இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
நம்மை
வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பக்தர்கள் அனைத்து
சிவனடியார்கள் அனைத்து அகத்தியர் பக்தர்கள் ஈசன் தொண்டர்கள் உழவாரப்பணி
செய்யும் குழுக்கள் திருவாசகம் முற்றோதல் செய்யும் குழுக்கள் அனைவரும் இந்த
நிகழ்வில் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனையை ஒற்றுமையாக செய்ய வேண்டும்
என்று வேண்டிக் கொள்கின்றோம்.
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.


No comments:
Post a Comment