"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, November 17, 2022

பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 52 ஆம் ஆண்டு குருபூஜை - 19.11.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது சித்தர்கள் பற்றியும், சித்தர்களின் குரு பூஜை பற்றியும் பேசி வருகின்றோம்.சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது. இன்றைய பதிவில் பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் தரிசனமும், குருபூஜை தகவலும் தர உள்ளோம்.

சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூஜையில் கலந்து கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னப்பிரசாதம் தாத்தா வீட்டில் சாப்பிட்டோம். இதெல்லாம் எளிதாக கிடைக்குமா? அனைத்தும் குருவருளால் மட்டுமே நடைபெற்று வருகின்றது.



முதலில் பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் தரிசனத்தை இங்கே நாம் பெறுவோம்.









உலகப் பற்றுக்களைத் துறந்து மனத்துள்ளே மாயையை நீக்கி உலகத்துக்குப் பணி செய்து, 'மக்கள் பணியே மகேசன் பணி' எனக் கொண்டு.. தொண்டு புரிந்தவரே  ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகள் ஆவார்.

ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ்  சுவாமிகள் 06.12.1882 ஆம் ஆண்டு  விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ரங்கசாமி - மயிலம்மாள்  தம்பதிகளுக்குப் பிறந்த ஆறு மக்களுள் மூத்த மகனாய்ப் பிறந்தார்.

முத்தமிழ் கலைஞர்:-

   அக்கால திண்ணைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்து வரும்போதே தமிழ் மொழியில் அதிக ஆர்வம் கொண்டு  ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டும், பக்திப் பாடல்கள் பாடுவது, ஆன்மீக நாடகங்களில் நடிப்பது என கலை, இலக்கியம்,நாடகம் ஆகியவற்றில் பங்கெடுத்து இயல், இசை,நாடகம் என்னும் முத்தமிழிழும் அதீத புலமை பெற்றவராகவே விளங்கி வந்தார்.
   பக்தி பாடல்களைக் கீர்த்தனைகளாகப் பாடியும்,ஸ்ரீ ரேணுகாதேவி, ஸ்ரீ கங்கை அம்மன் வரலாறுகளைத் தெருக்கூத்து நாடகங்களாகவும் அரங்கேற்றி, மக்கள் மனதில் ஆன்மீக விதைகளை விதைத்து வந்தார்.
   மதுரை தமிழ் சங்கத்தில் ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகளுக்குக் "கவிபாடும் சாற்று மன்னன்"  என்று முத்தமிழ் சங்கத்தினரால் சுவாமிகளைப் பாராட்டிப் பட்டம் வழங்கப்பட்டது.

கலைகளில் ஞானம்:-

   ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ஸ்வாமிகள் தம் 16வது வயதில் சித்தர்கள் பலரை அணுகி அவர்களுக்குத் தொண்டுகள் பல புரிந்து ஜோதிடம், வைத்தியம், மாந்திரீகம் என அனைத்துவித கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
   இந்தியா முழுவதும் உள்ள ஊர்களுக்குச் சென்று நோயுற்ற மக்களுக்கு மூலிகை வைத்தியங்கள் செய்து அவர்களை குணப்படுத்தி  வந்தார்.

ஸ்ரீ குகை நமச்சிவாயர்:-

   சுவாமிகள் தனது 33-ம் வயதில் பல ஞானியர்களிடம் ஞான உபதேசம் பெற்று, காசி வாசி சிவானந்த குருவையும், திருவண்ணாமலை குகை நமசிவாயரையும் குருவாக ஏற்ற சுவாமிகள், இல்லறத்தைத் துறந்து துறவு பூணும் எண்ணத்துடன் அருணையில் ஞான ஜோதி ஏற்றும் திருஅண்ணாமலை குகையினுள்  தவம் மேற்கொண்டிருந்த  குகைநமச்சிவாயரை சந்தித்தே ஆகவேண்டும் என்னும் உறுதியோடு குகையினுள் சென்று அங்கேயே இரவு முழுவதும் தங்கியிருந்தார்.
 குகையினுள் இருந்த குகை நமச்சிவாயர் கண்விழித்து இவருக்கு ஆசி வழங்கி, "உனக்குத் துறவறம் ஏற்க துறவு ஞானம் இல்லை;  இல்லறவாசியாக இருந்து.. இல்லறஞானம் ஏற்று வேண்டுவோர்க்கு வேண்டுவன செய்து அவர்களை வழி நடத்துவாயாக" என்று சுவாமிகளை அவரது இல்லற தர்மத்தைக் கடைபிடித்து ஒழுகும்படி அறிவுறுத்தினார்.



குருவின் ஆணை:-

    சுவாமிகளும் தம் குருவின் ஆஞ்ஞைப்படி தம் சொந்த ஊரான காரணைப் புதுச்சேரி வந்து சேர்ந்து மணமுடித்து இல்வாழ்வினூடே மக்களுக்குச் சித்த வைத்தியம் செய்தும்,ஆன்மீகத் தொண்டாற்றியும், மூலிகை ரகசியங்களைக் கற்றுத் தந்தும், ஞான மார்க்கத்தை உபதேசித்தும் 87 சீடர்களைப் பெற்றார். ஸ்ரீ பெரும்பூதூர் அருகே சுமந்திரமேடு  என்னுமிடத்தில் 32 சென்ட் விளைநிலத்தை ஒரு சீடர் குருதட்சணையாக சுவாமிகளுக்கு வழங்கினார். மற்றுமொருவர் இரண்டு சென்ட் நிலத்தை குருதட்சணையாக வழங்கினார். அவற்றையெல்லாம் சுவாமிகள் அவ்வூரார் நலம் பெற வேண்டி அவ்வூர் மக்களுக்கே அவற்றைத் தானமாக வழங்கி விட்டார்.



ஜீவ முக்தி:-

   ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகள் தமது 87 சீடர்களிடம் தாம் ஜீவமுக்தி அடையும் நாளை முன்னதாகவே அறிவித்தார்.அதன்படி 1970-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் ஜீவ முக்தி அடைந்தார்.  சுவாமிகள் குறிப்பிட்டபடி முக்தி அடைந்ததும் அவரது சீடர்கள் சுவாமிகளைக் காரணைப் புதுச்சேரியில் சுவாமிகளுக்குச் சொந்தமான இடத்தில் மாமரத்தின் கீழ் சமாதி செய்வித்தனர். சுவாமிகளின் கூற்றுப்படி சமாதி செய்வித்தபின்  ஒரு வருடம் கழித்துத் தம் சமாதியைத் திறந்து  பார்க்கும் படியும், அச்சமயம் தனது சரீரம் கெடாமல், உயிரோட்டமாய் இருப்பின் அதனை அபிஷேகித்து, பூஜித்து வழிபட வேண்டும் என்றும் தம் சீடர்களிடம் கூறியிருந்தார்கள்.
  
 அதன்படியே 87 சீடர்களும் ஓராண்டுக்குப் பின் வந்து சமாதியைத் திறந்து பார்த்த போது சுவாமிகளின் தேகம் சிதையாது,அழியாதுஅப்படியே இருந்தது.சீடர்கள் சுவாமிகளுக்கு 108 அபிஷேகங்கள் செய்வித்து,ஆராதனை செய்து வழிபட்டுப் பின் சுவாமிகளின் குடும்பத்தினரிடம் சுவாமிகளைத் தொடர்ந்து பூஜித்து வருமாறு சொல்லிச் சென்றனர் .



சமாதி பீடம்:-

ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகளின் சமாதி பீடத்தில் பஞ்சலோக சிலாரூபமும், சிவலிங்கமும் அமைக்கப்பட்டு பூஜித்து வருகின்றனர். 

பூஜைகள்:-

 ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி வம்சாவளியினர் தொடர்ந்து சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த நட்சத்திரமான கார்த்திகை உத்திரம் நட்சத்திர நாளில் சிறப்பாக குருபூஜை நடத்தியும்,சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு அபிஷேகமும்,அன்னதானமும் செய்து வருகின்றனர். 

பிரார்த்தனை:-

ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகள், தம்மை நம்பி கோரிக்கைகளுடன் வருபவர்கள் தனது ஜீவசமாதி பீடத்தை ஒன்பது முறை சுற்றி வந்து தலத்திலிருந்து பிடி மண் எடுத்துச் சென்று வழிபட்டு வர பிரார்த்தனை நிறைவேறும் என்று திருவாக்கும் உரைத்துள்ளார்கள். சுவாமிகளின் சமாதி பீடத்தை மூன்று தலைமுறையினர் தொடர்ந்து வழிபாடுகள் செய்து வருகின்றனர்.தற்சமயம் சுவாமிகளின் கொள்ளுப்பேரன் ஜீவசமாதி பீடத்தை பூஜித்துத் தொண்டாற்றி வருகின்றார்.


அமைவிடம்:-

சென்னை தாம்பரத்திற்கு அண்மையில் ஊரப்பாக்கம் அருகில் உள்ள காரணைப் புதுச்சேரியில் சுவாமிகளின் ஜீவபீடம் அமைந்துள்ளது.

அனைவருக்கும் குருவருளும் திருவருளும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - 13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/13072022.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 51 ஆம் ஆண்டு குருபூஜை - 29.11.2021 - https://tut-temples.blogspot.com/2021/11/51-29112021.html

பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html





Thursday, November 10, 2022

சோற்றுக்குள் சொக்கன் - அன்னாபிஷேக தரிசனம் பெறுவோம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இங்கே உங்களை இன்றைய பதிவில் சந்திக்கின்றோம். இங்கே நாம் சந்திப்பதில் தாமதம் இருக்கலாம். ஆனால் நம் தளத்தின் அறப்பணிகளில் தாமதம் இருக்கவே இருக்காது. வழக்கம் போல் இம்மாத அறப்பணிகள் மிக சிறப்பாக நம் தளம் சார்பில் குருவருளால் செய்துள்ளோம். இத்துடன் அந்த நாள் இந்த வருடம் கோடகநல்லூர் வழிபாடு மிக சிறப்பாக நடைபெற்றது. குருவருளால் நாமும் நேரில் கலந்து கொண்டு அகத்திய சொந்தங்களை சந்தித்து மகிழ்ந்தோம். இதனையொட்டி நவ திருப்பதி யாத்திரையும் சென்ற சனிக்கிழமை நம் தளம் சார்பில் 11 அன்பர்களோடு சிறப்பாக மேற்கொண்டோம். இவற்றையெல்லாம் தனிப்பதிவில் விரைவில் தருகின்றோம்.

ஆங்கில மாதக் கணக்கில் பார்க்கும் போது புதிய மாதமாக நவம்பர் மாத சேவைகளை நம் தளம் சார்பில் குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டுள்ளோம். இம்மாத அறப்பணிகளை தங்கள் பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் 

2. எத்திராஜ் சுவாமிகள் குரு பூஜை சேவை 

3. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை 

4. எண்ணெய் - 1 டின் உபயம் 

5. வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு அன்னசேவை 

6. திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆயில்யம் சந்தனக்காப்பு 

7. கலிக்கம்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மலர் சேவை 

8. ஸ்ரீ சிவகுரு மடம் சிறு காணிக்கை 

இவை மட்டுமின்றி அவ்வபோது நமக்கு கிடைக்கும் செய்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை குருவருளால் செய்து வருகின்றோம்.இவ்வாறு நம் தளம் சார்பில் குருவருளால் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து வருகின்றோம். 

இனி சோற்றுக்குள் சொக்கன் தரிசனம் காணலாமா?


திருமண வரம், பிள்ளை வரம் அருளி  தீரா நோய்கள்    தீர்த்தருள் செய்து அருள் பாலிக்கின்ற மதுர நூக்கம்பாளயம் ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தீஸ்வர பெருமான் அன்னாபிஷேகத்தில் உற்ற தந்தையும் தாயுமான இறை.



சென்னை ஊரப்பாக்கம் எத்திராஜ் சுவாமிகள் கோயிலின் அடுத்து தரிசனம் பெற உள்ளோம்.






சென்னை பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் அன்னாபிஷேகம் பூஜையின் சில முக்கிய நிகழ்வுகளை இங்கே பகிர்கிறோம்.அனைவருடைய மனதிலும் சத் -குரு சதானந்த சுவாமிகளின் அருள் பரவட்டும்.


















மதகரம் சிவன் கோயில் அன்னாபிஷேகம் 


அடுத்து நத்தம் ஸ்ரீ திருவாலீஸ்வரர் அன்னாபிஷேக அலங்காரம் காண உள்ளோம்.







ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம், சிவபுரம் சிவ சிவகுருநாத சுவாமி மற்றும் அழகாம்பிகா அம்பாள் சந்நிதானத்தில் சிறப்பாக நடந்தது







அடுத்து பெரியாண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற அன்ன அபிஷேக காட்சி காண உள்ளோம்.






அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், நடுமாதாங்கோவில் தெரு, தென்காசி.
கோவில் சிவபெருமான் அன்னாபிஷேக திருக்காட்சி!




சென்னை கந்தாஸ்ரமம் அன்னாபிஷேகம் அதனை தொடர்ந்து அபிஷேகம் முடிந்து விசேஷ அலங்காரம் 



கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அன்னாபிஷேகம் திருக்காட்சி! உதவிய அனைத்து அடியார்களின் பாதங்களை வணங்குகின்றோம்.


சென்னை சாலிகிராமம் ஸ்ரீ காவேரி விநாயகர் ஆலயம் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி அன்னாபிஷேகம் திருக்காட்சி


ஓம் கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமியே நமஹ! ‌. அன்னக்காப்பு அலங்காரத்தில் கசவனம்பட்டி ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள்






மேலும் பல சிறப்பு தரிசன அருள்நிலைகளை இங்கே பகிர உள்ளோம்.













பௌர்ணமி அன்னாபிஷேகம் தரிசனம் இங்கே பார்க்கும் போது, 
என்ன தவம் செய்தாயோ! அன்னமே (அரிசி)!
எத்தனை யுகம்  காத்திருந்தாயோ 
அன்னமே என் தலைவனை தழுவ 
அடுத்த ஜென்மம் (வேண்டாம்) 
இருந்தால் என் தந்தையை தழுவிய அரிசியாக பிறக்க வேண்டும். 
இன்று அன்னபிஷேகத்தில் ஒட்டி இருந்த ஒவ்வொரு பருக்கையும் லிங்கம் தான் 
என்று உணர்த்தப்பட்டோம்.

இன்னும் பல தரிசன அருள்நிலைகளை தொடருவோமா?

                                                 தேவ வன்னீஸ்வரர்,சின்ன காஞ்சிபுரம் 



கொளத்தூர் ஸ்ரீ வில்வநாயகி சமதே  ஸ்ரீ துளஷீஸ்வரர் ஆலய அன்னாபிஷேக தரிசனம் காண உள்ளோம்.




 பழையூர் சிவன் திருத்தல அன்னாபிஷேகம் தரிசனம் காண இருக்கின்றோம். 

 திருச்சி கரூர் இடையே பெருகமணி ரயில் நிலையத்திலிருந்து நங்கவரம் செல்லும் பாதையில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளதே பழையூர் சிவாலயம். பெருகமணி என்னும் தொன்மை வாய்ந்த திருத்தலத்தில் உள்ளதே பழையூர். இறைவன் ஸ்ரீஅகத்தீஸ்வரர். இறைவி ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்.

இதயத்தைக் காக்கும் துதியான 

இருதய ஆகாசம் ஈரெட்டு நாளப் புடைக் கழிய மாதவத்து
வருதல் சிவபோதம் வந்துரைக்கப் பணித் தலையர் வார்த்த மாவரம்
மருதல மாமரத்துறை மந்தார மாமறையர் செருத்த வளித் துறையாம்
சுருதல மாமுனியும் இருதய ஈசத்தில் எழுந்த பதங் கண்டேன்

என்னும் பாடலை இத்தலத்தில் 16 முறை ஓதி 16 முறை இறைவனை வலம் வந்து வணங்குவதால் இதய நோயகள் அகலும்.

பழையூர் சிவத்தலத்தில் அமைந்துள்ள அகத்திய பூர்வம் என்னும் இடப் பெயர்ச்சியால் இத்தல ஈசனின் வலது புறத்தில் ஆவுடையும் மாற்றத்தைக் கொள்கிறது அல்லவா ? இது மிகவும் அபூர்வமான ஆவுடை புனிதமாகும்.

குருவருளால் கடந்த மூன்று ஆண்டுக்கும் மேலாக இத்திருக்கோயிலில் அன்னாபிஷேகத்திற்கு நம் தளம் சார்பில் சிறிய அளவில் பொருளுதவி செய்து வருகின்றோம்.



அடுத்து கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து ஈஸ்வரர் அன்னாபிஷேக தரிசனம் காண உள்ளோம்.





ஒரே பதிவில் எத்தனை தரிசனங்கள். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகின்றது அல்லவா? வான் கலந்த மாணிக்கவாசகர் கூறியது இங்கே நினைவில் தோன்றுகின்றது.

ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 சோற்றுக்குள் சொக்கன் - அன்னாபிசேகம் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_7.html

ஐப்பசி அன்னாபிஷேகம் தரிசனம் - 2018 - https://tut-temples.blogspot.com/2019/10/2018.html