இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தற்போது ஆடி மாத வழிபாட்டில் நாம் இணைத்துள்ளோம். சிவனும்,சக்தியும் நம் உடலில் இருப்பதாய் சரிபாதியாய் அர்த்த நாரீஸ்வரர் உருவில் நாம் காண்கின்றோம்.சிவம் பெரிதா? சக்தி பெரிதா? என்று கேள்விகள் தொடுப்பதைவிட்டுவிட்டு,சிவம் இல்லையேல் சக்தி இல்லை.சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதே அர்த்த நாரீஸ்வரர் உருவின் தாத்பரியம்.மேலும் இந்த உடலில் வலதுபக்கம் சிவன் என்றும், இடப்பக்கம் சக்தி என்றும் எண்ணலாகா.நம் உடலின் இயக்கத்தில் ஒரு சக்தி பெறுகின்றோம்.அந்த ஆற்றல் திணிவு தான் சக்தி. நாம் தியான யோகத்தில் அல்லது ஒரு அமைதி நிலையில் ஒரு உணர்வு பெறுகின்றோம் அல்லவா? அந்த உணர்வே சிவம். இத்தகு சிறப்பு பெற்ற நம் உடலின் இயக்கமே சிவசக்தி தரிசனம்.
தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.
ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
வாருங்கள்.அம்மன் புகழை ஒலிக்கச் செய்வோம்.
கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html
No comments:
Post a Comment