"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, March 11, 2020

பொதிகை வேந்தே வருக! வருக !!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய குரு நாளில் நம் குருநாதரின் அருள் பெறுவோம்.அகத்தியம் என்ற ஒற்றை வார்த்தைக்கு தான் சக்தி அதிகம். அன்பின் ஆழம் உணர்த்தும் சொல், அகத்திய சொந்தங்களை சேர்க்கும் சொல். பக்தியை உயர்த்தும் சொல். தமிழை வளர்க்கும் சொல். அகத்தியம் என்ற வார்த்தை சொல்லாது ஒரு நாளும் நாம் கடத்துவது இல்லை. அனைத்தும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியருக்கு சமர்ப்பணம் செய்கின்றோம். இந்த சித்தர் வழிபாடு என்பது சாதாரண வழிபாடு அன்று. பார்க்க எளிமையாய் தோன்றும். ஆனால் பின்பற்றுவது கடினம், பயமுறுத்துவது நம் நோக்கம் அல்ல. பயத்தை உங்களிடம் இருந்து விளக்குவதே நோக்கமாகும். இந்த வழிபாட்டில் நமக்கு பல அகத்திய குருமார்கள் கிடைத்து உள்ளார்கள். நமக்கும் நம் தளத்திற்கும் தற்போது வரை வழிகாட்டியும் வருகின்றார்கள். தஞ்சாவூர்  சித்தர் அருட்குடில், பிருகு மகரிஷி அருள் நிலையம், சின்னாள பட்டி அகத்தியர் ஞானக் குடில், பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம், காரைக்குடி ஸ்ரீ அகத்தியர் அதிர்ஷ்ட தீபக்குழு, மதுரை இறையருள் மன்றம், திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம் என சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் அன்பின் ஆழத்தை சித்தர் வழியில், நெறியில், மரபில் உணர்த்தி வருகின்றது. நம்மை வழி நடத்தும் அகத்திய குருமார்களின் சேவைகளை பற்றி ஒவ்வொரு பதிவாக அறிய தருகின்றோம். இன்றைய பதிவில் ஸ்ரீ அகத்தியர் ஞான இல்லத்தில் நாம் பெற்ற தரிசன காட்சிகளை இங்கே காண்போம்.

ஸ்ரீ அகத்தியர் ஞான இல்லம் - பெயருக்கேற்றார் போல் அகத்தியர் உறையும் இல்லம். கேட்டதைக் கொடுக்கும் இல்லம். இங்கு மாதம் தோறும் தமிழ் மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று நம் குருநாதருக்கு ஆயில்ய வழிபாடும், சிறப்பு கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்று வருகின்றது. மேலும் அனுஷ நட்சத்திரத்தில் மகா பெரியவா சுவாமிகளுக்கு அனுஷ வழிபாடும் நடைபெற்று வருகின்றது. நமக்கு எப்போதும் ஆன்மிக வழிகாட்டியாக ஸ்ரீ அகத்தியர் ஞான இல்லம் திகழ்ந்து வருகின்றது. இது தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவிற்கு கிடைத்த வரமாகும் என்றால் அது மிகையாகா. சரி..இனி தரிசனம் செய்ய வாருங்கள்.

































 












தேன் அபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேக தரிசனம் கண்டிருப்பீர்கள். ஒவ்வொரு அருள் நிலையையும் மெதுவாக கண்டு களியுங்கள். குருநாதரிடம் விண்ணப்பம் வையுங்கள்.







அடுத்து ஒவ்வொரு அபிஷேகமாக பாருங்கள். பொறுமையோடு தரிசனத்தில் இருங்கள்.உங்கள் அன்பை அகத்தியரிடம் காட்டுங்கள். அப்பொழுது தான் குருநாதரிடம் இருந்து அகத்திய அருள் நிலை நமக்கு கிடைக்கும்.




















































இதோ .நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெற உள்ளோம். குருவே சரணம்..குருவே சரணம் என உரக்க கூறுங்கள்.





குருநாதரின் திருத்தாள் பணிகின்றோம். அன்பில் அகத்தியமே சத்தியம் என்று நம்மை சித்தர் வழிபாட்டில் வழிநடத்தும் குருநாதரின் தாளைப் பற்றுவோம். போற்றுவோம்....

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_27.html

ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை - 04/01/2018 - https://tut-temples.blogspot.com/2019/09/04012018.html

பொதிகை வேந்தே ! வருக !! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_96.html

No comments:

Post a Comment