இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால்
புரட்டாசி மாதத்தில் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் . குருவின் அருளாலே
குருவின்
தாள் பணிந்து இன்றைய பதிவில் புரட்டாசி மாத சிறப்பு பதிவாக சித்தன் அருள் -
1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! வாக்கினை காண உள்ளோம். இம்மாதம்
நாம் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு பற்றி இதற்கு முன்னர் பதிவு
செய்திருந்தோம். புரட்டாசி மாதம் முழுதும் பெருமாள் வழிபாடு மேற்கொள்ள நம்
குருநாதர் கூறி இருந்தார்கள். எனவே இந்த மாதம் முழுதும் பெருமாள் வழிபாட்டு
மேற்கொள்வோம். இதன் பொருட்டும் இம்மாதம் முழுதும் பெருமாளை பற்றி
சிந்திக்கும் வண்ணம் நம் தளத்தில் பதிவுகள் பகிர குருவருள் நம்மை
வழிநடத்திட வேண்டி பணிவோமாக!
மனிதனாக
பிறப்பெடுத்தால் எப்படி எல்லாம் வாழ்ந்து அப்பனே பின் எப்படியெல்லாம்
பின்னர் அறிந்து பின் எப்படியெல்லாம் புண்ணியங்கள் செய்ய வேண்டும்
என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து சொல்லி கொடுத்து மாற்றி அப்பனே பின்
நிச்சயம் கர்மமில்லா பெரு வாழ்வை நிச்சயம் யானே அளிப்பேன் அப்பனே.!!!!
அதாவது
அப்பனே கடுகளவும் கூட அப்பனே அப்பனே சுத்த சன்மார்க்கத்தை அதாவது ஜீவ
காருண்யத்தை கடைபிடித்து வந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும்
அறிந்தும் ஒரு சிறு குறையும் வராதப்பா!!!!
அப்பப்பா!!!!
இப்படித்தான் உலகம் இருக்கின்றது. இன்னும் வருமப்பா!! காலங்கள்!!!! அதாவது
கலியுகத்தில் இப்படித்தான் இருக்குமப்பா!!! இறைவன் அப்பனே பின் பலபல
வேடங்களில் வருவானப்பா கலியுகத்தில்!!!!
ஆனால் அப்பனே இறைவன் பின் பக்கத்தில் இருந்தாலும் அறிந்து கொள்ள மாட்டான்ப்பா மனிதன் !!!
அப்பனே மனிதன் சொல்வதை கேட்டு அப்பனே அறிந்தும் எதை என்றும் கூட புரியாமல் கூட அவை எவை என்று திரிந்து கொண்டு இருப்பான் அப்பனே!!!
அதனால் தான் அப்பனே முதலில் என் பக்தர்களுக்கு இப்படி இருந்தால்தான்
புண்ணியங்கள் சேரும்!!! பின் இப்படி வாழ்ந்தால் தான்
நிச்சயம்.இப்படியெல்லாம்
கடைபிடித்தால் தான் நிச்சயம் புண்ணியங்கள் வந்து நிச்சயம் கடைநாள் வரை
பின் சந்தோஷத்தை நிச்சயம் தன் வசத்தில் பின் அதாவது தக்கவைத்துக்கொள்ளலாம்.
அப்பனே மனசாட்சி அப்பனே அறிந்தும் கூட அப்பனே அனைவருக்குமே தெரியும்.
அப்பனே மனசாட்சியின் படி நடந்து வந்தாலே தெய்வம் துணையிருக்குமப்பா.!!!
இதனால் அப்பனே நன்மைகள் அப்பனே
இதனால் பக்தியோடு இருங்கள் அப்பனே போதுமானது. கலியுகத்தில் அப்பனே!! எவை
வந்தாலும் பின் அனைத்தும் நல்லதிற்கே என்று நினையுங்கள் . போதுமானது !!!
அப்பனே பின் பெருமானுடைய அனுக்கிரகங்கள் கோடி!!! அனைவருக்குமே அப்பனே!!!
அது தான் அப்பனே யாரையும் குற்றம் சொல்லாதீர்கள் என்பேன் அப்பனே!!!
அவனவன் செய்த புண்ணியங்கள் அவனை காக்கும் !!!
அவனவன் செய்த பின் நிச்சயம் அதாவது பாவங்கள் எவை என்று அறிய அறிய அவனை தாக்கும் என்பேன் அப்பனே
இதுபோலத்தான் அப்பனே ஒரு ஆன்மாவிடத்தில் புண்ணியம் தங்கியிருந்தால் அப்பனே பின் எவரும் ஒன்றும் செய்ய இயலாதப்பா !!!!
அதாவது அப்பனே கடுகளவும் கூட அப்பனே அப்பனே சுத்த சன்மார்க்கத்தை அதாவது ஜீவ காருண்யத்தை கடைபிடித்து வந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் ஒரு சிறு குறையும் வராதப்பா!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment