"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, July 20, 2025

அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - முழு தொகுப்பு

                                                    இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 )

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அப்பனே சில சில தீய (வினைகள்) எவை என்று உணராமல் இருந்தாலும் நிச்சயம் அவைதன் யான் நிச்சயம் உணர்ந்து அகற்றுவேன் அப்பனே. இதைத்தன் உணர அப்பனே வேந்தனவன் கூட,  அப்பனே சனியவன் இதில் தன் ஜெனித்தவர்கள் ( பிறந்தவர்கள் - இங்கு முன்னே வரச் சொல்.) 

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா , கும்பம் மகரம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் முன்னே வாருங்கள். ) 

( இவ் ராசி தொடர்புடையவர்கள் முன்னே வந்தனர்)

குருநாதர் :- இதன் பின் அறிந்தும் சுங்கனவனே (சுக்கிர தேவன்)

சுவடி ஓதும் மைந்தன் :- ரிஷபம், துலாம் ( அடியவர்கள் முன்னே வருக.) 

அடியவர் 1 :- எனது லக்கினம் __

குருநாதர் :- அப்பனே யோசித்துக்கொள். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இவ் 6 லக்கினம், ராசி உடையவர்களை முன்னே வர அழைத்தார்கள்.) 

குருநாதர் :- (முதலில் சனிபகவான் ராசி, லக்கின அடியவர்களை அழைத்து வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள். இவ்வாக்கு வந்த வருடத்தில் தனது சுய ராசியில் இருந்தார்கள் என்பதை அடியவர்கள் அறியத்தருகின்றோம்.)  

( தனி வாக்குகள் ஒரு தம்பதியருக்கு அளித்தார்கள். அப்போது அங்கிருந்த அடியவரின் துணைவியை விட்டு அடியவரை அலைபேசியில் ( cell phone) அங்கிருந்தே அழைத்து வாக்கு இருவருக்கும் உரைத்தார்கள். குருநாதர் முன்பு உரைத்தவாறு 

“அன்பு ஒன்றே எந்தனுக்கு உயிர்.” 

“எதையும் நம்பி விடாதீர்கள் அப்பனே!!!!மீது பாசம் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது!!!! யானே வந்து உங்களுக்கு செய்து விடுவேன் அப்பனே இது சத்தியம்!!!!”

நம் குருநாதர் இவ் அடியவரைக்கு அழகாக வாக்கு உரைத்தார்கள். அதில் உள்ள பொது வாக்கு இப்போது இங்கு காண்போம். )

குருநாதர் :- அகத்தியன் சொல் எப்பொழுதும் ஒரு சொல்லாக இருக்கும். அகத்தியன் ஒரு சொல் விட்டுவிட்டால் நிச்சயம் அது பலித்தே ஆகும். பாசம் ஒன்றே போதும். எந்தனுக்கு ஒன்றும் தேவையில்லை. அன்பு மட்டுமே போதும் என்பவையெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன். 

(தன் வாக்குகள் ……)

குருநாதர் :- அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உடம்பில் போகப் போக நிச்சயம் சில சில உறுப்புக்கள் பழுதடையும் வயது ஆக ஆக. ஆனாலும் ஏன் பழுதடைகின்றது ? அவனவன் செய்த பாவங்களுக்கு ஏற்பவே. இன்னும் சொல்கின்றேன். அவ் பாவங்கள் என்னென்ன? எவ்வுறுப்புக்கள் பழுதாகும்? என்பவையெல்லாம் சொல்கின்றேன். இதைத்தன் அனைவரும் உணர்ந்து பின் கொண்டே,  ஆனால் நிச்சயம் அதற்கும் கூட தீர்வு சொல்கின்றேன். பின் இப்பாவம் எதனைச் சாருகின்றது உடம்பில். அதனையும் நீக்கும் அதற்கும் தகுந்தாற் போல் ஔஷதங்களைக் குறிப்பிடுகின்றேன். 

நன்முறைகளாக அப்பனே பின் கவலைகள் இல்லை. செய்யும் ஔஷதங்களையெல்லாம் நிச்சயம் யானே கண்காணித்து,  வரும் காலங்களில் பின் தேவைப்பட்டால் பின் எதற்கு என்றெல்லாம் பின் குறிப்பிடுகின்றேன். அனைத்தும் பின் நலமாகும். 

(தனி வாக்குகள் …….) 

குருநாதர் :- ஒன்றுமே தேவையில்லை என்னருகில் வருவதற்கு. அதனால்தான் அனைத்தும் மாயை என்று இறைவன் உணர்த்தி வைத்துக் கொண்டே இருக்கின்றான். ஆனாலும் உண்மைதனை வெளி வந்து வெளி வந்து , நிச்சயம் அருள்கள் கிட்டிக் கிட்டி இன்னும் மாற்றங்கள் அடையும். இதனால் நிச்சயம் அனைத்தும் இறைவனுடைய செயல் என்று யார் ஒருவன் எண்ணுகின்றானோ, அவந்தனையே முதன்மையான இடத்தில் இறைவன் வைப்பான். மற்றதையெல்லாம் என்னால் முடியும் என்பவையெல்லாம் அறிந்து அறிந்து பின் முன்னே சென்றால் இறைவனே முட்டுக்கட்டையாக எதையோ வைப்பான். நிச்சயம் தாண்ட முடியாது. சொல்லிவிட்டேன். இதை எப்போதும் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

அடியவர்கள் :- (அமைதி)

குருநாதர் :- இதனால் புரியாமல் இருந்தாலும், வாழ்க்கையின் தத்துவத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ள நிச்சயம் கஷ்டங்களே. அதனால்தான் சில மாற்றங்களை எவை என்று புரியாமலும் ( நீங்கள் அல்லது) பின் அறிந்தும் இருந்தாலும் , பின் எப்படி கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது என்பதைக்கூட நீங்கள் உணரவில்லை. யான்தான் சில சமயங்களில் உணர்த்தி நிச்சயம் இவ் தந்தையின் மீது இன்னும்  (உங்கள்) பாசத்தைக் கூட்டிக்கொண்டேன். 

(வணக்கம் அடியவர்களே. இந்த வாக்கு மிகவும் முக்கியமான வாக்கு. நம் அனைவருக்கும் பல கஷ்டங்கள். குருநாதர் அருளால்தான் வருகின்றன. அதாவது நமது கர்ம வினைகள் குருநாதர் எடுத்து அழகாகக் கஷ்டங்களைக் கொடுத்து அதன் மூலம் நாம்,  நம் தந்தையின் மீது வைக்கும் பாசத்தை,  கருணைக்கடலே அவர்களாகவே கூட்டிக் கொள்கின்றார். கஷ்டங்கள் வரும் பொழுதுதான் பாசங்கள் அதிகரிக்கும். 10 மாதம் சுமந்து கடும் கஷ்டங்கள் சுமப்பதால் , தாய்க்கு தன் குழந்தை மீது அன்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் - கடை நாள் வரையிலும். இதனை நன்கு உள்வாங்க, நமது கஷ்டங்களே இன்பமாகிவிடும். ஞானிகளுக்கு இன்பம் கஷ்டங்களே என்று குருநாதர் பலமுறை உரைத்த வாக்கை நினைவு கூர்வோம்.  வாருங்கள் பாசம் மிக்க,  அன்பு குருநாதர் அடியவர்களே, மீண்டும் வாக்கின் உள் செல்வோம்.) 

குருநாதர் :- இங்கு கஷ்டங்களே இல்லையென்றால் அவரவர் வேலையை அவரவர் பார்திட்டுச் செல்வார்கள். பின் கஷ்டங்கள் ஒன்று இருந்தால்தான், ஆனாலும் நினைப்பது ஒன்று நடக்க முடியவில்லையே என்று இருந்தாலும் இவைதன் கூட கஷ்டங்கள்தான். இதனால் அறிந்து, ஆராய்ந்து எவன் ஒருவன் , இறைவன் இட்ட அதாவது மூளையையே பிச்சை இடுகின்றான். அவ் மூளையைக் கசக்கி , அளவு என்று அறியாமல் கூட இருந்தாலும், அறிய வைத்து, நிச்சயம் அவ் மூளைக்குச் சரியான வேலையை யார் ஒருவன் கொடுக்கின்றானோ, பின் நிச்சயம் (அவனை) அதி புத்திசாலி என்று இறைவன் கட்டி அணைத்துக்கொண்டு அனைத்தும் தருவான். 

(இறைவன் கொடுத்த) அதைத் தவறான வழியில் பயன்படுத்துபவர்களுக்கும் இறைவன் நிச்சயம் போகட்டும் என்று விட்டுவிடுவான். ஆனால் கடைசியில் ஒன்றுக்கும் லாபம் இல்லை என்று நிச்சயம் அதன் தன்மையை , அதன் சக்தியைப் பிடுங்கி விடுவான். இதனால் பின் வாழ்க்கை வீணாகப்போகும். சொல்லிவிட்டேன் அறிந்தது அனைவரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- மூளையைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதை சரியான வழியில் பயன்படுத்தவில்லை என்றால் இறைவன் fuseஐ (சக்தியை) எடுத்துவிடுவார். அதற்கு அப்புறம் நமக்கு என்ன அறிவு இருந்தாலும் சாதிக்க முடியாது என்று சொல்கின்றார். இது எல்லோருக்கும் (பொது). 

குருநாதர் :- ( தனி வாக்குகள்……..) 

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 2 ( அன்னை ஶ்ரீ மகாலட்சுமி ரகசியங்கள் ) 

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

குருநாதர் :- ( சில தனி வாக்குகள். ஒரு இக்கட்டான விதியை (கண்டத்தை) குருநாதர் இவ் தம்பதியரில் ஒருவருக்கு மாற்றி அமைத்துள்ளார். பல அடியவர்களுக்கு,  அவர்கள் அறியாமலேயே நம் கருணைக்கடல் இது போல் பலருக்கும் மாற்றி அமைத்து நல் வாழ்வு அருளுகின்றார்கள். இவ் ரகசியத்தில் உள்ள விபரங்களை இப்போது பார்ப்போம். இது குறித்து , நம் குருநாதர் மேல் அளவு கடந்த பாசம் வைத்த அவ் தம்பதியர் அடியவர்களிடம் குருநாதர் கேட்ட கேள்வி. ) 

நீயும் சொல்ல வேண்டும். அவந்தனும் சொல்ல வேண்டும். எதற்காக யான் (விதியை) மாற்றி அமைத்தேன் என்று?

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். தம்பதியர் பல புரிதல் விளக்க உரையாடல் அலைபேசியில். )

அடியவர் 2 :- (அலைபேசியின்  மூலமாக உரைத்தது) அவர் (குருநாதர்) குழந்தைகளை அவர்தானே காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். அவர் குழந்தைகள் நாம் என்று சொல்லிவிட்டார் அல்லவா?

குருநாதர் :- அப்படியில்லை அப்பா. பாசங்கள் தான் இங்கு பெரியது. அறிந்தும் கூட அப்படி யான் செய்திருந்தாலும் ( விதியை மாற்றாமல்,  அப்படியே செயல்பட விட்டு இருந்தாலும்) , எனை நீங்கள் எவை என்று கூற பின் யோசித்துப் பார்த்தேன். ஆனாலும் வெறுப்பதில்லை. பின் வெறுத்திருக்க மாட்டீர்கள். 

——————
( வணக்கம் அடியவர்களே, பல முறை நம் குருநாதர் கூறுவது இவ் பாசம்தான் உயர்ந்தது இவ்வுலகில். அவ் பாசத்தை , கஷ்டகாலங்களிலும் வைக்கும் பொழுது பல அதிசயங்களை நம் குருநாதர் அனைவருக்கும் நடத்த வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். அவ் பாசம், அன்பு இல்லையென்றால் நீங்களே யூகித்துக்கொள்க. குருநாதர் மேல் உங்கள் பாசத்தை நிரூபிக்க விதியின் வழியே பல சோதனைகள், துன்பங்கள் வரலாம். இது பலரையும் நிலை தடுமாற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையை வெறுத்து, குருநாதரை விட்டு விலகி விடுவார்கள். ஆகையினால் எவ் துன்பங்கள் வந்தாலும் பாசத்தைக் குருநாதர் மேல் பொழிய என்றும் மறவாதீர்கள். கூடிய விரைவில் குருநாதர் அருளால் உங்கள் வாழ்க்கை வசந்தமாகும். சோதனைகளைக் கடந்தால் உங்கள் மகத்தான சாதனை நிச்சயம். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.) 
—————————

சுவடி ஓதும் மைந்தன் :- ( இவ்விடத்தில் மிக அழகாக அவ் பாசம் மிக்க அடியவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.) 

குருநாதர் :- இதனால்தான் யார் ஒருவன் அன்பு, பண்பு, பாசத்தோடு உலா வருகின்றானோ - அவந்தனக்கு எம்முடைய ஆசிகள். தீய வழியில் சென்றாலும் , நிச்சயம் நல்வழிப்படுத்தி நன்றாக்குவேன். 

( தனி வாக்குகள் …….) 

(கேள்வி பதில் மீண்டும் ஆரம்பம் ஆனது) 

அடியவர் 3 :- அகத்தியர் என்ன சொல்கின்றாரோ அதை நான் கேட்கின்றேன். 

குருநாதர் :- பல உரைகளிலும் இதை உரைத்து விட்டேன். வாக்குகள் வந்து கொண்டே இருக்கின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தது ஏதாவது கேளுங்கள் அம்மா. 

அடியவர் 3 :- என்ன கேட்பது என்று (மனதில்) தோன்றவில்லை. 

குருநாதர் :- அம்மையே இப்படியெல்லாம் இருக்கக் கூடாது. அதாவது எதை வேண்டுமானாலும் முயற்சிக்கள் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கிடைக்கும். ஒன்றுமே தோன்றவில்லை என்றால், நீ உறங்கித்தான் இருக்க வேண்டும் இல்லத்தில்.


———————
( வணக்கம் அடியவர்களே, இப்போது குருநாதர் இவ் அம்மையின் மூலம் உலகமே பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கும் செல்வம் தொடர்பான,  அதிகாலை 3 மணி தொடர்பாக, ஒரு அதி உயர் பரம ரகசியத்தை உலகத்திற்கு எடுத்து உரைக்கும் விதம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.) 

அடியவர் 3 :- ( வேலை தொடர்பாக சில தனி வேண்டுதல்களைச் சொன்னார்) 

குருநாதர் :- ( அங்குள்ள சில அடியவர்களை எழச் சொல்லி உரையாடலை ஆரம்பித்தார்கள். இவ் உரையால் பல தனிப்பட்ட வாக்கின் உள் உள்ள ஒரு மகத்தான பொது வாக்கு.)

அப்பனே எடுத்துரை. அதிகாலையிலே நீராடிவிட்டு தியானத்தில் இருக்கச் சொல் ஒரு மணி நேரம். இதே போலத்தான் அப்பனே உறங்கச் செல்வதற்கு முன்னும் தியானத்தில் இருக்கச்சொல். செய்கின்றாளா என்று பார்ப்போம் அப்பனே. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- அதாவது ஐயன் சொல்லும் அதிகாலை 3:30 மணி. சரியா? குளித்து விட வேண்டும். 

——-
(அதிகாலை மூன்று மணி  ரகசியம். 
சித்தன் அருள் - 1713 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு 2
https://siththanarul.blogspot.com/2024/10/1713-2.html

YouTube :- 

https://youtu.be/we1bgZHTdFk?si=bXQk9BgrMFXebiQe

சித்தன் அருள் - 1618 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
https://siththanarul.blogspot.com/2024/06/1618.html

YouTube link:-

https://youtu.be/p3JvpfrU41U?si=-2A5ITPAasw832Z4)

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- மற்றொரு வாக்கில் பெண்கள் சாணியை கைகளால் வாசலில் தெளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள். இதைச் செய்துவிட்டு தியானம் செய்தால் உங்கள் (பிரச்சினைகள்) எல்லாம் சரியாகிவிடும் அம்மா. 

( இது குறித்த வாக்கு :- சித்தன் அருள் - 1510 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 22!

https://siththanarul.blogspot.com/2023/11/1510-04092023-22.html

குருநாதர்:- அப்பனே இவை பெண்களுக்கும் இதற்கு மாற்று உண்டு என்பேன் அப்பனே. அதாவது அதிகாலையிலேயே நிச்சயமாய் பின் 4 மணி அளவில் எழுந்து நிச்சயமாய் இல்லத்தைச் சுத்தம் செய்து பின் அதாவது  பசும் ( பசுமாடு ) எது என்று அறிய பின் மூலிகையை ( பசுஞ்சாணி) பின் கைகளால் பின் நிலத்தைச் சுத்தம் செய்து வந்தாலே நிச்சயம் அனைத்தும் மாறும். ஆனால் என்றாலும் யாரும் செய்வதில்லை. ஆனால் நிச்சயம் அதைச் செய்யாமல் இருந்தால் கோபங்கள் அதிகரித்துவிடும் பெண்களுக்குச் சொல்லிவிட்டேன்.)
————-

குருநாதர் :- யான் சொல்லிவிட்டேன். இதைக் கேட்டால் நன்று. தானாகவே பணியும் கிடைக்கும். முதலில் செய்ய வேண்டியவை செய்யட்டும். அதனால் எதற்குச் சக்தி? ( அதிகாலையில் 3 மணிக்குத் தினமும் குருநாதர் சொல்லியவாறு செய்தால் அதி சக்திகள் உண்டாகும்.) அவ்வாறு சக்திகள் (உங்களிடம்)  இருந்தால்தான் அதற்குத் தகுந்தாற்போல் எங்களாலும் செய்ய முடியும். நிச்சயம் சில கர்மாக்கள். இதை செய்திட்டே வரச்சொன்னால் நிச்சயம் யானே உதவிடுகின்றேன். ஆனால் செய்யப்போவதில்லை இவள். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- அம்மா ஐயா சொன்னதை strict ஆக ( நீங்கள் ) காலை மாலையில் செய்திட்டே வந்தால், ஐயாவே உதவுகின்றேன் என்று சொல்கின்றார். ( தனி விளக்கங்கள்.) 

( அடியவர் தயக்கம் தினமும் அதி அதிகாலையில் எழ)

குருநாதர் :- அறிந்தும் கூட சோம்பேறி. அப்பனே இதுதானப்பா. 

( “”””””உலகமே தேடும் , முதல் முறையாக இவ்வுலகிற்கு உரைத்த,  இவ்வுலகைக் காக்கும் எம்பெருமான் பகவான் ஶ்ரீ நாராயணரின் இதயத்தில் என்றென்றும் அன்புடன் வாசம் செய்யும் அன்னை ஶ்ரீ மகாலட்சுமி தேவியின் அதி ரகசியங்கள்.”””””)

குருநாதர் :- ஆனாலும் பின் வாழ்வில் எவனொருவன் சோம்பேறியாக இருக்கின்றானோ, எவளொருவள் சோம்பேறியாக இருக்கின்றாளோ , எதை என்றும் புரியப் புரிய அதிகாலையிலே பின் லட்சுமி தேவி வருவாளப்பா. இவ்வாறு பின் அவ்வேளையில் எழுந்து சுறுசுறுப்பாக இருந்தால் நிச்சயம் அனைத்தும் கொடுத்திட்டுச் செல்வாளப்பா!!!!! அப்பனே இங்கு யார் இப்பொழுது எதை தவறு செய்கின்றார்கள் என்று நீயே கணி ( கண்டுபிடித்துச் சொல்) ? 

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லுங்கள் ஐயா? அதிகாலையில் லட்சுமி தேவி வருவார்களாம். எல்லோரையும் பார்ப்பார்களாம். அந்த நேரத்தில் யார் ஒருவர் சுறுசுறுப்பாக இருந்து லட்சுமி தேவி கண்டிப்பாக உதவிடுவார்களாம். அப்போ (முன்னேறாமல் இருப்பதற்கு) யாருடைய தவறு? இறைவனுடைய தவறா அல்லது மனிதனுடைய தவறா? என்று கேட்கின்றார்,  ஐயா.


அடியவர் 4 :- இப்போது நீங்கள் வாசிப்பது அனைத்தும் எங்களுக்குப் புரிகின்றது. ஆனால் (உங்கள் வாக்குகளைப் பின்பற்றிச் செயல்பட ) follow செய்ய முடியாமைக்கு என்ன காரணம்? 

( தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். 
திருக்குறள் 619 ) 

குருநாதர் :- அப்பனே உணவை வைத்து விட்டால் அப்பனே பசிக்கின்றது என்று ஓடோடி உண்ணுகின்றீர்கள். ஆனால் (புண்ணியங்கள்) செய்யச் சொன்னால், (தர்மத்தை) சொல்லச் சொன்னால்.. (நீங்கள் செய்வதில்லை) எப்படியப்பா நியாயம்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா பதில் சொல்லுங்கள்? 

அடியவர் 4 :- முயற்சி செய்கின்றேன் ஐயா. 

குருநாதர் :- அப்பனே நீங்கள் ஏதாவது சிறிதளவு முயற்சி செய்தால்தான், முழுவதும் என்னால் கொடுக்க முடியும் அப்பா. அப்பனே நீங்கள் சோம்பேறியாக இருந்தால், அப்பனே யான் எவ்வளவு தட்டி எழுப்பினாலும் பிரயோசனம் இல்லையப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களைத்தான். பதில் சொல்லுங்கள்? 

அடியவர் 4 :- முயற்சி செய்ய வேண்டியதுதான் ஐயா. 

குருநாதர் :- அப்பனே இப்பொழுது கேட்டாளே வேலை, தேடி வராதப்பா.  முயற்சி செய்ய வேண்டும் பலமாகே அப்பனே (ஒரு) தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என்பதைக்கூட பின் அதைக் கேட்கின்றார்களா அப்பனே? அதாவது முயன்று படித்தால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்றெல்லாம் பின் அறிந்தும் கூட முயற்சி செய்கின்றார்கள். பின் வெற்றியும் பெறுகின்றார்கள். அதே போலத்தான் அனைத்தும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் )

குருநாதர் :- திருத்தலம் திருத்தலமாக ஓடச் சொல்லவில்லை யான். சிறு உபதேசமாகவே சொல்லியிருக்கின்றேன். அப்பனே இதைக் கடைப்பிடிக்கச் சொல் முதலில். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ( வேலை கேட்ட அடியவருக்கு எடுத்துரைத்தார்கள்.) அதாவது ஐயா என்ன சொல்கின்றார் என்றால் இந்த கோயிலுக்குப் போ. அந்த கோயிலுக்குப் போ என்று ஓட விடவில்லை. உங்கள் வீட்டிலிருந்தே நீங்கள் உங்கள் சுய முயற்சிகளால் நீங்கள் செய்யும் விசயங்களைத்தான் சொல்லியிருக்கின்றேன் என்று சொல்கின்றார் அம்மா. 

குருநாதர் :- அப்பனே சோம்பேறியாக இருந்து திருத்தலத்திற்குச் சென்றாலும், இறைவனைச் சுற்றி பின் வீழ்ந்து வளைத்தாலும் ஒன்றும் செய்யப் போவதில்லை இறைவன். அதனால் இறைவன் பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றான். சரி சென்றிட்டே வா என்று சொல்லிவிடுவான்.

இதனால் மனிதன் குறை கூறுவான் இறைவனை. அதாவது இறைவனை இப்படி வணங்கினேனே, அப்படி வணங்கினேனே, இறைவனுக்கு அனைத்தும் செய்தேனே என்று. ஆனால் யார் மீது தவறு இங்கப்பா? சொல்லப்பா? 

அடியவர் 1  :- மனிதன் மீதுதான்.

குருநாதர் :- இன்னும் கேளும். ( கேள்விகளைக் கேட்க நல் வாய்ப்பு நல்கினார்கள் கருணைக்கடல் ) 

அடியவர் 1 :- அம்மா இது உங்களுக்கு அருமையான வாய்ப்பு. 

அடியவர் 3:- நான் எதுக்காக பிறந்திருக்கின்றேன்? 

குருநாதர் :- யான் சொல்லியதை நிச்சயம் கடைப்பிடித்தால்,  அப்பொழுது யான் சொல்கின்றேன். ( தனி வாக்குகள்) 



குருநாதர் :- ( ஒரு அடியவருக்கு நீண்ட தனி வாக்குகள் பல உரையாடல்களுடன்.)

அப்பனே தன் நிலைமைக்கு, தன் சக்திக்கு ஏற்ப்பவாறுதான் இறைவன் அனைத்தும் செய்வான் அப்பனே. புரிகின்றதா? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரிகின்றதா? (திறமை) ஒன்றும் இல்லாதவர்களுக்கு (வேலை) கொடுத்து விட்டால் அங்க ( அவர்களால் வேலையில் திறமையாக ) 
ஒன்றும் செய்ய முடியாது. 

அடியவர்கள் :- புரிகின்றது ஐயா.

குருநாதர் :- இதனால்தான் அப்பனே, திருமணங்கள் கூட அப்பனே இறைவனே தடுத்து நிறுத்துகின்றான் அப்பனே. ஏன் எதனால் என்றால் வாழ்க்கை நிச்சயம் வாழத்தெரியாமல் வாழ்வார்கள் அப்பனே. பின்பு பிரிவு நிலை ஏற்படும் என்பேன் அப்பனே. அதனால்தான் இறைவனே நிறுத்தி வைக்கின்றான். ஆனாலும் அப்பனே இதற்குப் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்று ஓடுகின்றார்கள். 

இதனால் ராகு கேதுக்கள் செவ்வாய் இன்னும் தோடங்கள் ( தோஷங்கள் ) என்றெல்லாம் சொல்லி , மக்களைத் திசை திருப்பி, காசுகளைப் பறித்து அப்பனே ஆனாலும் கடைசியில் பார்த்தால் ஒன்றும் நடப்பதில்லை. அப்படி நடந்தாலும் பிரிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றதப்பா. 

அவ் பக்குவங்களை ஏற்படுத்தித்தான் மணங்களும் இறைவன் முடிப்பான். அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். 

என்ன ஏது என்றெல்லாம் இறைவன் அப்பனே அதாவது மனிதன் யோசிப்பதைவிட இறைவன் கோடி மடங்கு யோசிக்கின்றானப்பா. 

இதனால்தான் அப்பனே தெரியாமல் வாழ்ந்தவர் எல்லாம் அப்பனே தெரிந்தவர்கள். அதாவது அவர்களும் தெரியாதவர்கள்தான். ஆனாலும் சரியாகப் பயன்படுத்தி , திசை திருப்பி, அப்பனே கர்மத்தில் அப்பனே விட்டுவிடுகின்றார்கள். என்ன லாபம்? 

(அதாவது திருமணம் நடக்கக் கூடாது என்பவர்களை ஜோதிடத்தின் மூலம் திசை திருப்பி, அவர்களிடம் பணம் பறித்து, திருமணம் செய்ய வைத்து, அவர்களைக் கர்மத்தில் நுழைத்து விடுகின்றனர். எனவே இதே காரணங்களால் அங்கு ஒரு அடியவருக்குத் திருமணம் அதனைத் தாமதப்படுத்தி குருநாதர் அமைதி காத்துள்ளேன் என்று உரைத்தார்கள்.) 

குருநாதர் :- அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே. ஆனால் அனைவருக்கும் நல் நேரங்கள்தான் அப்பனே. ஆனாலும் ஏன் இப்படி நடக்கின்றது என்று கூட நீயும் கேட்கலாம் அப்பனே. இதனால்தான் அப்பனே தான் தன் செய்த எவை என்று அறிய அறிய. 

அப்பனே ஏன் எதற்கு என்றால் அறிந்தும் உண்மைதனைக் கூட அப்பனே சனீஸ்வரனிடத்திலும் கூட யான் சொல்லிவிட்டேன். தன் மகனை எதையும் செய்யாதே என்று அப்பனே. சனீஸ்வரனும் சரி என்று சொல்லிவிட்டான் அப்பனே. அப்பொழுது தீய நேரமானாலும், நல் நேரமே அப்பனே. 
( தீயவை நடக்க இருந்த இவ் அடியவருக்கு நல்லதே நடந்தது.) 

குருநாதர் :- அதனால்தான் அப்பனே எண்ணம்போல் வாழ்க்கை என்று. இதற்கு எடுத்துக்காட்டாக அப்பனே நீயும் கூறும். 

(இப்போது யாரும் இதுவரை உலகம் அறியாத மனதில் நுழைந்து இறைவன் அருளாட்சி செய்யும் அற்புத நிகழ்வு ஒன்று நடந்தேறியது) 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- (அங்குள்ள ஒரு அடியவரைப் பார்த்து) ஐயாவை வைத்தே சொல்லலாம். ஆசிரியர் பணியில் உள்ளார்கள். எல்லா குழந்தைகளுக்கும் , மொத்த வகுப்பிற்கும் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்? பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? பெண்கள் கர்ப்ப காலத்தில் எந்த மாதிரி பூசைகள் செய்தால்,  குழந்தைகள் சொல் பேச்சு கேட்கும் என்று எல்லாம் நிறைய குழந்தைகளுக்குச் சொல்லி இருக்கின்றார்கள்.  அப்படி எல்லோருக்கும் நல்லது செய்ததால், ஐயாவோட குடும்பத்தை, (குருநாதர்) ஐயன் வந்து காத்து அருளியுள்ளார்கள். 

குருநாதர் :- அப்பனே, இதையும் யான்தான் பேசவைத்தேன் அப்பனே. புரிகின்றதா அப்பனே. இதனால் குற்றம் எங்கு உள்ளது என்பதை நீயோசி. 

சுவடி ஓதும் மைந்தன் :- இதை பேச வைத்தது நான்தான் என்று உரைக்கின்றார். (ஐயா இங்கு அவர் உங்கள் மனதில் நுழைந்து பேச வைத்துள்ளார்.)

குருநாதர் :- அப்பனே அவரவர் வழியில் அவர்கள் சென்று கொண்டிருந்தாலே போதுமானது. யாங்கள் வந்து நிச்சயம் வழி நடத்துவோம் அப்பனே. மீறிச் சென்றால்தான் அப்பனே. 

இதனால் மீறிச்சென்றாலும் அப்பனே எதை என்று தெரியாமலும், அறியாமலும் இருந்தாலும் பின் சண்டை, சச்சரவுகள் , பின் மீண்டும் நேராக சென்று கொண்டிருந்தால் என்ன இருக்கும்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா நேராக போய்க்கொண்டே இருந்தால் என்ன இருக்கும் என்று கேட்கின்றார் ஐயா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :-  ஏதாவது ஒரு இடத்தில் முட்டி நின்றுவிடுவோம். 

குருநாதர் :- அப்பனே இதுதான் வாழ்க்கையப்பா. அப்பனே ஆனாலும் நேராகச் சென்றால் அப்பனே இறைவனை அடைய வேண்டும். அதற்கு என்ன வழி? 

சுவடி ஓதும் மைந்தன் :- நேராக போய்க்கொண்டே இருக்க வேண்டும். முட்டி கீழே விழுகின்றீர்கள். ஆனாலும் போய்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி என்று (குருநாதர்) கேட்கின்றார்? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :-  ஐயன் உத்தரவுப்படி அறப்பணிகள், தான தர்மங்கள், இறை நம்பிக்கை ….

குருநாதர் :- அப்பனே தன் கடமை என்னவென்று யோசித்து, யோசித்து எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சரியான வழியில் அதாவது நேரான வழியில் சென்று கொண்டே இருந்தாலே இறைவனை கண்டுவிடலாம் அப்பா. ஆனால் அப்பனே அவ்வாறு கண்டுவிடுவதே இல்லையப்பா மனிதன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே (நேர்கோட்டில் சென்று கொண்டே) தன் கடமையை செய்து கொண்டு,  ( அங்குள்ள ஒரு அடியவரை உதாரணம் காட்டி, உங்களுக்கு ) இப்போது என்ன கடமை? நீங்க படிக்க வேண்டிய வயதில் படித்துக்கொண்டு , (வேலைக்கு போக வேண்டிய நேரத்தில் ) வேலைக்கு, அதாவது அந்தந்த நேரத்தில் முயற்சி எடுத்து , முயற்சி எடுத்து, முடியவில்லை என்றாலும் அதனை சரி செய்து சரியான வழியில் சென்று கொண்டே இருந்தால் , ஒரு நாள் நேராக இறைவனிடமே சென்று விடுவீர்களாம். 

குருநாதர் :- அப்பனே அப்படி சென்றால்தான் அப்பனே உத்தமம். அப்படி செல்லாவிடில்தான் இறைவனை நாடுகின்றார்கள். புரிகின்றதா இப்பொழுது? 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ, தன் கடமையை யார் சரியாக செய்ய வில்லையோ அவங்கதான் (இறைவனை நாடுகின்றனர்). ஐயா, கொஞ்சம் differentஆக  இருக்கு( நம் அனைவருக்கும் முற்றிலும் புதிய வாக்கு இது) . புரியுதுங்களா ஐயா? அப்போ தன் கடமையை யார் சரியாக செய்கின்றார்களோ, அவங்க Direct ஆக இறைவனிடம் போகலாமாம். ஐயா இது எப்படி ( புரிந்து கொள்வது என்றால்) சொல்கின்றார் என்றால் நாம் கீழே விழுந்து கும்பிட்டாலும் , என்ன செய்தாலும் (இறைவன்) ஆசிகள் கிடைப்பது (கடினம்). அப்ப, தன்னோட கடமை என்ன? அதை செய்து கொண்டே கரக்டாக போய்க்கொண்டே இருந்தோம் என்றால் , இறைவனிடமே directஆக போய் பேசலாமாம். ஐயா புரியுதுங்களா? 

அடியவர் 4 :- அவங்கவங்க அவங்க வேலையை செய்கின்றார்கள்தானே? 

சுவடி ஓதும் மைந்தன் :- ம்..

அடியவர் 4 :- அதில் ஏன் இடையூறு செய்கின்றார்கள்? 

குருநாதர் :- அப்பனே இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே. அதாவது வாகனத்தை ஒருவன் இயக்குகின்றான் அப்பனே. இடையே ஏன் நிறுத்துகின்றான் கூறு?

அடியவர் 4 :- எங்க நான் நிறுத்துகின்றேன்? அது நிற்கின்றது இல்லையா. (அதாவது) இடிக்கின்றதில்லையா?

குருநாதர் :- அப்பனே , எப்படியப்பா (அதுவாகவே தானாக) நிறுத்தும்? அப்பனே காவலாளிகள் நிறுத்தினால் என்ன செய்வாய் அப்பனே? பின் (நிற்காமல்) நீயே சென்றுவிடுவாயா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வண்டி செல்கின்றது. வாகனம் இயக்குகின்றோம். ஒரு காவலாளி ஏன் நிறுத்தி வைக்கின்றார் என்று கேட்கின்றார். ஐயா நீங்க சொல்லுங்க ஐயா. 

அடியவர் :- சோதனை செய்வதற்காக…

குருநாதர் :- அப்பனே பக்குவத்தைக் கொடுத்தால்தான் அப்பனே அடுத்த படி ஏற முடியும் அப்பா. அப்பனே நீயும் தெரியாமலே கேட்கின்றாய் அப்பனே, தெரிந்து வைத்தும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, சோதனை. போய்க்கொண்டே இருக்கின்றீர்கள் நேர் வழியில். ஏன் நிறுத்துகின்றீர்கள். நீங்கள் (அப்படியே) போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானே? ஐயா புரியுதுங்களா? அங்கு அவர்கள் சோதனை செய்கின்றார்கள். இது போல்தான் நாம் நேர் வழியில் செல்லும் பொழுது…

(இப்போது சுவடி ஓதும் மைந்தன் அங்குள்ள அடியவர்களை மேலும் கேள்வி கேட்க ஊக்குவித்தார்கள்.)
ஐயா (மேலும் கேள்விகளை) கேளுங்கள். இந்த சமயம் (நீங்கள் கேள்விகள் கேட்க) நல்ல சமயம். 

அடியவர் 4 :- செய்துகொண்டே இருப்பார்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :- இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?  நீங்கள் அடுத்த படிக்கு , ஒரு பெரிய நிலைக்குச் செல்வதற்கு இந்த சோதனை இருந்தால்தான் அடுத்த படியைப் பிடிக்க முடியும். இந்த சோதனை இல்லை என்றால் அதைப் பிடிக்க முடியாது.

அடியவர் 4 :- எப்படி உணர்ந்து கொள்ளமுடியும், அடுத்த அடுத்த படிக்குச் செல்வதை?

குருநாதர் :- அப்பனே உணர்ந்து கொண்டேதான் வருகின்றாய் அப்பனே.

அடியவர் 4 :- (எங்கள் வாழ்க்கையில்) எங்கே முன்னே போனாலும் இடிக்குதுல்ல? (தடைகள் பல வருகின்றது. முன்னே போக முடியவில்லை). 

குருநாதர் :- அப்பனே சோதனை செய்பவன் , அப்பனே அங்கேயா நீ நின்று விடுகின்றாய் அப்பனே? மீண்டும் கிளம்பிவிடுகின்றாய் அல்லவா அப்பனே?

( நம் பலரின் உள் குரல் இவ் அடியவர் இப்போது உரைத்த பதில்/கேள்வி. இந்த இடத்தில் இதனை உங்கள் உரையாடலாக நினைத்து வாக்கினை உள்வாங்கப் பல புரிதல்கள் உங்களுக்கு உண்டாகும்.)

அடியவர் 4 :- (எனக்கு) எங்கே போனாலும் பரம்பதத்தில் ( பரம்பதம் விளையாட்டில்) பாம்பு கடிச்சு முதல் கட்டதிற்கு வருவோம் இல்லையா? அந்த கதைதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. 

குருநாதர் :- அப்பனே அப்படி இருந்தால்தான் அப்பனே என்னிடத்தில் வரவும் முடியும் அப்பா. இப்பொழுது என்னையும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கின்றாய் அப்பா. 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புக்கள் ) 

அடியவர் 4 :- (பரம்பத விளையாட்டில்) முதல் இடத்திலேயே இருந்தால் கூட பரவாயில்லை…(நல்ல உயரம் சென்று அங்கிருந்து அல்லவா கீழே விழுந்து கொண்டே இருக்கின்றேன். மனசு வலிக்கின்றது.) 

குருநாதர் :- அப்பனே அதாவது பாவத்தைக் கரைத்துக் கொள்பவனே, என்னிடத்தில் வருகின்றானப்பா. 

(நமது வாழ்க்கை என்ற பரம்பதம் விளையாட்டில் பாம்பு கடித்து கீழே விழுந்தால் , ஆரம்பித்த முதல் கட்டத்திற்கே வந்தால் - பாவம் கரைகின்றது என்று பொருள் கொள்க.) 

குருநாதர் :- இப்படி நீ கஷ்டங்கள் படவில்லையென்றால் ஏனப்பா நீ வந்து என்னிடம் வாக்குகள் கேட்கப் போகின்றாய்? அகத்தியனா? யாரோ ஒருவன் என்று சென்று கொண்டிருப்பாய் அப்பனே. இதனால்தான் அப்பனே அதாவது உந்தனுக்கு இப்பொழுது கொடுத்திருக்கின்றது நல்லதா? தீயதா ? நீயே யூகித்துக் கொள் அப்பனே. அப்பனே எழுந்து நின்றவனே இதைக் கேள் அவனிடத்தில் நீயே. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- உங்களுக்குச் சோதனைகள் நிறைய வந்துள்ளது , அதைக் கடந்து வந்துள்ளேன் என்று சொல்கின்றீர்கள்,  இல்லையா? இந்த சோதனைகளைக் கொடுத்ததில் உங்களுக்கு நன்மையா தீமையா என்று ஐயன் (குருநாதர்) கேட்கின்றார். 

அடியவர் 4 :- எனக்கு எது வந்தாலும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அடுத்த தேவை என்று ஒன்று உள்ளது அல்லவா? அதை வந்து நமக்கு…..

குருநாதர் :- அப்பனே தேவை இப்பொழுது உந்தனுக்கு அதாவது தண்ணீர் வேண்டும் என்பேன் அப்பனே. நேரடியாக உள்ளே செல் பார்ப்போம்? 

அடியவர் 4:- புரியவில்லை ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களுக்கு இப்போது தண்ணீர் தாகம் தேவை  என்று (பொதிகை வேந்தன்) நான் சொல்கின்றேன். (நீங்கள் இப்போது இந்த வீட்டில்) நேராக உள்ளே சென்று குடித்து விடுவீர்களா என்று கேட்கின்றார். ஐயா புரியுதுங்களா? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- (இந்த வீட்டில்) கேட்டுத்தானே தண்ணீர் குடிப்பீர்கள்? 

அடியவர் 4 :- ஆமாம். கேட்டுத்தான் (வாங்கி) குடிப்பேன். 

குருநாதர் :- அப்பனே (நீ உள்ளே சென்று) நேரடியாக ஏன் அருந்தக்கூடாது? 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த வீட்டில் எங்கு தண்ணீர் உள்ளது என்று தெரியும். அப்படி இருக்கையில் ஏன் நேரடியாக உள்ளே சென்று அருந்தக்கூடாது என்று கேட்கின்றார். 

அடியவர் 4 :- நம்ம வீடு என்றால் (யாரையும் கேட்காமல்) எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வெளியே போனால் கேட்டுத்தான் வாங்க வேண்டும். 

குருநாதர் :- அப்பனே இப்படித்தான் இறைவன் மனிதனைப் படைக்கின்றான் அப்பனே. அதனால் அவன் கட்டுப்பாட்டில்தான் ஒவ்வொரு ஆன்மாவும் என்பேன் அப்பனே. பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவாறுத்தான் இறைவனும் இயக்குவான் என்பேன். புரிகின்றதா? அப்பனே இன்னும் கேள்?

அடியவர் 4 :- ஐயா இதை எப்படி நாங்கள் உள்ளே உணர்ந்து கொள்வது? 

குருநாதர் :- அப்பனே இப்பொழுது இதுவரை உணர்ந்து கொண்டுதான் வந்துவிட்டாய் அப்பனே. இதுவரை பின் பாவத்தில் மிதந்துதான் வந்து கொண்டு இருந்தாய். இப்பொழுதுதான் அதாவது யான் மீட்டெடுக்கவில்லை என்றால் அப்பனே, நீ ஏற்கனவே பைத்தியமாகி இருப்பாய் என்பேன் அப்பனே. 

அடியவர் 4 :- (வாழ்க்கை என்ற பரம்பதம் விளையாட்டில் பல முறை கீழே விழுந்த வலியினால்) ஏறக்குறைய அப்படித்தான் இருக்கின்றேன். ஒன்னும் வித்தியாசம் இல்லைங்க. 

அடியவர்கள் :- (பலத்த சிரிப்புக்கள்)

அடியவர் 4 :- இன்னும் நடக்க வேண்டிய ஒரு டைம்ல ( time ) வந்து delay ஆகி…..

குருநாதர் :- அப்பனே உடம்பே உன்னிடத்தில் இல்லை அப்பா. நீ கேள்விகள் கேட்கின்றாய்!

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கேளுங்கள் ஐயா.

அடியவர் 4 :- ( யோசித்தபடி) ஐயா அதை எப்படிக் கேட்பது? ( என்று தெரியவில்லை ) 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ( இந்த அடியவர் சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, அடியவர் சார்பில் அழகாகத் தொகுத்துப் பின்வருமாறு கேட்டார்கள் நம் குருநாதரிடம் ) 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயா என்ன கேட்க வருகின்றார் என்றால், எனக்கு எல்லாமே புரிகின்றது. என் முன் ஜென்ம வினைப்படி நான் சுக துக்கங்களை அனுபவித்து வந்து கொண்டிருக்கின்றேன். இனி எப்போது அடுத்த வளர்ச்சி என்பது அவர் கேள்வி ஐயா.

குருநாதர் :- அப்பனே மலர்ச்சியும் கொடுத்து விட்டேன் அப்பனே. இல்லையென்றால் அப்பனே இவன்தன் இங்கேயே இருந்திட வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே  …(  தனி வாக்குகள்). அப்படிச் செய்யவில்லை இவ் அகத்தியன். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயா (உங்களை, உங்கள் குடும்பத்தை ) அவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து (நம் அன்பு குருநாதர்) காப்பாற்றியுள்ளார். 

குருநாதர் :- அப்பனே கேள் இன்னும். 

அடியவர் 4 :- நமக்காக எந்த பிரார்த்தனையும் செய்ததில்லை. இப்பொழுது அல்ல. எப்போதுமே செய்ததில்லை. 

குருநாதர் :- அப்பனே இப்பொழுதுதான் கேட்டாய் அப்பனே. இவையெல்லாம் நியாயமா என்று கூறு?

அடியவர்கள் :- ( சிரிப்பு அலைகள் )

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அடுத்தவர்களுக்காகப் பாடு பட்டவர்கள் , நிச்சயம் ஓர் நாள் அப்பனே சுகம் அப்பனே உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவர்களுக்காக நாம் வேண்டிக்கொண்டால் , அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று, அவர்களுக்கு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாகச் சுகம் உண்டு என்று (அகத்திய மாமுனிவர்) சொல்கின்றார் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- கேளுங்கள் ஐயா. ஐயா இதுதான் ஜீவ நாடி என்பது. இதுவரைக்கும் நேரில் நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கின்றேன். உங்களை cross question ( குறுக்கு விசாரனை நம் குருநாதர்) அவர் கேட்பார்கள் ஐயா. 

அடியவர் 4:- ( தனி கேள்விகள் , வாக்குகள் )

குருநாதர் :- அப்பனே ஆனாலும் ( தனி வாக்குகள் விதி ரகசியங்கள்)  அதாவது ஒரு தந்தையும் கூட ___ எவ்வாறு என்பதையும் கூட அப்பனே அனைத்தும் நல்லவைதான் செய்யவேண்டும் என்றெல்லாம் மனம் உருகியதையெல்லாம் அதாவது யுகம் யுகங்களாகப் பார்த்துக்கொண்டே வருகின்றேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே எனை நம்பியவர்கள் எதை என்றும் புரியப் புரிய ஆனால் அப்பனே விதியில் என்ன உள்ளது (என்பது) எந்தனுக்கு மட்டுமே புரியும் அப்பனே. அதனால்தான் என் பக்தர்களை பக்குவப் படுத்தி கடைசியில் நல்லதைச் செய்வேன். கவலையை விடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். விதியில் உள்ள துன்பங்களை எல்லாம் கழித்த பின்பு , குருநாதரே அனைத்தையும் நடத்தி அருளுவார்கள் என்று எடுத்து உரைத்தார்கள்.) 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :-  ஐயா ( அப்படிச் செய்யும் போது) எந்த ஒரு தடங்கல்களும் வராது. 

அடியவர் 4 :- ஐயா கால நிர்ணயம் ஏதும் உண்டா? இல்லை நான் ரொம்ப நாள் wait பன்னனுங்களா? 

குருநாதர் :- ( தனிப்பட்ட வாக்குகள். அதில் ஒரு முக்கிய வாக்கு ..) அப்பனே காலங்கள் நேரங்கள் அனைத்தும் என்னிடத்தில். (தனி வாக்குகள்) பொறுத்திரு அப்பனே. யானே முடித்து வைக்கின்றேன். அப்பனே ஆனாலும் உன் கடமையைச் செய்ய வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( மேலும் வாக்குகளைக் கேட்க உற்சாகப் படுத்தினார்கள். அதனுடன் குருநாதர், அவர்கள் அழைத்ததால் தான் அங்கு இவ் அடியவர்கள் வர முடிந்தது என்று உரைத்தார்கள். ) 

அடியவர் 6 :- (காலம் சென்ற முன்னோர்கள் வழிபாடு குறித்து கேள்வி ஒன்று கேட்டார்கள். அதாவது முன்னோர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்களா என்று கேள்வி கேட்டார்கள். ஒரு முறை இவர்கள் முன்னோர் கனவில் வந்துள்ளார்.) 

குருநாதர் :- இதே போல் அனுதினமும் நீ நிச்சயம் செய்திருந்தால் நிச்சயம் உன் சொப்பனத்திலே வந்து சொல்லிருப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கங்கள்)

குருநாதர் :- அப்பனே (உங்களுக்கு) பக்குவங்கள் இல்லாமல் யான் எதைச் செய்தாலும் வீணாகப் போய்விடும் அப்பனே. 

( பல முக்கிய தனி வாக்குகள் ) 

குருநாதர் :- ( ஒரு அடியவருக்கு முரண்பாடாக கடுமையாக விதியில் உள்ளது. இப்படிப்பட்ட விதியை மாற்றுவதற்குக் குருநாதர் போராடித்தான் நடத்த வேண்டும் என்றும், இவ்விதியின் ரகசியங்கள் யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை என்றும் மனிதர்களிடத்தில் (விதி தெரியாமல் ஜோதிடர்கள்) இடத்தில் சென்றால் குழப்பி விடுவார்கள் என்றும், இப்படிப்பட்ட விதி மாற்றங்களைச் செய்ய குருநாதர், சித்தர்கள் உதவி மனிதர்களுக்கு அவசியம் தேவை என்றும் , விதியில் உள்ளதை சித்தர்களைத்தவிர யாரும் எடுத்துரைக்க இயலாது என்றும், அப்படி எடுத்துரைத்தாலும் தோல்வியில் போய் முடிந்து விடும் என்றும் எடுத்து உரைத்தார்கள் நம் அன்பு கருணைக் கடல்.)

(ஜீவ நாடி மர்மங்கள்)

குருநாதர் :- தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவரும், தந்தை  நினைக்கின்றார்கள் அப்பனே. அதே போலத்தான் அப்பனே. (உங்களின் அன்புத் தந்தையாக) யான் அனைத்தும் (உங்களுக்கு வாக்குகளாக) சொல்வேன் அப்பனே. ஆனால் சில பாவங்கள் கூட சுவடியைக்கூட அதாவது எதை என்று அறிய அறிய யான் சொல்லி விடுகின்றேன் அப்பனே. அதாவது அதைப் படித்தாலும் அப்படித்தான் அப்பனே. பாவத்தை நெருங்க விடமாட்டேன் (எனது இவ் சுவடியை ஓதும் என் மைந்தனான ஜானகிராமன்) இவந்தனையும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- புரிகின்றதா ஐயா. ஐயா (எதிர்காலத்தில் விதியில் கடுமையாக நடக்க உள்ளதை) சில ரகசியங்கள் சொல்லிவிட்டால் , (நம் குருநாதரால்  எளிதாக) easyஆகச் சொல்லிவிடுவார். (சுவடி ஓதும்) என்னையும் அதாவது இவனையும் பாவத்தில் சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே கேட்கின்றாயா?

சுவடி ஓதும் மைந்தன் :- ஏதாவது கேளுங்கள். 

அடியவர் 4 :- (தெளிவு நிலை)

குருநாதர் :- அப்பனே புரிகின்றதா? எதற்காக என்னைத் தேடி வந்தாய் என்பதை? அப்பனே இதுதானப்பா புண்ணியம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா தெரிகின்றதா? நீங்கள் அப்படி இல்லையென்றால் நீங்க பல இடங்களுக்கு (விளக்கங்கள் தேடி) போய்க் கொண்டே இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது (உண்மை நிலை) தெரிகின்றதா? இந்த விசயங்களை யாரும் சொல்ல மாட்டார்கள் என்று சொல்கின்றார் ஐயா. விதியில் உள்ளதை யாரும் சொல்ல மாட்டார்கள். (சித்தர்களால் மட்டுமே சொல்ல இயலும்.) 

அடியவர் 4 :- இவங்க தினப்படி என்ன செய்ய வேண்டும்? 

குருநாதர் :- அப்பனே யான் மாற்றுகின்றேன் என்று சொல்லி விட்டேன் அப்பனே? மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் அப்பனே? இதைத்தான் கூறுகின்றாய். 

அடியவர் 4 :- அது சரிங்க ஐயா. Surrender ஆகின்றேன் ஐயா. ( உங்கள் முன் பணிகின்றேன்.) தினமும் routine என்ன செய்ய வேண்டும். 

(  #######     விநாயகர் அகவல் பாடல் ரகசியங்கள்    ####### ) 

குருநாதர் :- அப்பனே விநாயகனின் சீதக்களப என்னும் பாடலை அப்பனே விநாயகப் பெருமானின் அருகில் தீபம் ஏற்றிப் பாடச்சொல் அப்பனே. பின் போதுமானது. அதுமட்டும் இல்லாமல் அனுதினமும் விநாயகப் பெருமானுக்கு 

ஏதாவது புஷ்பத்தைச் சாற்றி, அப்பனே பின் வணங்கி வரச்சொல் அப்பனே. நிச்சயம் நவ முறை சுற்றச்சொல் அப்பனே. நிச்சயம் பிள்ளையோனும் மகிழ்ந்து அனைத்தும் செய்வான் அப்பனே. ஞானத்தை அள்ளித் தருவான் என்பேன் அப்பனே. இன்னும் சிறப்பான வாழ்க்கை உண்டு. 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அளித்த வாக்கு - சித்தன் அருள் 1668 - காசி மீர்காட் கங்கை கரை. விநாயகர் அகவல் பாடலில் உள்ள முழு அதி ரகசியம் அதனைத் தெரிந்து கொள்ள இந்த பதிவினை படியுங்கள். 

அடியவர்களுக்காக இட்ட விநாயகர் அகவல் பாடல் கானொளி ( YouTube link ) :- 

https://youtu.be/tOvBaBg6Ih4

அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

சித்தன் அருள் - 1764 - திதியில் செய்ய வேண்டியவை!

(# சங்கடஹர சதுர்த்தி ரகசியம் #) :- 

“சங்கடஹர சதுர்த்தி அன்று அப்பனே பின் பிள்ளையோனுக்கு,  நல்முறையாக 9 குடங்களில் நீர் நிரப்பி,  அவனை குளிப்பாட்டினால் யோகங்கள் வரும் அப்பா.”

சங்கடஹர சதுர்த்தி அன்று ஆலயத்தில் அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒன்பது குடங்கள் அல்லது ஒன்பது தீர்த்த சொம்புகளில் நீர் நிரப்பி 9 முறை விநாயகருக்கு அபிஷேகம் செய்து வர வேண்டும்... ஆலயங்களுக்குச் சென்று செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருக்கும் கணபதி சிலைக்குச் செய்து வரலாம். விநாயகப் பெருமானை  இவ்வாறு அபிஷேகம் செய்தால் யோகங்கள் உங்களுக்கு வரும் என்று குருநாதர் வாக்கு.

அடியவர்கள் பயன்படுத்திக் கொள்க. 

வாருங்கள் மீண்டும் வாக்கின் உள் செல்வோம். )

அடியவர் 4 :- ஐயா ஒரு கேள்வி கேட்கலாமா?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கேளுங்க ஐயா. அவர் அருமையாக வந்து நிற்கின்றார் (நம் குருநாதர்). 

அடியவர் 4 :- நான் ஏதாவது தவறு செய்கின்றேனா? ஏதும் திருத்திக் கொள்ள வேண்டுமா? அதனால் time waste ஆகுதுங்களா? 

குருநாதர் :- அப்பனே எழுந்து எழுந்து உட்கார். பார்ப்போம். 

அடியவர் :- ( குரு நாதர் உரைத்தவாறு உடனே செயல்பட ஆரம்பித்தார்)

மற்றொரு அடியவர் :- ( சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்)

சுவடி ஓதும் மைந்தன் :- அவருக்கு வாக்கு போய்க் கொண்டிருக்கும் போது நீங்கள் கேட்கக் கூடாது அம்மா. உங்களுக்கும் குருநாதர் வாக்கு உரைப்பார்கள். (சற்று பொறுங்கள் தாயே!). 

( சில மணித்துளிகள் அடியவர் #4 எழுந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே இருந்தார்கள். அதன் பின் இறைவன், குருநாதர் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள்.)

குருநாதர் :- அப்பனே இப்பொழுது என்ன ஞாபகம் வருகின்றது?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இப்போது எழுந்து எழுந்து உட்கார்ந்தீர்களே, (அப்போது அந்த நேரத்தில்) என்ன ஞாபகம் வந்துள்ளது என்று கேட்கின்றார் ஐயா. 

அடியவர் 4 :- சொல்லத் தெரியவில்லைங்க. இப்பதான் (எழுந்து எழுந்து உட்கார்ந்து ) முடித்தேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- எழுந்து எழுந்து உட்கார்ந்த அந்த நேரத்தில் என்ன ஞாபகம் வந்தது என்று சொல்லுங்கள் ஐயா.

அடியவர் 4 :- நீங்க சொன்னவற்றை follow பன்னேன்ங்க. ( எழுந்து எழுந்து உட்கார்ந்ததை). 

குருநாதர் :- அப்பனே அதனால் பின் சொல்லியதைச் செய்.  மீதி எல்லாம் பார்த்துக்கொள்கின்றேன் யான். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி உட்கார்ந்து எழுந்த போது ஏதாவது நினைத்தீர்கள் என்றால் நீங்க இங்க கேட்கலாம். அதேபோல் (நீங்கள்) போய்க்கொண்டே இருங்கள் என்று சொல்கின்றார் ஐயா. (உங்களை) நான் பார்த்துக்கொள்வேன் என்று கூறுகின்றார். அடுத்த கேள்வி ஐயா?

அடியவர் 4 :- தினமும் ஒரு நாளை எப்படி (கடக்க) pass பன்னவேண்டும் என்று தெரிந்தால் இந்த (மாதிரி) சிக்கல் வராது ஐயா.

குருநாதர் :- அப்பனே அதனால்தான் (இறை வழங்கும் கஷ்டங்கள், சோதனைகள் என்ற) அலைக்கழிப்புக்கள். இப்பொழுதே இவ்வாறு இருக்கின்றாய். மீண்டும் கொடுத்தால் தாங்க மாட்டாய் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? ( அங்குள்ள மற்றொரு அடியவரைப் பார்த்து) ஐயா கொஞ்சம் explain பன்னுங்கய்யா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- நான் சொல்வதை மட்டும் கேட்டு இதையே followபன்னுங்க என்று சொல்கின்றார் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- (இன்னும்) கேளுங்கள் ஐயா. 

அடியவர் 4:- ஒவ்வொருத்தரும் வளர்கின்ற குழந்தைகள் இருக்கின்றார்கள். இப்போ parents வந்து எல்லாமே தெரியிரதில்லை. இல்லைங்களா?  அப்போ அவங்க இடத்தில் இருந்து guide பன்னுவது எப்படி? 

குருநாதர் :- அப்பனே ஒரு குழந்தை எழுந்து நிற்கின்றது அப்பனே. நீதான் அப்பனே எழுந்து நிற்கச்சொன்னாயா என்ன?

அடியவர் 4 :- இல்லைங்க ஐயா. 

குருநாதர் :- அப்பனே அடிபட்டு , வீழ்ந்து எழுந்து நின்றால்தான் அனைத்தும் தெரியும் அப்பனே. அதுபோலத்தான் அப்பனே. சில மனிதர்களை யாங்கள் விட்டுவிடுவோம் அப்பனே. பின் அடித்து , மனக்குழப்பம் எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே, கடைசியில் வந்து நிற்பானப்பா எங்களிடத்தில் அப்பனே. ( உலகில் அனைத்தும் பட்டுத் தெரிந்து சித்தர்களிடம் வருவார்கள்.) 

( சித்தர்களே, இறைவனே மனிதர்களின் அன்னை , தந்தை என்ற ரகசியம்)

அப்பொழுது தீவிரமாக தன் தாயவளைக் கூட பிடித்துக் கொண்டால் சிறிது சிறிதாகத் தூக்கி விடுவாள். அதே போலத்தான் யாங்களும். 

அதனால் கெட்டியாகப் பிடித்துக்கொள். ( அகத்தியன் ) என்னைப் பிடிக்க வில்லையென்றாலும், இறைவனைப் பிடித்துக்கொள். 


அடியவர் 4 :- ஐயா அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்.

குருநாதர் :- அப்பனே உன் கடமையைச் செய். போதுமானது. 

(தனி வாக்குகள்)

அடியவர் 6 :- ( சில தனி உரையாடல்கள் ) 

குருநாதர் :- ( மனக்குழப்பங்கள்) இவ்வாறெல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரே மனமாக இருக்க வேண்டும். 

குருநாதர் :- ( அங்கு ஒரு அடியவரை எழுப்பி ,  மற்ற அடியவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு எடுத்துரைக்க அருளினார்கள்) 

அடியவர் 6 :- ( உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்) 

அடியவர் 7 :- ( என்ன வேண்டும் என்பதை மிக அழகாக கருணைக் கடலிடம் வேண்டினார்கள். இதுதான் பக்குவத்தின் உச்சம் என்பது) 

( …………… ) இந்த ஜென்மத்தோட போதும். பிறவாமை வேண்டும். பிறவாமை இல்லை என்றால் ( மீண்டும் பிறவி எடுத்தால் குருநாதா ) உங்களை என்றும் மறவாமை வேண்டும். ஒவ்வொரு ஜென்மத்திலும் எப்பொழுதும், கணப்பொழுதும் எங்களை விட்டு நீங்கள் விலகாமை வேண்டும். 

குருநாதர் :- அம்மையே அவள் மட்டும் அப்படிப் பேசுகின்றாள். ஏன் நீ இப்படிப் பேசவில்லை? 

(தனி வாக்குகள்) 

குருநாதர் :- அம்மையே இன்னும் கூறு அவள்தனக்கு. 

அடியவர் 7 :- (குருநாதர்) அவங்க ( நம்மை ) பாத்துக்குவாங்க. இருந்தாலும் நம்ம வேண்டுதலையே நம்ம அவங்களுக்கு சமர்ப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஐயா எனக்கு நல் வாழ்வு கொடுங்கள். ஏற்றமான வாழ்வு கொடுங்கள். என்னை விட்டு கணப்பொழுதும் நீங்கி விடாதீங்க. இதுதான் என்னுடைய மிகப்பெரிய வேண்டுதல்.

சுவடி ஓதும் மைந்தன் :- (இவ் அடியவரை எடுத்துரைக்க வைத்து , இதே போல் குருநாதர் கேட்டவை போல் உரைக்கச் சொன்னார்கள். அவ்வடியவரும் இதனை அவ்வாறே வழிமொழிந்தார்கள்) 

அடியவர் 7 :- நல்வாழ்க்கை எனக்கு கொடுங்க. 
அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 

அடியவர் 7 :- ஏற்றம் மிகு வாழ்க்கையைக் கொடுங்க. 
அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 

அடியவர் 7 :- என்னால் என் குடும்பமும் சுற்றமும் நன்றாக இருக்க வேண்டும்.
அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 

அடியவர் 7 :- என் தாய், தந்தை, சகோதரி (சகோதரன்) சந்தோஷமாக இருக்க வேண்டும். 
அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 

அடியவர் 7 :- (இனி) எனக்கு பிறவி வேண்டாம். பிறவி இருந்தால் நீங்க என் கூடவே இருக்க வேண்டும். 
அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 

அடியவர் 7 :- என் உடல், பொருள், மனசு எல்லாம் நல் செயல் ஆற்ற வேண்டும். 
அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 

அடியவர் 7 :- தான தர்மங்கள் செய்ய வழி விட்டு நில்லுங்கள். 
அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 

அடியவர் 7 :- ஒரு கனம் கூட கெட்டதை நினைக்கக்கூடாது. 
அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 

அடியவர் 7 :- இது என்றைக்குமே என் உடம்பில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். 
அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே)

( தனி நபர் வாக்குகள்) 

( நம் அன்பு குருநாதர், ஆலயங்களில் இறைவனிடத்தில் எப்படி வேண்ட வேண்டும் என்ற மகத்தான பாடம் எடுத்தார்கள்)

குருநாதர் :- (அம்மையே) மீண்டும் ஏதாவது சொல்.

அடியவர் 7 :- நான் Job கேட்டதற்கு எனக்கு இன்று ஒரு நல்ல கருத்து சொல்லியிருங்கீங்க. நான் இதைக் கட்டாயமாக follow பன்றேன். நீங்க என்னென்ன எல்லாம் நிறை குறை சொல்லியிருக்கின்றீர்களோ, அதை நான் தீர்க்கமாகக் கடைபிடிக்கின்றேன்.  எங்கேயாவது நான் தடுமாறும் இடத்தில் என்னை கை பிடித்து கூட்டிட்டு போங்க.

அடியவர் 6 :- (அப்படியே சொல்ல முயன்றார்)

குருநாதர் :- அம்மையே இது போலத்தான் இறைவனிடத்தில் நீ கேட்க வேண்டும்.

சுவடி ஓதும் மைந்தன் :- ( இது போலத்தான் ஆலயங்களில் இறைவனிடத்தில் வேண்ட வேண்டும் என்று மிக அருமையான விளக்கம் அளித்தார்கள் ) 

குருநாதர் :- ஆனாலும் அம்மையே இதுபோல் இவர்கள் கேட்கவில்லை இறைவனிடத்தில். ஏதோ செல்வது, ஏதோ வருவது. இறைவனும் அமைதியாகத்தான் இருக்கின்றான்.  

( தனி நபர் வாக்குகள் ) 

குருநாதர் :- அம்மையே ஒன்றைச் சொல்கின்றேன் அனைவருக்குமே. இறைவனிடத்தில் எதையுமே வேண்டத் தேவையில்லை. இறைவனுக்கு (அனைத்தும்) தெரியும். ஆனாலும் இப்படி நிச்சயம் மனதில் நினைத்தாலே மனதில் இன்னும் அறிவுகள் பெருகும் அம்மா. இன்னும் உயர்ந்து விடலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- (தனி வாக்கில் ஒரு கேள்வி அதற்குப் பதில் அளித்தார்கள்) இறைவனிடத்தில் எதையும் கேட்கக் கூடாது. இது நீங்க கேட்டதுக்கு பதில் வந்தது பார்த்தீர்களா? (இறைவன் முன்) அமைதியாக நிற்க வேண்டும். ஆனாலும் இப்படி நீங்க வேண்டும் போது அறிவு அது plus ஆகும். அப்படி plus point ஆக ஆகும் போது …

குருநாதர் :- அம்மையே சக்திகள் இருக்கும் அம்மா அங்கு (ஆலயத்தில்). இவ்சக்திகளைச் சிறிதளவே மனதில் உந்தனுக்கு (என்று)  நீ வேண்டாமல், அடுத்தவர்களுக்காக அதாவது நல்லதையே நினைக்கும்பொழுது சில நல்சக்திகள் நிச்சயம் அதாவது இவ்வாயில் வரும் சக்திகளையும் கூட கூட்டி , இன்னும் பெருக்கி , இன்னும் அதிக பலப்படுத்தி,  இன்னும் உயர் நிலை அடைவார்கள். ஆனாலும் இதைக்கூட இறைவன்தான் அனுமதிக்க வேண்டும்.

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் - ஆலயத்தில் மற்றவர்கள் நலனுக்காக வேண்டும் போது ஆலயத்தில் உள்ள நல்ல சக்திகள் நமது வாயில் புகும். அதனுடன் நீங்கள் ஏதாவது வேண்டினால் அந்த சுய வேண்டுதலுக்கு சக்திகள் பெருகும். ஆனால் இப்படிச் செயல்பட இறைவன் அனுமதிக்க வேண்டும். )

(இதுவரை யாரும் சொல்லாத ரகசியம் இந்த வாக்கு. குருநாதர் கருணைக்கடலின் திருவடிகள் போற்றி! போற்றி! போற்றி! ) 

குருநாதர் :- ( இப்போது மீண்டும் சில நல்ல கருத்துக்களை அங்கு அவ்இரு அடியவர்களையும் சொல்ல வைத்தார்கள்.) 

அடியவர் 7 :- பிறவாமை வேண்டும். 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- பிறவி உண்டு உண்டேல், உனை மறவாமை வேண்டும். 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- கனப்பொழுதும் உங்களையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்)


அடியவர் 7 :- நான் முன் ஜென்மக் கர்ம வினையால்,  இந்த மானிடப் பிறவி எடுத்துள்ளேன். 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- உங்கள் பாதத்தில் சரணாகதி அடையனும்னா, அந்த கர்மாவை கழிக்க நீங்க (என்) கூட இருக்க வேண்டும். 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- என்னுடைய உடல், என்னுடைய பொருள், என்னுடைய அங்கங்கள், என்னுடைய ஒவ்வொரு உயிர் அணுக்கள் எல்லாமே தர்ம செயலை நோக்கிப் போக வேண்டும்.  
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- தீய காரியங்களை எதையும் நான் செய்யக் கூடாது. 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- தான, தர்மத்தை நோக்கி என்னை ஓட வைத்துக் கொண்டே இருங்கள். 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- அற வழியில் இருப்பவர்களுடன் என்னைச் சேர்ந்து இருக்க வையுங்கள். 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- கணப்பொழுதும் என்னை விட்டு நீங்கி விடாதீர்கள். 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- என் குடும்பத்துடன் இருங்க. 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- எங்க வீட்டுக்குள்ளேயே இருங்கள். 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- குல தெய்வ ஆசியிலிருந்து எல்லா தெய்வத்தோட ஆசியும் வாங்கிக் கொடுங்கள். 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- எல்லா தெய்வ சக்தி கூடவும் எங்களை ஒன்றெனக் கலந்து இருக்க வையுங்கள். 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

அடியவர் 7 :- அகத்தீசா இதுதான் உங்களை மன்றாடி பாதத்தில் விழுந்து வணங்கிக் கேட்கின்றேன். 
அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 

குருநாதர் :- அம்மையே(அடியவர் 6 - உனக்கு)  இவ்வளவு செல்லிக் கொடுத்தாளே,  நீ அகத்தியனிடம் என்ன கேட்கின்றாய் என்று ( அடியவர் 7 - அவளிடம் கேட்டு எந்தனுக்கு) கூறு?

அடியவர் 6 :- ( அடியவர்#7 அவரை நோக்கி அகத்தீசப்பாவிடம் என்ன வேண்டும் உங்களுக்கு ) 

அடியவர் 7 :- ( அகத்தீசப்பா) நான் இன்று உங்களை தரிசிக்கிறது , மாபெரும் பாக்கியமாக நினைக்கின்றேன். நான் அவரிடம் (அடியவர் 6) என்ன சொல்லியிருக்கின்றேனோ அதையேதான் நினைக்கின்றேன். உங்களோட தரிசனம் எனக்கு (……….. ) . அப்போ அதைப் பொருட்படுத்தாதது என்னுடைய மிகப் பெரிய கர்ம வினை சுவாமி. அதற்கப்புறம் ( ……. ) மூலம் உங்கள் அருமை பெருமையெல்லாம் தெரிஞ்சு, இன்றைக்கு உங்க பின்னாடி வந்துக்கிட்டு இருக்கிறேன் சாமி. 

குருநாதர் :- அம்மையே ( அடியவர் 6 ) , கேட்டாயா ? இதனால்தான் அனுபவம் தேவை. இவ்அனுபவம் எப்படி வந்தது என்பவையெல்லாம் யான் ஆராய்ந்தேன். கத்தனும் கொடுத்துவிட்டான். அனுபவம் கொடுத்து விட்டால், அவள்தனே அனைத்தும் தெரிந்து கொண்டு , பின் சரியான பாதையில் சென்று , அனைத்தும் வெற்றி உண்டு. என்னையும் வந்தடைவாள். லோபாமுத்திரையோடு யானும் காட்சியளிப்பேன். இவ்வாறு பக்குவங்கள் பெற்றிருந்தால் மட்டுமே, நிச்சயம். அவ்வாறு பக்குவங்கள் பெற்றிருக்கவில்லை என்றால் நிச்சயம்
ஏதோ ஒரு ரூபத்தில் துன்பத்தைக் கொடுத்து யானே பக்குவப் படுத்தி பின் நல்முறையாகவே. 

அதனால்தான் சொல்கின்றேன் நிச்சயம் யான் கூட உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்????? 

இறைவன் கூட உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்????  

நிச்சயம் செய்யப் போவதில்லை என்றெல்லாம்!!!!. 

இதனால் புண்ணியப் பாதையிலே நன்றாகச் சென்று, அதாவது எவ்வாறு என்பதைக் கூட பின் தெரியாவிடினும் யான் சொல்லிக்கொடுத்து குழந்தைபோல் இவ்வாறு செய் என்றெல்லாம். அவ்புண்ணியப் பாதைக்கு உங்களை அழைத்துச் சென்றுவிட்டால், அவ்புண்ணியமே உங்களைப் பாதுகாக்கும். இதை பலமுறை எடுத்துரைத்து விட்டேன். 






குருநாதர் :- அப்பனே இறைவன் அனைத்தும் கொடுத்திருக்கின்றான். அதை சரி முறையாக மனிதன் உபயோகிக்கத் தெரியாமல் , அப்பனே செய்து கொண்டிருக்கின்றான். அவ்வளவுதான். அப்பனே அதை யார் ஒருவன் சரியான வழியில் பின்பற்றுகின்றானோ , அப்பனே அனைத்தும் தெரிந்துவிடும் அப்பனே. அப்பனே பின்பற்றவில்லை என்றால் அப்பனே, அடிபட்டு மீண்டும் இறைவனிடத்தில் வருகின்றான். ஆனால் சிறிது தாமதமாகத்தான் கிடைக்கும் அனைத்தும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா?

அடியவர்கள் :- புரியுதுங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( புண்ணியப் பாதையில் சென்றால், உங்கள் புண்ணியமே உங்களை உயர்த்தி வைக்கும்.)

குருநாதர் :- அப்பனே பின் உயர்த்தி வைக்கும் அப்பா. பாவம் இதுபோல்தான் அப்பனே, அப்படியே கீழே தள்ளுமப்பா. அவ்வளவுதான். ஆனால் இங்கு பாவத்தைப் பற்றி யான் உரைக்கவில்லை. 

அப்பனே ஒருவன் ஒருவனிடத்தில் கூட அப்பனே புண்ணிய அணு ஒன்று இருக்கின்றது அப்பா. அதை யாரும் உபயோகிக்கவில்லை. அதை உபயோகித்தாலே போதுமானதப்பா. அது செயல்பட ஆரம்பிக்கும் என்பேன் அப்பனே. அதை செயல்படுத்திவிட்டால் அப்பனே, நிச்சயம் புண்ணியக் கணக்கு தொடங்கிவிடும் என்பேன் அப்பனே. ஆனால் மனிதன் எதை செயல்படுத்துகின்றான் என்றால் பாவ அணுவை செயல்படுத்துகின்றான் இக்கலியுகத்தில். 

அடியவர் :- நல்ல அணு இருக்கு இல்லைங்களா, அதை activate பன்னனும். அதை activate பன்னத்தெரியாமல்தான் இவங்க இரண்டுபேரும் …

குருநாதர் :- அப்பனே இப்பொழுது சொன்னாயே, அப்பனே நல்ல அணு என்று, அது செயல்படத் துவங்கிவிட்டால் கஷ்டங்கள் முதலில் தோன்றுமப்பா. 

அடியவர் :- இப்போ அது தெரியாமல்தான் இவங்க இரண்டு பேரும் பினாத்திகிட்டு இருக்குறாங்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கங்கள் ) 

குருநாதர் :- அப்பனே அதேபோல்தான் அப்பனே, பாவ அணுவும் கூட செயல் பட்டுவிட்டால் முதலில் சந்தோசம் அடைவார்கள். இப்பொழுது சொல் அப்பனே. சந்தோசம்
 வேண்டுமா? துன்பம் வேண்டுமா? நீயே. 

சுவடி ஓதும் மைந்தன் :- (சிரிப்புடன்) ஐயா இப்ப சொல்லுங்க ஐயா. உங்கள் கணக்கில் எடுத்து வந்துவிட்டார். 

அடியவர் :- ( சிரித்துக் கொண்டே) துன்பத்தில்தான் இருக்கேங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அது செயல்பட ஆரம்பிச்சிருச்சு ஐயா. இப்ப நீங்க சொல்லுப்பா என்று கேட்கின்றார். 

அடியவர் :- என் பிள்ளைக்கு , activate பன்ன (இதை செயல்படுத்த) என்ன வழி? 

குருநாதர் :- அதனால்தான் அப்பனே இத்தனை வாக்குகள் சொல்லிக்கொண்டிருக்கின்றேன் அப்பனே.

அடியவர் 5 :- இந்த வயதில் maturity அவங்களுக்கு வந்திடுது. இதை எப்படி அவங்க எடுத்துக்குவாங்க? 

குருநாதர் :- அப்பனே ஏன் இவ்வாறு அவள்தன் எவ்வாறு இவ்வாறு கூறுகின்றாள் என்று அவள்தனுடம் கேள். சொல்வாள் அப்பனே. யான் பார்த்துவிட்டேன் அவளை சிறு வயதிலிருந்தே. 

அடியவர் 7 :- ( தனது வாழ்க்கையை அங்கு எடுத்துரைத்தார். பல கஷ்டங்கள், மிகவும் சோகமான உயிரிழப்பு, வேதனைகள், அவமானங்கள், அடுக்கடுக்காக சோதனைக்கு மேல் இல்லற வாழ்வில் சோதனைகள், அடிகள் என் கேட்பவர்களை நிலை குலையச் செய்யும் தனது துயரமான கண்ணீர் வாழ்வை எடுத்துரைத்தார்கள். இப்படிப்பட்ட கடும் சூழ்நிலையிலும் அனுதினமும் தர்மம் செய்வதை விடவில்லை இவ்வடியவர். அடியவர்கள் புரிதலுக்காக இங்கு இவ் வாக்கை உலகறிய வெளியிடுகின்றோம்.) 


என்னுடைய திருமண வாழ்க்கைக்கு முன் ரொம்ப ரொம்பவே சௌபாக்கியமாக இருந்தேன். கல்யாணத்திற்குப் பிறகு பணமிழந்து , நகையிழந்து , எங்க அப்பாவை இழந்து , எங்க அண்ணனோட திருமண வாழ்க்கையை இழந்து ( வாழ்வின் வலி தாங்காமல் அழுதே விட்டார் ) என் ஒரு கல்யாணத்தினால் எல்லாமே இழந்தேன். சொந்த பந்தம் சுற்றார் எல்லாமே என்னை தூற்றினார்கள். என் குழந்தை அப்பா இல்லாமல் 5 வருடம் வாழ்ந்தது. ஒவ்வொருதடவையும் நான் அப்பாவைக் கூப்பிட்டு வந்தேன். நான் எந்த இடத்திலும் தப்பான முடிவு எடுக்கவில்லை. எங்க அப்பா, எனக்குச் சொல்லிக் கொடுத்ததை மெனக்கெட்டு பக்குவம். இறைவன் உன்னை வந்து கஷ்டப்படுத்தவில்லை. உன்னை வந்து நல்வழிப்படுத்துவதற்காக (இவ்வளவு கஷ்டங்களை) உனக்கு கொடுக்கின்றார். உன் கர்மா குறையுது என்று வைத்துக்கொள். எனக்கு அதனாலதான் கஷ்டம் வர வர என்னை இறைவன் சுத்தப்படுத்துகின்றார் என்று நான் நம்புகின்றேன்.  இப்ப நான் பக்குவமாக இருக்கக் காரணம், அவங்க சொன்ன மாதிரி கொஞ்சம் நஞ்சம் இல்ல. நிறைய பட்டுவிட்டேன். என் அப்பாவை இழந்தேன். என் அண்ணனோட திருமண வாழ்க்கையை நான் இழந்தேன். ( அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை இவ்தங்கை அவர் அண்ணன் இல்லத்திலிருந்ததால்) அந்த கர்மாவுக்கு நான் தான் காரணம் என்று நினைச்சு, நினைச்சு நான் ஒவ்வொருத்தருக்காகப் புண்ணியம் பன்னனும் என்று நினைச்சு,  தான தர்மத்தை செஞ்சு , கையில காசு இல்லைன்னாலும் நான் பிச்சை எடுத்தாவது நான் தான தர்மம் செஞ்சுகிட்டு இருக்கேன். இத்தனைக்கும் காரணம், எனக்கு கல்யாணத்துக்கு முன் இதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. நான் நிறைந அடி வாங்கினேன். கொஞ்ச நஞ்சம் அடி இல்ல. தூங்காமல் உட்கார்ந்திருக்கேன். இத்தனை தாண்டி வந்ததனால்தான் (ஞான வார்த்தைகள் ) இத்தனை சொல்ல முடியுது. 

குருநாதர் :- அப்பனே அனைத்தும் உங்களுக்குக் கொடுத்தால் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே இவ்வாறு துன்பத்தில் மிதந்தால்தான் அப்பனே, உண்மை நிலை தெரிந்து கொள்வார்கள் அப்பனே. யான் அருகிலேயே இருப்பேன் அப்பனே. அதனால்தான் சொல்லிவிட்டேன். இவள் அருகிலேயே இருக்கின்றேன் என்று. 

(நம் கருணைக்கடல் நடத்திய அற்புதம் - இப்படி கஷ்டத்தில் மிதந்த இந்த அடியவரின் துணைவர், மாமியார், நாத்தனார் என்று அனைவரின் இதயங்களை நம் குருநாதர் கனிய வைத்து, இவ்வடியவர் வாழ்வை மிக அழகாகத் தூக்கி நிறுத்திக் கனியவைத்து,  இனிமையாக்கி விட்டார்கள். ) 

அடியவர் 7:- என்னுடைய கர்மா ஜாஸ்திங்க. இவ்வளவு கஷ்டப்பட்டு இங்க வந்திருக்கின்றேன். என் மூலம் அவங்களுக்கு இன்று செய்தி கூற வைத்துள்ளார் அகத்தியர். உங்க பிள்ளைகள் அந்த அளவு கஷ்டப்பட மாட்டாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ ஏன் அகத்தியர் இவங்களை கஷ்டம் வராமல் காப்பாற்றவில்லை? சொல்லுங்க ஐயா? 

அடியவர் 4 :- சந்தேகம்ங்க ( ஏன் இந்த கஷ்டம் என்று )

அடியவர் 7 :- அது நான் செஞ்சது ( முன் ஜென்ம கர்மா). இன்றைக்கு வந்திருக்கு. நான் தான் கொடுக்கனும். அதுக்கு தெய்வத்தைக் குறை சொல்லித் தப்பு இல்லை. நான் இன்னுக்கு அதெல்லாம்  (எனது கர்மாக்களை) clear செய்துவிட்டேன் என்று நம்புகின்றேன். என்னை அவர் காப்பாற்றவில்லை என்று நினைக்கவில்லை. எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்திருக்கின்றார் என்று நான் சந்தோசப்படுகின்றேன். (முன் ஜென்ம பாவ கர்மா முழுவதையும்) ஒட்டுக்க இறக்கியிருந்தால் என்னால தாங்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகக் குடுத்து பக்குவப் படுத்தி இருக்கின்றார். 

குருநாதர் :- அம்மையே கவலையில்லை. யானே இருக்கின்றேன் நல்விதமாக. வழியும் ஆனாலும் இவ்வளவு நாட்கள் எதை என்றும் புரியாமல்  கூட , ஆனாலும் அம்மையே இது கடை பிறப்பு. இதனால்தான் ஒன்றாகச் சேர்ந்து விட்டது. எவ்பரிகாரமும் போதவில்லை இதற்கு.

இன்னும் இதை அனுபவிக்கவில்லை என்றால் அடுத்த பிறப்பு, அடுத்த பிறப்பு என்று சென்றிட்டு எதை என்றும் அறிய அறிய.  அதனால்தான் எனை நம்பியவர்களை முதலில் சமநிலைப்படுத்திவிடுவேன். 

ஞானியவன் எப்படி ஆகின்றான் என்று கூறு?

அடியவர் 4 :- சிரமம் பட்டுதான் வரவேண்டும்.  ஆனால் அந்த அனுபவத்துக்கு வரனும்ல? 

குருநாதர் :- (ஒரு அடியவருக்கு உரைத்த மகத்தான தனி வாக்குகள். அதில் புண்ணியங்களே அவரை இயக்க உள்ளது என்ற சித்த ரகசியங்களை விளக்கமாக எடுத்துரைத்தார்கள். அதன் பின் )

அப்பனே இங்கு இறைவன் எங்கு இருக்கின்றான்?

அடியவர் 4 :- (அப்படிச் செய்ததே) இறைவன்தான் activate செய்திருக்கின்றார். 

குருநாதர் :- அப்பனே பாவ, புண்ணியங்களப்பா.   யான் சொல்வேன். (…………..)  

அப்பொழுது பாவம் செயல் பட்டுக்கொண்டிருக்கும் பொழுது இறைவன் அதாவது என்ன பரிகாரங்கள் செய்தாலும் அப்பனே செயல்படுமா என்ன? 

அப்பனே பாவம் என்பது இப்பொழுது வெயில் அங்கு போய் உட்கார் பார்ப்போம். 

அடியவர் 4 :-  அதை அனுபவத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

குருநாதர் :-  அப்பனே அப்படித்தான் அவன் பாவத்தில் மிதந்திருக்கின்றானப்பா. ஆனாலும் யான் அமைதியாக இருந்தேன் அப்பனே. அப்பனே முன் ஜன்மத்திலிருந்தே அதாவது பிறவியில் பிறவியிலிருந்தே அவன் என் பக்தன்தானப்பா. அதனால்தான் அப்பனே ………….. 

குருநாதர் :- ( ஒரு அடியவருக்கு மாபெரும் சித்த ரகசியங்களை எடுத்து உரைத்தார்கள். ) 

அப்பனே வாகனத்தை ஓட்டு. அப்பனே அவனை யான் கேட்கவில்லை. 

அடியவர் 4 :- ( நான் வெளிப்படையாக என்ன வேண்டும் எனக்கு என்று கேட்டுவிட்டேன். ஆனால்) அவர் மனதில் பிரார்த்தனை செய்திருப்பார். வெளியில் சொன்னால்தானே தெரியும். இல்லையென்றால் அவர் மனதில் உள்ளதை  நீங்கதான் புரிந்து கொள்ள முடியும். 

குருநாதர் :- அப்பனே அவன் பாடும் பாடு எந்தனுக்கு மட்டுமே புரியும் அப்பா. உந்தனுக்கு கூட புரியாதப்பா. அப்பனே உன்னைவிட பலமடங்கு ( அவன் தன் குழந்தைகளைப் பற்றி யோசிக்கின்றான்). 

அடியவர் 4 :- அது நியாயமானது தானே ஐயா. 

குருநாதர் வாக்கை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- உங்களுக்கு தேவை நடக்கவில்லை என்ற குறையை  , நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஆனால் அவர் உங்களைவிட அதிக பாசம் ( தன் குழந்தைகள் மேல் ) வைத்திருக்கின்றார். ஆனால் வெளியே சொல்ல முடியாத ஒரு கடுமையான மனநிலையில் இருக்கின்றார். அப்படி இருந்தும் (அகத்தியன்) என்னிடத்தில் கேட்கவில்லை என்று சொல்கின்றார் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- சரியாக சொன்னீர்கள். இப்ப சொல்லுங்க ஐயா? ஏன் நீங்கள் கேட்டீர்கள்? 

அடியவர் 4 :- ஐயா ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு நடைமுறை இருக்கும். நம்ம பழக்க வழக்கம்…

குருநாதர் :- அப்பனே அதேபோல்தான் அப்பனே. ஒரே மாதிரியாகத்தான் சாதம் இடுகின்றார்கள் இப்பொழுது. 

அடியவர் 4 :- அது நம் கண்முன் தெரிவதுதானே. தினமும் செய்வதுதானே. 

குருநாதர் :- அப்பனே இதே போலத்தான் அப்பனே. தினசரி பாவம் , புண்ணியம் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன். 

அடியவர் 4 :- சரிங்க.

குருநாதர் :- அப்பனே நீ கேட்டுவிட்டாய். அவந்தன் ஏன் கேட்கவில்லை கூறு?

(இப்போது அந்த அடியவர் தன் மனநிலையை எடுத்துரைக்க ஆரம்பித்தார்கள்) 

அடியவர் 5 :- என்னால் ஒன்றும் இல்லை. என்னால் ஒன்றும் செய்ய இயலாது. 

குருநாதர் :- அப்பனே (அடியவர்# 4) புரிகின்றதா? 

சுவடி ஓதும் மைந்தன் :- நம்மால் ஒன்றும் செய்ய இயலாது ஐயா. ஆனாலும் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

குருநாதர் :- அப்பனே ஆனாலும் அவன் கடமையைச் செய்கின்றான். ஆனால் (அவனால்) முடியவில்லையே. அப்பனே இன்னும் வளர்ந்தால் பிள்ளைகள் என்ன ஆகும் என்றெல்லாம் யோசிக்கின்றான் அவன். 

அடியவர் 4 :- ஆமாங்க ஐயா. நாள் மட மடன்னு போய்விடும். அந்த யோசனை இருந்தால்தான் அந்த இடத்துக்குப் போக முடியும். 

குருநாதர் :- அப்பனே இதுதான் அப்பனே? ஏன் யோசனை செய்கின்றான்? கூறு. 

அடியவர் 4 :- அந்த காலத்துக்கு அது வேண்டும்.

குருநாதர் :- அப்பனே இங்கு இதை (காலத்தைப் பற்றி) கேட்க வில்லை யான். 

சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் ஐயா? 

அடியவர் 4 :- ( அமைதி )

அடியவர் 5 :- அந்த வாகனத்தை ஒட்டுவதுதான் நம்ம வேலை. அது எங்க போகனும்? யார் எப்போ ஏறனும்? அதை அவங்க பாத்துக்குவாங்க. அந்த வாகனத்தை ஓட்டுவது மட்டும்தான் என் வேலை. அந்த வாகனத்துக்கு சொந்தக்காரன் நான் இல்லை. வாகனத்தில் உட்கார்ந்து இருக்கின்றவர்களுக்கு நான் ஒரு இடத்திற்கு ஓட்டிக்கொண்டு போக வேண்டும். அவ்வளவுதான். அனைத்தும் அகஸ்தியப் பெருமான் (பார்த்துக்கொள்வார்) 

குருநாதர் :- அப்பனே ஆன்மா வேறு வேறு அப்பா. இதனால் அவ் ஆன்மா என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றது என்பதை எல்லாம், அப்பனே அதை பயன்படுத்தி , (வாகன) உடம்பைப் பெற்று அப்பனே தீர்த்துக்கொள்ளும் அப்பா. 

அவ்வளவுதான். சொந்த பந்தங்கள் யார் என்று சொல்? 

அடியவர் 4 :- சொந்த பந்தம் ஒன்னும் இல்லைங்க. 

குருநாதர் :- அப்பனே அனைவருமே சொந்தம் அப்பனே. இதனால்தான் தான் பாசம் அதை யாங்கள் எதிர்கின்றோம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )

அடியவர் :- புரியுது ஐயா. நம்ம சோசனை செய்யனும். செய்ய வேண்டியதைச் செய்யனும். 

குருநாதர் :- அப்பனே ஆனால் அவ்ஆன்மா என்ன செய்தது என்று உந்தனுக்குத் தெரியுமா அப்பா? 

அடியவர் 4 :- தெரியாதுங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- தெரியாது. இதில்தான் பிரச்சினையே. 

குருநாதர் :- அப்பனே அதனால்தான் அவன் சொன்னானே, அதோடு விட்டு விடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அவர் சொன்னார் பாருங்க.  வாகனத்தை ஓட்டுவது நம்ம கடமை. உங்க பிள்ளைகளுக்கு இது போல் செய்யனும் என்று செல்லனும். வாகனத்தை ஒட்ட என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். பிரேக் பிடிக்க வேண்டிய இடத்தில் பிரேக் பிடிக்கனும். (வேகமூட்டும் கருவி) Accelerator என்றால் அதை இயக்க வேண்டும். Stearing பிடிக்க வேண்டும். ஓட்டும் போது Left , right பார்கனும். அதனால நீங்க நல்ல செய்திகளை அந்த ஆன்மாவுக்கு சொல்ல வேண்டும். ஐயா (குருநாதர்) அருமையாக explain செய்து உள்ளார். ஐயா புரியுதுங்களா? Superஆக வேற level எடுத்து வந்து விட்டார் அகத்தியர். இது மாதிரி சொல்லிக்கொடுக்கனும். 

குருநாதர் :- அப்பனே இப்படிச் சொல்லிக் கொடுத்தும், பின் வாகனத்தை இயக்கத் தெரியாததால் அப்பனே என்ன ஆகும்?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அந்த ஆன்மாவுக்கு (இந்த உடம்பு என்ற வாழ்க்கை) வாகனத்தை இயக்கச் சொல்லிக் கொடுத்து விடுகின்றோம். ஐயா புரியுதுங்களா? அப்படி சொல்லிக் கொடுத்தும், வாகனத்தைச் சரியாக இயக்கவில்லை என்றால் என்ன ஆகும்? என்று கேட்கின்றார்.

அடியவர் 4 :- இது அவங்க புரிஞ்சிக்கனும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ போய் சேர்ந்துவிடும். 

அடியவர் 4 :- (நாம் எடுத்துச் சொல்லி) அவங்க நடைமுறைப் படுத்தாத போது என்ன செய்வது? 

குருநாதர் :- அப்பனே இதைச் சொல்லிவிட்டேன் அப்பனே. மீண்டும் சரி செய்து, அப்பனே நொறுக்கி,  அப்பனே தூள் தூள் தூளாகி மீண்டும் (இறைவனிடம்) வந்துவிடும் என்பேன் வண்டி. 

அப்பனே உன்னையும் இவ்வாறு இயக்க வைத்து அப்பனே நீயும் எதை என்று அறிய அறிய.

சுவடி ஓதும் மைந்தன் :- உங்களை இவ்வாறு பேச இயக்கி வைத்தது கேள்வி கேட்க வைத்ததே நான்தான்  என்று அகத்தியர் சொல்கின்றார் ஐயா. 

அடியவர் :- நன்றாகச் சொல்லிக்கொடுத்தும் இடிக்கின்றது என்றால் என்ன அர்த்தம்?

குருநாதர் :-  ஒழுங்காகக்  கற்றுக்கொடுக்கவில்லை என்று அர்த்தம்.

அடியவர் :- அதை கவனக்குறைவு என்று எடுத்துக்கொள்வதா? 

குருநாதர் :- அப்பனே மனிதன் மதுவும் அருந்துகின்றான். ஆனாலும் அவ்மதுவிலே எழுதுகின்றார்கள் மனிதர்கள்.  அதைக் கடைப் பிடிக்கின்றார்களா என்ன? 

அடியவர்கள் :- மது வீட்டுக்கு கேடு.

குருநாதர் :- அப்பனே யாங்கள் சொல்லியும் நடந்து கொள்ளவில்லை என்றால் அப்பனே, மீண்டும் கல்லீரல் இன்னும் எதை எதையோ இழந்து மீண்டும் கடைசியில் எங்களிடத்திலேயே வருகின்றான் அப்பனே.

அடியவர் :- குழந்தைகளுக்கு (வாகனத்தை ஓட்டுவது எப்படி என்று activate) ஆக்டிவேட் செய்து ஆசி வழங்கி ஆக்டிவேட் செய்தால் நன்றாக இருக்கும். 

குருநாதர் :- அப்பனே ஆசிகள் பல கோடியப்பா. ஆனாலும் உபயோகிப்பதும் , உபயோகம் இல்லாததும் அவர்களிடத்திலே. 

அப்பனே உன் பக்கத்தில் உள்ளவன் சரியாக உபயோகப்படுத்தி விட்டான் அப்பனே. 

அடியவர் 4 :- நான் கேட்பது என்னவென்றால் அந்த மாதிரி மன நிலையில் இருக்கின்றார்கள். அப்படி மன நிலைக்குப் போகாமல் இருக்க (அகத்தியர்) அப்பாவுடைய அருள் ஆசியைக் கேட்கின்றேன். அதை பிரார்த்தனையாக கேட்கின்றேன். 

குருநாதர் :- அப்பனே இவ்வளவு நேரம் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களுக்கு அருமையாகச் சொல்கின்றார் அகத்தியர். இது மாதிரி (live) லைவில் எப்படி எல்லாம் சூப்பராக சொல்கின்றார் பாருங்கள்.

குருநாதர் :- அப்பனே அறிவிருந்தும் அறிவில்லையே அப்பனே. 

அப்பனே அறிவில்லாமலும் அறிவிருந்தும். இதற்கு பதில் கூறும்?

சுவடி ஓதும் மைந்தன்:- இதற்கு யாராவது பதில் கூறுங்கள். 

அடியவர் 7:- அறிவு இருக்கு. ஆனால் அறிவில்லாமல் இருக்கின்றதற்கு காரணம் மாயையில் சிக்குவது. 

அடியவர் :- புண்ணியம் இல்லாமல் இருப்பது. 

சுவடி ஓதும் மைந்தன் :- (சுவடியை வாசித்து ..எதை என்று..) இது பதில் இல்லை. 

அடியவர் 5:- இறைவன் படைப்பில் மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எதுவுமே , அறிவு இல்லை என்று மனிதன் சொல்லலாம். ஆனால் அது எதுவுமே அதன் பாதையிலிருந்து மாறுவதே கிடையாது. 

குருநாதர் :- ஆனால் இதில்தான் பாவம் சேருகின்றது. புரிந்து கொண்டீர்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :- (மனிதன்) தன் பாதையிலிருந்து மாறிவிட்டால்தான் பாவம் சேர்கின்றது.

குருநாதர் :- அப்பனே குரங்கு புத்தியைப் பார். ஆனால் குரங்கு என்று சொல்லக்கூடாது. அனுமான் என்றே சொல்ல வேண்டும். காகத்தின் அப்பனே காகம் என்று சொல்லக்கூடாது. புசண்டனே என்றே சொல்ல வேண்டும். அதன் வேலையைக் கூட சரியாக செய்கின்றது என்பேன் அப்பனே. ஆனால் மனிதன் செய்யவில்லையே! 

குருநாதர: அப்பனே குரங்கு புத்தியைப் பார். ஆனால் குரங்கு என்று சொல்லக்கூடாது. அனுமான் என்றே சொல்ல வேண்டும். காகத்தின் அப்பனே காகம் என்று சொல்லக்கூடாது. புசண்டனே என்றே சொல்ல வேண்டும். அதன் வேலையைக் கூட சரியாகச் செய்கின்றது என்பேன் அப்பனே. ஆனால் மனிதன் செய்யவில்லையே!

அப்பனே அதற்கு யார் சொல்லிக் கொடுத்தது அப்பனே. அதற்கு எங்கப்பா (அறிவு உள்ளது)? 

ஆனாலும் அப்பனே மனிதனுக்கு யான் நன்றாகவே எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் யானும் சித்தர்களும் கூட.  ஆனாலும் அதைக் கூட கேட்காததால் அப்பனே, யான் என்ன செய்ய வேண்டும்? தண்டனைதான் கொடுக்க வேண்டும். இதனால்தான் சொன்னேன் அப்பனே. அறிவில்லாமலும் அறிவிருந்தும். புரிகின்றதா? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். வாயில்லா ஜீவராசிகளுக்கு சித்தனை அறிவு இல்லை. ஆனால் அறிவோடு நடந்து கொள்ளும்.  எப்போதும் அறிவுள்ளவை போல் இறை வழியில் நடந்து கொண்டுள்ளது. இதனையே குருநாதர் அறிவில்லாமலும் அறிவிருந்தும் எது என்ற கேள்வியைக் கேட்டார்கள் முன்பு)

குருநாதர் :- அனைவருக்கும் புரிந்தது போல் யான் சொன்னேன் அப்பனே. புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- ( அருமையாக சில தகவல்களை இங்கு உரைத்தார்கள். திருடர்களுக்கு, உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களுக்கு - அன்பு தந்தை அகத்திய மாமுனிவர் ஏன் வாக்குகள் உரைப்பதில்லை என்று பல உதாரணங்களுடன் அங்கிருந்த அடியவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.) 

குருநாதர் :- அப்பனே அதாவது மது மயக்கத்தில் விழுந்தவனைக்கூட திருத்திவிடலாம். அதுவும் ஒரு போதை.  அப்பனே காதலும் ஒரு போதை. ஆனால் காதல் போதையில் விழுந்தவனைத் திருத்தவும் முடியாதப்பா. 

அப்பனே இதற்கு என்ன பதில் கூறவும்?
(நம் கருணைக்கடல் அங்குள்ள ஒரு அடியவரை மிகக் குறிப்பாக அழைத்தார்கள். )

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களைத்தான் வாங்க ஐயா.

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- உள்ளதை உள்ளபடி சொல்லட்டுமா ஐயா?

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லுங்க ஐயா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-  என் மனதில் ஒரு வேண்டுதல் வைத்தேன். அதற்கான பதிலை ஐயன் கூறிவிட்டார். 

குருநாதர் :- அப்பனே, கூறும் அனைவருக்கும். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- இன்றைய காலத்தில் பெண் குழந்தைகள் , காதல் என்ற விசயத்தில் ஈசியாக விழுந்து விடுகின்றார்கள். அந்த பசங்க செய்யும் சின்ன சின்ன மோஜிக் பார்த்து விழுந்து விடுகின்றார்கள். அந்த போதையிலிருந்து அவங்களை நீங்க காப்பாற்றனும் என்று என் மனதில் வேண்டுதல் வைத்தால். ஏனென்றால் போனமாதம் ஐயன்தான் ஒரு குழந்தையை மீட்டுக் கொடுத்தார். ஒரு __ சமூகத்தில் சிக்க இருந்த ஒரு பெண் குழந்தையை கடைசி நிமிடத்தில் மீட்டுக் கொடுத்தார். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் சொல்லித் தந்தால் கேட்க மாட்டார்கள் என்பேன் அப்பனே. அடியோடு கொடுத்தால்தான் திருத்துவார்கள் சொல்லிவிட்டேன். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- ஐயன் திருவடியை நான் தொந்தரவு செய்கின்றேன் என்று நினைக்க வேண்டாம். நான் கேட்பது. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் எனை நம்பியவர்களை யான் காப்பாற்றிக் கொண்டே இருக்கின்றேன். எனை நம்பாதவர்களையும் கூட காப்பாற்றிக்கொண்டே இருக்கின்றேன். 

அப்பனே இங்கு பாவம் யாரால் ஏற்படுகின்றது கூறு? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- மனிதன்தான். 

குருநாதர் :- அப்பனே ஊது. அதாவது காற்றை அப்பனே பெருகி. ஆனாலும் அப்பனே பெருகிவிட்டால் உடைந்துவிடும் அப்பனே. ஆனாலும் உடைந்து விடாது மனிதனின் உடம்பு. கஷ்டங்களுக்குப் போய்விடும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா பலூன் குறித்து சொல்கின்றார் இங்கு. 

குருநாதர் :- அப்பனே இங்கு சிறந்தது,  மிக உயர்ந்தது அப்பனே காதல் போதையே. 

அப்பனே இதில் விழுந்தவன் அப்பனே எழுந்திருக்க முடியாதப்பா. அப்பனே எழுந்திருக்கக் கூடியவனே நீ கூறு?

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- இல்லைங்க. எனக்குத் தெரிஞ்சு, அதில் போய் முட்டி, அவஸ்தைப்பட்டு , குடும்பம் சிதைஞ்சு வந்தவங்களைத்தான் நான் பார்த்திருக்கின்றேன். நான் பார்த்த வரைக்கும் அந்த மாதிரி (காதலிலிருந்து வெளியே வந்தவங்க) யாரும் இல்லை. 

குருநாதர் :- இதனால்தான் அப்பனே, யாங்கள் நல்லதை செய்யக் காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே. ஆனால் யாருமே வருவதில்லை அப்பனே. அப்பொழுது என்ன செய்ய வேண்டும்? அடித்துத் துவைத்துத்தான் இடவேண்டும். சொல்லிவிட்டேன். 

இதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. தவறு செய்தால் என்னிடமே தண்டனை உண்டு. அப்பனே அறிந்தும் ஏற்கனவே பாவக் கணக்கு முதுகிலே. அப்பனே அனைவருக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே என்ன தேவை என்று. இதிலே உள்ளது. 

சுவடி ஓதும் மைந்தன் :- வாக்கு உங்க யாருக்குமே தேவை இல்லை என்று சொல்கின்றார் அகத்தியர். (சத்சங்க வாக்கு) இதிலே உள்ளது என்று சொல்கின்றார். எல்லோருக்கும் ஆசி கொடுத்துவிட்டார் ஐயா. 

குருநாதர் :- அப்பனே எதற்காக (இங்கு) வந்தேன்? என் வேலையை முடித்துக்கொண்டேன். அப்பனே அறிந்து கொள்வாய் நீ. 

அப்பனே புரியாமலும் அப்பனே புரிந்தும்.  புரிந்தும் புரியாமலும். அப்பனே ஆனாலும் அப்பனே அவரவர் விருப்பப்படிதான் யான் செய்வேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்க யார் யாருக்கு என்னென்ன விருப்பமோ அதைத்தான் செய்வேன் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- நிச்சயம் அறிந்தும் உண்மைதனைக்கூட அதில் கெடுதல் இருந்தால் நிச்சயம் யானே தடுத்து நிறுத்துவேன். 

அப்பனே இன்னும் கேள்விகள் உண்டா?

அடியவர்கள் :- (அமைதி) 

;ஒரு அடியவர் கேட்கத் தயார் ஆன பொழுது) 

குருநாதர் :- அப்பனே எதையும் கேட்டுவிடாதே அப்பனே. வாழ்க்கையே இல்லையப்பா.  வாழ்க்கை யான் கொடுத்துக் கொண்டே வருகின்றேன். 
(தனி வாக்குகள்) 
அப்பனே யான் இருப்பேன் அப்பனே கடைநாள் வரையிலும் துணை. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- (அன்னதானம் எங்கு கொடுப்பது என்ற ஒரு பொது கேள்வி) 

குருநாதர் :- அப்பனே இல்லாத இடத்தில் கொடு. 

அடியவர் :- மழை இல்லாமல் நிறைய உயிரினங்கள் இப்போ சிரமப்படுது…

குருநாதர் :- அம்மையே இப்பொழுது கூறினான். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். ஏமாற்றுகின்றார்கள் என்று. ஆனால் இவையெல்லாம் பின் செய்யவில்லை என்றால் மனிதன் இன்னும் ஏமாற்றுவான். இவை வேண்டுமா என்ன? 

குருநாதர் :- நிச்சயம் அம்மையே வாய்ப்பு வந்து கொண்டே இருக்கும். அம்மையே அனைத்தும் மனிதனிடத்திலே. மனிதன் மாறினால் இறைவனும் மாறுவான். 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் அப்பனே தந்து விட்டேன் அப்பனே. அவரவர் குறை என்னவென்று  யான் ஆராய்ந்துவிட்டேன் அப்பனே. மாற்றமடையச் செய்கின்றேன் அப்பனே. 

அப்பனே வந்துவிட்டேன் தெளிவு பெறு அப்பனே. அப்பனே நல் முறைகளாக ஆசிகள் உண்டு. அப்பனே இப்பொழுது புரிகின்றதா அப்பனே? யான் உந்தனுக்கு என்ன செய்ய வேண்டும்? அப்பனே புண்ணியப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டால், பின் அவ்புண்ணியமே உன்னைப் பாதுகாக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியப்பாதையை மீறிச்சென்றால்தான் கஷ்டங்கள். 

குருநாதர் :- பின்பு அவ்பரிகாரம் அகத்தியன் சொன்னான் என்றால் எவை என்று அறிய அறிய செய்யும் வினை செய்வினையாக. துரோகம் என்றால் மற்றவன் அதை எவை என்று அறிய அறிய நீ செய்யும் துரோகத்திற்கு மற்றவன் செய்வினையாக ஏவுகின்றான். 

ஆனாலும் நல்லோர்களைச் சீண்டினால் யான் விடமாட்டேன். அனைத்தும் எம்மிடத்திலே. உலகம் எம்மிடத்திலே. 

அடியவர் 5 :- ஐயா ஒரு கேள்வி. அனைத்து குடும்பத்திலும் மன நிறைவும் நிம்மதியும் வேண்டும். 

குருநாதர் :- அப்பனே அது கிடைக்காதப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அடுத்த கேள்வி. இப்படிச்
 சொல்லிவிட்டார். அது தொடர்பாக கேளுங்கள். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- நிம்மதி எல்லா குடும்பத்திலும், எல்லோரும் நிம்மதியாக இருக்க என்ன செய்யனும்? 

குருநாதர் :- அப்பனே அனைவரும் நிம்மதியாக இருந்தால் அப்பனே இறைவன் காணாமல் போய்விடுவான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இன்னும்  பேசுங்கள். ( கேள்வி கேளுங்கள் ஏன் இறைவன் காணாமல் என்று). இன்னும் கேளுங்கள் அம்மா. 

அடியவர் 5 :- அனைவரும் இறைவன் திருவடியை வணங்க அருளவேண்டும். 

குருநாதர் :- அப்பனே அப்பொழுது கஷ்டத்தைக் கொடுத்தால்தான் அப்பனே. 

அடியவர் :- எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நீங்க எங்கள் கூட இருந்து அருள் புரிய வேண்டும்.

குருநாதர்:- அப்பனே எவ்வளவுக்கெவ்வளவு கஷ்டங்கள் வருகின்றதோ அப்பொழுது யான் பக்கத்திலேயே இருப்பேன். வேடிக்கை பார்ப்பேன். அவ்வளவுதான். கர்மம் தீரட்டும். 

சுவடி ஓதும் மைந்தன்:- ஆனால் கைவிட மாட்டார். 

அடியவர் 5 :- சித்தர் பாடல்களில் உள்ள உண்மைப் பொருளை உணர்த்தி (வைக்க வேண்டுகின்றேன்)

குருநாதர் :- அப்பனே உண்மைப் பொருளை , புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே , யாங்கள் எழுதியதைக் கூட 
ஓத முடியும் அப்பா. இல்லையப்பா புண்ணியங்கள் கலியுகத்தில் மனிதனிடத்தில். அப்பனே வேண்டுமென்றால் புத்தகம் என்னிடத்தில் என்று கையை ஓங்கிக் காட்டலாம். 

அடியவர் 5 :- எனக்கான கர்ம வினை என்ன?

குருநாதர் :- அப்பனே இப்பொழுது கடமையைச் செய்து கொண்டே இரு. நன்முறைகளாகவே நிச்சயம் பாடலை உந்தனுக்கு அவ்……….

அப்பனே எதைக் கேட்க வேண்டும்? எதைக் கேட்கக்கூடாது? 

அடியவர் 5 :- தெளிவைக் கேட்க வேண்டும். 

குருநாதர் :- அப்பனே புண்ணியத்தைக் கேட்க வேண்டும். பாவத்தைக் கேட்கக் கூடாது. 

குருவின் பேச்சைக் கேட்காவிடில் என்ன செய்வது? (குருநாதர் பதில்) மிதிப்பது. 

அப்பனே இங்கு யார் குரு? 

அடியவர் 5 :- எம்பெருமான் அகஸ்தியப் பெருமான்தான் குரு. 

குருநாதர் :- இல்லையப்பா. நீ என்று யான் கூறுகின்றேன் இங்கு. அப்பனே மாதமாக, மாதமாக இங்கு குடியிருப்பவன்தான் குரு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா நீங்கதான் குரு என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே அனைவருக்கும் தந்தையாக இருக்கலாம். ஆனால் நீ குரு. மிதித்துவிடுவாயப்பா.

அடியவர் 4 :- கனவில் அடிக்கடி சாமி வருகின்றார். அதன் அர்த்தம் என்ன ஐயா?

குருநாதர் :- போதாது பக்தி. இன்னும் காட்டு என்று. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- ( சித்தர்கள் மனிதர்களின் கர்மாக்களை நீக்கும் வழியில் ஏதேனும் தொண்டு செய்ய இயலுமா என்று கேட்டதற்கு )

குருநாதர் :- நிச்சயம் செய்ய முடியாதப்பா. என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்?

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-  எனது அப்பாவுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்று ஆசை.

குருநாதர் :- அப்பனே ஜீவராசிகளுக்குத் தொண்டு செய். தானாக….

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-  சரிங்க. நன்றி ஐயா. 

குருநாதர் :- ஆன்மா வேறு வேறு அப்பா. ஆன்மா ஒன்றாக இருந்தால் சந்தோசம் அடையும். ஆன்மா வேறு வேறாக இருப்பதால் அப்பனே  தொல்லைகள் அப்பா. 

அடியவர் 7 :- உறவுகள் அமைவதும் கர்மாவை கழிப்பதற்காகத்தானா?

குருநாதர் :- அம்மையே நிச்சயம். 

அடியவர் :- ( எப்படி இருந்தால் அன்பு அதாவது காதல் சரியானது? திருமணத்திற்குப் பின் கணவன் மனைவியாக) 

குருநாதர் :- முதலில் தாய் தந்தையிடம் காதல் (அன்பு) கொண்டாலே போதுமானது. தானாக நல்காதல் மலரும். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- super.
(சில தனி வாக்குகள்)

குருநாதர் :- அப்பனே எல்லை மீறினால் என்ன செய்ய வேண்டும்? அப்பனே (முன்பு) சொன்னேன் அப்பனே. உதைப்பேன். 

அடியவர் 7 :- ( ஜாதகப்படி சிலர் கடை பிறவி. சாமி பக்தி இல்லை. ஆனால் மாமிசம் உண்கின்றனர்.) 

குருநாதர் :- அம்மைய இதை பற்றி பல விளக்கங்கள் கூறிவிட்டேன். எப்போது அதை சாப்பிட்டு எதை என்று அறிய அறிய , (இறந்த வாயில்லா ஜீவராசிகளின்) அவ்ஆன்மாக்கள் விட்டு விடுமா என்ன? (அவர்களை) கடை பிறப்பு என்கின்றார்கள். ஆனாலும் அவ்ஆன்மாவை அடித்து நொறுக்கி அவ்ஆன்மாவெல்லாம் காத்துக் கொண்டிருக்கும். (அசைவம் உண்ட) இவ்ஆன்மா வரும்பொழுது நிச்சயம் பின் இறைவனிடத்தில் (ஆசி பெற/முக்தி பெற) விடாதே???

………….

இந்த போலத்தான் பின் அனைத்தும் உண்டுவிட்டு , அடித்து,  வாயில்லா ஜீவராசிகளெல்லாம் ஆனால் அவ்ஆன்மா இறைவனிடத்தில் போய் சேர்ந்திருக்கும். இறைவனிடத்தில் அதாவது திருத்தலத்தில் இருக்கும். ஆனாலும் (என்னை உண்ட) அவன் வருகின்றான் பார். அவன் என்னென்ன கொடுமைப்படுத்தினான். இறைவா அவனுக்கெல்லாம் நீ ஆசிகள் தரப்போகின்றாயா என்று இறைவனிடத்தில் கூறிக்கொண்டே இருக்கும். அப்பொழுது ஆசிகளும் இறைவன் கொடுக்கமாட்டான். 

அடியவர் :- ஐயா ஒரு சந்தேகம். முன்பு மாமிசம் சாப்பிட்டோம். இப்பதான் நிறுத்திவிட்டோம். இப்போ என்ன நடக்கும்?

குருநாதர் :- அதை உன் தந்தையிடம் தான் கேட்க வேண்டும். உணனடியாக  அனைத்தும் செய்ய வேண்டுமென்றால்,  அவ்பாவம் இருக்கின்றதல்லவா? எத்திருத்தலம் சென்றாலும் அவ்ஆன்மாக்கள் தடுத்து நிறுத்தின. ஆனாலும் என்னிடத்தில் வந்துவிட்டீர்கள். 

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 
சிறுக சிறுக (தான தர்மங்கள்) செய்து கொண்டிருந்தாலே, இறைவன் பெருக பெருகச் செய்வான். இதை உணரலாம். 

அனைவராலும் உழைக்க முடியுமா? என்றால், இல்லை. 

அனைவராலும் சேவை செய்ய முடியுமா? என்றால் இல்லை. 

அனைவராலும் கல்வி கொடுக்க முடியுமா? என்றால் இல்லை. 

அனைவரும் நோய் உள்ளவர்களாக இருக்க முடியுமா? என்றால் இல்லை. 

நோய் அற்றவர்களாக இருக்க முடியுமா? என்றால் இல்லை. 

அனைத்தும் இறைவனின் தீர்ப்பே. இதைப் பற்றி விவரமாகக் குறிப்பிடுகின்றேன் சில காலத்திற்குப் பிறகே. 

அடியவர் 5 :- ஒவ்வொரு மனிதனுக்கும் இறை நல்லவற்றை உணர்த்துகின்றது. நல்லாதவற்றையும் உணர்த்துகின்றது. ஆனால் எது இறை உணர்த்துவது என்று எப்படி தெரிந்து கொள்வது?

குருநாதர் :- அப்பனே இறை பின் யார் யார் மூலம் எதை உணர்த்த வேண்டும் என்று உணர்த்திக்கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் அதை மனது அதாவது மனிதனுடைய மனது ஏற்கவில்லையே. 

சுவடி ஓதும் மைந்தன் :- மனிதனின் மனம் ஒரு பேய் என்று சொல்கின்றார். 

அடியவர் 5 :- அந்த பேயை ஐயாதான் அடக்கி அருளவேண்டும். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் என்னால் மட்டுமே முடியும் அப்பா. யாராலும் முடியாதப்பா. சித்தரால் மட்டுமே முடியுமப்பா. 

அடியவர் :- இல்லத்தில் தங்களுடைய திருவுருவம் வைத்து வழிபாடுகள் செய்து கொண்டிருக்கின்றேன். 

குருநாதர் :- அம்மையே மனதில் முதலில் நிறுத்து,  (உன் மனதில் மாயை என்ற) பேயை விரட்டியே. 

அப்பொழுதுதான் ஆசிகள். எனை (இல்லத்தில்) வைத்துக்கொண்டாலும் ஒன்றும் புரயோஜனம் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- மாயயை  நீக்கி , மனதில் கோயில் கட்டுங்கள். 

குருநாதர் :- பின்பு மனிதன் இப்படியும் சொல்வான். பொய் கூறுவான் கலியுகத்தில். அகத்தியனை வைத்து அனுதினமும் அகத்தியனுக்கு அனைத்தும் வைத்திருந்தேனே பூ, பழங்களோடு என்று. வேண்டாம். அவ்வேலையே நடக்காது என்னிடத்தில். 

அப்பனே ஏன் என்னை வைத்து வழிபடுகின்றான் கூறு?????

அடியவர்கள் :- ( அமைதி )

குருநாதர் :- அப்பனே அதாவது எவ்வாறு நடிக்கின்றான் மனிதன் என்றால், தன் தந்தைக்கோ தாய்க்கோ சிலை செய்து வழிபடுவதில்லை. என்மீது ஏனப்பா அவ்வளவு பாசம்?????

அப்பனே மனிதன் நடிப்பதில் மிகவும் வல்லவனப்பா. மிஞ்சமுடியாதப்பா. அதை யான் மட்டுமே உணர்ந்தேன். 

அப்பனே எனை (சிலைகள்/படங்கள்) செய்து காசுகள் சம்பாதிக்கின்றார்கள். அவ்வளவுதான். சம்பாதிக்கட்டும். 

அடியவர் :- ( போலி சாமியார்களிடம் ஏமாந்து விடுகின்றனர்.இதற்கு வழி காட்ட வேண்டும்) 

குருநாதர் :- அப்பனே யான் விடுவேனா என்ன? அறிவைக் கொடுத்திருக்கின்றேன் அப்பனே. இப்படிப்போ, அப்படிப்போ என்று. ஆனாலும் போகத் தெரியவில்லை அப்பனே. 


( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் நிறைவடைந்தது. ) 


வணக்கம் அகத்திய மாமுனிவர் அடியவர்களே!!!

உலகம் அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. இதனைத் தடுக்க குருநாதர் மதுரை சத்சங்கத்தில் அனைவரும் செய்து வரவேண்டிய வழிபாட்டு முறைகளை குருநாதர் அவசர உத்தரவாக வந்திருக்கின்றார் அதை நினைவூட்டல் பதிவு.
 

சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025 :-

https://siththanarul.blogspot.com/2025/06/1884.html?m=0

ராகு கிரகம் மற்றும் கேது கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள்.  வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

(1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூமியைத் தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி  இவ் சிவபுராணம் பாடல் இதை ஓதுதல் வேண்டும். கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம் விநாயகர் அகவல் படிக்க வேண்டும். 

(2) அனுதினமும் உங்கள் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  நவகிரக காயத்ரி மந்திரம் ஓதி , மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் என்று  வழிபாடு செய்ய வேண்டும். 

(3) பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில், மற்றும் திருவண்ணாமலையில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால், தியானங்கள் செய்தால், மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.

(4) புண்ணிய நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடிச் சென்று சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும். 

(5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்குச் சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களைப் பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். 

இவ் வழிபாட்டினை அனைவரும் ஒன்று கூடி ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்து,  மற்றும் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் இந்த உலகம் அழிவிலிருந்து விடுபட  பாடுபடுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

தவறவிடாதீர்கள் - இன்னும் 10 நாட்களே உள்ளன - பாபநாசத்தில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை! - 27.07.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/10-27072025.html

அனைவருக்கும் பகிருங்கள் - பாபநாசத்தில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை! - 27.07.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/27072025_18.html

சித்தன் அருள் - 1899 - அன்புடன் அகத்தியர் - பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2025/07/1899.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_12.html


அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_11.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html


 சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html


குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1616 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1616.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1612 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1612.html

சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1810.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - அன்னை லோபா முத்திரை தேவியார் வேண்டுகோள்!! - https://tut-temples.blogspot.com/2025/03/1751_11.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - கலியுகம் துவங்கும் நேரம்! - https://tut-temples.blogspot.com/2025/03/1751.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1609 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1609.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/03/1751-11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605_3.html

ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்...சர்வம் சிவார்ப்பணம்.. - https://tut-temples.blogspot.com/2025/03/11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1604 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2025/03/1604.html

சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1490.html

சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1443.html

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1291.html

சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html

தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html

கந்தர் அனுபூதி - பாடல் 3 - வானோ? புனல் பார் - ஆறுமுகமான பொருள் எது? - https://tut-temples.blogspot.com/2024/09/3.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html

சித்தன் அருள் - 1532 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2025/02/1532-6.html

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html

சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html

சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html

சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html


சித்தன் அருள் - 1790 - உங்கள் இல்லத்திலேயே கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/02/1790_2.html

திதி ரகசியம் - பஞ்சமி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (02.02.2025) - https://tut-temples.blogspot.com/2025/02/02022025.html

சித்தன் அருள் - 1782 - PDF வடிவில் அகத்தியர் புகழ்மாலை!! - https://tut-temples.blogspot.com/2025/01/1782-pdf.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - திருமூலர் சித்தர் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/01/1785_29.html

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html


உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6_23.html

ஆதி ஈசனார் எழுதிய சிவபுராணம் - ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6.html

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html


மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

No comments:

Post a Comment