"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, March 4, 2025

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்

                                                        இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு!தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் என்பதற்கிணங்க ,  இந்த வாக்கினை குறைந்தது மூன்று முறை படித்து ,  நம் குருவின் அருளை பெற முயற்சி செய்வோம். நாம் ஏற்கனவே கூறிய வண்ணம் ,  இந்த வாக்கினை முதலில் படிப்பதற்கும் ,  குறைந்தது 3 முறை படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு .  மூன்று முறை படிக்கும் போது நம் எண்ணம் ,  சொல் , செயல் என மூன்றிலும் இந்த வாக்கின் சாராம்சம் நன்கு புலப்படும் .  இந்த வாக்கினை நன்கு உள்வாங்கும் போது உலகம் அறியாத 11 ரகசியங்கள் என்ன என்பது நமக்கு புரியும் . குருவருளால்  இதனை கீழே தொட்டுக் காட்டியுள்ளோம் .  இது போன்று குருநாதர் அகத்தியர் பெருமான் ,  சித்தர் பெருமக்களின் வாக்குகளை உள்வாங்க பழக வேண்டும் . 

ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்.

 1.நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் கலியுகத்தில் உலகத்தையும் மனிதர்களையும் காக்க வந்த அதி ரகசியம்

2.சபரிமலை சுவாமி ஐயப்பன் ஜீவசமாதி ரகசியம்

3.சபரிமலை பயணம் ரகசியம் - கர்மா அழியும் ரகசியம்

4.சபரிமலை சுவாமி ஐயப்பன் அள்ளி கொடுத்துக்கொண்டே இருக்கும் ரகசியம்

5.சனீஸ்வரன் அருளாசிகள் கொடுக்கும் ரகசியம்

 6.நம் குருநாதர் அகத்தியர் பெருமான் மூலம் முன்னோர்களின் ஆசிகளும் பெறுவதற்கு சமமான ரகசியம்

 7.தாமிரபரணி உருவாக வேண்டிய காரணம் - ரகசியம்

8.பாபநாசம் (பாபநாசர் திருக்கோயில்) ஆலயத்தில் ஈசன் பார்வதி தேவியார் வடிவாக அகத்தியர் பெருமானும் லோபாமுத்திரை அன்னையும் இருந்து கொண்டு பாவங்களை அகற்றி வரும் ரகசியம்

9.மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் அழகாக மூன்று பெரிய பாறைகள் வடிவில் பாவங்கள் அகற்றி வரும் ரகசியம்

10.புலஸ்திய மகரிஷி வழிகாட்டியாக இக்கலி யுகத்தில் இருக்கும் ரகசியம்

11.கலியுகத்தை வெல்லும் ரகசியம்

==================================================

இவ்வாக்கில் உள்ள ரகசிய திருத்தலங்கள் :-


(1) ஸ்ரீ லோபா முத்ரா அன்னை சமேத அகத்தீசர் ஆலயம். பண்பொழில்.மேக்கரை. செங்கோட்டை .மேற்கு தொடர்ச்சி மலை.

 (2) அச்சன்கோவில்

 (3) எருமேலி சாஸ்தா கோவில்

(4) சபரிமலை - கார்த்திகை மார்கழி

(5) சுவாமி ஐயப்பன் ஜீவசமாதி ரகசியம்!

(6) தோரணமலை முருகன் கோயில்

(7) அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில்

(8) திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில்

(9) தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள

நவதிருப்பதி ஸ்தலங்கள்:

1. திருவைகுண்டம் கள்ளர்பிரான் திருக்கோவில்.
2. நத்தம் (வரகுணமங்கை) விஜயாசன பெருமாள் திருக்கோவில்.
3. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்.
4. திருப்புளிங்குடி காய்சினிவேந்த பெருமாள் திருக்கோவில்.
5. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் திருக்கோவில்.
6. தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில்.
7. பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் திருக்கோவில்.
8. திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி-1) தேவர்பிரான் திருக்கோவில்.
9. திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி-2) அரவிந்தலோசனர் திருக்கோவில்.


(10) பாபநாசர் திருக்கோயில்
தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் எனும் இடம் இடத்தில் உள்ளது. குருநாதர் உருவாக்கிய நவகைலாயங்களில் முதல் கோயிலாகவும் சூரியனுக்கு உகந்த கோயிலாகவும் உள்ளது.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!

 சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு!








18/11/2024 அன்று குருநாதரின் அன்பு சீடர் புலஸ்திய மகரிஷி உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ லோபா முத்ரா அன்னை சமேத அகத்தீசர் ஆலயம். பண்பொழில்.மேக்கரை. செங்கோட்டை .மேற்கு தொடர்ச்சி மலை. 

கலியுகம் எப்படி இருக்கும் மனிதர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதை எல்லாம் அறிந்து உணர்ந்து அமைதியாக போதும் என நினைத்து தவத்தில் சென்று அமர நினைத்த குருநாதர் அகத்தியர் பெருமானை அனைத்து தெய்வங்களும் சித்தர்களும் வந்து மீண்டும் கலியுகத்தில் உங்களுடைய சேவை வேண்டும் என வேண்டுகோள் விடுத்து விளையாடிய விளையாட்டு!!!!!

பரலோகத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இறைவா போற்றி!!!!

குரு முனியே !! போற்றி!!

உனை பணிந்தே வாக்குகள் ஈகின்றேன் புலத்தியனே!!!

அப்பப்பா !! எண்ணற்ற பிறவிகள் மனிதன் கடந்தாலும்!!!.........

ஆனாலும் அறிந்தும் உண்மையை புரிவதே இல்லை!!!!

என் மனதில் அழகாகவே இருக்கும் குரு முனியை பற்றி யானே பின் எடுத்துரைப்பேன்!!!

எடுத்துரைப்பேன் நிச்சயம்!!

கலியுகத்தில்!!! 
கலியுகம் தொடங்குவதற்கு !!!........

(கலியுகம் துவங்கும் நேரம்)

பின் குரு முனியே!!! நிச்சயம்... இவ்வாறெல்லாம் மனிதன் இருக்கின்றானே!!! என்று ஓடோடி வந்து நிச்சயம் பின் அதாவது இங்கே!!!! அமர்ந்தான்!!!

(கலியுகம் துவங்கும் பொழுது மனிதர்கள் இப்படி இருக்கின்றார்களே என்று வருந்தி குருநாதர் அகத்தியர் பெருமான் இந்த இடத்தில் வந்து தவத்தில் அமர்ந்தார்)

ஆனாலும் பின் என்னிடத்தில்... புலத்தியனே!!!.... போதும்!!!

கலியுகம் தொடங்கி விட்டது மனிதனிடத்தில் புத்திகள் அதாவது தாழ்வடைந்து விடும்.

தாழ்வடைந்து தர்மமும் தலைகீழாகும்!!

இதனால் நிச்சயமாய் யான் எங்கும் அலையப்போவதில்லை!!!!

பின் மக்களை தர்மத்தை கடைபிடியுங்கள் என்றாலும் அதர்மத்தை தான் கடைப்பிடிப்பார்கள். 
உண்மையைச் சொல்!! என்றால்.. பின் பொய்யை தான் கூறிக் கொண்டிருப்பார்கள். 
நிச்சயம் நியாயமாக இருங்கள் என்று சொன்னாலும்... பின் அநியாயமாகத்தான் இருப்பார்கள்..

அதனால் நிச்சயம் பின் புலத்தியனே போதும்...

நிச்சயம் பல மக்களுக்கு எடுத்துரைத்து.. பல பல தெய்வங்களுக்கும் எடுத்துரைத்தது... போதும் 

அதனால் பின் இனிமேல் என்னிடம் யாரும் வராதீர்கள்!!! என்று!!!

அதனால் கலியுகமும் தொடங்கி விட்டது... நிச்சயம் மனிதன் நோய் நொடிகளோடும் புத்திகள் இருந்தும் புத்திகள் இல்லாமலும் நிச்சயம் கஷ்டங்களோடு வாழ்வான். 

இதனால் யான் இங்கேயே அமருகின்றேன்... யாரும் வேண்டாம் எந்தனுக்கு என்று!!! என்று!!... 

புலத்தியர் பெருமான் குருநாதரிடம் வேண்டுகோள்

அறிந்தும் உண்மையை எடுத்துரைக்க.. யாரும் இல்லையே!!!

நிச்சயம்... குருமுனியே!!! குருமுனியே!!...

நீங்களே இப்படி சொல்லிட்டால்!!????????!... பின் யாங்கள் எப்படி?? என்று!! பின் அறிந்தும் கூட!!!

குருநாதர் அகத்திய பெருமான்!! மறுமொழி 

ஆனாலும் பின் நிச்சயம் வேண்டாம்! வேண்டாம்! போதும்!!

 யான் நிச்சயம் தவத்தில் இறங்குகின்றேன்!!! அறிந்தும் அறிந்தும் என்று. 

அன்னை லோபா முத்திரை தேவியார் வேண்டுகோள்!!

நிச்சயம் ஓடோடி வந்து நிச்சயம் குருமுனியே!! மகா முனியே!! அன்புள்ளம் கொண்டவரே கருணை மிகுந்தவரே... அன்பு எங்கு நிறைந்திருக்குமோ.. அங்கெல்லாம் நிச்சயம் வந்து!! வந்து !! 

நிச்சயம் உன் அதாவது உன் அன்பு மனைவி பேசுகின்றேன்!!!

நிச்சயம் பின் வாருங்கள் உலகத்தை காக்க என்று!!!

அகத்தியர் பெருமான் மறுமொழி!
 
தேவியே!!! நிச்சயம் வேண்டாம்!!!... போதும்!! நீயும் இங்கேயே அமர்ந்திடு!!... நிச்சயம் கலியுகத்தில் அதாவது இறைவனிடத்தில் பக்திகள் மட்டும் செலுத்துவான் மனிதன்! 

ஆனால் உண்மைகள் தெரியாமல் பக்திகள் செலுத்துவான் மனிதன்... ஒன்றும் லாபம் இல்லாமல் லாபங்கள் இல்லாமல் போகும். 

அதனால் நிச்சயம் வேண்டாம்.. அதாவது அறிந்தும் 

அன்னை லோபா முத்திரை தேவி குருநாதரிடம் வேண்டுகோள் !!

கருணை மிகுந்து படைத்தவரே... நீங்களா??? இப்படி ? சொல்கிறீர்கள்!!!!?????

ஈசன் கட்டளை ஏற்று நிச்சயம் பாரெங்கும் இருக்கும் மனிதர்கள் அதாவது ஏழ்மையோடு கூட அதாவது இன்னும் அறிந்தும் கூட பின் தீயோர்களையும் கூட பின் நல்லோர்களையும் கூட.... காக்க வந்து!!!......

 ஆனால் இப்போது இப்படி சொல்கின்றீர்களென்றால் !?!?!?  எப்படி?? கலியுகத்தில் மனிதன் வாழ கூடும்????????????????

அகத்தியர் பெருமான்  மறுமொழி 
 
நிச்சயம் தேவியே!!! தேவியே !! நில்லும்!!.. போதும்... நீயும் இங்கே இருந்து விடு!

 ஏனென்றால் கலியுகத்தில் மக்கள் நோய்கள் நொடிகளோடும் நிச்சயம் அதாவது அறிந்தும் இறைவன் பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றுவார்கள். 

அதனால் இங்கேயே உந்தனுக்கு காட்டுகின்றேன்... பின் மக்கள் எவ்வாறெல்லாம் இருப்பார்கள் என்றெல்லாம். 

புலத்தியர் பெருமான் வேண்டுகோள் 

நிச்சயம் குருமுனியே!!! அனைத்தும் வாரி வழங்கினீர்கள் அதாவது நீங்கள் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை எல்லாம் என்னிடத்தில் பின் நிச்சயம் பின் அறிந்தும் அனைத்தையும் செப்பினீர்கள்!!!

பின் அதாவது பின் இப்பொழுது இப்படியா??

 நிச்சயம் வாருங்கள் என்று!!

அகத்தியர் பெருமான் மறுமொழி .

புலத்தியனே!!! நிச்சயம் வேண்டாம்!!
 அறிந்தும் என்று. 

ஆனாலும்... சரி புலத்தியனே... என் பேச்சை நீ கேட்பாயா?? இல்லையா? 

புலத்தியர் பெருமான் பணிவுடன்!!!!. 

ஐயோ குருமுனியே!! நீங்கள் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்!!!

நிச்சயம் உன்னை தவிர எந்தனுக்கு ஆள் இல்லை !!!

நிச்சயம் உண்டு உண்டு குருமுனியே!!! வாருங்கள்!! பின் உலகத்தை காப்போம் என்று..ஆனாலும் குரு முனியே!! குருமுனியே!! 

குருநாதர் அகத்தியர் பெருமான் மறுமொழி 

பின் புலத்தியனே!!!! அனைத்து விஷயங்களையும் யான் சொல்லிவிட்டேன்!!!

 முடிந்தால் மக்களை காப்பாற்று என்று. 

புலத்தியர் பெருமான் வேண்டுகோள். 

நிச்சயம் குருமுனியே!!! பின் அனைத்தும் அதாவது பின் குருவிற்கு நிகர்!!! குருவே!!!

அதாவது சீடனுக்கு அனைத்தும் தெரிவித்து விட்டீர்கள்!!!

ஆனாலும் நிச்சயம் பின் குருவானவன் எவ் வழியோ??.... சீடர்களுக்கு அவ்வழி தான் என்று நீங்கள் தான் சொன்னீர்கள்! 
அதனால் யானும் உங்களுடன் நிச்சயம் அமர்கின்றேன்.. பின் அறிந்தும்.

ஆனாலும் கலியுகத்தில் நிச்சயம் குருவானவன்!;

 அதாவது சீடன்... குருவாக பின் குருவானவன் இடத்திற்கு அடைய பார்ப்பான். இதுதான் கலியுகம்.. நிச்சயம் அறிந்தும் அறிந்தும்... உண்மைதனை எடுத்துரைக்க. 

நிச்சயம் சரி பின் குரு முனியே!!! குருமுனியே!! நீங்கள் நிச்சயம் முடிவெடுத்தது முடிவெடுத்தது தான்!!

ஏனென்றால் பின் உங்களிடத்திலே யான் இருந்திருக்கின்றேன் என்று.. சரி பார்ப்போம் என்று!!!

அனைத்து சித்தர்களின் வேண்டுகோள்!!

பின் அனைத்து சித்தர்களும்... புசுண்ட முனியும்... இன்னும் அறிந்தும்... தேரையனும்..(தேரையர் சித்தர்) இன்னும் பாம்பாட்டியும்....(சித்தர்) இன்னும் ரிஷிகளும்... இன்னும் இன்னும் இடைக்காடனும்... இன்னும் இன்னும்... பல பல சித்தர்களும் வந்து வந்து... 

நிச்சயம் மாமுனிவரே!!! பின் உலகத்தை காக்க.. ஈசன் உன்னிடத்தில் நிச்சயம்... அனைத்தும்!!

அனைத்து வித்தைகள் தெரிந்தவன் அகத்தியனே!!!... அகத்தியனால் மட்டுமே முடியும் என்று..

ஆனால் நிச்சயம் நீங்கள் அமர்ந்து விட்டீர்களே  சாதாரணமாக இங்கு வந்து!!

ஏன்? எதற்கு? என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் நிச்சயம் பின் நீங்கள் உணர்ந்தவைகளே!!! அனைத்தையும் நீங்கள் உணர்ந்தவர்களே நீங்கள்!!!

அகத்தியர் பெருமான் மறுமொழி 

நிச்சயம் கலியுகத்தில் நிச்சயம் மனிதனால் என்ன? ஏது? என்று அறிய நிச்சயம் உண்மைதனை கூட அனைவருக்கும் தெரியும் என்று... தெரியும் என்று...(கலியுகத்தில் மனிதன் தனக்கு அனைத்தும் தெரியும் என்று தன்னுடைய புத்தியை பயன்படுத்திக் கொண்டு வாழ்வான்)

புலத்தியர் உள்பட அனைத்து சித்தர்களும் !!!!

சரி !! பின் அகத்தியன் ஒரு சொல்லை விட்டு விட்டால் அதை நிச்சயம் பாதுகாப்பான்... பின் அகத்தியன் நிச்சயம் முடிவெடுத்து விட்டாலும் அப்படித்தான் என்று நிச்சயம் பின்.... பின் அறிந்தும் கூட....

நிச்சயம் பின் குருமுனியே !!  நிச்சயம் உன் தவத்தை தொடங்கும் என்று!!!

ஐயப்பன் வருகை!!

 நிச்சயம்!!! ஓடோடி வந்து நிச்சயம் அறிந்தும் பின் அதாவது பின்.... மணிகண்டனே தேடினான்!!

எங்கே என் தந்தை???? அகத்தியன் எங்கே??? என்றெல்லாம் நிச்சயம் தேடி தேடி மலைகள் மீதும் அறிந்தும் என் தந்தை எங்கே??? என் தந்தை எங்கே?? என்று அறிந்தும்!!

அகத்தியர் 

ஆனால் இங்கே... குருமுனி அழகாகவே நிச்சயம்.. தன் மகன் தன்னை தேடுகின்றானே என்று.. பின் ஆனந்த கண்ணீரோடு!!!

மணிகண்டா!!!!... என்று பின் மணிகண்டா!!! மணிகண்டா!! என்று பின் குரு முனியும் கூட!!! (இங்கிருந்து குருநாதர் மறு குரல் கொடுத்தார்)

ஐயப்பன்

தந்தையே தந்தையே
ஆனால் உங்கள் குரல் மட்டும் கேட்கின்றது!! தந்தையே!!!!
 நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்???

எந்தனுக்கு அனைத்தும் சொல்லி இருக்கின்றீர்கள்!! நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்??? மறைந்திருக்கின்றீர்களா??? என்றெல்லாம்!!!
நிச்சயம் பின் மலைகளிலும் காடுகளின் மீதும் அதாவது...அவை தன் இவ் கார்த்திகை திங்களில் (மாதத்தில்) தான் நடந்தது!!!

அதனால்தான் நிச்சயம் மணிகண்டனை தேடி தேடி இக் கார்த்திகை திங்களிலும் மார்கழி திங்களிலும் கூட 

(பக்தர்கள் மாலை அணிந்து மண்டலகாலம் விரதம் அனுசரித்து ஐயப்பனை காண செல்வது..இவ் மாதங்களில் தான்)

புலத்தியர்

 பின் அங்கங்கு தேடினான் மணிகண்டன் இன்னும் கூட இன்னும் அதாவது வந்து கொண்டே வந்து கொண்டே மணிகண்டன்... அதனால்தான் பக்தர்கள் பின் மாலை அணிவித்து பின் மலைகளில் ஏறி வரும் பொழுது நிச்சயம் பின் அறிந்தும்... இதைப்பற்றி இன்னும் விளக்கமாகவே இங்கே விவரிக்கின்றேன்...

பல ரகசியங்கள் இங்கிருந்தே விளக்குகின்றேன்... அறிந்தும் அறிந்தும் கூட. 

ஐயப்பன்

அதனால் நிச்சயம் பின் தந்தையே!! தந்தையே!! பின் அனைத்தும் பாலூட்டி சீராட்டி பின் என்னை வளர்த்தீர்களே!!! நிச்சயம் பின் மணிகண்டா!!! என்ற பெயரையும் நிச்சயம் பின் எந்தனுக்கு வைத்தீர்களே... இன்னும் அனாதை ரட்சகனே!!!... எனும் பெயரும் கூட !!
இன்னும் சபரிநாதனும் எனும் பெயரும் கூட..... ஐய்யன் பெயரும் கூட.... இன்னும் பின் இன்னும் மலையோன்!!! இன்னும் காடுடையோன்.. பின் அழகாக... பின் அழகாக வேந்தனே! வேந்தனே! என்று புலியனே! புலியனே! என்று நீங்கள் அழைத்தீர்களே... நீங்கள் எங்கு சென்று விட்டீர்கள்???

 அனைத்தையும் எந்தனுக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தீர்களே என்று!! ஐய்யனும் கூட அதாவது மணிகண்டன் கூட!!

(குருநாதர் ஐயப்பனுக்கு வைத்த பெயர்கள் 
மணிகண்டன் 
அனாதை ரட்சகன்
சபரிநாதன் 
ஐயன்
மலையோன்
காடுடையோன் 
வேந்தன் 
புலியன் )

புலத்தியர் 

அதாவது இங்கே சொல்வேன் என் குருநாதரை பற்றி... யான் பெருமையாக பேசுகின்றேன் இங்கு. 

ஏன்? எதற்கு? என்றால்
பின் கருணை படைத்தவர்களை  நிச்சயம் பின் குரு ஆவதற்கு தகுதியாக தகுதி!! தகுதி!!

ஆனால் மனிதனிடத்தில் அத் தகுதிகள் இல்லை!! இல்லை!!!

மீண்டும் ஆனால் பின் அறிந்தும் பின் அறிந்தும் இவை என்று அறிய நிச்சயம் பின்...

அகத்தியர் மறுகுரல்

 மணிகண்டனே!!! என்று!!

 பின் ஆனாலும்... இன்னும் என் குரு 
அதாவது குரு முனியும்... பின் 

ஆனாலும்... தந்தையை தேடி தேடி அழுது கொண்டே (ஐயப்பன்)

பின் குரு முனியே... தந்தையே நிச்சயம் இப்படி என்னை அனாதையாக விட்டு விட்டு சென்று விட்டீர்களே... என்னை!!

யான் என்ன ? தவறு செய்தேன்???

பின் உன்னையே பின் அறிந்தும் இவை என்று கூட 

அகத்தியர் பெருமான்!!

 இதனால் நிச்சயம் மகனே!! மணிகண்டா!! வா !! என்று!!!

ஆனாலும் ஓடோடி வந்து விட்டான் ஓடோடி வந்து விட்டான் மணிகண்டனும்..

ஐயப்பன்

தந்தையே!!! பின் உன் மடியில் யான் உறங்குகின்றேன்!!!

குருநாதர் அகத்தியர் பெருமான் 

 நிச்சயம் பின்... மணிகண்டனே உன் தந்தையிடன் நிச்சயம் அறிந்தும் கூட நீ எங்கு வேண்டுமானாலும் உறங்கலாம்... 

பின் ஆனாலும் மணிகண்டன் மடியின் மீது அழகாகவே உறங்கினான்.. உறங்கினான். 

அகத்தியர் பெருமான்

பின் மணிகண்டனே என்ன வேண்டும்? என்று நிச்சயம்!!

ஐயப்பன் 

தந்தையே ஏன் இப்படி?? மனிதனை எல்லாம் அதாவது அறிந்தும் கூட காத்து நிச்சயம் எங்களுக்கு எல்லாம் நல்வழிப்படுத்தினாய்!!

ஆனால் இப்பொழுது நீங்கள் இங்கே அமர்ந்து விட்டார்களே என்று!!

அகத்தியர் பெருமான் 

மணிகண்டனே கேளும்!!!

கலியுகத்தில் நிச்சயம் மனிதர்கள் ஒழுங்காகவே வாழப் போவதில்லை!!! அதனால்தான் யான் இங்கே அமர்ந்து விட்டேன்!!! போதும்!!!

ஐயப்பன்

நிச்சயம் பின் தந்தையே... இப்படி நீங்களே சொல்வீர்கள் அதாவது எனக்கெல்லாம் நிச்சயம் நல்லோர்கள் அதாவது நல் மனதோடு வந்தவருக்கெல்லாம் நிச்சயம் அருள் கொடுங்கள்  என்று அறிந்தும் எவை என்று அறிய!!! (நீங்கள் தான் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்தீர்கள்)

தந்தையே நிச்சயம்.. பின் நல்லோருக்கெல்லாம் வழிகாட்டுங்கள் என்று நிச்சயம் நீங்கள் தான் சொல்லிக் கொடுத்தீர்கள் 
அதனால் நிச்சயம் வாருங்கள் என்று!!!

அகத்தியர் பெருமான் மறுமொழி 

பின் மணிகண்டா!!! உந்தனுக்கு தெரியாது!!!!

 மணிகண்டன் அறிந்தும்!!!

அகத்தியர் பெருமான் உபதேசம் 

மணிகண்டா !! நிச்சயம் உந்தனுக்கு தெரியாது அறிந்தும். 

ஏனென்றால் மனிதன் அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு இறைவனை வணங்குவான் கலியுகத்தில்...

மணிகண்டா !! அதனால் வேண்டாம் என்று 

ஐயப்பன்  வேண்டுகோள் 

தந்தையே!!  நிச்சயம் நிறுத்தும்!!!... வா!!! அதாவது என்னிடத்தில்... நிச்சயம் தந்தையே!!  என் அன்புக்கு வா!! நிச்சயம் அடிபணிந்து என்று நிச்சயம் பின் அறிந்தும்...

அதனால் நிச்சயம் இவை என்று அறிய அறிய... நிச்சயம் இவை உணர்ந்து நிச்சயம் உண்மைதனை எடுத்துரைக்க...வா... தந்தையே வா ஒரு முறையாவது வா... என்னிடத்தில் அதாவது...இவ் மலையின் கீழே வா !!  பார்ப்போம்!! என்று!!

அகத்தியர் பெருமான்

சரி மணிகண்டா... அன்பினாலே யான் வருகின்றேன் என்று நிச்சயம் தற்பொழுது கூட... பின்  """"'"""அச்சன் பின் தலைமை என்று அவை அழைக்க !!! அங்கே நிச்சயம் அறிந்தும் கூட!!!

 (அச்சன்கோவில் அரசே!!!! என்று ஐயப்பனை துதித்து பாடும் ஸ்தலம் )

(அச்சன் கோயில் தர்மசாஸ்தா கோயில்.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ள கோவிலாகும் தமிழ்‌நாட்டின், செங்கோட்டையிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுபாதை வழியாக அச்சன்கோவில் அய்யப்பன் கோயிலுக்கு செல்லலாம்)

பின் நிச்சயம் இவை என்று அறிய அறிய பின் என்னுடைய குருமுனி அகத்தியனும் கூட அங்கு அமர்ந்து...

நிச்சயம் மணிகண்டா!!! நீ இங்கு (அச்சன்கோவில்) வருவோருக்கெல்லாம் அள்ளிக் கொடு!!! நிச்சயம் எதை என்று புரிய... அதனால் இங்கேயே நீ இருக்க வேண்டும்... அதனால் பின்!!! என்னை தேடி வராதே!!! என்னை தேடி வராதே!!!..... என்றெல்லாம் நிச்சயம் குரு முனியும் கூட!!!

ஐயப்பன் வேண்டுகோள் 

பின் தந்தையே... ஏன் இப்படி சொல்கின்றீர்கள்... பின் கருணை பாசம் அன்பு காட்டிவிட்டு... இப்படி அறிந்தும் நிச்சயம் ஏன்!!??

அகத்தியர் பெருமான் 

பின் நிச்சயம் மணிகண்டனே.. பின் இங்கே தங்கி விடு... இங்கு வருவோருக்கெல்லாம் வரத்தை பின்.... நிச்சயம்!!

ஆனாலும் ஒன்று.... அனைத்தும் ( தவறுகள்)செய்து விட்டு வருவோருக்கெல்லாம் நிச்சயம் தண்டனை கொடுத்து.... தண்டனையை கொடு தைரியமாக!!! கலியுகத்தில் தவறு செய்து விட்டு தான் பின் வருவான் மனிதன்... அதனால் நிச்சயம் தண்டனை கொடு!!!! விட்டு விடாதே என்று... நிச்சயம் குரு முனியும் கூட!!!

ஐயப்பன் கூறியது 

தந்தையே நிச்சயம் உன் சொல்லை யான் கேட்கின்றேன்...

குருநாதர் அகத்தியர் கூறியது 

நிச்சயம் மணிகண்டனே!!! கலியுக வரதனாக இரு!!!
நிச்சயம் எதற்கும் மயங்கிடாதே!!! பாசங்கள் காட்டுவார்கள்!! அன்பு காட்டுவார்கள் மயங்கி விடாதே!!
நிச்சயம் பின் அறிந்தும் உண்மைதனை கூட பின் அடியோடு நிச்சயம் பின் பக்தர்களை காக்க நீ இங்கே தான் இருக்க வேண்டும் என்று. 

நிச்சயம் பின் அதாவது அங்கே மறைந்தான் பின் மணிகண்டன்!!

மீண்டும் பின் அறிந்தும் இங்கே வந்து பின் தவத்தை தொடங்கினார் குருநாதர் அதாவது பின் அறிந்தும் எவை என்று மீண்டும்...

ஐயப்பன் மீண்டும்!!!

 மணிகண்டன் அங்கிருந்து தந்தையே!!! தந்தையே!! இங்கே இருக்கின்றேன் உன்னை யான் பார்க்க வேண்டும் என்று!!!

நிச்சயம் பின்  அறிந்தும் பின் அதாவது குரு முனியும் கூட பின்

குருநாதர் ஐயப்பனுக்கு இட்ட கட்டளை

 மணிகண்டனே... மீண்டும் இங்கு வந்து விடாதே!! என்று!!!

நிச்சயம் அறிந்தும் கூட இதனால் பின் பாசத்திற்கு அடிமையானவன் பின் மணிகண்டனே!!!!

மீண்டும் என்ன செய்தான்???

நிச்சயம் பின் அதாவது குரு முனிக்கு தெரியும் இவன் வருவான் என்று!!!

நிச்சயம் மணிகண்டன் ஓடினான்... அங்கும் இங்கும்!!!

குரு முனி  மறைந்தான்!!! (அதாவது குருநாதர் அகத்தியர் மறைந்து கொண்டார்.)

 நிச்சயம் மணிகண்டன் தேடி வந்தான்!! காடுகளிலும் மலைகளில் மீது நிச்சயம் அறிந்தும் கூட கடைசியில் நிச்சயம் இவை என்று அறிய அறிய எருமேலி..

(எருமேலி சாஸ்தா கோவில் கேரள மாநிலத்தில் கோட்டையம் பத்தனம்திட்டா எல்லையில் உள்ள  தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது சபரிமலை செல்லும் வழியில் அமைந்துள்ளது மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கியமான இடமாக  அமைந்துள்ளது)

எருமேலி சென்று நிச்சயம் அங்கும் இன்னும் பல மலைகளை கடந்து கடந்து கடைசியில் இப்பொழுது சபரிமலை என்று அழைக்கின்றார்களே 
அங்கே நிச்சயம் குருநாதன் ஒளிந்து கொண்டான்!!

ஒளிந்து கொண்டு நிச்சயம் ஆனாலும் பின் அதாவது மணிகண்டனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை குரு முனியை!!

நிச்சயம் தன்னை கூட மீண்டும் மீண்டும் அறிந்தும் எதை என்று புரிய.. பின் இவை என்று அறிய மீண்டும்..

ஆனாலும் நிச்சயம் பின் ஆனாலும் தேட தொடங்கினான்... தந்தையே என்று அழுது கொண்டு...

ஆனால் லோபா முத்திரையும் நிச்சயம் மணிகண்டனே!!! மணிகண்டனே!!! உன் தந்தை !!....

ஒரு மலை இருக்கின்றதல்லவா...!! அங்கே இருக்கின்றான் நிச்சயம் நீ சென்று விடு என்று!!

மணிகண்டன் ஓடினான் சபரிமலைக்கே!!!

நிச்சயம்  அதனால்தான் அறிந்தும் இக் கார்த்திகை மார்கழியில் தான் அது நடந்தது!!!

அதனால்தான் நிச்சயம் பின் மாலை அணிவித்து நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் மணிகண்டன் சென்ற பாதையில் எல்லாம் இப்பொழுது மனிதன் செல்கின்றான். 

தூய உள்ளமாக செல்கின்ற பொழுது கர்மா அழியும்!!

ஆனால் இவையெல்லாம் மனிதனுக்கு தெரிவதே இல்லை 

நிச்சயம் பல பல புராணங்களில் கூட சுவடிகளில் கூட நிச்சயம் தன்னில் எழுதி வைத்தார்கள்.. பன்மடங்கு. 

ஆனாலும் அவற்றையெல்லாம் அழித்து விட்டார்கள்...

ஏனென்றால் கலியுகம் அழிவு பாதைக்கு செல்ல வேண்டும் என்று.. நிச்சயம் இவை என்று அறிய..

மீண்டும் சரி பின் சபரிநாதனும் பின் அதாவது அறிந்தும் கூட... பின் நிச்சயம் தந்தையே!!! நீங்கள் எங்கு ஒளிந்து இருக்கின்றீர்கள்??? நிச்சயம் பின் அறிந்தும் கூட. 

அகத்தியர் மறுமொழி 

பின் நிச்சயம் உன் அன்னை லோபா முத்திரை பின் உந்தனுக்கு சொல்லிவிட்டாளா?????

 மணிகண்டனே....யான் இங்குதான் ஒளிந்திருக்கின்றேன் என்று. 

நிச்சயம் அப்பப்பா!!!! அறிந்தும் கூட நிச்சயம் எவை என்று அறிய அறிய!! இதை என்று புரிய நிச்சயம் 

தந்தையே ஏன் இப்படி?? என்று!!

ஐயப்பன் ஜீவசமாதி ரகசியம்!

அகத்தியர் பெருமான் கூறியது

நிச்சயம் நீ இங்கே இருக்க வேண்டும்!! நிச்சயம் உடம்பை விட்டுட்டு வா என்று!!

 நிச்சயம்... தற்பொழுது பின் உடம்பை அங்கே விட்டிட்டான் சபரிநாதன்... !!

அதாவது பின் பக்கத்திலே பின் ஜீவசமாதியாக இருக்கின்றான்... அதுவும் யாரும் அறியாதது...

நிச்சயம் மீண்டும் அறிந்து எவை என்று புரிந்தும் கூட பின் அதாவது இன்னும்... ஆனாலும் மீண்டும் இங்கு வந்து அமர்ந்தான்.

அகத்தியர் ஐயப்பனுக்கு மீண்டும் கட்டளை

நிச்சயம் மணிகண்டா இனிமேலும் வரக்கூடாது நீ!!
நிச்சயம் இவ் மலையிலேயே இரு நீ !!!

 நிச்சயம் மனிதன் உன்னை தேடி வரட்டும் நிச்சயம் அன்பும் பண்பும் யார்? ஒருவனுக்கு இருக்கின்றதோ? அவந்தனக்கு அள்ளி கொடு என்று!!!

நிச்சயம் இப்பொழுது வரை அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டு தான் கொடுத்து கொண்டே இருக்கின்றான் மணிகண்டன் !!!

அதாவது பின் என் குருமுனியின் சொல்லை மணிகண்டன் ஏற்று!! ஏற்று!

மீண்டும் சரி!! என்று அதாவது அள்ளி கொடுத்துக்கொண்டே இரு!!! நல் மனதோருக்கு!!!

அதுதான் நீ காட்டும் பின் அன்பு!!!

அப்படி நீ.. அள்ளி கொடுத்துக் கொண்டே இருந்தால்  யான் உன்னிடத்தில் வருவேன் என்று.. என் குரு முனியும் கூட சொல்லிச் சொல்லி!!  வழி நடத்தி!!!

மீண்டும் இங்கே வந்து அமர்ந்தான் குரு முனி!!

முருகன் குருநாதர் அகத்தியருக்கு விடுத்த அழைப்பு!!

மீண்டும்... தந்தையே!!! தந்தையே !! என்று  கூக்குரலிட்டு தந்தையே தந்தையே என்று.. 

பின் இவந்தன் யார் ??? என்றால் முருகனே!!!

பின் தந்தையே!! எங்கு இருக்கின்றீர்கள்?? எங்கு இருக்கின்றீர்கள்??? ஏன் வரவில்லை... எந்தனுக்கும் அனைத்தும் சொல்லிவிட்டீர்கள் என்று..(அனைத்தும் கற்றுக் கொடுத்தீர்கள் என்று) ஆனாலும் மயில் மீது வந்து!! 

ஆனாலும் பின்  சிறிது விளையாட்டு... விளையாட்டு புத்தி பின்  முருகனுக்கு... மயில் மீது ஏறி வந்து விட்டான்!!!

தந்தையே ஏன் இந்த கோலம்??? ஏன் இங்கு வந்து விட்டீர்கள்??? நீங்கள் அனைத்தும் சொல்லிக் கொடுத்தீர்கள் ஆனாலும்!! இப்பொழுது நீங்களே இப்படியா என்று!!

அகத்தியர் பெருமான் முருகனிடம் கூறியது 

முருகா உன் வேலையை பார்!!

முருகன் பிடிவாதம் 

நிச்சயம் பின் பார்க்க மாட்டேன்...  !!

என்னுடன் நீங்கள் மயில் மீது வந்து அமருங்கள் பின் செல்வோம் என்று. 

அகத்தியர் பெருமான் மறுமொழி 

நிச்சயம் பின் அறிந்தும் கூட யான் வருவதில்லை... நிச்சயம் நீ திரும்பி செல் என்று!!!

நிச்சயம் அவை இவை என்றெல்லாம் நிச்சயம் அதாவது விளையாட்டு புத்திகாரன் முருகனும்..

பின் நிச்சயம் தந்தையே நீங்கள் இப்போது வரவில்லை என்றால் நிச்சயம்... யான் ஏதாவது செய்து விடுவேன் என்று!!!

அகத்தியர் பெருமான் 

அடடா!!!!.... முருகா!!! நிச்சயம் யான் வருகின்றேன் என்று 

முருகன்

நிச்சயம் அறிந்தும் கூட என் மயில் மீது உட்கார்!! என்று நிச்சயம் பின் குருமுனியை அமர வைத்து.... நேராக தோரணமலை!!! தற்பொழுது கூட அறிந்தும் கூட பின் இலஞ்சி இன்னும் திருமலை அறிந்தும் இவையென்று சுற்றிப் பார்த்து!!!

தோரணமலை. முருகன் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் எனும் ஊருக்கு வெளியே அமைந்திருக்கும் மலைக்கோயில் ஆகும். தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழியில் இருக்கின்றது.அறுபத்து நான்கு சுனைகள் கொண்ட தோரணமலையில், அந்த சுனைகளின் நீராலேயே, அங்குள்ள முருகன் கோயிலின் மூலவர் அபிசேகம் நடைபெறுகிறது

குருநாதர் அகத்தியர் பெருமான் தோரண மலையை தேரையர் மலை தற்போது தோரணமலை என்று அழைக்கப்படுகின்றது என்று திருவனந்தபுரம் சத்சங்கத்தில் கூறியதை நினைவுபடுத்துகின்றோம். தேரையர் சித்தர் பெயரில் இந்த மலை அழைக்கப்பட்டு தற்பொழுது மருவி தோரணமலை என்று அழைக்கப்படுகின்றது. 

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, தென்காசி. இத்திருக்கோயில் தென்காசி- செங்கோட்டை நெடுஞ்சாலையில் 5கி.மீ தொலைவிலும்,குற்றாலம்-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரை, திருநெல்வேலி, தென்காசியிலிருந்து பேருந்து தொடர்வண்டி மற்றும் சிற்றுந்து வசதிகள் உள்ளன.

திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில் 

திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. சுரண்டையில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

நட்சத்திர கோயில்கள் வரிசையில் விசாகம் நட்சத்திரத்திற்கு உரியது இக் கோயில் என்பது சிறப்பாகும்.)

குருநாதர் அகத்திய பெருமான் 

ஏனடா? முருகா!!!

 யான் அமைதியாக அங்கு இருந்திருந்தேனே!!!........!!!!

 நிச்சயம் இவை எல்லாம் சுற்றி பார்க்கத்தான்!!!  என்னிடம் வருகை புரிந்தாயா என்று!!

முருகன் விளையாட்டு 

பின் தந்தையே அமருங்கள் அமைதியாக!!!

இவையெல்லாம் நீங்கள் தான் நிச்சயம் எனக்கே அனைத்தும் சொல்லிக் கொடுத்து!!!

அதனால் உன்னை என் வாகனத்தில் இயக்குகின்றேன்.. என் பின்னால் அமைதியாக உட்கார் !! அது போதும் என்று... பின் அறிந்தும் கூட..

அப்பப்பா!! நிச்சயம் இதோ நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது பின்

முருகனின் ஆனந்தம் 

 எந்தனுக்கு மயங்கி விட்டான் அகத்தியன்..!!!

. பின் பார்த்தீர்களா?? என் தந்தை!!
என் தந்தைக்கு என் மீது தான் அன்பு என்று!!!

பின் அடடா!!! என்று குரு முனியும்!!!!

ஆனால் மயில் வாகனத்திலே பின் புறப்படும் பொழுது கத்திக் கொண்டே இருந்தான் முருகன்!!

பிள்ளையார் வருகை

அப்படியா!!! என்று நிச்சயம் இதை பிள்ளையோனும் கேட்டான்!!!(கணபதி)

அடடா!!!! அகத்தியனே!!!... அவன் மட்டும் தான் உந்தனுக்கு சொந்தமா?????
நிச்சயம் எங்கே?? அறிந்தும் நிச்சயம் அதாவது!! காகம் வடிவிலே வந்தான் நிச்சயம் அறிந்தும் இவை என்று அறிய!! நிச்சயம் பிள்ளையோன்.

அதாவது பறந்து கொண்டே இருக்கின்றான் மயில் வாகனத்தில் மீது.. பின் நிச்சயம் பின்... அகத்தியனே... தந்தையே..

பின் முருகன் மட்டும் தானா உந்தனுக்கு???

நிச்சயம் யானும் இருக்கின்றேன்... எனது வாகனம் சிறிய காகமாகவே உள்ளது.... வந்து உட்கார்!! உட்கார்!!! என்று!!

நிச்சயம் ஐயோ!!! முருகா..!!!. ஏனடா!!!??? உந்தனுக்கு புத்தி விளையாட்டு புத்தி அறிந்தும் எதை என்று புரிய!!

யான் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன்... வேண்டாம் என்று மனிதர்களுடைய தொல்லையே வேண்டாம் என்று... 

பின் இப்படி இழுத்து விட்டாயே என்று நிச்சயம் பின் அதாவது.. ஓடோடி காகத்தில் நிச்சயம் உட்காரு என்று நிச்சயம்... இவை தட்ட!!! அவை தட்ட !!! 

( பறந்து கொண்டே மயிலும் காகமும்... இடித்துக்கொண்டு)

முருகா நீ ஓடடா!!!

 என்று காகத்தில் அமர்ந்து விட்டான் பின் குருமுனியே!!

(முருகன் பின்னால் மயில் வாகனத்தில் இருந்து பிள்ளையாரின் காக்கை வாகனத்தில் அகத்தியர்)

பின் நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய பின்!!!

 அதனால்தான் பின் நிச்சயம்.... பிள்ளையோனையும் அகத்தியனையும் நிச்சயம் அதாவது மனதில் நிறுத்தியவர்களுக்கு சனீஸ்வரன் பின் நிச்சயம் அருளாசிகள் கொடுப்பதுண்டு!!

முன்னோர்களின் ஆசிகளும் பெறுவதற்கு சமம் அகத்தியனே... அதாவது குருமுனியே....

இன்னும் இன்னும் பல பல பின் சூட்சுமங்கள் ரகசியங்கள் நிச்சயம் பின் அதாவது சித்தர்கள் வழியில் வருபவர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும். 

தெரிந்துவிட்டால் நீங்கள் நினைத்தது பின் நடந்தேறும்.. நிச்சயம் நோய் நொடிகளும் வராது பின் உங்கள் பரம்பரையும் வளர்ந்து வரும். 

ஆனால் தற்போதைய நிலையில் அவை இல்லை. 

பொய் சொல்லி நிச்சயம் சித்தர்கள் எல்லாம் இங்கு இருக்கின்றார்கள் என்றெல்லாம் ஏமாற்றி நிச்சயம் பின் பணங்கள் பறித்து நிச்சயம் பின் அதை செய்கின்றேன். இதை செய்கின்றேன் என்று உருவமாக எல்லாம்... விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்!!!

(சித்தர்களின் சிலைகள் உருவங்கள் படங்கள்)

தேவையா இது???

நிச்சயம் பின் அன்பிற்கு மட்டுமே குருமுனியானவன் அடி பணிவானே தவிர... அவை இவை என்றெல்லாம் நிச்சயம் வேண்டும்... இவையெல்லாம் பொறுத்துக் கொண்டு!!! பொறுத்துக் கொண்டு !!!

அகத்தியர் பெருமான் முருகனிடம் பிள்ளையாரிடம் கூறியது

இதனை என்று அறிய மீண்டும் மீண்டும்.....

அப்பப்பா!!! என்னை விட்டு விடுங்கள்...!!! நிச்சயம் நீங்கள் செல்லுங்கள் !!!என்று 

மீண்டும் அதாவது பின் பின் கணபதியும் கூட காகத்தின் வழியே!!!

பின் பார்த்தாயா!!! என் மீது அகத்தியன் பக்தி கொண்டான் என்று... பக்தி கொண்டான்!! அன்பு கொண்டான்!! என்று.. மீண்டும் மீண்டும்!!

நாராயணன் வருகை

 பின் அதாவது... நாராயணனும் கூட.... அகத்தியனே!!! நிச்சயம் அவர்கள் மீது மட்டும் அன்பா ? பக்தியா?

 நிச்சயம் யான் மட்டும் எங்கு சென்று விட்டேன்??...
எந்தனுக்கு அனைத்தும் சொல்லி கொடுத்தீர்கள் அல்லவா என்று!!

நிச்சயம் பின் அதாவது குரு முனியும் கூட....

இது என்னடா?? தொந்தரவு??

எவ்வாறு அறிந்தும் பின் யான் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன் ஆனாலும் இவையெல்லாம் விளையாட்டுத்தான் நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய அறிய 

அப்படியா நிச்சயம் இதை என்று புரிய எவை என்று அறிய மீண்டும் பின் கருட வாகனத்தில்... நிச்சயம் பின் அதாவது.... நாராயணன் 

அகத்தியனே நியாயமா?? இது!!!

யான் என்ன தவறு செய்தேன்??? நிச்சயம் என் வாகனத்தில் வாருங்கள்.. பின் அதாவது  என் கருடன் வாகனத்தில் பின்னாலே !!!!

 நிச்சயம் ஐயையோ கணபதியே....ஏனடா??? இந்த வேலை என்று!!! நிச்சயம் அறிந்தும் இவை என்று அறிய அறிய மீண்டும்.. பின் அமர்ந்தான் குரு முனி கருட வாகனத்திலே!!!!

நிச்சயம் இதை என்று அறிய... இவை என்று புரிய மீண்டும் பின் சுற்றி சுற்றி 
அதாவது நவ திருப்பதி களை சுற்றி!! சுற்றி !! 

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள
நவதிருப்பதி ஸ்தலங்கள்:

1. திருவைகுண்டம் கள்ளர்பிரான் திருக்கோவில்.
2. நத்தம் (வரகுணமங்கை) விஜயாசன பெருமாள் திருக்கோவில்.
3. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்.
4. திருப்புளிங்குடி காய்சினிவேந்த பெருமாள் திருக்கோவில்.
5. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் திருக்கோவில்.
6. தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில்.
7. பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் திருக்கோவில்.
8. திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி-1) தேவர்பிரான் திருக்கோவில்.
9. திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி-2) அரவிந்தலோசனர் திருக்கோவில்.

நிச்சயம் நாராயணனே ஏன் இந்த வேலை??? அறிந்தும் இவை என்றும் புரிந்தும்!!!!

பின் எதை என்று புரியப் புரிய !!

ஈசன் வருகை!!!

பின் ஈசனாரும் அகத்தியனே!!!... என்ன வேலை இது???... நீயும் சிறு விளையாட்டு பிள்ளையாக இருக்கின்றாயே!!!

உலகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டேன்.. நல்முறையாக பார்ப்பாய் என்று 

ஆனால் நீயோ!? இவர்களுடன் சேர்ந்து விளையாட்டு புத்தியாகவே பிள்ளையாகவே இருக்கின்றாயே என்று !!!

குருநாதர் அகத்தியர் பெருமான் மறுமொழி 

ஐயனே!!!! அப்படியெல்லாம் இல்லை... பின் இவர்கள்தான் என்னை கெடுத்தார்கள். பின் நிச்சயம் யான் ஒழுங்காக அமைதியாக அமர்ந்து தான் இருந்தேன் என்று நிச்சயம்.. எதை என்று அறிய அறிய 

பின் இவை என்று அதாவது தன் வேலையை எவ்வாறு என்பதையும் கூட பின் ஈசனும் கூட இவ்வாறெல்லாம் எவ்வாறு என்பதையும் கூட பின் நிச்சயம் பின் 

அகத்தியர் பெருமான் கூறியது 

ஈசனாரே!!!!  நிச்சயம்  இவர்கள்தான் என்னை!!.....

 நிச்சயம் யான் அமைதியாக நிச்சயம் வேண்டாம் என்று என்றெல்லாம் நிச்சயம் எதை என்று அறிய அறிய 

முருகனும் தந்தையே!!!! அப்படி இல்லை... நிச்சயம் அறிந்தும் பின் இவை என்றும் இன்னும் இன்னும் விளக்கங்கள் கொடுக்க!!! கொடுக்க !!!!

ஆனாலும் பின் 

ஈசனார் 

நிச்சயம் பின் அகத்தியனே!!! நிச்சயம் இதை என்று புரிய நிச்சயம் மனிதன் (கலியுகத்தில் மனிதர்களின் செயல்) பின் அதாவது நீ ஏற்றது அதாவது மனதில் நினைத்தது சரியாகவே என்று இருக்கட்டும் !!!

ஆனாலும் அதற்கும் ஒரு விடிவெள்ளி கொடு!!! 

நிச்சயம் இவை என்று அறிய அறிய நீ அமர்ந்திருக்கின்றாயல்லவா ??!!

அங்கிருந்தே பாவங்கள் தொலைய எவ்வாறு? என்று வழிகாட்டும் என்று !!!!!

கலியுகத்தில் மனிதர்களின் பாவங்கள் தொலைவதற்கு குருநாதர் செய்த கருணை மற்றும் தாமிரபரணி உருவாக வேண்டிய காரணம்!

குருநாதர் மறுமொழி!!!

ஈசனாரே !!! நிச்சயம் பின் எவ்வாறு என்பதையும் கூட உருவாக்குகின்றேன். 

"""தாமிரபரணி என்று நிச்சயம் !!!!

அது மட்டும் இல்லாமல் பின் நீயும் அதாவது பாவத்தை பின் அழிக்க வேரோடு அழிக்க... பாப நாசனாக கீழே இரு!!!!
 போதுமானது என்று!!

(பாபநாசர் திருக்கோயில்
தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் எனும் இடம் இடத்தில் உள்ளது. குருநாதர் உருவாக்கிய நவகைலாயங்களில் முதல் கோயிலாகவும் சூரியனுக்கு உகந்த கோயிலாகவும் உள்ளது)

பின் நிச்சயம் பின் ஈசனாரும் அப்படியா!!!!.... நீயே இங்கு இரு நிச்சயம் என்று! 

ஐயோ.. என்று பின் அதாவது பின் ஈசனாகவே நிச்சயம் பின் அகத்தியனும் லோப முத்ராவும் நிச்சயம் அறிந்தும் கூட பாபநாசத்தில் நிச்சயம் இருந்து கொண்டு பாவங்களை நிச்சயம் நசுக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். நிச்சயம் அறிந்தும் இதை தன் புரிய புரிய.

(பாபநாசம் ஆலயத்தில் ஈசன் பார்வதி தேவியார் வடிவாக அகத்தியர் பெருமானும் உலோபா முத்திரை அன்னையும் இருந்து கொண்டு பாவங்களை அகற்றி வருகின்றார்கள்)

பிரம்மன் வருகை

நிச்சயம் இவை என்று அறிய கடைசியாக... பிரம்மனும் கூட எவை என்று அறிய 

அகத்தியனே... பின் இவை என்று புரிய... என்னென்ன வேலைகள் என்று???

ஆனாலும் இதை என்று கூட அகத்தியன் நிச்சயம் !!!

அகத்தியர் பிரம்மனுக்கு மறுமொழி!!

ஐயையோ... அப்பா!!!... பின் அறிந்தும் எவை என்று அமைதியாக உட்கார்ந்திருந்தேன் ஆனால் நிச்சயம் நீங்கள் விடப்போவதில்லை என்று!!

நிச்சயம் பின் இதை என்று புரிய  புரிய இப்பொழுது நீங்கள் குளித்தீர்களே !!! 

( மலைப்பாதையில் மூன்று பெரிய பாறைகள் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சி போல நீரோடை ஓடிக் கொண்டிருக்கின்றது அங்கு அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா மற்றும் உடன் சென்ற அடியவர்கள் குளித்துவிட்டு சென்றார்கள். மழைக்காலங்களில் பெரிய அருவியாக இந்த மூன்று பாறைகளை அரவணைத்து பெரிய வெள்ளோட்டமாக ஓடி வரும்.. அந்த இடத்தை பாறைகளை குறிப்பிடுகின்றார்)

 அங்கு பார்த்தீர்களென்றால் !!

பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் அழகாக கற்கள் வடிவில் நிற்கின்றார்கள்.

(அங்கு மூன்று பாறைகள் உள்ளது)

நிச்சயம் பாவங்கள் தொலையும். 

ஆனாலும் நிச்சயம் என் பக்தர்கள் யாரொருவன் நீதி பின் தர்மத்தை கடைப்பிடிக்கின்றார்களோ!!!!!! அவர்களுக்கு நிச்சயம் அறிந்தும் பின் அதாவது எதை என்று புரிய புரிய... என்றெல்லாம் நிச்சயம் பின் குரு முனியும் சொல்லி இருக்கின்றான். 

அதனால் நிச்சயம் பின் குரு முனியை கூட நிச்சயம் காண வைக்க யான் போராடுவேன். (குரு தரிசனம்)

நிச்சயம் அவ் பக்தியும் அன்பும் கூட நிச்சயம் நிறைந்த பின் மக்களுக்கு யானே (புலத்தியர்) வழிகாட்டியாக இக்கலி யுகத்தில் இருக்கத்தான் போகின்றேன்!!


குருநாதர் கலியுகத்தில் உலகத்தையும் மனிதர்களையும் காப்பதற்கு எடுத்த முடிவு முன்பு எடுத்த முடிவிலிருந்து செய்த பரிசீலனை


இதை என்று அறிய அறிய கடைசியில் நிச்சயம் குருமுனியும் கூட!!! போதுமடா.. கடைசியில் நிச்சயம் வேண்டாம்... அமைதியாக உட்கார்ந்து பார்த்தேன்.. மீண்டும் என்னை விடவில்லை நிச்சயம்...

யானே மக்களுக்கு சேவையாற்ற வருகின்றேன் என்று.. பின் என் குருநாதன் வந்து விட்டான்..!!!

இப்பொழுது கூட சேவையாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான்... நிச்சயம் மனிதர்களுக்கு !!!!!

ஆனால் பின் என் குரு முனியை வைத்து ஏமாற்றுகின்றார்கள். அவ் மந்திரங்கள் ஜெபியுங்கள்!! இவ் மந்திரங்கள் ஜெபியுங்கள் என்றெல்லாம் நிச்சயம்... இவையெல்லாம் வீண்!!!


சொல்கின்றேன் யான்!!! இவ் மலையில் இருந்து.. இங்கே நிச்சயம் அமர்ந்து கொண்டு...!!!

 இன்னும் பின் அதாவது பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!! (சித்தர்கள்)

ஏன் எதற்கு?! ஒரு மந்திரமாவது!?!?!?? நிச்சயம் ஒரு உயிரை காக்குமா?!?!?! நோயில் இருந்து காக்குமா?!?!?!?! நிச்சயம் வாழ்க்கையை பாதுகாக்குமா!?!?!?!?
நிச்சயம் தன்னை சுற்றி உள்ளவர்களை பார்க்குமா!?!?!?
என்றெல்லாம்!!

 நிச்சயம் பின் மீண்டும்.... என் குருநாதனிடம் வந்தேன் அழகாக பின்..

குருமுனியே!!! நிச்சயம் கருணை படைத்தவரே!!!!
தந்தையே!!!
நிச்சயம் எவை என்று அறிய அறிய... எப்படித்தான் இவ் கலியுகத்தை வெல்வது???

அகத்தியர் மறுமொழி

நிச்சயம் பின் யான் சொல்கின்றேன் கலியுகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் கூட....

உண்மையானவர்கள் எவர் இருக்கின்றார்களோ... அவர் மூலம் எடுத்துரைத்து பல வழிகளிலும் பின் தேற்றி நிச்சயம் விதியையும் கூட மாற்றலாம்... என்று!!!


 இதனால் நிச்சயம் என்று... பின் அனைவருக்கும் தேவாதி தேவர்களுக்கும் கூட சந்தோஷமாயிற்று!!!

மீண்டும் அகத்தியன் அறிந்தும் கூட பின் வந்து விட்டான் என்று!!

இதுதான் எதை என்று இன்னும் ரகசியங்கள் அதாவது...இவ் ரகசியங்கள் எல்லாம் நடந்தது... இவ் கார்த்திகையில் இருந்து நிச்சயம் தை திங்கள் பின் தொடங்குவதற்கு அறிந்தும் இவ் இரண்டு மாதங்களிலே இப்படி நடந்து விட்டது....

(கார்த்திகை மார்கழி) 

  இதனால்தான் இவ் மாதங்களில் கூட காடுகளில் மலைகள் மீது ஏறும் போது நிச்சயம் அங்கங்கு ஓடினாலே நிச்சயம் அவ் சக்தி அங்கங்கே இருக்கும் !! 

இதனால் இங்கெல்லாம் செல்கின்ற பொழுது நிச்சயம் சில பாவங்கள் அழிந்து போகும் நிச்சயம். 

அனைவருக்குமே பின் நிச்சயம் ஆசிகள்!! அருளாசிகள் !!!

குரு முனியின் அருள்கள் பின் உங்களுக்கு கூட பலம். 

இதனால் குறைகள் இல்லை !!

என் குரு முனி சோதிப்பானே தவிர... அனைத்தும் கொடுத்து விடுவான்!!
 கருணை படைத்தவன்...

 நிச்சயம் அறிந்தும் இவை என்று தெரிந்து கொண்டீர்களா!!

இன்னும் ரகசியங்கள் இங்குதான் வைத்து யான் சொல்லப் போகின்றேன்.. என் குருமுனியை பற்றி கூட !!!

(நம் குருநாதர் உலகத்தை காப்பதற்கு தன்னுடைய முடிவிலிருந்து மாற்றிக் கொண்டு மீண்டும் வந்து விட்டார்)

ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!!!

கடந்த ஆண்டு ஜூலை மாசத்தில் பொதிகை மலையில் வைத்து அகத்தியர் மகரிஷி குருநாதர் அகத்திய பெருமானுக்கு சூட்டிய புகழ் மாலை வாக்கு சித்தன் அருள் பதிவு எண் 1353 மீண்டும் படித்து நாம் அனைவரும் குரு பக்தியை உணரலாம்.!!!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605_3.html

ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்...சர்வம் சிவார்ப்பணம்.. - https://tut-temples.blogspot.com/2025/03/11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1604 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2025/03/1604.html

சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1490.html

சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1443.html

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1291.html

சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html

தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html

கந்தர் அனுபூதி - பாடல் 3 - வானோ? புனல் பார் - ஆறுமுகமான பொருள் எது? - https://tut-temples.blogspot.com/2024/09/3.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html

சித்தன் அருள் - 1532 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2025/02/1532-6.html

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html

சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html

சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html

சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html


சித்தன் அருள் - 1790 - உங்கள் இல்லத்திலேயே கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/02/1790_2.html

திதி ரகசியம் - பஞ்சமி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (02.02.2025) - https://tut-temples.blogspot.com/2025/02/02022025.html

சித்தன் அருள் - 1782 - PDF வடிவில் அகத்தியர் புகழ்மாலை!! - https://tut-temples.blogspot.com/2025/01/1782-pdf.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - திருமூலர் சித்தர் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/01/1785_29.html

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html


உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6_23.html

ஆதி ஈசனார் எழுதிய சிவபுராணம் - ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6.html

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html


மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

No comments:

Post a Comment