"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, March 11, 2020

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

வாழ்வாங்கு வாழ

இன்று முதல் ஒரு புதிய முயற்சியாய் - வாழ்வாங்கு வாழ என்று ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்க உள்ளோம்.இந்த பதிவு கேள்வி பதில் வடிவில் இருக்கும். யாருக்கு தான் கேள்விகள் இல்லை.எத்தனையோ ஆயிரமாயிரம் கேள்விகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இந்த கேள்வி பதில் பதிவிற்கு விடை தருபவர் திரு. ராம் மனோகர் அவர்கள். அவருடைய தளத்தில் இருந்து அவரின் அனுமதியோடு இங்கே சுவாரசியமான கேள்வி பதில்களை பகிர்கின்றோம்.வழக்கம் போல் தள வாசகர்கள் தங்களின் கருத்துக்கள் மூலம் வழி நடத்தும் படி கேட்டுக் கொள்கின்றோம்.ஏதேனும் சந்தேகம் - ஆன்மிகம் மற்றும் வாழ்வியல் சம்பந்தமாக இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.

திரு ராம் மனோகர் ஐயா அவர்களுடனான நட்பு பல வருடங்களாக தொடர்கின்றோம். இருந்தாலும் நேரில் சந்திப்பது எப்போது என்பது நாம் அறியாது இருந்தோம். ஆனால் குருவருளால் சென்ற ஆண்டு பொதிகையடி பாபநாசத்தில் நடைபெற்ற மாசி மக கும்ப ஹோமத் திருவிழாவில்  ராம் மனோகர் ஐயா அவர்களை சந்தித்தோம். ஐயா அவர்கள் தற்போது அன்னதான சேவையில் ஈடுபட்டு வருகின்றார்.நமக்கும் உந்து சக்தியாக இருக்கின்றார். இந்த ஆண்டு மாசி மக திருவிழாவில் சந்திப்போமா? என்று கேள்வியோடு இருந்தோம். பதிவின் இறுதியில் இதனை தொடர்வோம்.

வாழ்வாங்கு வாழ  என்ன செய்ய வேண்டும்?உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.உயிர்  கலங்காதிருக்க வேண்டும். மன வளம் பெற்று இருக்க வேண்டும்.இங்கேயே ஒரு கேள்வி ஆரம்பமாகிவிட்டது.உயிர்  என்றால் என்ன? மனம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா ? அலல்து வேறு வேறா? அப்பப்பா ! எக்கச்சக்க ஓட்டம் நடைபெறுகின்றது.இது போன்ற நடைமுறை சிக்கலான கேள்விகளுக்கு தான் இங்கே நாம் விடை காண இருக்கின்றோம்.

வாழ்வாங்கு வாழ நாம் முதலில் நாம்  வாழ்த்திப் பழகுவோம்.

ஒருவரை மற்றவர் சந்திக்கும்போது வாழ்த்துகின்ற பண்புநலம் முற்றிலும் தமிழருக்கே உரித்தான குணமாகும்! நமது சங்க கால இலக்கியங்கள் இதனை நன்கு விளக்கியுள்ளன!
வாழ்த்துவதற்கு வயது பேதம் தமிழரிடத்தில் இருந்தது கிடையாது! பெரியவர்களைச்  சிறியவர்கள் சந்திக்கும்போது பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்துவதும் பதிலுக்கு சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்துவதும் பழங்காலத் தமிழர்தம் மரபு!
மனநிறைவாகவும் உளமாறவும் வாழ்த்துதல் நிகழ்வதால் இருசாராருக்கும் அறிவியல் ரீதியான நன்மைகள் நிகழுகின்றன! இவ்வாறு வாழ்த்தும்போது சிறியோரால் வாழ்த்து பெறும் பெரியவர்களின் வயது நீடித்து வந்துள்ள விந்தையையும் பதிலுக்கு பெரியோர்தம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பெறும் சிறியோருக்கு அவர்தம் அறிவும் அன்பும் நிறைக்கப்படுவதை உலகோர் ஒப்புக்கொள்வர்.
அது மட்டுமன்றி தமிழர்கள் இயற்கையையையும் இந்த பிரபஞ்ச வெளியையும் வாழ்த்துகின்ற தன்மையை வெளிப்படுத்தி அதன் வாயிலாக இயற்கையிடமிருந்தும் இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் ஏராளமான நன்மைகளைப் பெற்று வந்துள்ளனர். இன்றுவரை தமிழகம் வந்தாரை வாழவைத்து அச்சமின்றி வாழும் சூழலுடன் (இத்தனைக்கும் தன்னுடைய வளங்கள் அனைத்தையும் மற்ற இனத்தவரிடம் இழந்துவிட்டு) வாழ வைத்திருப்பதே இதற்கு சாட்சியுமாகும்.

வாழ்த்துகின்ற எண்ணங்களுக்குள்ள மகத்தான ஆற்றல் அப்படி! வாழ்த்துதலின் சிறப்பியல்புகளைப் பற்றி நமது தமிழரிஞர்கள் எத்தனையோ முறை எடுத்துரைத்தும் வாழ்த்துதல் பற்றிய விழிப்புணர்வும் அதனை நமது வாழ்வின் ஒரு அங்கமாகப் புதுப்பித்துக் கொள்ளும் மன நிலையும் இதுவரை நமக்குள் ஏற்படவே இல்லை!

 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வாழ்த்துவோம். வாழ்வாங்கு வாழ்வோம் !!


கேள்வி - எதையாவது எழுத ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையார் சுழி போடுகிறார்களே ஏன் ?





இராம் மனோகர் - முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி காரியங்களைத் துவங்குவது மரபு. அந்த அடிப்படையில் பிள்ளையார் சுழி போடுவது வழக்கமாக இருக்கிறது. பழைய காலத்து ஏடுகள், கலவெட்டுகளிலெல்லாம் கூட பிள்ளையார் சுழி காணப்படுவதால், இது கர்ண பரம்பரையான வழக்கமாகவே கருதப்படுகிறது. இதற்கு பலரும் பலவிதமாக கருத்து கூறியிருக்கிறார்கள். நாத்திக வாதம் பேசுவபவர்கள் கூட ''எழுது கோலின் நிலையை ஆராய்வதற்காக வட்டமும், கோடும் போட்டுப் பார்த்து  விட்டு எழுதத் துவங்கவதே பிற்காலத்தில் பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது'' என்று சொல்வார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. பிள்ளையார் பிரணவ சொருபம். பிரணவமாகிய ஓம் ஐந்தெழுத்துகள் சேர்ந்தது.

முதல் உரு நட்சத்திர வடிவம். அதாவது வட்டப் புள்ளி.
இரண்டாவது உரு நேர் கோடு.
மூன்றாவது வட்டம்.
நான்காவது பிறை மதி.
ஐந்தாவது பிந்து.
இவற்றில் வட்டப் புள்ளியும் நேர் கோடும் இணைந்தது பிள்ளையார் சுழி. இந்த  சுழியை இட்டாலே போதும் பிள்ளையார் வணக்கம் ஆகி விடுகிறது என்பது ஐதீகம். பிரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் அதி தேவதைகளாக ஐந்து பேரை சிவஞான போதம் அறிவிக்கிறது. அகாரத்திற்கு பிரம்மன் என்றும், உகாரத்திற்கு விஷ்ணு என்றும், மகாரத்திற்கு ருத்திரன் என்றும், பிந்துவிற்கு மகேசன் என்றும், நாதத்திற்கு சதாசிவன் என்றும் சிவஞான போதம் கூறுகிறது. எழுதத் துவங்குவது என்பது ஒரு சிருஷ்டி. அது தோன்றவும், நின்று நிலவவும், வளர்ச்சி பெறவும் இந்த ஐந்து தேவதைகளையும் வணங்கும் விதமாகவே பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஆரம்பத்தில் பிரணவ  வடிவமே வழக்கமாக இருந்துள்ளது. பிரணவத்தை விரைவாக எழுதும் பொழுது உ போலத் தோன்றும். காலப் போக்கில் அதுவே பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது.

என்ன பிள்ளையார் சுழி பற்றித் தெரிந்து கொண்டோம் அல்லவா? இதுபோல் இந்த தொடர் பதிவைத் தொடர்வோம்.

ஏற்கனவே பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல் திரு.ராம் மனோகர் ஐயாவுடன் சந்திப்பு இந்த ஆண்டும் நிகழ்ந்தது.

உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும், மக்கள் மனதில் அருள் நிலை ஓங்கி செழித்திடவும் ஆண்டு தோறும் மாசி மகம் அன்று பாபநாசம் பொதிகையடி அருள்மிகு அரிகர புத்திர இந்திர அய்யனார் சாஸ்த்தா ஆலயத்தில் மாபெரும் அகத்தீயர் வேள்வி நடத்தப்படுகிறது. அடியார்களுக்கு அறுசுவை விருந்தும் சிறப்பான முறையில் படைக்கப்படுகிறது. இந்த ஆண்டும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருவருளுக்கு பாத்திரமமானவர்களாகி மேன்மையடைந்தனர். அடியேனும், எனது ஆருயிர் முகநூல் நண்பர்களான ராகேஸ், செல்லப்பா, சத்தியராஜ், சகோதரர் பிச்சையா ரெட்டியார், அரிகேசவநல்லூர் கிருஷ்ணா ஆகிய அனைவரும் யாகத்தில் கலந்து கொள்ளும் பாக்கியத்தினை பெற்று உய்வடைந்தோம். ஓம் அகத்தீசாய நம. குருவே துணை. குருவின் திருவடிகள் போற்றி.














- மீண்டும் அடுத்த கேள்வியில் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_7.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_24.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_22.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_58.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_17.html

பாடல் பெற்ற தலங்கள் (10) - வரம் தரும் வயலூர் முருகன் - https://tut-temples.blogspot.com/2020/02/10_13.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html


பாடல் பெற்ற தலங்கள் (8) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/12/8.html

பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html

பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html

பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/10/5.html

பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html

தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html

ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

No comments:

Post a Comment