"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, March 2, 2025

ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்...சர்வம் சிவார்ப்பணம்..

                                                           இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து இன்றைய பதிவில் சந்திக்கின்றோம் .  வழக்கம் போல் நம் தளத்தின் சேவைகள் மருத்துவ உதவி ,  தீப எண்ணெய் சேவை ,  அன்னசேவை ,  கூடுவாஞ்சேரி அகத்தியர் வழிபாடு என தொடர்ந்து வருகின்றோம் .  இம்மாதம் சிவராத்திரி வழிபாடாக நம் குருநாதர் கூறிய வழியில் சித்தன் அருள் - 1181 - அன்புடன் அகத்தியர் - சப்தரிஷி கோவில்கள்! யாத்திரை அமைந்தது .  இந்த வழிபாட்டில்  வில்வம், இலுப்பெண்ணெய் கொடுக்க பணிக்கப்பட்டோம்.  வழக்கம் போல் பொருளுதவி ,  அருளுதவி செய்து வரும் அனைவரின் பொற்பாதத்தை தொட்டு வணங்கி ,  நன்றி கூறி மகிழ்கின்றோம்.ஒவ்வொரு நாளும் நம் குருநாதர் நம்மை வழிநடத்தி வருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம் . 


நம் குருநாதர் கூறி வரும் வாக்கினை நம் தளத்தில் பகிர்ந்து வருகின்றோம் . பல்வேறு வாக்குகளில் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் நமக்கு பல்வேறு விதமாக வழிநடத்தி வருகின்றார் .  குருநாதர் அகத்தியர் பெருமானின் வேகத்திற்கு நம்மால் செயலாற்ற இயலவில்லை என்பதே உண்மை . பெங்களூரு சத்சங்கத்தில் நவகிரக தீப வழிபாடு ,  கோவை சத்சங்கத்தில் சிவபுராணம், கோளறு பதிகம் பாராயணம் என கூறியுள்ளார் ,  இது மட்டுமின்றி தினசரி சேவையாக ஜீவராசிகளுக்கு உணவு என நம் சேவைகள் தொடங்க வேண்டும் .  இது மட்டுமின்றி நம் குருநாதர் கூறிய ஆலய தரிசனங்களாக சப்தரிஷி கோவில்கள்!, வன்னிவேடு அகத்தியர் கோயில் ,  கோவை மருதமலை அகத்தியர் கோயில் ,  மதுரை பசுமலை அகத்தியர் கோயில் என சொல்லலாம் .  இவை அனைத்தும் நாம் இங்கே தொட்டுக்காட்ட விரும்புகின்றோம் . 

இவ்வாறான பயணத்தில் நாம் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் உள்ளிட்ட சித்தர் பெருமக்கள் கூறி வரும் வாக்குகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் .  மேம்போக்காக படித்து நாம் பரிகாரம் என்ற நிலையில் வாக்கினை படிக்க கூடாது .  குருவின் வாக்கினை வேதமாக கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு திருக்குறளை எடுத்துக் கொள்ளுங்கள் . உலகப் பொதுமறையாக திருக்குறள் அன்றும் , இன்றும் ,  என்றும் விளங்குகின்றது. திருவள்ளுவரின் குருவாக நம் அகத்தியர் பெருமான் இருக்கின்றார்கள். அப்படியாயின் சீடனாக உள்ள திருவள்ளுவர் பெருந்தகைக்கு இவ்வளவு பெருமை என்றால் நம் குருவின் பெருமையை நாம் வியந்து ,கொண்டாடி போற்ற வேண்டும் அல்லவா! ஆனால் குருநாதர் அகத்தியர் கூறிய வண்ணம் ,  சுவடிகள் அனைத்தும் நாடு கடத்தப்பட்டு ,  அழிக்கப்பட்டு விட்டது .  தற்போது தான் இவை அனைத்தும் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது .  இதனால் நாம் நம் குருநாதர் அகத்தியர் பெருமானின் வாக்கினை நம் வாழ்க்கையாக கொள்ள வேண்டும் . 

இதற்கு நாம் வாக்கினை நன்கு உள்வாங்க வேண்டும் .  அப்பொழுது தான் நாம் நம் செயல்களை திருத்திக்கொள்ள முடியும் . இதற்கு குருநாதரின் வாக்கினை குறைந்தது மூன்று முறை படிக்க வேண்டும் .  படித்ததை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும் .  இப்படி சிந்திக்கும் போது தான் நம்மால் குருவின் வாக்கினை நன்கு உள்வாங்க முடியும். அப்பொழுது தான் நம் குருநாதரின் அருளை உணர முடியும் .  இதனை நன்கு உணர கீழ்க்கண்ட  வாக்கினை காண்போம் . 

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 11 இல் குருநாதர் அகத்தியர் பெருமான் அகத்தியர் அடியார் கேட்ட கேள்விக்கு உரைத்த பதிலே இன்றைய பதிவின் சாரம் ஆகும் .அன்றைய 04.09.2023 வாக்கிலிருந்து குருநாதர் அகத்தியன் என்று உரைக்க சொல்லி உள்ளார்கள் .  அதனை அனைவரும் புரிந்து கொள்ளும்படி வேண்டி பணிகின்றோம் .  தற்போது நடைபெற்ற பெங்களூர் சத்சங்கத்திலும் அகத்தியன் என்று சொன்னாலே போதும் என்று நம் குருநாதர் உரைத்துள்ளார்கள் . 


இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம் 

ஓம் குரு வழியே ஆதி ஆதி

           ஓம் குரு மொழியே வேதம் வேதம்

 ஓம் குரு விழியே தீபம் தீபம்

                                                               ஓம் குரு பதமே காப்பு காப்பு  


அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 11 

அடியவர்:- ஐயா , இங்க உள்ள எல்லோரும் உங்களை பற்றி நல்லபடியா வேண்டுவதற்கு ஒரு அருமையான பாடல் ( ஒன்று கூறுங்கள்).

குருநாதர்:- அப்பனே அகத்தியன் என்று சொல்வதற்கே புண்ணியங்கள் தேவைப்படுகின்றதப்பா. பல கோடி அப்பனே. ஆனால் சரியாக அதை பயன் படுத்த தெரியவில்லை அப்பா. அதனால்தான் அப்பனே மீண்டும் அப்பனே கஷ்டங்கள். அப்பனே யான் கொடுக்க மாட்டேன் என் சீடர்களே கொடுத்து விடுவார்கள் அவ்வளவுதான்.




அடியவர்:- அகத்தியர் என்று சொல்வதற்கே பெரும் புண்ணியம் ஐயா

கந்தவடிவேலன், முருகப்பெருமான்  9/7/2024 அன்று உரைத்த வாக்கில் உள்ள பொது வாக்கு:- 

(கந்த வடிவேலன் :-) இன்னும் நிச்சயம் அகத்தியன் தன் பெயரை எங்கெங்கு அழைத்துச் செல்ல எப்படி எங்கெல்லாம் பின் எங்கெல்லாம் அகத்தியன் அதாவது 

“”””””””வருங்காலத்தில் அகத்தியன் என்ற பின் சொன்னாலே பாவம் போகும் என்றெல்லாம்  நிச்சயம் அறிந்தும் அதனையும் ஏற்படுத்துவான் அகத்தியன்.””””””

நிச்சயம் பின் அன்பு , கருணை இவ்வுலகத்தில் நிச்சயம் தடுமாறும் பொழுது நிச்சயம்

 “”””””அகத்தியனுக்குப் பெயர் பின் கருணை வடிவானவனே.””””””

( நம் பூமி சுற்றல் வேகம் குறைந்துள்ளது - அதன் விஞ்ஞான ரகசியங்கள்,  விளைவுகள் ) 


காக்கும் சிவன் காசி மீர் காட் கங்கை கரையில் காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு பாகம் 2 தொடர்கிறது......

அறிந்தும் உண்மைதனைக்கூட ஏன் எதற்கு இவ்வுலகம் நிச்சயம் அழிவு நிலை. அறிந்தும் அறிந்தும் இன்னும் சுற்றுகின்றது. யானும் சிறிதளவு இங்கு அகத்தியன் சொல்கின்றான் என்று யானும்  சொல்கின்றேன். 

இதனால் நிச்சயம் அகத்தியன் பாதையில் வந்தால் நிச்சயம் தான தர்மங்கள் நேர்மை. நிச்சயம் பொய் சொல்லாமை

பொறாமை இல்லாமை காமம் இல்லாமை பின் யான் பெரியவன் அவன் சிறியவன் என்றெல்லாம் நிச்சயம் வந்தால் அப்பா இப்பொழுது சொல்கிறேன். அடியோடு அடிவாரத்துக்கே போய் விடுவாய் அப்பா இதை யான் சொல்லவில்லை.அப்பா பின் அகத்தியனை அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய!!!!

அகத்தியன் என்று சொன்னாலே சக்தி கிடைக்குமப்பா அறிந்தும் அறிந்தும் கூட. !!!

அவ் சக்தியை அப்பனே தவறாக தவறான பாதைக்கு பின் அழைத்துச் செல்வதற்கு அப்பனே அவ் சக்தி அப்பனே இன்னும் அமுக்கும் அப்பா கீழே!!!

14/6/2022  வைகாசி பௌர்ணமி அன்று பார்வதி தேவி அம்பாள் உரைத்த பொதுவாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் : திருப்பனந்தாள் குமாரசாமி மட ஆலயம் கேதாரேஷ்வரர் . கேதார்காட்.கங்கை கரை. காசி. 

அப்புண்ணியத்தை எப்படி சேர்த்துக்கொள்வது என்பதையும் கூட பல முறைகளில் என் பிள்ளை அகத்தியன் நன்றாகவே உணர்த்திக் கொண்டுவந்து கொண்டிருக்கின்றான்.

"""அகத்தியனுக்கு ஈடு அகத்தியன் மட்டுமே!!!!!

அகத்தியன்!!! இதை உணர்வதற்கு ஆனால் என் மணாளனை.....!!!!

கருணை!!! கருணையின் கருணை அகத்தியன்!!!!!!

6/11/2024 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் ராம் டெக்.. கோட்டை கோவிலில் வாக்குகள்:- 

அகத்தியன் என்று சொல்லிவிட்டால் போதுமா????????? அப்பனே

நிச்சயம் எவை என்று அறிய அறிய அனைத்து தகுதிகளும் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே 

அகத்தியன் என்று சொல்வதற்கே ஒரு தகுதி இருக்க வேண்டும் என்பேன் அப்பனே

23/8/2022 அன்று காகபுஜண்டர் மகரிஷி சர்வ ஏகாதசி திதியில் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் :கங்கைகரை காக்கும் சிவன் காசி. 

அறிவியல் வழியாகவும் இறைவனை நிச்சயம் உங்களுக்கு காட்டத்தான் போகின்றான் அகத்தியன்!!!!!

"""அறிவியலை மிஞ்சியவன் அகத்தியன்!!!!

சொல்லிவிட்டேன்!!!! அறிவியலுக்கு பக்கபலமாக அதை மீறிய வல்லமை படைத்தவன் அகத்தியன்!!!

அகத்தியனை யார்? என்று? நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்??????????


 சித்தன் அருள் - 996 - அன்புடன் அகத்தியர் - பொதிகை நாடி வாக்கு-1!

அப்பனே, இங்குள்ளவருக்கும், ஒவ்வொருவருக்கும் நான் பார்த்து ஆசிர்வதித்துவிட்டேன் என்பேன், அவரவர் வழியில் செல்ல. அப்பனே, ஆனாலும் துன்பங்கள் நீங்காது, ஏன் என்றால் இது கலியுகம்.

அகத்தியன் என்று சொன்னாலே மோட்சம்தான். 

ஆனாலும் சில சில வினைகளால், கட்டங்கள் வரும், அதையும் நான் தீர்த்து வைத்துவிட்டால், பின் மனித பிறப்பிற்கு சரித்திரமே இல்லாமல் போய்விடும். இதனால் நன்கு உணர்ந்து எதனை செய்வது என்றும், எதனை செய்யக்கூடாது என்பதும் எந்தனுக்கு தெரியும். பின்பு சிறிது கட்டங்கள் வந்தாலும், அதுவும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள். ஆனாலும் இன்பமே வந்துவிட்டாலும், மோக்ஷ கதியை அடைய முடியாது. 

அப்பனே, அகத்தியனை வணங்குபவர்கள்,நிச்சயமாய் மோக்ஷகதியை அடைவார்கள். 

இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக கட்டங்கள் வந்து கொண்டிருக்கும். அதையும், தனிப்பாதையாய் மாற்றுகிறேன். அப்பனே, இப்பொழுது சொல்கின்றேன், அனைவருக்கும், இது மோக்ஷ பிறப்பு. அது எப்படி என்று உணராமலேயே என்னை வந்து கண்டுவிட்டீர்கள். ஆனால் நானும் வழியில் உங்களோடு வந்தேன் என்பேன்.  அதனால், தொல்லைகள் இல்லை, தொல்லைகள் வராது என்பேன். 

அப்பனே, எவை என்று சிந்தித்துப் பார்த்தால், பொய்யான உருவங்கள், பொய்யான பக்தர்கள், பொய்யானவர்கள், நிறைய வருவார்கள். 

 அப்பனே நம்பிக்கையாக இருங்கள், அகத்தியன் இருக்கிறான் என்று. 

ஆனாலும், யாரையும், இனிமேல் நம்புதல் கூடாது என்பேன். அப்பனே, நான் அதை செய்வேன், இதை செய்வேன் என்றெல்லாம் வருவார்கள். எம்மை நம்பிவிட்டால், (அவர்களால்) ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.  

அகத்தியன் இருக்கின்றான் என்ற ஒரு வார்த்தையை சொல்லிவிடுங்கள். 

அனைவருக்கும், ஆசிகளாக, எந்தனுக்கு அகத்தியன் இருக்கின்றான் என்று சொல்லிவிடுங்கள்.

ஆனாலும், நிறைய பேர்கள் வருவார்கள். அதனை செய்கின்றேன், இதனை செய்கிறேன் என்பார்கள். அதனால் ஒன்றும் பிரயோசனமில்லை, கட்டங்கள்தான் வரும். இங்கு இறைவனின் சக்தியை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அதனால்தான் சொல்லுகின்றேன்.

இனி இன்றைய பதிவின் தலைப்பிற்கு வருகின்றோம் .  ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள் காண உள்ளோம் .  வழக்கம் போல் சித்தன் அருள் தளத்தில் இந்த வாக்கு உள்ளது .  அதென்ன 11 ரகசியங்கள் என்று கீழே பட்டியலிட்டுள்ளோம் . 

1.நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் கலியுகத்தில் உலகத்தையும் மனிதர்களையும் காக்க வந்த அதி ரகசியம்

2. சபரிமலை சுவாமி ஐயப்பன் ஜீவசமாதி ரகசியம்

3. சபரிமலை பயணம் ரகசியம் - கர்மா அழியும் ரகசியம்

4. சபரிமலை சுவாமி ஐயப்பன் அள்ளி கொடுத்துக்கொண்டே இருக்கும் ரகசியம்

5. சனீஸ்வரன் அருளாசிகள் கொடுக்கும் ரகசியம்

6.நம் குருநாதர் அகத்தியர் பெருமான் மூலம் முன்னோர்களின் ஆசிகளும் பெறுவதற்கு சமமான ரகசியம்

7. தாமிரபரணி உருவாக வேண்டிய காரணம் - ரகசியம்

8. பாபநாசம் (பாபநாசர் திருக்கோயில்) ஆலயத்தில் ஈசன் பார்வதி தேவியார் வடிவாக அகத்தியர் பெருமானும் லோபாமுத்திரை அன்னையும் இருந்து கொண்டு பாவங்களை அகற்றி வரும் ரகசியம்

9. மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் அழகாக மூன்று பெரிய பாறைகள் வடிவில் பாவங்கள் அகற்றி வரும் ரகசியம்

10.புலஸ்திய மகரிஷி வழிகாட்டியாக இக்கலி யுகத்தில் இருக்கும் ரகசியம்

11.கலியுகத்தை வெல்லும் ரகசியம்

இந்த வாக்கினை சித்தன் அருள் வலைத்தளத்தில் காணலாம் .  ஆனால் பொதுவாக படித்தால் நமக்கு ஒன்றும் புரியாது .  குறைந்தது மூன்று முறை படிக்கும் போது , நாம் மேலே சொன்னது போன்று வாக்கினை பிரித்து உணர்ந்து ,  வாக்கின் சாராம்சம் உணரலாம் .  மேலே சொன்ன வாக்கு எது என்று சொல்லும் அடியார்களுக்கும் சிறப்பு பரிசு உண்டு .  ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்..விரைவில் படித்து உணர , குருவிடம் வேண்டி பணிகின்றோம் . 

                           


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html

 குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1604 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2025/03/1604.html

சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1490.html

சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1443.html

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1291.html

சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html

தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html

கந்தர் அனுபூதி - பாடல் 3 - வானோ? புனல் பார் - ஆறுமுகமான பொருள் எது? - https://tut-temples.blogspot.com/2024/09/3.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html

சித்தன் அருள் - 1532 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2025/02/1532-6.html

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html

சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html

சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html

சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html


சித்தன் அருள் - 1790 - உங்கள் இல்லத்திலேயே கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/02/1790_2.html

திதி ரகசியம் - பஞ்சமி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (02.02.2025) - https://tut-temples.blogspot.com/2025/02/02022025.html

சித்தன் அருள் - 1782 - PDF வடிவில் அகத்தியர் புகழ்மாலை!! - https://tut-temples.blogspot.com/2025/01/1782-pdf.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - திருமூலர் சித்தர் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/01/1785_29.html

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html


உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6_23.html

ஆதி ஈசனார் எழுதிய சிவபுராணம் - ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6.html

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html


மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

No comments:

Post a Comment