சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும்
சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து சமர்ப்பிக்கின்றோம். காசியில்
உரைத்த வாக்கில்...என்
பக்தர்கள் அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என நமக்கு
கூறியுள்ளார்...இந்த 2025 ஆம் ஆண்டிற்கான பிரதோஷ நாட்களை இன்றைய பதிவில் பகிர்கின்றோம் . அனைவரும் குறித்து வைத்துக்கொண்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்..இல்லையில்லை வாய்ப்பினை நாம் உருவாக்கிக் கொண்டு பிரதோஷ வழிபாடு செய்யும் படி விண்ணப்பிக்கின்றோம் .



இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும் |
|
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு சித்தன் அருள் - 1764 - பிரதோஷ வேளை ரகசியம் |
|
நிச்சயம்
பிரதோஷ வேளைகளில் ஏதாவது ஒன்றை திருத்தலத்திற்கு சென்று செய்து கொண்டே
வாருங்கள் அப்பனே. இன்னும் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள்
குழந்தைகளுக்கும் கூட முன்னேற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே. |
அப்பனே
இதனை நீங்கள் அனைவரும் செய்யலாம் அனைவருக்கும் சொல்லலாம் என்பேன் அப்பனே .
என் பக்தர்கள் அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே. |
அப்பனே
இதனை தொடர்ந்து செய்து கொண்டே வரவேண்டும் என்பேன். இவையெல்லாம் செய்கின்ற
பொழுது சில தடை தாமதங்கள் நீங்கும் அப்பா. பின்பு தான் அனைவருக்குமே வெற்றி
கிடைக்கும் அப்பா. |
விளக்கம்
: பிரதோஷ காலசமயங்களில் ஈசன் ஆலயத்திற்கு சென்று ஏதாவது சேவைகள் வழிபாடு
மற்றும் செய்து வர வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள்
குழந்தைகளுக்கும் கூட முன்னேற்றங்கள் ஏற்படும் |
தேதி | தமிழ் தேதி |
11-01-2025 சனி | மார்கழி மாதம் 27 வளர்பிறை, த்ரயோதசி |
27-01-2025 திங்கள் | தை மாதம் 14 தேய்பிறை, த்ரயோதசி |
10-02-2025 திங்கள் | தை மாதம் 28 வளர்பிறை, த்ரயோதசி |
25-02-2025 செவ்வாய் | மாசி மாதம் 13 தேய்பிறை, த்ரயோதசி |
11-03-2025 செவ்வாய் | மாசி மாதம் 27 வளர்பிறை, த்ரயோதசி |
27-03-2025 வியாழன் | பங்குனி மாதம் 13 தேய்பிறை, த்ரயோதசி |
10-04-2025 வியாழன் | பங்குனி மாதம் 27 வளர்பிறை, த்ரயோதசி |
25-04-2025 வெள்ளி | சித்திரை மாதம் 12 தேய்பிறை, த்ரயோதசி |
10-05-2025 சனி | சித்திரை மாதம் 27 வளர்பிறை, த்ரயோதசி |
24-05-2025 சனி | வைகாசி மாதம் 10 தேய்பிறை, துவாதசி |
08-06-2025 ஞாயிறு | வைகாசி மாதம் 25 வளர்பிறை, த்ரயோதசி |
23-06-2025 திங்கள் | ஆனி மாதம் 9 தேய்பிறை, த்ரயோதசி |
08-07-2025 செவ்வாய் | ஆனி மாதம் 24 வளர்பிறை, த்ரயோதசி |
22-07-2025 செவ்வாய் | ஆடி மாதம் 6 தேய்பிறை, த்ரயோதசி |
06-08-2025 புதன் | ஆடி மாதம் 21 வளர்பிறை, அதிதி |
20-08-2025 புதன் | ஆவணி மாதம் 4 தேய்பிறை, துவாதசி |
05-09-2025 வெள்ளி | ஆவணி மாதம் 20 வளர்பிறை, த்ரயோதசி |
19-09-2025 வெள்ளி | புரட்டாசி மாதம் 3 தேய்பிறை, சதுர்தசி |
04-10-2025 சனி | புரட்டாசி மாதம் 18 வளர்பிறை, திதித்துவம் |
18-10-2025 சனி | ஐப்பசி மாதம் 1 தேய்பிறை, சுன்யதிதி |
03-11-2025 திங்கள் | ஐப்பசி மாதம் 17 வளர்பிறை, த்ரயோதசி |
17-11-2025 திங்கள் | கார்த்திகை மாதம் 1 தேய்பிறை, த்ரயோதசி |
02-12-2025 செவ்வாய் | கார்த்திகை மாதம் 16 வளர்பிறை, த்ரயோதசி |
17-12-2025 புதன் | மார்கழி மாதம் 2 தேய்பிறை, த்ரயோதசி |
|
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!! |
சித்தன் அருள் - 1764 - அன்புடன் அகத்தியர் - திதியில் செய்ய வேண்டியவை!
நம் குருநாதர் அகத்திய பெருமான்.... காசியில் உரைத்த வாக்கில்...என்
பக்தர்கள் அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
கூறியுள்ளார்...இவ் வாக்கினை அனைவரும் உணர்ந்து பின்பற்றுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்
அப்பனே ஒரு ரகசியத்தை இப்பொழுது சொல்கின்றேன் என்பேன் அப்பனே
முதுகில்
அப்பனே வெளிச்சமும் அதாவது இரவும் பகலுமாக அப்பனே பின் நிச்சயம் இருக்கும்
அப்பா.. அதைத் தன் வெளிச்சமாக எடுத்து வந்தால் அப்பனே நிச்சயம்
அனைத்திலும் வெற்றி பெறலாம் என்பேன். அப்பனே
அப்பனே அதை தன் வெளிச்சமாகவே பின் ஆக்கிவிட்டால் அப்பனே அனைத்திலும் வெற்றியப்பா
அப்பனே இதற்கும் கூட அப்பனே பின் மூச்சுப் பயிற்சி அனுதினமும் செய்ய வேண்டும் (பிராணயாமம்) என்பேன் அப்பனே
அப்பனே முதுகுத்தண்டு சாதாரணமில்லை என்பேன் அப்பனே
அதில்
தான் அனைத்து விஷயங்களும் அடங்கியுள்ளது என்பேன். அப்பனே... அவை தான்
கிரகங்களின் சக்தியை கூட ஈர்த்துக் கொடுக்கின்றது என்பேன். அப்பனே... இரவு
அதாவது வெளிச்சமே இல்லாமல் இருந்தால் அப்பனே கிரகங்கள் தாக்குகின்ற பொழுது
பல கஷ்டங்கள் வரும் அப்பா
ஆனாலும் வெளிச்சம் ஆகிவிட்டால் அப்பனே பல கஷ்டங்கள் வராதப்பா
அப்பனே அங்கு வெளிச்சம் ஏற்படுத்தி விட்டால் நிச்சயம் நிச்சயம் புருவம் மத்தியில் அப்பனே தானாகவே ஒரு ஒளி வந்துவிடும் அப்பா
அப்பனே அங்கு இறைவனை வரவழைத்து விடலாம் என்பேன். அப்பனே பின்பு
நீங்கள் தியானத்தில் அமருகின்ற பொழுது என்னென்ன நடக்கும் என்பதை எல்லாம் நீங்களே அறிந்து கொள்ளலாம் என்பேன். அப்பனே.
மூச்சு பயிற்சியை தொடர்ந்து அப்பனே செய்து கொண்டு வருகின்ற பொழுது முதுகுத்தண்டில் வெளிச்சம் ஆகிவிடும் அப்பா!!!
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இதை அனைவருக்கும் தெரிவி!!!
அனைவரும் இதை கடைப்பிடித்து வர வேண்டும் என்பேன் அப்பனே!!
நிச்சயம்
பின் அதாவது பிரதோஷ வேளைகளில் கூட அப்பனே எப்பொழுதும் கூட அப்பனே நிச்சயம்
அதாவது பின் ஏதாவது ஒன்றை திருத்தலத்திற்கு சென்று செய்து கொண்டே
வாருங்கள் அப்பனே இன்னும் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள்
குழந்தைகளுக்கும் கூட முன்னேற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே.
(பிரதோஷ காலசமயங்களில் ஈசன் ஆலயத்திற்கு சென்று ஏதாவது சேவைகள் வழிபாடு மற்றும் செய்து வர வேண்டும்)..
இன்றைய
பிரதோஷ நாளில் . அதுவும் சனி பிரதோஷ நன்னாளில் குருநாதர் உரைத்த வழிபாட்டை
செய்து வாழ்வாங்கு வாழ்வோம் என்று கூறி பதிவை முழுமை செய்வோம் . இன்றைய
நாளின் முக்கியத்துவம் உணர்த்திய நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு
நன்றி கூறி மகிழ்கின்றோம் . நேற்றைய நாளில் பெருமாள் வழிபாடு
செய்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம் . அதே போல் இன்று சிவ வழிபாடு
செய்ய வேண்டுகின்றோம் . நாளைய தினமும் மிக மிக சிறப்பான நாள் . ஆம் .
நாளை மார்கழி திருவாதிரை . அதனை பற்றிய சிறப்பு பதிவை அடுத்து காண்போமாக!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment