஆக முடியாது!!!
நிச்சயம் அறிந்தும் கூட!!

இதனால் பின் நிச்சயம் அனைவரிடத்திலும் கூட மன்னனே நீ மன்னிப்பு கேட்டு விடு... நிச்சயம் அறிந்தும் கூட. 

மன்னனே!! நீ செய்த செயல்களுக்கெல்லாம்!!! (பிராயசித்தம்!)

அனைத்து பின் முருகனின் திருத்தலங்களுக்கும் சென்று அதாவது பின் முருகனை வணங்கச் சொல்... என்றெல்லாம் அப்பனே வள்ளி!!! அறிந்தும் உண்மைதனை கூட. 


மன்னன் 

ஆனாலும் பெண்ணே!!! நீ ஒரு பெண்ணாக இருந்து இப்படியா??? என்று!!

ஆனாலும் அறிந்தும் கூட உன்னை யான் என்ன செய்யப் போகின்றேன் என்று பார்!!!

என்று அப்பனே அதாவது வில்லையும் அம்பையும் அப்பனே எடுத்து எதை என்றும் அறிய அறிய இவை என்று கூற அப்பனே அப்படியே பின் அதாவது சரியாக வள்ளியை பார்த்து.... உன்னை தொட்டாலே பாவம் என்று அதாவது தூரத்திலிருந்தே அம்பை விடுகின்றேன் பார் என்று வில்லில் அம்பையும் கூட!!! 

(வில்லில் அம்பை பொருத்தி நாணேற்றி வள்ளியை பார்த்து குறி பார்த்தான் மன்னன்)


அப்பனே அப்பொழுது திருத்தணிகை மலையில் இருந்து கூட முருகன் பார்த்தான் அப்பனே... அறிந்தும் கூட!!!


மன்னன் 

இதனால் சரியாகவே பின் அதாவது நிச்சயம் பெண்ணே என்னை விட நிச்சயம் கர்வமா நீ??? என்னை விட கர்வமா?? உந்தனுக்கு??? அதாவது இதை என்றும் அறிந்தும் கூட! 

இதனால் அப்பனே அங்கிருந்து வில் அம்போடு அவள் நெற்றியில் கூட குறி பார்த்தான் அப்பனே 


இதனை பின் முருகன் திருத்தணிகை மலையில் இருந்து ஒரு வில் அம்பை எடுத்து அப்பனே பின் முருகனும் கூட அப்பனே சரியாகவே அப்பனே இங்கு விட்டானப்பா!!! அம்பை எய்தான் அப்பா!!

இதனால் அவ் வில்லிலிருந்து வந்த அம்பு கூட.... இங்கு மன்னன் கைகளில் இருந்த அம்பையும் வில்லையும் தடையாக்கிற்று!!!!(தட்டிவிட்டது)

இதனால் பின் மன்னனுக்கு அதிசயம்!!!

பின் எங்கிருந்து??? அந்த அம்பு வந்தது??? அறிந்தும் அறிந்தும் கூட !!

அதாவது!! வள்ளி பின் அறிந்தும் கூட பலமாக சிரித்தாள்!!!!!

பின் அதாவது மடையனே!!!! மடையனே!!! அதாவது அறிந்தும் கூட மன்னனே!!! மடையன் மன்னனே!!! உன்னால் என்ன செய்ய முடிந்தது????

 பார்த்தாயா??!!!!

இதற்கு நீ நிச்சயம் அதாவது இதற்கு பதிலளி !!முதலில்!!!(பதில் சொல்) 

எங்கிருந்து வில் அம்பு??? அதாவது எங்கிருந்து வந்தது?? அதனை நீ முதலில் கண்டுபிடி!!!

பின்பு நீ எந்தனை திட்டுவாய்!! என்ன வேண்டுமானாலும் செய்வாய் என்று!!!


ஆனால் மன்னன் முழித்தான்!!!


வள்ளி 

மீண்டும் மடையன் மன்னனே நிச்சயம் நீ இதனை முதலில் செப்பு!!! பின்பு அதாவது நீ தன்னைத்தானே இறைவன் என்று சொல்கின்றாய் அல்லவா!!!

எங்கிருந்து இந்த அம்பு முதலில் வந்தது என்று நீ சொல்!!!.... என்றெல்லாம்!!

இதனால் அப்பனே பின் திகைத்தான் அரசன்!! அதாவது என்ன சொல்வது?? என்று கூட! 

இதனால் அங்கே அனைவரும் கூடி விட்டார்கள்... இதனால் பெண்களும் அங்கு ஓடோடி வந்து விட்டார்கள்..

ஆனாலும் பெண்கள் அனைவருமே முருகா!! முருகா!! என்று கூச்சலிட்டனர்!!
முருகா முருகா என்றெல்லாம் இது நிச்சயம் முருகனின் லீலைகளே என்று நிச்சயம் அறிந்தனர்.


ஆனாலும் மன்னனுக்கு இச்செயல்கள் நிச்சயம் பொறுக்கவில்லை... மீண்டும் பின் அறிந்தும் கூட நிச்சயம் யாராவது முருகன் என்று சொன்னால் அப்படியே கொன்று விடுங்கள் என்று நிச்சயம் பின் அறிந்தும் கூட.. இதனால் நிச்சயம் தளபதியாருக்கு கட்டளையிட்டான். 

தளபதியாரும் அறிந்தும் கூட நிச்சயம் இனிமேல் முருகா முருகா என்று சொல்லாதீர்கள் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய இனிமேல் சொன்னால் நிச்சயம் அறிந்தும் எவை என்றும் நிச்சயம் கொன்று விடுவோம் என்றெல்லாம் நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட. 

இதனால் நிச்சயம் இதை என்றும் அறிந்தறிந்து கூட நிச்சயம் அதாவது பின் அதாவது மன்னனும் அமைதியாக அதாவது மௌனம் காத்தான். 

எதை என்று அறிந்தும் கூட பின் அனைவரையும் புலவர்களையும் காவலாளிகளையும் அழைத்து...

எங்கிருந்து இந்த அம்பு வந்தது?????

அதாவது அறிந்தும் பின் எதை என்றும் அறிந்தும் கூட....

யாராவது இங்கு வில் அம்பு செய்கின்றார்களா??? என்று ஊர் ஊராக சென்று திரிந்து பாருங்கள்... என்றெல்லாம் நிச்சயம் பின் அதாவது அறிந்தும் கூட 

அதனால் காவலாளிகளும் அப்பனே அங்கும் இங்கும் திரிந்தனர். அவ் வில்லம்பை... யாராலும் அதாவது பின் எதை என்று கூட யாரும் விற்கவில்லை இதை யாரும் செய்யவும் இல்லை!! என்று பின் அறிந்தும் இதை என்று அறிய அறிய!!

இதனால் அப்பனே அதிசயம் அனைவருக்குமே!!!

அம்பு எங்கிருந்து??? வந்தது?? எங்கிருந்து?? வந்தது??? என்றெல்லாம் அப்பனே!!

இதனால் அப்பனே பின் அதுவும் கூட அப்பனே அப்படியே மன்னனின் கைகளில் இருந்த வில் அம்பினை தட்டிச் சென்று... அப்பனே பின் ஒரு மலையில் மோதியதப்பா!!! (முருகன் எய்த)

அப்பனே அவ் வில் அம்பும் கூட இப்பொழுதும் கூட அப்படியே நிற்கின்றது அப்பனே!!! சூட்சுமமாக அப்பனே!!!

அவைதனை பற்றி இப்பொழுது யான் சொல்வதற்கில்லை அப்பனே எங்கிருக்கின்றது அது? என்று அப்பனே!!!

ஆனாலும் சரியாகவே அப்பனே பின் வருங்காலத்தில் அவை தன் பின் எடுத்துரைக்கும் பொழுது அப்பனே நிச்சயம் தெரியும் அப்பா. அவ் மலையானது அப்பனே... ஒரு பொக்கிஷமாகவே திகழ்கின்றது என்பேன் இப்பொழுதும் கூட அப்பனே... அங்கு மறைமுகமாக அப்பனே தற்பொழுது இருக்கும் கூட அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்று கூட எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் பெரிய மனிதர்களும் கூட வணங்கி அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் பெரிய மனிதர்களாகவே ஆகி கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. 

இதனால் அப்பனே சூட்சுமம் இங்கு தான் இருக்கின்றது என்பேன் அப்பனே 

பின் பெரிய பெரிய ரகசியங்களை எல்லாம் வரும் வரும் காலங்களில் எடுத்துரைக்கும் பொழுது... அதை சரியாகவே பயன்படுத்திக் கொள்ளும் பொழுது... நீங்களும் வெற்றி அடையலாம் என்பேன் அப்பனே. 
இதனால் அப்பனே அறிந்தும் கூட...


 இதனால் வள்ளியும் கூட பின் மௌனமாகவே பின் இங்கிருந்தே பேசினாள் அப்பனே முருகனிடத்தில். 

முருகா!!! அறிந்தும் கூட பின் திருத்தணிகை மலையில் இருந்தே... முருகனும் அறிந்தும் கூட..

இதனால் இப்பொழுது தான் தொலைபேசி என்கின்றார்கள் அப்பனே!!!

இவைதன் அப்பனே முன்பே இருந்ததப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட அனைத்தும் கூட அப்பனே இறைவன் திருவிளையாடல்களே அப்பனே 

ஆனால் மனிதன் அதை தன் அதாவது பல சுவடிகளையும் எடுத்து அப்பனே... அதில் இருந்ததை எல்லாம் அப்பனே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றான் இப்பொழுது!!!

இதனால் அப்பனே!!

பின் அதாவது இமய தன்னில்  அப்பனே பேசினால் அப்பனே அறிந்தும் கூட... அதாவது பின் ஈசன் அப்பனே... பின் அதாவது திருச்செந்தூரிலே அப்பனே நிச்சயம் அப்பனே பின் தந்தையே என்று அழைப்பான் அப்பனே!!


(இமயமலையில் இருந்து ஈசன் முருகா என்று குரல் கொடுத்தால் திருச்செந்தூரில் இருந்து முருகன் தந்தையே!!!!! சொல்லுங்கள் என்று பதில் அளிப்பார்) 


சித்தன் அருள் 1460 ல் திர்கேஸ்வரி சக்தி பீடவாக்கில் கௌகாத்தி அசாம்..

மார்க்கண்டேய மகரிஷி இந்த ஆலயத்தில் அமர்ந்து கொண்டு பிரம்மபுத்திரா நதியில் பிரம்மனின் கோபத்தில் இருந்து அந்த நாட்டை காப்பாற்ற திருக்கடையூரில் இருக்கும் அபிராமி அம்மாவிடம் அங்கிருந்து கொண்டு அனுதினமும் பேசிக்கொண்டு இருப்பதை ஏற்கனவே அபிராமி அன்னையிடம் உரையாடிக் கொண்டு ஆலோசனை பெற்று காப்பாற்றி வரும் நிகழ்ச்சியை ஏற்கனவே தூரத்திலிருந்து பேசும் வல்லமையை குறித்து வாக்கில் கூறியதை உங்களுக்கு இங்கு நினைவு படுத்துகின்றோம்)




பின் ஆனால் அப்பனே இதுதான் அப்பனே 

இதனால் அப்பனே.....இன்னும் இன்னும் பல சுவடிகள் அங்கங்கே பின் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே!!! அவையெல்லாம் அப்பனே எடுத்து வந்து அப்பனே பின் நிச்சயம் அவரவர் பின் எதை என்றும் அறிந்தும் கூட..... 




இதனால் அப்பனே இப்பொழுதெல்லாம் சுவடிகளை வைத்துக்கொண்டு அப்பனே மனிதருக்காகவே அதாவது பின் அவை இவை என்று பரிகாரங்கள் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றம் தான் மிச்சம் என்பேன் அப்பனே 

ஆனாலும் யாங்கள் எழுதியது உலகத்திற்காகவே என்பேன் அப்பனே...

உண்மை பொருளை கூட அப்பனே பின் எடுத்து வருவோம் என்போம் அப்பனே 

இதை என்று அறிய அறிய இதனால் அப்பனே பொய்யானவற்றையெல்லாம் அப்பனே பின்பற்றி அப்பனே இருப்பின் அழிந்து கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள் என்பேன் அப்பனே

அதாவது கலியுகத்தில் அப்பனே இப்படித்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய கலியுகம் அப்பனே அதாவது தர்மம்... அப்பனே தலைகீழாக போய்க் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே... ஆனால் அப்பனே பின் மேல் நோக்கி யாங்களே நடக்க வைப்போம் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே மனிதன் எப்பொழுதும் கூட அப்பனே நிச்சயம் ஞானியும் எவை என்று கூட ஆக முடியாது.. அப்பனே சித்தனும் ஆக முடியாது பின் ரிஷியும் ஆக முடியாது என்பேன் அப்பனே 

பின் சொல்லிக் கொள்ளலாம் அப்பனே பொய் சொல்லிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே.... யான் சித்தன்!!! யான் மகான்!!!! யான் ரிஷி என்று அப்பனே 

ஆனாலும் ஒரு அப்பனே அதாவது பின் ஒரு வேலையும் அவனால் செய்ய முடியாதப்பா!!
அப்பனே இது கலியுகம் என்பேன் அப்பனே... வரும் வரும் காலங்கள் என்பேன் அப்பனே.... எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!


 இன்னும் அதாவது பின் வள்ளியும் அதாவது அறிந்தும் இவைதன் கூட அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட இதனால் எதை என்று அறிய அறிய...

அதாவது முருகன் அங்கிருந்து!!!!

வள்ளி!!!!!!.................

நீ சென்றாய் அல்லவா!!!! நீயே பார்த்துக்கொள்!! என்று!!!

இதனால் அறிந்தும் எதை என்றும் கூட இதனால் நிச்சயம் அப்பனே

இதனால் பின் நிச்சயம் வள்ளியும் கூட 

முருகா!!!! எதை என்றும் புரிந்தும் கூட அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட.... அதாவது நீ அங்கேயே இரு!!! (திருத்தணி மலையிலேயே)

நிச்சயம் எதை என்றும் அறிந்தும் கூட அதாவது உந்தனுக்கு பல வகையிலும் கூட... பின் அகத்தியன் கற்றுக் கொடுத்தானே.....

(முருகனுக்கு குருவாக இருந்து அகத்தியர் பெருமான் கற்றுக் கொடுத்த வித்தைகள்!!


( ஏற்கனவே சபரிமலை வாக்கில் ஐயப்பனுக்கும் குருநாதர் அகத்தியர் பெருமான் தான் குரு ஆக இருந்து கற்று கொடுத்ததை சித்தன் அருள் 1163 ல் வந்துள்ளதை நினைவு படுத்துகின்றோம்)



அகத்தியனை யான் இங்கு வரவழைக்கின்றேன் என்று வள்ளியும். 

அதனால் பின் எதை என்றும் புரிந்தும் கூட இதனால்... வள்ளியும் கூட நிச்சயம் பின் என்னை.. இந்த மலைக்கு அழைத்தாள்! 


யானும்  இங்கு வந்தேனப்பா!!!


வள்ளி!!!
மாமுனிவரே!!! 

எதை என்றும் அறிந்தும் எதை என்று அறிய அறிய அதாவது பின் நிச்சயம் என்னிடத்திலும் அதாவது சுவடியை கொடு!!! அதில் கூட பல மர்மங்கள் எதை என்றும் அறிந்தும் கூட!!

அதனால் யான் எவை என்று செய்வது? என்பதை கூட!!!! 

(வள்ளி தேவி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் சுவடியில் கற்றுக் கொள்கின்றேன் நீங்கள் முருகனுக்கு கற்றுக் கொடுத்ததை போல் எனக்கும் கற்றுக் கொடுங்கள் என்று குருநாதர் இடம் கேட்டார்)


 அதனால்.... முருகன் என்ன சொல்கின்றானோ!!!!! அதைத்தான் நான் கேட்பேன்!! ஆனாலும் நிச்சயம் பல வழிகளிலும் கூட நிச்சயம் முருகனுக்கு பின் அனைத்தையும் நீ கற்றுக் கொடுத்தாய்!!! அல்லவா சுவடிகள் மூலம்!!!

அச் சுவடியை நிச்சயம் எந்தனுக்கும் கொடு!! என்று!!



குருநாதர் அகத்தியர் பெருமான் 


ஆனாலும் பின் யானும் எதை என்றும் அறிய அறிய பின் முருகனிடம் கேட்டு தான் சொல்வேன் என்று அறிந்தும் கூட. 

முருகா!! என்று!! அழைத்தேன் பின் யானும்!!!

ஆனாலும் முருகனும் பின் மாமுனிவரே!!!! அறிந்தும் கூட பின் அனைத்தும் பின் நீ என்ன நினைக்கிறாயோ!!!... அப்படியே ஆகட்டும் என்று!!!

இதனால் பின் வள்ளியிடம் பின் யான் அதாவது இதை வைத்து அதாவது இச்சுவடியை வைத்துக்கொள்!!! இது எப்பொழுதும் உந்தனுக்கு உதவிகரமாக இருக்கும் என்று!!!

இதனால் அப்பனே அறிந்தும் கூட பின் சுவடியை கொடுத்தேன்.. பின் வள்ளியிடமே!!!

இதனால் எப்படி?? எதை என்று அறிய அறிய எப்படி வாழ வேண்டும்????
எப்படி இருந்தால்?? பின் உலகம் அறிந்தும் கூட!!... எதை என்று அறிய அறிய!!

 ஆனாலும்!!

ஒரு நொடியில் எதை என்று அறிய அறிய அனைத்தும் பின் முருகனால் செய்ய முடியும்!!!

ஏன்?? இங்கு செய்யவில்லை?? என்று!! யோசித்தீர்களா!!!!!!

எதை என்றும் அறிய அறிய இதனால் எவை என்றும் அறிய அறிய.... பக்திக்கு பின் நிச்சயம் வந்து விட்டாலே!!!! அன்பு தான்... மிக மிக பின் பலம்..... அறிந்தும் கூட வேறு எதுவுமே பலமில்லை!!!!

அப்படி பின் அங்கு வேறு ஏதாவது பலம் இருந்தால் அவ் பலத்தை இறைவனே அகற்றி விடுவான்...

ஆனால் மன்னனும் பின் போக போக கவலையுற்றான்!!! அறிந்தும் கூட!!!

ஒரு பெண் இப்படி செய்து விட்டாளே!! என்று!! அறிந்தும் அறிந்தும்!!!

இதனால் நிச்சயம் இதை என்றும் புரிந்தும் கூட... இதனால் வெவ்வேறாகவே வந்து வந்து வலங்கள்!!

இதனால் அவ்வரசனும் அதாவது பின் எதை என்றும் புரிந்தும் கூட இதனால் நிச்சயம் முருகனையும் கூட யாரும் வணங்கவில்லை என்று... எதை என்று புரிய 

இதனால் நிச்சயம் அதில் (வள்ளி தேவியிடம் இருக்கும் சுவடியில்) சில சில விஷயங்கள் யான் எழுதினேன்!!!

ஆனாலும் கையில் மட்டும் பிடித்துக் கொண்டாள் வள்ளி சுவடியை.... அவ்வளவுதான்...

மீதி எல்லாம் முருகா!!! அறிந்தும் கூட பின் அதாவது பின் நீயே என்று கூட!! நீயே வா!! என்று கூட!!! யான்!!

(வள்ளி தேவி சுவடியை பிடித்துக் கொள்ள குருநாத ரகசிய பெருமான் முருகா நீயே இங்கு வரவேண்டும் என்று எழுதினார்)



இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் மீண்டும் பின் மன்னனும் பின் புலவர்களையும் கூட பின் காவலாளிகளையும் கூட அழைத்து நிச்சயம் அறிந்தும் கூட பின் நிச்சயம்... அதாவது எந்தனுக்கே திருத்தலங்கள் அமையுங்கள் என்றெல்லாம்..

அதாவது பின் யான் தான் இருக்க வேண்டும் இங்கெல்லாம்... வேறு எவரும் இருக்கக் கூடாது என்று..

இதனால் பின் வள்ளிக்கும் அறிந்தும் எதை என்றும் கூட கோபம்.... எதை என்று புரிய..


ஆனால் நிச்சயம் பின் அரசனுக்கு எதிரே நின்றாள்!!!

பின் மன்னனே!!!!... வேண்டாம்!!!!

யான் அறிந்தும் கூட அதாவது வேண்டாம்... எதை என்றும் அறிய அறிய நிச்சயம்... ஒரு பொழுதும் பின் நிச்சயம் மனிதனால் நிச்சயம் எதை என்று எதையும் செய்ய முடியாது. 

அதாவது சாதாரணமாக பின் இறைவனை நீ அதாவது நீதான் இறைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாய் அல்லவா!!!!

நிச்சயம் பின் உன்னால்... என்னை என்ன செய்ய முடியும்??? என்று கூறு!!

அதாவது பின் மன்னனுக்கும் கோபம் வந்தது..... பின் இப்பொழுது உன்னை அழிக்கின்றேன் இங்கே என்று!!!

பின் அதாவது யாருமே வேண்டாம்... காவலாளியை வைத்து உன்னை அடிக்கின்றேன்... என்று நிச்சயம்... அறிந்தும் கூட.... காவலாளிக்கு பின் அதாவது உத்தரவிட்டான். 

இவள்தனை பின் அதாவது கொன்றுவிடு என்று...

பின் அதாவது கத்தியை பின் வீசினான் காவலாளி!!!!

ஆனால் காவலாளியின் கைகள் பின் அப்படியே நின்று விட்டது!!!!

ஆனாலும் அனைவருமே வந்து விட்டனர் அறிந்தும் கூட எதை என்றும் புரிந்தும்... எதை என்று கூட யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

(அனைவரையும் உறைந்து நிற்கச் செய்து விட்டார் வள்ளி தேவி)


மீண்டும் வள்ளி மன்னனை பார்த்து 

மடையனே... அதாவது மன்னனே... பின் யார்?? என்று அறிந்தும் கூட... அதாவது பின் உன் மக்களை(மன்னனின் ஆதரவாளர்கள்) அறிந்தும் கூட இங்கேயே... யான் நிற்கின்றேன்!!! அதாவது உன் காவலாளிகளும் சரியில்லை!!! நிச்சயம் யாரும் சரியில்லை!! என்று!! 

அதனால் அங்கங்கே நிற்க வைக்கின்றேன் என்று!!!


(அரசனின் ஆதரவாளர்கள் அனைவரையும் அப்படியே உறைந்து போக செய்துவிட்டார் வள்ளி தேவி)




மன்னனே அறிந்தும் எதை என்று அறிய அறிய பின் மன்னன் மட்டும் அங்கே நின்றான்..

மன்னா???... நான் தான் இறைவன் என்று சொன்னாயே!!! உன்னால் என்ன செய்ய முடிந்தது??? இப்பொழுது பார்!!! என்று!!

அதனால் பின் நிச்சயம் பொதுமக்கள் அனைவரும் ஓடோடி வந்தனர்... அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட.. பின் அதாவது எதை என்றும் அறிந்தும் கூட இதனால் 

மன்னா!!!!.... உன் வாயால் சொல்லிவிடு!!!!
நிச்சயம் இறைவன் தான் பெரியவன் என்று!!!


பின் அதாவது மன்னனும் யான் சொல்ல மாட்டேன் என்று. 

வள்ளி தேவி 
ஆனாலும் இன்னும் அதாவது தரைமட்டமாக போகின்றது உன் அரண்மனை என்று!!! சொல்லி பின் மன்னனின் அரண்மனையை தரைமட்டம் ஆக்கினாள்..... நிச்சயம் வள்ளி!!

இதனால் மன்னன் மட்டும் தனியாக அறிந்தும் கூட இதனால் அனைவரும் ஒன்று கூடி விட்டனர்...

ஒரு பெண் அதாவது வள்ளி தான்... என்று யாரும் பின் அறிந்தும் கூட பின் சொல்லவில்லையே என்று அறிந்தும்... தெரியவில்லையே என்று... என்றெல்லாம் 

 நிச்சயம் வந்து இதனால் நிச்சயம் முருகன்தான் இங்கு எதை என்றும் அறிய அறிய அனைத்து விளையாட்டையும் என்று 

இதனால் நிச்சயம் மன்னா!!!
அறிந்தும் எதை என்றும் புரிந்தும்... இவை என்று கூட இதனால்... இறைவன் தான் மிகப்பெரியவன் என்று ஒத்துக் கொள்கின்றாயா??? என்ன!!!
அப்பொழுதுதான் பின் நிச்சயம் என்று 

ஆனால் மன்னனும் பின் மௌனம் காத்தான் !!! இறைவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டான்! 

இதனால் மீண்டும் மக்கள் அனைவருமே.... முருகா முருகா என்றெல்லாம் பின் ஓடோடி வந்தார்கள்.... மலையின் மீதெல்லாம் ஏறி ஏறி பின் முருகனை வணங்கத் தொடங்கினார்கள். 

இதனால் பின் முருகனும் அறிந்தும் எதை என்றும் அறிந்தும் கூட இதனால்... இன்னும் மலைகளில் ஏறி ஏறி நிச்சயம் அப்பனே எதை என்று அறிய முருகனும் பின் காட்சியளித்தான்... நிச்சயம் பெருமான் போலே!!!!(முருகன் பெருமாளை போன்று தரிசனம் கொடுத்தார்) 

இதனால் அனைவரும் மக்கள் மனதில் முருகனும் பெருமானும் ஒன்றே என்று!!! பின் அவரவர் விருப்பப்படி பின் அறிந்தும் கூட வணங்க தொடங்கினார்கள்! 

ஆனால் வந்த பெண் யார்?? என்று கூட !!! பின் வள்ளி என்று கூட யாருக்கும் தெரியவில்லை.... உடனே வள்ளியும் மறைந்தாள்!!!

இதனால் எங்கு அந்தப் பெண் என்று தேடினார்கள்....

பின் அழகாகவே அறிந்தும் கூட.... அறிந்தும் கூட இவ்மலையில் வந்து நின்றாள் அப்பா!!!

(கந்தக்குறவள்ளி மலை எதிரில் இருந்த சிறையில் அடைத்திருந்த மலையிலிருந்து இந்த மலைக்கு வள்ளி தேவி வந்து விட்டார்)

கந்தக்குற வள்ளி மலை வாக்கு பாகம் மூன்றில் தொடரும்

 சித்தன் அருள் - 1821 - அன்புடன் அகத்தியர் - கந்தக் குறவள்ளி மலை வாக்கு - 3!

                             

                                

கந்த குற வள்ளி  மலைவாக்கு பாகம் 3 தொடர்கின்றது 

பின் வள்ளி அழகாகவே அறிந்தும் கூட இவன் மலையில் வந்து நின்றாளாப்பா!!! சுவடியோடு அழகாகவே!!! அமர்ந்து நிச்சயம் தியானங்கள் மேற்கொண்டு...யான் இங்கு தான் இருப்பேன்.... நிச்சயம் பின் வரப்போவதில்லை... அதாவது மக்களை காப்பாற்றி விட்டேன்.... இனிமேலும் நிச்சயம் யான் அங்கு வரப் போவதில்லை !!

(அதாவது வள்ளி தேவி இந்த மலையிலேயே தங்கி விடுகின்றேன் திருத்தணி மலைக்கு மீண்டும் வரப்போவதில்லை என்று முருகனிடம் இங்கிருந்தே சொல்லிவிட்டார்)

முருகன் இங்கு வந்தான்!!! அதாவது பிள்ளையோனும் (கணபதி ) இங்கு வந்தான்!! அதாவது பின் சித்தர்களும் கூட வந்தார்கள்... அனைத்து சித்தர்களும் கூட.. அறிந்தும் எதை என்று கூட... தேவாதி தேவர்களும் கூட இங்கு வந்தார்களப்பா..

இதற்கு சிறப்பு.... தனியான சிறப்பு உண்டு என்பேன் அப்பனே... பின் இவ் ஊருக்கே என்பேன் அப்பனே... அதாவது சுற்று வட்டார பகுதிகள் கூட... அனைவரும் இங்கு வந்தார்களப்பா..

அதனால் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே... சற்று பின் அப்பனே அதாவது ஆடியது என்பேன் இவ் மலைகள் எல்லாம் அப்பனே!!!

(அனைவரும் இந்த மலைக்கு வந்து விட்டனர் இந்த மலை அப்படியே அசைந்தது) 

இன்னும் அப்பனே யான் அறிந்தும் கூட அதாவது அசையாமல் இருக்க அப்பனே பின் இன்னும் எதை என்று அறிய அறிய மலைகளை உருவாக்கினேன் என்பேன் அப்பனே.... இதனால் பெரும் மலைகள் அப்பா... இதனைச் சுற்றி!! சுற்றி!!!

(இந்த மலையை சுற்றிலும் பெரிய பெரிய மலைகள் இருக்கின்றது இவை அனைத்தும் குருநாதர் அகத்தியர் பெருமான் உருவாக்கினார்)

இதனால் அப்பனே தேவர்களும் அங்கும் இங்கும் வந்து பின் வள்ளியை கூட அறிந்தும் கூட பின் நிச்சயம் எதை என்று அறிய அறிய.. எதை என்று கூட பின் அதாவது அப்பனே பின் எதை என்று அறிய அறிய...

ஆனாலும் விட்டு அதாவது இங்கு விட்டு மனம் வரவில்லை.

( இந்த இடத்தை விட்டு செல்வதற்கு வள்ளி தேவிக்கு மனம் வரவில்லை).

இவ் காடுகளிலும் மலைகளிலும் வள்ளி தெய்வானைக்கு நிச்சயம் பின் அறிந்தும் கூட 

தெய்வானை எதை என்று கூட அப்பனே!!

நிச்சயம் வள்ளி தெய்வானை என்றெல்லாம்... ஏன் குறிப்பிடுகின்றீர்கள்???... என்றெல்லாம் அறிவு...

இன்னொரு பின் சக்தி பின் எவை என்றும் அறிய அறிய மூலாதாரம்... எவை இங்கு என்றெல்லாம்... வரும் வரும் காலத்தில் யான் எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே...


ஆனால் தெரியாத மனிதனோ 
நிச்சயம் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே.... பின் இரண்டு என்றெல்லாம் அப்பனே!!! பொய் பேசி கொண்டிருக்கின்றான் அப்பனே... பின் மனிதனப்பா!!!

(முருகனுக்கு இரு மனைவிகள் என்று)


மனிதனுக்கு இன்னும் அறிவுகள் பின் நிச்சயம் குறைந்து கொண்டே போய்க்கொண்டே இருக்கின்றது கலியுகத்தில் என்பேன்!!! பைத்தியக்காரனாக திரிவான் என்பேன் அப்பனே!!!

உலகம் அதாவது அப்பனே எதை என்றும் அறிய அறிய..புவி தன்னும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே சுற்றும் விசை குறைவாகும் பொழுது அப்பனே பின் கடலில் உள்ள தண்ணீர் எல்லாம் வெளியே வரும் என்பேன் அப்பனே...இவ் மலைகள் எல்லாம் அப்பனே சாய்கின்ற பொழுது அப்பனே எவை என்று கூட மனிதன் அழியப்போவது உண்மையப்பா!!.... பைத்தியக்காரனப்பா!!!

இவை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே... இவையெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய விவரமாகவே இன்னும் அப்பனே...இவ் தேசத்தை காப்பாற்றவே அப்பனே சித்தர்கள் யாங்கள் எதை என்றும் அறிய அறிய 

இதனால் அப்பனே அழகாகவே அப்பனே அனைத்தும் முனிவர்களும் கூட அப்பனே இங்கு இருக்கின்றார்களப்பா

இப்பொழுது கூட இதனை சுற்றி தவங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றார்களப்பா!!

இதனால் அப்பனே மனிதனால் முயற்சிகள் மட்டுமே!!!!

ஆனால் எப்பொழுது எதை பின் எப்பொழுது யாங்கள் ஏற்க வேண்டும்??? என்பவை எல்லாம்... எங்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!!

(மனிதர்கள் என்னதான் முயற்சி எடுத்தாலும் முயற்சி முயற்சியாக மட்டும் இருக்கும் அதை பரிசீலித்து ஏற்றுக் கொண்டு அருள் புரிவது சித்தர்கள் கையில் !!சித்தர்கள் எடுக்கும் முடிவில் தான் உள்ளது)




அப்பனே யாங்கள் பல மனிதர்களையும் பார்த்து விட்டோம் அப்பனே.... திருத்தலத்தை அமைக்கின்றார்கள் என்பேன் அப்பனே... கடும் முயற்சி எடுத்து...

ஆனாலும் அப்பனே பின் திருத்தலத்தை எப்பொழுது அமைத்தால் நன்கு என்பவை எல்லாம்..தாங்களே அறிவோம் என்பேன் அப்பனே...

அதனால் யாங்கள் அழகாகவே தொந்தரவு இல்லாமல் இங்கு இருக்கின்றோம்... அப்பனே 

அவ்வளவுதான் என்பேன் அப்பனே 

மனிதன் அப்பனே பின் அதாவது பின் தொந்தரவு எவை என்று அறிய அறிய வந்து விட்டால் அப்பனே... அதாவது இக்கலி யுகத்தில் இன்னும் இன்னும் அப்பனே... எவை என்று கூட பின் அதாவது அனைத்தும் செய்து விட்டு தான்... திருத்தலத்திற்கு எல்லாம் வருவான்
 என்பேன் அப்பனே

அவ் திருத்தலத்தை அப்பனே அதாவது... இப்பொழுதெல்லாம் திருத்தலத்தை அப்பனே பின் எதை என்று அறிய அறிய கட்டுகின்றார்கள் என்பேன் அப்பனே...


ஆனாலும் அப்பனே சரியான மனிதர்களை இறைவனே அழைப்பான் என்பேன் அப்பனே...

ஆனால் அப்பனே புத்தி கெட்ட மனிதன் வாருங்கள் வாருங்கள் என்றெல்லாம் அப்பனே அதாவது தீய செயல்களை எல்லாம் செய்திட்டு பின் வந்தார்களென்றால் அப்பனே....அக் கர்மா அப்பனே எவை எங்கு அதாவது அவ் பாவம் கட்டியவனுக்கே சேரும் என்பேன் அப்பனே!!!!

(மனிதர்கள் புதிது புதிதாக அமைக்கும் ஆலயங்களுக்கு அனைவருக்கும் அழைப்புகள் கொடுத்து வரவழைத்தாலும் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் தீய செயல்கள் செய்துவிட்டு ஆலயங்களுக்கு வந்தால் அந்தப் பாவம் கர்மா அந்த ஆலயத்தை கட்டியவருக்கு சேரும் 

எங்கெங்கு சக்திகள் விழுகின்றது கதிர்வீச்சு விழுகின்றது என்பதை எல்லாம் சித்தர்கள் ஆராய்ந்து இறைவன் தானாக எழும்பிய கோயில்கள் ஆகட்டும் சித்தர்கள் அமைத்த கோயில்கள் ஆகட்டும் மனிதர்களுடைய கர்ம வினையையும் பாவத்தையும் நீக்கும் வல்லமை படைத்தது. 

ஆனால் மனிதர்கள் சுய நலமாக இதை ஒரு தொழிலாக பக்தியை வியாபாரமாக பார்த்துக் கொண்டு ஆலயத்தை கட்டி அங்கு வரும் மனிதர்களின் பாவ கர்மா வினைகளையும் அவர்கள் சேர்த்துக் கொள்கின்றார்கள் 


இறைவன் தானாக இருந்த ஸ்தலங்கள் அதாவது சுயம்பு சித்தர்கள் கதிர்வீச்சை கவனித்து எழுப்பிய ஸ்தலங்கள் இதில் சித்தர்கள் சில மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களே அனுமதி கொடுத்து ஆலயம் எழுப்ப உத்தரவு கொடுத்திருப்பார்கள்....

 உதாரணத்திற்கு ராஜராஜ சோழனுக்கும் நெடார் பிரம்மபுரீஸ்வரர்...
சித்தன் அருள் 1117..

ராசராசனால்... கட்டப்பட்டதே இதனையும் கூட ...( ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட சிவாலயம்) 

நன்று!!!  இதை உணர்வதற்கு!!! 

ஆனாலும் விளக்கங்கள் ஓர் முறை என்னை (அகத்தியரை) நாடினான் ராச ராச சோழன். 




மகேந்திரவர்ம  பல்லவன் வன்னிவேடு புவனேஸ்வரி அகத்தீஸ்வரர் சக்தி ஆலயம்
சித்தன் அருள் 1164 குருநாதர் அகத்தியர்.

சப்தரிஷிகள் எழுப்பிய திருத்தலங்கள்.

சித்தன் அருள் 1181



விக்கிரமங்கலம் மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில்.
பாண்டிய மன்னன்.

 திருமூலர் வாக்கு கொங்கணர் சித்தர்

சித்தன் அருள் 1149
கொங்கணனுக்கு மனதில் தெரிந்துவிட்டது

யாரோ!!! ஒருவன் வந்து நம்தனை  நாடுகிறான் உதவிக்கு என்று கூட... 

ஆனாலும் இதையன்றி கூற கொங்கணன் மறைமுகமாகவே ஈசனிடம் உரையாடினான். 

ஆனாலும் வந்திருப்பது நல்லவனே!!!!! 

கொங்கணன்!! கண்ணைத் திறந்து பார்த்தான் ..

மன்னா!!!  எவை வேண்டும்?? சொல்!!!! 

ஆனாலும் இவ்வுலகத்தில் நியாயங்கள் நீதிகள் இல்லை!!!!

இதனையே யாங்கள் மேற்ப்படுத்த,  மேற்ப்படுத்த இவை என்றுமே அழியாத அளவிற்கு கூட ...எவையென்று ஓர் திருத்தலம் அமைக்க வேண்டும்....அது எவையென்று.  ...
கொங்கணன் விருப்பப்படியே அவ் அரசன் ஒவ்வொன்றையும் அழகாகவே எதையன்றி ஆனாலும்.... இதற்கெல்லாம் தகுதி படைத்தவன் கொங்கணனே!!!



மானகௌசிகேசர் ஆலயம், அகரம். ஆலங்குளம்.

சித்தன் அருள் 1152

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஈசனே ஆட்கொண்டு திருத்தலத்தை அமை !! என்று உத்தரவு இட்டு பாண்டிய மன்னன் குருநாதர் அகத்தியர் பெருமானிடம் ஆலோசனை கேட்டு எழுப்பிய ஆலயம்.
மன்னா!!!!!

எதையன்றி கூற நீ மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கின்றாயா!!!! அதனால் யான் இங்கேயே இருக்கின்றேன்.... எந்தனுக்கு எதையன்றி கூற இங்கே பல பல உருவங்களை எப்படி என்பதை கூட உன் கனவிலே செப்புகின்றேன் அதனை இங்கே தலம் அமைத்தால் நீ எண்ணிய எண்ணங்கள்!!!! உன் மக்களும் நலமடைவார்கள் வெற்றி பெறுவார்கள் பல நோய்களும் பின் நிச்சயம் ஒழிந்துவிடும்.

பாண்டியன் எதை என்று கூற அகத்திய முனிவரே!!!!  எதையென்று எவற்றையென்று கூற உணராமலே... எதையென்று கூற ஈசனை விட்டு விட்டேனே.... இப்பொழுது என்ன செய்ய வேண்டும் !!??என்று கூட...

பின் எதையன்றி கூற நீதான் எந்தனுக்கு வழிகள் காட்ட வேண்டும் என்றுகூட என்னிடத்தில் வந்துவிட்டான்!!!

ஆனாலும் பொறு மகனே எந்தனுக்கு எதை என்று கூற அனைத்தையும் யான் சொல்லித் தருகின்றேன்!!!
அவ்வாறே தலத்தை அமை!! என்று.


அடியவர்களே உதாரணத்திற்கு மேற்கூறிய ஐந்து ஆலய வாக்குகளையும் மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

சித்தன் அருள் என்று கூகுள் இல் பதிவு எண்களை டைப் செய்தால் சம்பந்தப்பட்ட வாக்குகள் வரும் மீண்டும் ஒருமுறை படித்து இறையால் சித்தர்களால் உத்தரவு இடப்பட்டு அமைத்த கோயில்கள் பற்றிய முழு விபரங்கள் தெரியவரும்.

சரியான மனிதர்களை இறைவனே அழைப்பான் என்று குருநாதர் அகத்தியர் பெருமான்  இந்த வாக்கில் மேற்கூறிய வாக்கின் பொருள் புரியும்.




இறைவனும் சித்தர்களும் அமைத்த கோயில்களுக்கும்

மனிதர்கள் எழுப்பிய கோயில்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளுங்கள் 

பலனையும் தெரிந்து கொள்ளுங்கள்)

அதனால்தான் திருத்தலங்களை கட்டுபவனக்கு அப்பனே கஷ்டங்கள் வருகின்றதப்பா!!!

இதை யாரும் அறிவதில்லை என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே பின் தெரிந்து கொள்ளுங்கள்!!!
ஏன்?? கர்மா.. என்றெல்லாம் அப்பனே!!

இதனால் அப்பனே வள்ளியே நிச்சயம் அமைத்துக் கொடுப்பாளப்பா.. இத்திருத்தலத்தை.. நன் முறைகளாகவே அப்பனே... மெது மெதுவாகத்தான் நடக்குமப்பா!!!

அப்பனே பல தடை தாமதங்கள் வருமப்பா!!!

 ஆனாலும் யாங்கள்  இருக்கின்றோம்... அப்பனே சரியாகவே அப்பனே கந்தனும் இங்கு இருக்கின்றான் அப்பா!!! 


கந்த குற வள்ளி மலை வாக்கு பாகம் 4 ல் தொடரும்

 சித்தன் அருள் - 1822 - அன்புடன் அகத்தியர் - கந்தக் குறவள்ளி மலை வாக்கு - 4!

                                          

                            

                        

                          

                       


                                                


கந்த குற வள்ளி மலைவாக்கு பாகம் 4.. தொடர்கின்றது 

வணக்கம்  அடிவர்களே

கந்த குற வள்ளி மலை வட்டமலை. 
தேவ சமுத்திரத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 
கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம்.635001. 

இந்த மலையில்.. திரு. காவி சுப்பிரமணிய சுவாமிகள்... ஒரு அறக்கட்டளையை நிறுவி இந்த மலையில் ஆலயம் எழுப்புவதற்காக முயற்சிகள் எடுத்துக் கொண்டு வருகின்றார். 

2016 வரை சுயம்பு வழிபாடு அதாவது உருவ வழிபாடு இல்லாமல் மலைக்குறவர் இன மக்களால் குலதெய்வ வழிபாடாக தலைமுறைகளாக வழிபாடுகளும் பூஜைகளும் செய்யப்பட்டு வந்தது. 

2017 ஆம் ஆண்டு முதல் கட்டமாக வள்ளி அம்மனின் சிலையை நிறுவி திருவிழாக்கள் பூஜைகள் செய்து வருகின்றனர்.

2020 ஆண்டில் முருகர் சிலை சிவலிங்கம் பைரவ மூர்த்தி ஆஞ்சநேயர் நந்தி மயில் விக்கிரகங்களும் அமைக்கப்பட்டு பூஜை புனஸ்காரங்கள் நடந்து வருகின்றது.

குருநாதர் இந்த ஆலயத்தில் வந்து வாக்குகள் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விண்ணப்பம் வைத்து அதன்படி குருநாதர் உத்தரவு தந்து அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா இந்த மலைக்கு சென்று வாக்குகள் படித்தார். 

அப்பொழுது இந்த ஆலயத்தை அமைப்பதற்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்கும் முதன்மை பொறுப்பாளராக இருந்து துறவறம் பூண்டு சேவை செய்து வரும்... காவி சுப்பிரமணிய சுவாமி இவருக்கு குருநாதர் தந்தருளிய வாக்கு...

ஆனாலும் யாங்கள் இருக்கின்றோம் அப்பனே சரியாகவே அப்பனே கந்தனும் இங்கு இருக்கின்றான் அப்பா!!

கவலையை விடு அப்பனே!!!

முனீஸ்வரன் கூட அப்பனே உன் மேல் இறங்குவான் அப்பா வாக்குகளும் சொல்வானப்பா 

இப்பொழுது ஒரு வாக்கைச் சொல்!!!!

(குருநாதர் அகத்தியர் பெருமான்... அவரிடம் சுவடியில் அவருக்கு அப்பொழுது ஒரு உத்தரவை கொடுத்தார் உன் உடம்பில் முனீஸ்வரன் இறங்குவான் இப்பொழுது உன் வாயால் ஒரு வாக்கை சொல்ல வேண்டும் என்று குருநாதர் உத்தரவிட்டார்) 

அந்த அடியவரும்...... குருவே நமஸ்காரம்.... அடியவன் உடம்பில் வால் முனி... எனும் முனீஸ்வரன் அடிக்கடி இறங்குவார் அவ்வப்பொழுது வாக்குகளும் சொல்வார்.... என்று கூறிவிட்டு 

அனைவரையும் பார்த்து நீங்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அம்மாவின் பரிபூரண ஆசிகள் என்று கூறினார். 

ஆனால் குருநாதர் அகத்திய பெருமான்

அப்பனே அறிந்தும் கூட அப்பனே இவை இல்லை ... இன்னும் சொல்!!!!

அடியவர்.

மௌனமாக முனீஸ்வரனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது 

குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை நீ சுமக்கின்றாய்? என்பேன் அப்பனே.... நிச்சயம் இங்கு ஒருவன் இருக்கின்றானப்பா!!! தரித்திரம் பிடித்தவன்... அவனை நீ முதுகில் ஒரு அடி அடிக்க வேண்டும் நீ அப்பனே 

(மலையில் குருநாதர் வாக்கு நல்கும் பொழுது அந்த மலையைச் சேர்ந்த பக்தர்களும் ஆலய அறக்கட்டளையை சேர்ந்த நபர்களும் இருந்தனர்.... காவி சுப்பிரமணிய சுவாமிகள் பார்த்து உங்கள் கூட்டத்தில் ஒருவன் தரித்திரம் பிடித்தவன் இருக்கின்றான் அவனை உன் கையால் ஒரு அடி அடிக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்) 

அப்பனே அதாவது உன்னிடத்தில் இருந்து அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் எதை என்று அறிய அறிய பார்!!!

(அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் பக்கத்தில் இருப்பவரை சரியாகப் பார் என்று குருநாதர் கட்டளை) 

அடியவரும் ஒரு மனிதரை அதாவது பக்கத்தில் இருந்த ஒரு மனிதரை மெதுவாக ஒரு அடி அடித்தார். 

குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே இதை யான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை!!!

அடியவரும் அந்த மனிதரை மீண்டும் அடிக்க!!!

குருநாதர் அகத்தியர் பெருமான்

அப்பனே அப்படி இல்லை!!! அப்பனே நிச்சயம் எழுந்து நில் அப்பனே!!!

அப்பனே கயிறை எடு !!

(அவரிடம் இருந்த சாட்டை கயிற்றை )

எப்படி அடிக்கின்றாயோ அப்படி  போடு!!! அவன் மீது!!!அவனை அடி!!... தீய சக்திகளெல்லாம் அவன் மேல் இருக்கின்றது அவையெல்லாம் போகட்டும் அடி!!!

அவரும் அருகில் இருந்த மனிதரை படார் படார் என்று பலமாக அடித்தார்!!!

குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே... இதை யான் இங்கு உனக்கு ஏன்  சொன்னேன் என்றால்... அவனை அடிக்கச் சொன்னேன் என்றால்  அப்பனே அறிந்தும் எவை என்று... அறிய அறிய அப்பனே.... இவந்தனக்கு ஒரு பெரிய விபத்து ஏற்படப் போகின்றது என்பேன் அப்பனே.... இன்னும் ஓர் நவ தினங்களுக்குள்...

இதனால் அப்பனே அவை ஒழியட்டும் என்று தான் அப்பனே அடிக்கச் சொன்னேன் அப்பனே இதனால் அப்பனே....

(முனீஸ்வரர் வள்ளி முருகன் அருள்  பெற்ற அவர் அடித்ததன் மூலம் விபத்து ஏற்படவிருந்த விதி தரித்திரம் ஒழியட்டும் என்று அவரை அடித்ததால் இவருக்கும் புண்ணியம்)

இதன் மூலம் கூட உந்தனுக்கு புண்ணியமப்பா!!!!! நிச்சயம் அப்பனே உன் பிள்ளைகள் நன்றாகவே இருப்பார்கள் அப்பனே.... அதாவது எதை என்று கூட பின் இவ் முருகனே பார்த்துக் கொள்வான்.. உன் இல்லத்தில் அழகாகவே முருகன் இருந்து பார்த்துக் கொள்வான் அப்பா... கவலையை விடு...

இது போலத்தான் அப்பனே சிலசில புண்ணியங்கள் யானே சொல்வேன் என்பேன் அப்பனே!!!

அப்பனே கவலைகள் இல்லை அதனால் (ஆலயம் ). நீ நினைத்தவாறே அமையுமப்பா!!!

இதனால் அப்பனே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஓர் நாள் நிச்சயம் அப்பனே இங்கு அப்பனே எதை என்றும் அறிய அறிய அதாவது வீடு வீடாக சென்று அப்பனே நிச்சயம் பின் நிச்சயம் முருகனுக்கு அதாவது அன்னத்தை அளிக்க போகின்றோம் என்றெல்லாம் நிச்சயம் அப்பனே பின் தர்மம் ஏந்து!!! என்பேன் அப்பனே... முருகனுக்கு செய்!!! என்பேன் அப்பனே!!

(சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் சென்று முருகனுக்கு அன்னப்படையல் இடுகின்றோம்!! அனைவரும் ஏதாவது தாருங்கள் என்று தர்மம் ஏந்தி அதன் மூலம் கிடைப்பதை கொண்டு முருகனுக்கு படையல் இடச்சொல்லி அவருக்கு குருநாதர் உத்தரவு தந்தார்) 

முருகன் வந்து அழகாக... இங்கு இருக்கின்றான் அப்பா!!! கஷ்டத்தை பார்ப்பான் அப்பா!! இறைவனே அனைத்தும் பின் அதாவது கர்மாக்களையும் கூட நீக்கிவிட்டு... உந்தனுக்கு பக்க பலமாக இருந்து அப்பனே அனைத்தும் செய்து கொள்வான் அப்பனே இறைவனே!!

இதனால் அப்பனே... நீ ஒரு மனித கருவியாக மட்டும் நில்!! போதுமானது!! அப்பனே!!

அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே!!

""""" ஈசனும் !!!! பின் பார்வதி தேவியாரும்!!!... நன்றாகவே அப்பனே இருக்கின்றார்கள் அப்பனே!!!

இன்னும் இன்னும் அப்பனே மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே கவலையை விடு!! அப்பனே!!! உன் எண்ணத்திற்கு தகுந்தவாறே மெதுவாக நடக்குமப்பா!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அதாவது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது..

.யான் சொன்னேனே அப்பனே பின் அதாவது ஒரு காவலாளி வந்து அதாவது அப்பனே பின் அதாவது வள்ளியை அப்பனே கத்தியை எடுத்தானே ஒருவன் வள்ளியை வெட்டுவதற்கு... அவன் நீ தானப்பா!!!

(மன்னன் கட்டளைப்படி வள்ளி தேவியை வெட்ட வந்த பின் உறைந்து நின்ற காவலாளி!

 இப் பிறவியில் காவி சுப்பிரமணிய சுவாமிகள்)


இப்பிறவியில் அவள்தனுக்கே (வள்ளி தேவிக்கு) பின் சேவை செய்ய படைத்துள்ளாளப்பா!! அவ்வளவுதான்!!

இதனால் அப்பனே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அப்பனே... இப்பொழுதும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய நிச்சயம் அப்பனே அக் கத்தியின் ஞாபகம் வந்துவிடும்...

(அவருக்கு இப் பிறப்பிலும் அந்த வாளின் ஞாபகம் அடிக்கடி வந்து விடும்)


(காவி சுப்பிரமணிய சுவாமிகள் 

எனது வீட்டில் ஒரு வாள் இருக்கின்றது... ஆனால் அதை தற்போது நான் தொடுவதில்லை விட்டுவிட்டேன் என்று கூறினார் வாக்கியத்திற்கு இடையே)

அப்பனே கவலையை விடு அப்பனே சில சில தவறுகள் ஆயினும் அப்பனே முருகனே அதையெல்லாம் நீக்கிவிட்டு அனைத்தையும் சரி செய்வான் அப்பனே 


அப்பனே நல் முறையாகவே ஆகட்டும் என்பேக அப்பனே 

இதனால் அப்பனே பின் அனைத்து தெய்வங்களும் கூட பின் இங்கு வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே... சந்தோசமாக  இவ் மலைகளில் சுற்றி விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.

எதை என்றும் புரிய அப்பனே (இறைவன்கள் வந்து விளையாடும்) அவ் நேரங்கள்... உந்தனுக்கு சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் அழகாகவே நடக்குமப்பா!!

அப்பனே நன்முறையாக ஆசிகள் இதனால் எக்குறைகளும் இல்லை அப்பா பரிபூரணமாக அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய... இன்றைய நாளில் அப்பனே முருகனுக்கும் அப்பனே சந்தோசம் என்பேன் அப்பனே. 


அப்பனே பின் குறைகள் இல்லை என்பேன் அப்பனே அதனால் அப்பனே நல் முறையாகவே அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே முருகன் உங்கள் பின் குலங்களை நிச்சயம் கடை நாள் வரையிலும் காப்பான் அப்பா!!

அப்பனே அவள் மட்டுமில்லாமல் அப்பனே முருகனுக்கு பின் சேவை செய்யவே பின் உன் பிள்ளைகள் அப்பனே முருகனே கொடுத்தானப்பா 

அதனால் எவ் வேலை செய்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அவர்களுக்கு எங்கும் வேலை கிடைக்காது அப்பா... முருகனே அனைத்தையும் ஏற்பாடு செய்வான் கவலைகள் இல்லை 


அப்பனே நலன்கள் ஆகவே குறைகள் இல்லை என்பேன் அப்பனே அனைத்தும் நடக்கும் அனைத்தும் நிறைவேறும் எம்முடைய ஆசிகள் அப்பா ஆசிகள்...கடைநாளும்!!! யானும் பார்த்துக்கொள்கின்றேன் அப்பனே யானும் செய்கின்றேன் அப்பனே கவலையை விடு..!!!

அப்பனே இன்னும் இன்னும் பலமாகவே உண்டு உண்டு என்பேன் அப்பனே... அப்பனே அதிக முயற்சி செய்து அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே பல வழிகளிலும் கூட கஷ்டங்கள் பட்டு திருத்தலம் அமைத்தால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே.. பின் யுகங்கள் யுகங்களாக போற்றப்படும் என்பேன் அப்பனே!!!

திடீரென்று அமைந்து விட்டாலும்...!?!?!?!?!?!?!?!...........


அதனால்தான் அப்பனே பின் திருத்தலத்தை அமைக்க கடுமையாக மனிதர்கள் போராடுகிறார்கள் என்பேன் அப்பனே 

அப்பனே இதனால் கவலைகள் இல்லை அப்பனே முருகனே அமைத்துக் கொள்வான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அழகாகவே பின் ஓடி விளையாடிக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே...

அவை மட்டும் இல்லாமல் அப்பனே... பிள்ளையோனும் (கணபதி) அழகாகவே இங்கு எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே!....

அதனால் அப்பனே ஒரு முறை நிச்சயம் எதை என்றும் அறிந்தும் கூட நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட பின் அனைவருமே (இறைவன்கள்) இங்கு வந்துவிட்டனர் என்பேன் அப்பனே!!

ஆனாலும் பிள்ளையோனே நிச்சயம் அறிந்தும் கூட அதாவது.... முருகன் சந்தோஷமாக இருக்கும் பொழுது... பிள்ளையோனை மறந்து விட்டான்  மறந்துவிட்டான். 

ஆனால் பிள்ளையோன்!!

முருகா!!!
என்னை நீ மறந்து விட்டாயா??!! என்று ... 

என்று பிள்ளையோன் நினைத்ததை முருகனுக்கு கேட்டு விட்டது...

இதனால் நிச்சயம் உடனடியாக அறிந்தும் கூட பின் மயில் வாகனத்தை அங்கு அனுப்பி அதன் மேலே வா என்று... அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய திருத்தணிகை மலையில் இருந்து இங்கு வந்தானப்பா !!

இங்கு அழகாக இந்த இடம் பிள்ளையோனுக்கு பிடித்தது.. (பிடித்துவிட்டது) இங்கு அவன் அமர்ந்து விட்டானப்பா!!

ஏது குறை??

அப்பனே ஆசிகள்!! ஆசிகள்!!

அங்கு கூடி இருந்தவர்கள் கோயில் எழுப்புவதை பற்றி கேள்வி எழுப்பிய போது 

அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டேன் சொல்லி விட்டேன் அப்பனே 

முருகனின் விளையாட்டு போகப் போக புரியுமப்பா!!!!

ஆசிகள்!! ஆசிகள்!!

ஆலய கூகிள் மேப் 




அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

சித்தன் அருள் - 1801 - அன்புடன் அகத்தியர் - தர்மபுரி பாப்பாரப்பட்டி சஞ்சீவிராயன் மலைக்கோயில்! - https://tut-temples.blogspot.com/2025/10/1801.html

சித்தன் அருள் - 1175 - அன்புடன் அகத்தியர் - சஞ்சீவிராயன் மலைக்கோயில்! - https://tut-temples.blogspot.com/2025/10/1175.html


சித்தன் அருள் - 1602 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1602.html

சித்தன் அருள் - 1191 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1191.html

அன்புடன் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு - கோவிந்தா.! கோவிந்தா..!! கோவிந்தா...!!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_13.html

 பெருமாளே.! பெருமானே...!!  - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_8.html

 அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post.html

 சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி  - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html

சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html

பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள்  - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html

மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment