இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் என்பதற்கிணங்க , இந்த வாக்கினை குறைந்தது மூன்று முறை படித்து, நாம் தினசரி உட்கொள்ள வேண்டிய மூலிகைகள் பற்றி அறிந்து கொள்வோம் . இத்துடன் இந்த மூலிகைகளை நம் வீட்டில் வளர்க்கவும் முயற்சி செய்வோமாக!
சூரத் சத்சங்கம் பாகம் 2
ஐயனே...... மாறிவரும் இக் கால சூழ்நிலையில் உடலில் சரியான வலிமை பெறுவதற்கு நாங்கள் என்ன செய்வது????
அப்பனே யான் முன்பே பலமுறை உரைத்து விட்டேன் அப்பனே!!!!! எதை என்று அறிய அறிய சொல்லிய மூலிகைகளை அப்பனே சரியாக எடுத்துக் கொண்டு அப்பனே பல வகையான கீரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் அப்பனே போதுமானது அப்பனே அதிலே சக்திகள் உள்ளதப்பா. அதில் இல்லாதது வேறு எதிலும் இல்லை அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே ஆனால் நீங்கள் தான் கீரைகளை உண்ணுவதே இல்லை அப்பனே
அப்பனே எவை என்று அறிய அறிய வெள்ளை கரிசலாங்கண்ணி அப்பனே மஞ்சள் கரிசலாங்கண்ணி அப்பனே பொன்னாங்கண்ணி எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே முருங்கை இலைகளை கூட அப்பனே இன்னும் மணத்தக்காளி அப்பனே இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய முடக்கத்தான் எனும் மூலிகையை கூட அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பச்சையாகவே நெல்லிக்கனியை எதை என்றும் அறிய அறிய அப்பொழுது எவை என்றும் புரிகின்ற பொழுதும் கூட இதனால் அப்பனே பல வகையிலும் கூட பச்சைக் காய்கறிகளை உண்டு வர நன்று என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே இதை நிச்சயம் நீங்கள் செய்து வர நன்று என்பேன் அப்பனே
அவை மட்டும் இல்லாமல் அனுதினமும் அப்பனே ஓரிதழ் தாமரை இலைகளைக் கூட உண்டு வர பின் உடல் இரும்பு போல பலம் பெருகும் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய சொல்லிவிட்டேன் அப்பனே.
அதிகாலையிலும் மாலை வேலைகளிலும் நல்விதமாகவே அப்பனே சூரிய ஒளியில் உடம்பை நல்விதமாகவே வைத்திருக்க வேண்டும் அப்பனே நிமிர்ந்து நிற்க வேண்டும் சில சில வழிகளில் கூட உடல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் அப்பனே!!!!
ஐயனே இந்த சூரத் மாநகரில் நீங்கள் கூறும் மூலிகைகள் பச்சையாக கிடைப்பதில்லை உலர வைத்த பொடிகளாக உண்டு வரலாமா???
அப்பனே எதை என்றும் அறிய அறிய முழு பலன் பச்சை இலைகளுக்கே அப்பனே..... இருப்பினும் உண்டு கொள்க
அவை மட்டும் இல்லாமல் அப்பனே அனுதினமும் பூமி சக்கரை எதை என்று அறிய அறிய கிழங்கை கூட கொண்டு உண்டு வருதல் அப்பனே இன்னும் பலமப்பா!!!!
அப்பனே அதாவது பூமியில் ஒளிந்துள்ள பொருட்களை... அதாவது மண்ணிற்கு உள்ளே விளையும் கிழங்கு வகைகளை உட்கொள்ள இன்னும் சக்திகளப்பா!!!!!!
ஐயனே இந்த மூலிகைகளின் விதைகளை கொண்டு விளைவித்து எடுத்துக் கொள்ளலாமா??? குறிப்பாக ஓரிதழ் தாமரை மூலிகை அரிதாகி வருகின்றது அதையும் விளைவித்துக் கொள்ளலாமா???
அப்படியே செய்யுங்கள் அப்பனே நலமாகவே... முதலில் அதைச் செய்யுங்கள் அப்பனே!!!!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!
குருநாதர் இப்பொழுது தம் வாக்கில் மூலிகைச் செடிகளை பயிரிட்டு வளர்க்கச் சொல்லி இருக்கின்றார்!!!! அதனால் அடியவர்கள் அனைவரும் முடிந்தவரை தம் தன் நிலத்தில் அல்லது வீட்டு மாடி தோட்டத்தில் மூலிகைகளை வளர்க்கலாம்!!! அந்த மூலிகைகளை அன்றாடம் பயன் படுத்தி வரலாம்!!!
தேவைப்படும் அன்பர்களுக்கு வியாபார நோக்கம் இல்லாமல் மூலிகைகள் கிடைக்காத அடியவர்களுக்கு சேவை நோக்கத்தோடு அனைவருக்கும் அனுப்பித் தரலாம்!!!
ஏனென்றால் சித்த மூலிகைகள் அனைத்தும் சித்தர்களுக்கு சொந்தமானவை!!!!!!
அதை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தினால் அது முழு பயன் தயாராது!!! நமக்கு கர்மாவும் ஏற்படும் அதனால் மூலிகைகளை பயிரிட்டு வளர்ப்பவர்கள் அதை அடுத்தவருக்கு சேவை நோக்கத்தோடு செயல்பட்டு கொடுக்க வேண்டும் !!! நியாயமான முறையில் செயல்பட வேண்டும்!!!
மூலிகை என்றாலே சித்தர்களுக்கு சொந்தமானது மனிதர்களுக்கு சொந்தமானது அல்ல!!!!
சித்தர்கள் கருணை கொண்டு நமக்கு அருளிய வரம் தான் மூலிகைகள்.
அனைத்து நோய்களுக்கும் மூலிகைகள் மூலம் நிவாரணம் பெற முடியும்!!!!
அதை அவர்கள் அனுமதி பெற்று தான் அவர்கள் ஆசீர்வாதத்தோடு முறையாக நாம் வளர்த்துவதோ பறித்து பயன் படுத்தவோ செய்ய வேண்டும்!!!!! எந்த ஒரு மூலிகைகளையும் பறிக்கும் பொழுது குருநாதர் அகத்திய பெருமானையும் போகர் பெருமானையும் சித்தர்களையும் நினைத்து வணங்கி பறித்து பயன் படுத்த வேண்டும்!!!
இப்படி செய்தால் தான் சித்தர்களுடைய அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும்!!! சித்த மூலிகைகளின் பலனும் நமக்கு முழுமையாக கிடைக்கும் !!
சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html
தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html
திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html
சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html
சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html
சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html
அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html
மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment