குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! கண்டு உணர உள்ளோம் . இன்னும் இன்னும் குருவின் மொழியை நாம் கடைபிடிக்க குருவின் பதமும் , பாதமும் பணிந்து வாக்கின் உள்ளே செல்வோம் . குறைந்தது மூன்று முறை படித்தால் மட்டுமே நமக்கு வாக்கினை கண்டு தெளிய முடியும் . குருவிற்கு நன்றி கூறி மகிழ்கின்றோம் .
20/10/21 பௌர்ணமி அன்று ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரை காசி.
காசி
காக்கும் சிவன்
ஈரேழு உலகத்தையும் காத்து அருளக் கூடிய நமச்சிவாயன் வாக்குகளை நாட்டுகின்றேன்.
இவைதன் காசிதன்னிலே!
காசி தன் பொருள் விளங்க காசி காசி எதனைக் குறிக்கின்றது?
காக்கும் சிவனே காசி என்பேன்.
இதனை மனிதர்கள் உணர வேண்டும் என்பேன்.
என்னிடத்தில் வந்து விட்டால் மற்றவையெல்லாம் யான் பார்த்துக்கொள்வேன் ஆனாலும் மனிதர்கள் தம் நிலையை அறிவதில்லை.
அறிவதில்லை
பொய்யான பொய்யானவையே தேடித் தேடிச் சென்று கடைசியில் உண்மை என்ற பொருளை
உணர்ந்து கொள்கின்றார்கள் பின்பு வருகின்றார்கள். ஆனாலும் அதனுள்ளே பல
கர்மங்களை சேர்த்துக்கொண்டு சேர்த்துக்கொண்டு வருகின்றார்கள். அதனால் என்ன
பயன்??
என்ன பயன்? என்னை அடைந்தாலும் சிறிது சிறிதாக முதலில் கர்மத்தையே நீக்குவேன் என்பேன்.
என்பேன் இதனால் சித்தர்களும் வருவார்களப்பா. இனிமேலும் நேரடியாகவே சில உபயங்களை தெரிவிப்பதற்கு.
ஏனென்றால் சித்தர்கள் மனிதர்களை நம்பி நம்பி நம்பி நம்பி மோசம் போய் விட்டார்கள் என்பதுதான் உண்மை நிலை.
இவ் உண்மை நிலையை மாற்ற யானே பல ஜீவ சமாதியில் இருக்கும் சித்தர்களை எழுப்புவேன் இனிமேலும்.
இதனால் நிச்சயம் நல் முறைகளாய் வந்து அவந்தனும் மக்களை காப்பாற்றுவார்கள் என்பேன்.
மிஞ்சியது ஒன்றுமில்லை இனிமேலும் பொய்யானதற்கு இவ்வுலகில் இடம் இல்லை என்பேன்.
இடம் இல்லை என்பேன் யான் யானே தண்டிப்பேன். ஒருவர் ஒருவர் மூலமாகவே.
இதனையும் நன்குணர்ந்து மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.
பேச்சுதான் பேச்சுக்களாகவே அதைச் செய்வேன் இதைச் செய்வேன்.
ஆனாலும் ஒருவர் கூட ஒரு உருப்படியான செயலை செய்ய முடியாது என்பேன்.
ஏன்? எதனை? என்றும்கூட அகத்தியன் நல்லதே செய்வான் நல்லதையே செய்வான் என்பதெல்லாம் பொய் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறான் மனிதன்.
எதனால் ?எதனால்? நன்மை எவ்வாறு? என்பதையும் கூட என்னுடைய குரு அகத்தியர் என்றே பொய் வேடதாரிகள் .
ஆனாலும் இதனையும் நன்குணர்ந்து அகத்தியன் செய்வான்! அகத்தியன் செய்வான்!
எவ்வாறு செய்வான்?
நீ நல் மனது! தூய மனது! பொறாமை இல்லாத போட்டியில்லாத தூய குணங்கள் இருந்தால்தான் அகத்தியனும் செய்வான்.
ஆனாலும் தன் சீடன் மிஞ்சியது போலே உள்ளது இதன் வாக்கு.
சீடன் அகத்தியனுக்கு என்ன செய்தான்? என்பதுதான் எனது கேள்வி.
இதனால் எவ்வாறு என்பதைக்கூட ஒரு சீடன் கூட அகத்தியனுக்கு சரியான மரியாதை கொடுப்பதாக தெரியவில்லை.
அகத்தியனை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர ஆனாலும் பிரயோஜனமில்லை.
இதனையும் நன்கு உணர தன் அகத்தியன் என் தந்தை என்கின்றார்களே தந்தைக்கு நீ என்ன செய்கின்றாய்??
செய்கின்றாய் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கின்றாய் இதுதான் உண்மை.
ஆனாலும்
என் பிள்ளை அகத்தியன். யான் சொல்வேன். சொல்வேன் இனிமேலும் அகத்தியன்
பெயரைச் சொல்லியும் சித்தன் பெயரைச் சொல்லியும் ஏமாற்றினீர்கள் என்றால்
நிச்சயம் தண்டனை உண்டு.
உண்டு. பொய்யான மனிதர்களே திருந்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் உன்னையே உன்னை பார்க்க முடியவில்லை மற்றவர்களுக்காக ஏங்குகின்றாயா??
உன்னை நீ முதலில் பார். மற்றவை தேடுகின்றது, தேடுகின்றது.
நீயே நிலை இல்லை. நிலை இல்லாததையே! தேடுகின்றாயே! நியாயமா மனிதா?
திருந்திக்
கொள் இவ்வுலகத்தில் வந்தாயா! இறைவனை வணங்கினாயா! சென்றாயா! என்று இருக்க
வேண்டுமே தவிர அவை வேண்டும் இவை வேண்டும் எல்லாம் கொடுப்பதற்கு நீங்கள்
எல்லாம் பின் அவ்வளவு ஞானிகள் இல்லை என்பேன்.
இல்லை என்பேன் .ஞானி ஆவதற்கும் இனிமேலும் சித்தர்கள் வழி வகுப்பார்கள் என்பேன் .
ஒவ்வொரு யுகத்திலும் யான் பார்த்து கொண்டேதான் வந்திருக்கின்றேன் மனிதர்களை ஆனாலும் நிச்சயம் இக் கலியுகத்திலே பொய்யான மனிதர்கள்.
இனிமேலும் சொல்கின்றேன் இனிமேலும் சொல்கின்றேன் பொய்யானவைக்கே மிகும் புகழ் என்பேன் இவ்வுலகத்தில்.
அதனால் உண்மை நிலை சற்று தாழ்ந்து போகும் என்பேன் அதனால் மனிதன் மனிதனையே அழித்துக் கொண்டு தான் இருக்கின்றான் என்பேன்.
மனிதருக்குள் மனிதனே போட்டிகள் பொறாமைகள் இவையெல்லாம் தாங்குமா ?நிலைமை
இப்புவி தன்னிலே பூமா தேவியும் காத்து கொண்டு இருக்கிறாளே அவளைத் தான் சொல்ல வேண்டும் என்பேன் யான்.
அவள் தனும் நடுங்குவாள் சிறிது காலத்திலே என்பேன்.
இதனாலும்
தன் இனத்திற்கு எவ்வாறு இனம் சேர்க்க வேண்டும் புகழ் சேர்க்க வேண்டும் தன்
இனத்திற்கே சேவை செய்ய வேண்டும் என்பதெல்லாம் மனிதனின் தவறான கணக்காகவே
போய்க் கொண்டிருக்கின்றது.
ஆனாலும் யான் கணக்கு நல் முறையாகவே செய்து கொண்டிருக்கின்றேன்.
அழகாக படைத்தான் படைத்தான் என்பதைவிட பொய்யானவை எவ்வாறு பொய்யானவை இனிமேலும் ஓங்கும் என்பேன்.
ஓங்கும் என்பேன் எதனால் என்பதைவிட மறுப்பதற்கு ஒன்றுமில்லை.
மறுப்பதற்கு ஒன்றுமில்லை அகத்தியனை பற்றியே தெரிவதற்கு ஒன்றும் இல்லை இவ்வுலகில்.
அகத்தியனை பற்றியே இன்னும் புரிந்து கொண்டவர் எவர்?
அகத்தியனின்
நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே இதனையும் உரைப்பதற்கு அளவிற்கு அகத்தியனின்
12000 என்ற நூலை தேர்ந்தெடுங்கள் அதில் உரைத்து இருப்பான் அகத்தியன்
என்பேன்.
அதனைக் கூட இன்னும் பல நூல்கள் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றது இக் காசி தன்னில்.
காசி தன்னில் இப்பொழுது கூட இன்னொரு முறையும் உரைத்து விடுகின்றேன்.
காசி என்றால் காக்கும் சிவனே என்பேன்.
இதனையும் நன்குணர்ந்து. காசி தனில் என்னிடத்தில் வந்து விட்டால் யான் கர்மாவை போக்கி விடுவேன் அதி விரைவிலேயே.
ஆனாலும்
எங்கு பார்த்தாலும் காசிக்கு நிகரான தலம் காசிக்கு நிகரான ஸ்தலம் என்றே
பொய் கூறி மக்களை மக்களே ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். எதற்காக?
ஆனாலும் நீ மனதார என்னை எண்ணி நல் முறையாய்
ஈசனே!
நமச்சிவாயனே!
யான் காசிக்கு ஒருமுறை வரவேண்டும் வரவேண்டும் நீதான் என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வணங்கினாலே பணிந்தாலே போதுமானது.
யானே கையைப் பிடித்து அழைத்து வருவேன்.
ஆனால் மனிதனோ பின் அனைத்து கர்மாவும் செய்துவிட்டு காசியிலே நீராடினால் கருமம் தொலைந்துவிடும் என்கிறார்களே இது நியாயமா??
மக்களே மனிதர்களே மனித ஈனப்பிறவிகளே திருந்திக் கொள்ளுங்கள்.
உங்களிடமே அனைத்தும் கொடுத்து அனுப்புகின்றேன் யான்.
ஆனாலும் அதனை ஒழுங்காக பயன்படுத்த தெரியவில்லை இதனால் பின் அனைத்தும் அழித்துவிட்டு பின்பு நீ என்னை அணுகுகின்றாயே!
அணுகுவதற்கு என்ன தகுதி இருக்கின்றது??
பொய்யான மனிதர்கள் என்பேன்.
சித்தர்களும் இனிமேலும் அங்கங்கே வருவார்கள் தரிசனத்தையும் கொடுப்பார்கள் என்பேன். நல் மனிதர்களுக்காகவே.
இங்கேயும் இப்பொழுதும் கூட இக் காசி தன்னில் பல சித்தர்கள் பின் தவத்தை மேற்கொண்டு அடியினிலே நிற்கின்றார்கள் என்பேன்.
அவர்களையும் அனுப்புவேன் மனிதர்கள் எவ்வாறு செய்கின்றார்கள் உண்மை தத்துவத்தின் தவ யோகிகளும் இங்கு உள்ளனர் என்பேன்.
இதனால் மானிடப் பிறவிகளே யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.
இப்பிறப்பு எதனை நோக்கி செல்கின்றது? கலியுகத்தில் ஒழுங்காக ஒழுக்கமாக நடந்து கொண்டாலே போதுமானது.
இறைவன் வருவான் வருவதற்கு சமமானவைகள் உண்டு என்பேன்.
ஆனால் ஒழுக்கம் கெட்ட வாழ்கின்றார்களே இனிமேலும் சொல்கின்றேன் கலியுகத்தில்.
கலியுகத்தில் நிலையானதாக யாருமில்லை இல்லை இதனால் நிலை உள்ளதை தேடுங்கள்.
இதனையும் அகத்தியன் சற்று சற்று ஒய்ந்து ஒய்ந்து நிற்கின்றான்.
மனிதர்களைப் பார்த்து இப்படியா மனிதன் என்றுகூட.
ஆனாலும்
பல யுகத்தில் வாழ்ந்த சித்தர்களும் நல் முறைகள் ஆகவே மனிதருக்கு சொல்லிக்
கொடுத்தனர் அதன் வழியே வந்துதான் பின் மனிதர்கள் மீண்டு நல் முறைகளாக
இறைவனையே தரிசிக்கும் நேரம் வந்திருந்தது ஆனாலும் இக்கலியுகத்தில் இறைவனை
தரிசிக்கலாம் .
ஆனாலும் அதற்கு தகுதியானவனாக மனிதன் இல்லை என்பேன்.
இதனால் அகத்தியனும் சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றான்.
ஆனாலும் மனிதர்கள் பரிகாரங்கள்! பரிகாரங்கள்! என்றே அலைக்கின்றனர்.
எதற்காக பரிகாரங்கள்? எதற்காக பரிகாரங்கள்?? சொல்லுங்கள்.
நீங்கள் தவறைச் செய்துவிட்டால் அதற்கு பரிகாரமாக சொல்லிவிட்டால் செய்துவிட்டால் தண்டனைகள் தீர்ந்துவிடுமா?? என்ன?
நிச்சயம் தீராது என்பேன்.
எந்தனுக்கு கோபங்கள் தான் வருகின்றது.
பரிகாரங்கள் செய்யுங்கள் இன்னும் கஷ்டம் தான் வரும் என்பேன்.
எதனால் ?
இறைவன் இறைவனை எப்படி வணங்குவது என்று தெரியாமலே மனிதன் வணங்குகின்றான்.
ஒருவர் நிலையில்லாதவை கூட கேட்கின்றான்.
ஆனாலும் இன்னொரு முறையும் உச்சரிக்கின்றேன்.
நீயே நிலை இல்லாதவன் நீயே நிலை இல்லாதவன் ஆனால் நீயே நிலையில்லாததை கேட்கின்றாயே நியாயமா? மனிதா!
மனிதா புரிந்துகொள் அறிவுகள் பலமாக இருக்கின்றது
பொய் என்பது உண்மை என்பது கூட தெரிந்து கொள்.
இனிமேலும் பொய்க்குத்தான் சக்திகள் அதிகம் என்பேன் கலியுகத்தில்.
அவ் பொய்யைத் தேடிச் சென்றால் நிச்சயம் நீ அழிந்து போவாய் என்பது விதிக்கப்பட்டதா? இல்லை விதித்தது நீயேவா?
நீயேதான் விதித்துக் கொண்டாய் என்பேன்.
விதியின் பாதை ஆராய்ந்து பார்த்தால் விதியினை நிச்சயமாய் வென்றுவிட முடியும் என்பேன் .
அதற்கு தகுதியானவனாக நீ இருந்தால் யானே மாற்றி விடுவேன்.
ஆனாலும் இதற்கு தகுதியானவனாக மனிதன் இல்லை இல்லை என்பேன்.
நிதானத்துடன் நடந்து கொண்டு எதனையும் நின்று என் தலத்திற்கு கூட வருவீராகினால்
அண்ணாமலையை நோக்குக அண்ணாமலையை நோக்குக
நடராசன் தில்லையில் பார்க்க கோடி புண்ணியம் திருவையாறில் என்னைப்பார்க்க கோடி புண்ணியம் கோடி புண்ணியம் கைலாயத்தில்.
ஆனாலும் மனிதனை யான் அழைப்பேன் கைலாயத்திற்கு.
கைலாயத்திற்கு
அழைப்பேன் எதனால்? என்பதைக்கூட சற்று இதன் அழிவு காலம் எப்பொழுது
என்பதுகூட அடுத்த வாக்கில் யான் கூறுகின்றேன் கைலாயத்திலே.
நல் முறைகள் ஆகவே இன்னும் ஏதேது? நடக்கப்போகின்றது என்பதை கூட கைலாயத்திலிருந்தே உரைக்கின்றேன்.
ஆனால் மனிதர்கள் உணர்வதில்லை வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதுதான் நிசாதிக்கின்றான் என்பேன்.
ஆனாலும் இல்லை என்பேன். மனிதன் சந்தோஷமே சிறிது நேரமே.
அவ் சந்தோசம் எவ்வாறு இருக்க வேண்டுமென்றால் இறைவனின் நினைப்பை தவிர ஏதும் இருக்கக் கூடாது என்பேன்.
மனிதன் எதற்காக? பிறந்தான்? எதற்காக? வளர்கின்றான் ?
எதற்காக ?போய்ச் சேர்கின்றான்?
மீண்டும் பிறப்புக்கள் எடுக்கின்றான்.
இங்கே நிம்மதியாக வாழ்கின்றானா? இல்லை.
எதற்காக? எதற்காக? என்றெல்லாம் மனிதனே உருவாக்குகின்றான் அனைத்தும்.
மனிதனே உருவாக்குகின்றது எல்லாம் அழிவுகள் நிச்சயம் என்பேன்.
நிச்சயம் என்பேன் இதனை கூட முன்னிறுத்தி நினைத்துப் பார்க்கும் அளவிற்கு இனிமேலும் கொடுமைகள்.
ஆனாலும்
கொடுமையின் பாதையில் இனிமேலும் சித்தர்கள் வழிகள் சித்தர்களின் வழிகள்
சித்தர்களே ஏற்படுத்தி விடுவார்கள் என்பேன். நலமாகவே கையை காட்டி
அழைப்பார்கள் என்பேன்.
அகத்தியனே
மூலனே
போகனே
புஜண்டனே என்றெல்லாம் அழைத்தால் நிச்சயமாய் மனம் மகிழ்ந்து அவர்களே வருவார்கள்.
ஆனால் அதற்கும் நீ நல் முறைகளாக மனம் கொள்ள வேண்டும் மனம் கொள்ள வேண்டும் எதற்காக எதற்கு தகுந்தவையாக இருக்க வேண்டும்.
தகுதியானது அனைத்தும் காரணம் இறைவனை என்று உணர்ந்து விட்டால் சித்தர்கள் கையை காட்டி நினைத்து நல் முறைகளாக அழைத்து வருவார்கள்.
வருவார்கள்
பொய்யான கூட்டம் திரியும் என்பேன் வரும் காலங்களில் பொய்யானவையே பேசும்
என்பேன் பேசும் என்பேன் பொய்யான மனிதர்களே பொய்யான பக்தியையும்
காண்பிப்பார்கள் என்பேன்.
எதனால் அனைத்தும் காரணத்திற்காகத்தான் இருக்கின்றது.
ஆனாலும்
இதில் கூட நல்லோர் தீயோர் இவையெல்லாம் இருக்கின்றார்களா இவ்வுலகில் நன்மை
செய்பவர்கள் நல்லோர்களா ? தீமை செய்தவர்கள் தீயோர்களா? .
இதற்கு இவற்றிற்கெல்லாம் விடைகள் சற்று அதிகமாகவே உள்ளது.
உள்ளது இல்லையப்பா இவ்வுலகில் நல்லவை.
நல்லவை கலியுகத்தில் இனிமேலும் ஒழுக்கம் கெட்டு வாழ்வார்கள் .
இவ்வொழுக்கம் இவ்வொழுக்கமே தன் அழிவை தீர்மானிக்கிறது.
வள்ளுவனும் புகழ்ந்தான் புகழ்ந்தான் ஒழுக்கத்தைப் பற்றி அதனை நிச்சயமாய் உருவாக்கியவன் யானே.
யானே என்பதற்கிணங்க யான் எழுதிய சிவ புராணத்தையும் ஓதுக.
ஓதுக! ஓதுக! ஓதிக்கொண்டே இருக.
இதனையும்
நல் முறையாக உணர்ந்துவிட்டால் வாழ்க்கையின் தத்துவத்தை வாசகனுக்கும்
(மாணிக்கவாசகர்) உதவி செய்தேன் பன்மடங்காக அதனால் நீங்கள் தகுதியானதாக
இருந்தால்தான் நானும் உதவி செய்வேன்.
ஆனாலும் சித்தர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் யாராவது ஒரு சீடன் கிடைப்பானா? கிடைப்பானா? என்று!
நல் மனிதன் கிடைப்பானா? கிடைப்பானா? என்று.
ஆனாலும் மனிதன் ஏமாற்றுபவனே. ஏமாற்றுபவனே என்பதுதான் மிஞ்சியது உலகில்.
ஆனாலும்
இனிமேலும் படைப்புக்கள் நிச்சயம் சித்தர்களால் படைப்புகள் வரும்
படைப்புக்கள் வரும் நல்லோர் இனியும் வருவார்கள் என்பேன் இக்கலியுகத்தில்
கூட இனியும் மாற்றுவார்கள் என்பேன்.
இவ்வாறு நல் படைப்புக்கள் சித்தர்களே ஈந்து பின் உலகத்தை திருத்துவார்கள் என்பேன்.
கடைசியில் கிருஷ்ணனே வந்துவிடுவான் இதனையும் அவந்தனே சொல்லிவிட்டான் தன் வாயால் என்பதையும் கூட.
இதற்கும்
பல சூட்சமங்கள் உண்டு யார்? யார்? எதனிடம் கேட்க வேண்டும் எதனிடம் உணர
வேண்டும்? என்பதையெல்லாம் யான் என்னிடத்தில் கைலாயத்திலிருந்து
உரைக்கின்றேன்.
மனிதனே நிலையில்லாதது நிலையில்லாததை தேடிக் கொண்டிருக்கிறாய்.
ஆனால் எப்பொழுது நிலை உள்ளதை தேட போகின்றாய்?
தேட போகின்றாய் என்று தான் உணர்ந்து இருக்கின்றோம் இறைவனே விட்டு விடுகின்றானா? இல்லை
ஈசனே யான் எதனை என்று கூட உங்களிடத்தில் பேசுவது?
பேசுவதற்கு
தகுதி இல்லாமல் நடந்து கொண்டு இருக்கின்றீர்கள் நீங்கள் இதனையும் வெறுத்து
வெறுத்து விட்டு எதனால் நீங்கள் மக்களுக்கு எதனை வைத்து சேவை செய்ய
வேண்டும்?
முதலில் தன் நிலைமையை பார். பின் பிறர் நிலைமையைப் பார் அப்பொழுது தான் இறைவன் வந்து உன்னை ஆட்கொள்வான்.
மனிதர்கள் இன்னொரு முறையும் சொல்கின்றேன் சொல்கின்றேன் பின் கஷ்டங்கள் பட்டு பட்டு ஏதும் நடக்கவில்லை என்றால்
நமச்சிவாயனே என்று ருத்ராட்சத்தை அணிந்து கொள்கின்றான்.
இது நியாயமா???
இது தகுமா??
இது உகந்ததா??
ஆனாலும் மனிதனின் பொறாமைகள் தன்னைத்தானே அழித்துவிடுகின்றன.
யான் ஒவ்வொன்றையும் பார்க்கின்றேன் இவ்வுலகத்தில்.
என்னையே
நம்பி நம்பி நமச்சிவாயா என்று சொல்லிச் சொல்லி பொய் கூறி புறம் கூறி
யான்தான் பெரியவன் யான்தான் பெரியவன் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றான்.
ஆனால் இங்கே யான் தான்(சிவன்) பெரியவன் என்று தெரியாமல் போய்விட்டது. மனிதர்களுக்கு.
மனிதர்களே
ஒன்று நீங்கள் திருந்துங்கள் இல்லையென்றால் இல்லை என்றாலும் நிச்சயம்
நோய்கள் ஓடோடி வரும் ஓடோடி வரும் என்பதற்கு தகுதியற்றவை இங்கில்லை
இங்கில்லை நலன்களே உரித்ததாகும் . உரித்ததாகும் என்பேன்.
இவ்விஷயத்திலும் சரியாக சரியாக என்னையும் பல திருத்தலங்களில் பூஜை செய்கின்றார்கள் ஆனால் பணத்திற்காக மட்டுமே .
ஆனாலும் இவையெல்லாம் தெரிந்துகொண்டு அவந்தனக்கு கஷ்டங்கள் வருகின்றது.
ஆனால் என்னையே ஈசனே உந்தனுக்கே யான் செய்து கொண்டிருக்கின்றேனே!
இப்பொழுது கூட என்னை இப்படி ஆக்கி விட்டாயே என்று ஆனால் அவன் செய்தது தவறு என்பது உணர்வதே இல்லை என்பேன். இல்லை என்பேன்.
இவ்வுலகத்தில் மாற்றங்கள் எவ்வாறு நின்று நின்று வரும் என்பதையும் கூறுகின்றேன்.
முதலில்
ஒழுக்கங்கள் கடைபிடிக்க வேண்டும் ஒழுக்கங்கள் கடைபிடிக்க வேண்டும் இவை
பலமுறையும் யான் சொல்லிவிட்டேன். சித்தர்களும் சொல்லிவிட்டார்கள்.
இதனை
சரியாக பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே உலகம் பிழைத்துக் கொள்ளும் உலகம்
பிழைத்துக் கொள்ளும் இனிமேலும் நன்மைகள் நன்மைகள் எதுவாயினும் இனிமேலும்
வருமப்பா.
ஆனாலும் தாங்கியிருக்கும் பூமாதேவி பின்பு அசைந்தால் நீங்கள் எல்லாம் அசைந்து விடுவீர்கள் கீழே.
இதனால் ஜாக்கிரதையாகவே இதற்கும் மாறாக உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை.
உலகத்தில்
நிலையானவன் இறைவனே என்பதை முன்கூட்டியே முன்கூட்டியே சித்தர்களும்
சொல்லியிருக்கின்றனர் ஆனாலும் சித்தர்கள் பேச்சையே கேட்பதில்லை மனிதர்கள்.
மனிதர்கள்
பின் ஏனோதானோ சொல்லி விடுகின்றான் பின் ஓர் 5 ஓர் 10 நாட்களுக்குள் தன்னை
தானே மனதில் செதுக்கிக் கொள்கின்றான். ஆனால் மறைந்து விடுகின்றான்.
ஈசன் சொல்வதையும் இதனையும் யான் ஈசன் இனிமேலும் வருவேனப்பா நிச்சயம் என் பக்தர்களுக்கு காட்சி அளிப்பேனப்பா.
ஆனாலும் யான் வந்தாலும் என் பக்தனே நீயா? ஈசன் என்று கூறி விடுவான் என்பதுதான் இங்கு பின் நகைத்தாடுதலாக உள்ளது.
ஆனாலும் அகத்தியனே வந்து விட்டாலும் கூட நம்புவதற்கு ஒன்றுமில்லை.
அகத்தியனே
திரிந்து கொண்டிருக்கின்றான் இவ்வுலகத்தில் கூட. நிதானித்து நிதானித்து
யாரையாவது நல் மனிதனைக் கண்டால் தூக்கி விடுவோமா என்று.
ஆனாலும் இதனை இதனையும் நன்குணர்ந்து பின் அகத்தியன்
தன்
பிள்ளைக்கு படிப்பு வேண்டும் தன் பிள்ளைக்கு வேலை வேண்டும் தன் இனத்திற்கு
இனம் சேர்க்க வேண்டும் தன் பிள்ளைகளுக்கு இன்னும் பிள்ளைகள் பிறக்க
வேண்டும் இவை எல்லாம் ஒரு பிறப்பா??? பிறப்பா? என்பேன்.
பிறப்புக்கள் இல்லை இவையெல்லாம் இறைவன் உருவாக்குவது இல்லை மனிதனே உருவாக்குகின்றான்.
இப்பொழுதும் கூட கடைசியாக சொல்கின்றேன். மனிதன் உருவாக்குவதற்கு நிச்சயம் தண்டனை மனிதனாலே உண்டு அதனால் நிச்சயம் உண்டு.
தர்மங்கள்
தானதர்மங்கள் செய்வதுண்டு மனிதர்கள் ஆனாலும் அதனை எதற்காக செய்கின்றார்கள்
அதனை புரிந்து கொண்டு நல் முறைகளாக செய்தால் மட்டுமே தான தர்மங்களுக்கு
பின் புகழ் உண்டு.
ஆனாலும் பின் இதை நினைத்து யான்தான் செய்தேன் யான்தான் செய்தேன் என்றால் நீயே செய்து கொள் உந்தனுக்கு.
தன் கடமையை பணி.
அவந்தன் கர்மாவும் நீ எடுத்துக்கொள்வாய் அதனால் உதவி செய்வதை யாராலும் எதனாலும் பின் எதனை என்றும் கூட உரைக்கக் கூடாது என்பேன்.
யான்(சிவன்) கூட பல மனிதர்களுக்கு உதவிகள் செய்கின்றேன்.
சொல்கின்றேனா??
கூறுங்கள் மனிதர்களே!
அதனால் உனக்கு இட்ட கட்டளை நீ சரியாக செய்து என்னிடத்தில் வந்து விடு இதுதான் நன்மையாக்கும் என்பேன்.
மற்றபடி விளம்பரங்கள் தேவையில்லை என்பேன்.
உண்மை பொருளுக்கு தேவையில்லை தேவையில்லை என்பேன்.
பொய்யான பொருளுக்கே விளம்பரங்கள் யான் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் விளம்பரங்கள் என்ன தேவையா???
மனிதனே
முட்டாள் மனிதனே சிந்தியுங்கள் அனைத்தும் பொய் பித்தலாட்டம் இதில் கூட
நியாயம் பேசுகின்றீர்கள் மனிதர்களே .! நீங்களே அழித்து வாழ்ந்து
விடாதீர்கள்.
யான் கூட இருக்கின்றேன் இவ்வுலகத்தை மாற்றுவதற்கு.
யானே
இங்கு பெரியவன் என்று கூட சொல்வதற்கு நீங்களே எதனால் என்பது கூட ஈசனே
பெரியவன் என்று யான் சொல்லிவிட்டால் நீங்கள் திரும்பவும் ஈசன் பெரியவன்
என்று சொல்லிவிட்டான் என்று கூட நகைத்து விடுவீர்கள்.
இப்பொழுது உலகத்தில் பன்மடங்கு அநியாயங்கள் நடக்கப்போகின்றது.
மனிதன் மனிதனே சீர்திருத்த போகின்றானா?
நீங்கள் என்ன அதற்கு செய்தீர்கள் என்பதைக்கூட முடிவெடுக்க வேண்டும்.
அதனால் பொய் மனிதர்களே
யான் அன்னதானம் செய்தேன் யான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன்
ஆனால் இவ்வுலகத்தில் நியாயம் நிற்கவேண்டும். தர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு நீ என்ன செய்தாய்??
இதுதான் இங்கே கேள்வி!!!
யான்
அடுத்தமுறை நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே கைலாயத்தில் உரைக்கின்றேன்
மனிதனே திருந்திக் கொள்ளுங்கள் வரும் காலங்களில் நோய்கள் பட்டதாகவே
ஓடிக்கொண்டு இருக்கின்றது.
நிச்சயம் ஒருமுறை மனதார எண்ணுங்கள்.
இக் காசி தன்னில் பல கோடி எண்ணிலடங்கா சித்தர்கள் தவம் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
யானேஉங்களை அழைத்து வந்து பாவங்களை தீர்த்து விடுவேன்.
மனதார நமச்சிவாயனே என்று கூறுங்கள் போதுமானது.
அடுத்த வாக்கும் கைலாயத்திலிருந்து உரைக்கின்றேன் நல் முறையாக.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment