"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, March 31, 2022

மகான் ஸ்ரீமத் தோபா சுவாமிகளின் 172-ம் ஆண்டு குருபூஜை - 01.04.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்

நம் தளத்தில் அவ்வப்போது குருபூஜை தரிசனங்கள் கண்டு வருகின்றோம்.நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022,  குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022, ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை,  ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 , அருள்மிகு  ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா  குரு பூஜை அழைப்பிதழ் என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்று  மகான் ஸ்ரீமத் தோபா சுவாமிகளின் 172-ம் ஆண்டு குருபூஜை அழைப்பிதழ் காண இருக்கின்றோம்.





வேலூரை அடுத்த சைதாப்பேட்டையில் கி.பி 1850ஆம் ஆண்டு பங்குனி திங்கள் 27 ஆம் நாள் புதன்கிழமையில் பிரதமைதிதியோடு கூடிய ரேவதி நட்சத்திரத் தினத்தில் ஸ்ரீ தோபா சுவாமிகள் ஜீவசமாதியானார் . இந்த ஜீவ சமாதி வேலூர் சைதாப்பேட்டை 209 மெயின்பஜார் ரோட்டில்  அமைந்துள்ளது. ஸ்ரீ தோபா சுவாமிகள் மடம் எது எனக்கேட்டால் கூறுவார்கள்.

திருச்சிராப்பள்ளியில் வேளாளர் குலத்தில் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் அருளால் சிவபாத பிள்ளைக்கும், சிவகாமி அம்மைக்கும் பிறந்தவர் தான் இன்றைய தோபா சுவாமிகள் என்கிற இராமலிங்கம்.

சிறு வயதிலேயே ஆங்கிலேய அரசின் காலாட்படையில் பணி செய்து வந்தார். தோபா சுவாமிகளின் பெற்றோர் மூப்பின் காரணமாக இறந்து விட தோபா சுவாமிகள் காலாட்படையில் இணைத்துக் கொண்டார் சுவாமிகள் திறமையை கண்டு வியந்து ஆங்கிலேயஅரசு சென்னைக்கு அனுப்பியது. இடையறா சிவபக்தி, முருக பக்தியும், முருகன் மேல்தீவிர பற்றும் கொண்டவராய் இருந்தார் .

திரு முருகப்பெருமானின் மீது “அருட்பா” என்ற பாடலைப்பாடியுள்ளார் குருவருள் இன்றி யோக கலையிலும்,சிவபக்தியிலும் தெளிவுற முடியாதென உணர்ந்தார். ஞானசம்பந்தரை நினைத்து தியானம் மேற்கொண்டார் .




சுவாமிகளுக்கு சம்பந்தர் காட்சியளித்து ” சிவம் மட்டுமே உண்மையானதால் சிவத்தைத் தொடர்க” என்றருள் புரிந்தார். . சம்பந்தரின் அருள் பெற்ற சுவாமிகள் எல்லையற்ற ஆனந்தமடைந்தார் ..இந்நிலையில் எதிரி நாட்டுடன் போர் புரிய அழைப்பு வர, பணியில் இணைந்தார். எதிரி நாட்டுடன் போர் புரிந்த பல அற்புதங்கள் செய்து போரில் அரசுக்கு வெற்றி பெற வைத்த சுவாமிகளை ஆங்கிலேய அதிகாரிகள் தேடினர் ஆனால். அமைதியாய் ஓர் இடத்தில் அமர்ந்து தியானத்தில் “தோ ” “பா ” “தோ” “பா” என்ற வார்த்தை மந்திரத்தை உச்சரித்து வந்தார் சுவாமிகள். எதிரிப்படை வீழ்ந்ததை தளபதி ஸ்வாமிகளிடம் விளக்க நடந்தது இறைவனின் திருவிளையாடல் எனப் புரிந்துக் கொண்டு வணங்கியது மட்டும் அல்ல. சுவாமிகளின் அதீதமான சக்தியை உணர்ந்து வணங்கினார்கள்.அன்றில் இருந்தே இராமலிங்கம் என்கிற ஞானி ஸ்ரீ தோபா சுவாமிகள் என அழைக்கபட்டார்.

“தோடுடைய” என்ற வார்த்தையைக்குழந்தை சம்பந்தர் தனக்கு திருவமுது ஊட்டச் சொன்னது ஐயனே,அம்மையாரும் திருவமுது ஊட்டியவர் இருவரையும் ஒரு சேர அம்மையப்பராகக் குறித்துவிட்டார் ஒரு சொல்லில்.சம்பந்தரைக் குருவாக கொண்டு சுவாமிகள் தோடுடைய என்ற பாடலையே மந்திரமாக உச்சரித்து வந்ததால் தோபா சுவாமிகள் என்றே அழைக்கப்படுகிறார் .

ஈசனையும் தம் குரு சம்பந்தரையும் எண்ணி துறவறம் மேற்கொண்டு. பல த்தலங்கள் சுற்றி வந்தார் .ஸ்ரீ தோபா சுவாமிகள் நிர்வாண அவதார புருஷர் ஆவார் . ஒரு நாள்திருவெற்றியூரில் தெரு ஓரமாக அமர்ந்திருந்தார் .

அந்த தெருவில் போவோர் வருவோரின் பாவங்களை தம்மனக்கண்ணால் கண்டு ” இதோ நாய் போகிறது ” என்பார்கள்மற்றொருவர் கத்துவதை கண்டு பேய்,கழுதை கத்துகிறது எனக்கூறிக்கொண்டு இருப்பார். இது அங்கிருந்தோரை சுவாமிகளை ஆச்சர்யர்த்துடன் பார்க்க வைத்தது.

அவ்வழியே ஸ்ரீ வடலூர் இராமலிங்க அடிகளார் வருவதைக் கண்டு தோபா சுவாமிகள் அடிகளாரைப்பார்த்து இதோ “மனிதர் வருகிறார் ” எனக்கூற அங்கிருந்தோர் இதைக்கேட்டு திகைத்து விளக்கம் கேட்டனர்.மற்றோரெல்லாம் மனித உருவில் உலவும்மிருகங்கள் இவர் மட்டுமே மனித உருவில்வந்த மகான் என்றார் .

சுவாமிஒரு சித்தர் என்பதை உணர்ந்து அறிந்த அடிகளார்அவரிடம் அருகே அமர்ந்து சுவாமிககளுடன் சந்தோஷமாக பேசி உறவாடி விட்டு கிளம்பினார் .

அந்த நேரத்தில்தோபா சாமிகளை சுட்டி காட்டி ஒருவர் ” இவர் யாரென வினவ ” இவரும் நானும் ஒன்று தான் வணக்கத்திற்குரியவர், இவர் ஆடை துறந்த நிர்வாண புருஷர் ,நான் வெண்ணிறயாடைகளைமட்டுமே அணிகிறேன் . இருவரிடையே ஆடையணிந்த நிலையும், ஆடையற்ற நிலையும் மட்டுமே வித்தியாசம் எனக்கூறி பயணித்தார் .

ஒரு நாள் முகமதியர் வசிக்கும் வீதி வழியே நிர்வாணமாய் நடந்து சென்றார்.இவரைப்-பார்த்த முஸ்ஸீம் ஒருவர் இவரை சித்தர் என அறியாது தன் வேலைக்காரனிடம் சுவாமிகளை துரத்தச்சொன்னார் .

ஓர் கோணூசியை தோபா சுவாமிகளின் மீது வேலைக்காரன் விட்டெறிய. அது சுவாமிகள் மீது படாமல் விட்டெறிந்த வேலைக்காரன் வயிற்றிலே குத்தியது. அவன் ஊசியை பிடுங்க முடியாமல் கத்த அப்பகுதியில் மக்கள் கூடினர். விபரம் தெரிய வர எல்லோரும் இவர் அதிக தெய்வீகத்தன்மை கொண்டவர் என அறிந்தனர் .

பின் ஊசியை விட்டெறியச்செய்த முகமதிய அன்பர் மன்னிக்க வேண்டினர்.பின் சுவாமிகள் மேல் பற்றுகொண்டு சுவாமிகள் பெயராலேயே “தோபா மசூதி ” ஒன்றை நிறுவியதாக வரலாறு. சென்னையில் உள்ள தோபா மசூதி சான்றாகும் .

இவ்வாறு சித்துகள் பல செய்த சுவாமிகளுக்காக பக்தர்கள் கூடி ” தோபா சுவாமிகள் பரிபாலன சங்கம் “ஒன்றை சென்னை மயிலாப்பூரில் நிறுவினர் . வேளச்சேரிக்கு சென்று சிதம்பரம் சுவாமிகளுக்கு ஞான திருஷ்டி வழங்கினார் .

ஓர் முறைஒரு காவாலாளி சுவாமிகளை ஏளனம் செய்து கையை ஓங்கிட கை செயல்படாமல் நின்று போனது. தான் செய்த இழிசெயலை உணர்ந்து மன்னிக்குமாறு வேண்ட அந்த காவலாளிக்கு மன்னிப்பு அளித்ததோடு கைகளை சரிசெய்தார் சுவாமிகள் .ஓர் முறை வேளச்சேரி வந்த சுவாமிகள் நடு நிசியில் ஓர் குயவர் வீட்டு வாசலில் திண்ணையில் அமர்ந்து அருட்பெரும் சோதியாய் ஆன்ம ஒளிபரப்பி நிற்க அப்போது .

நடு நிசியில் அவ்வீட்டு பெண்மணி வெளியே வர சுவாமிகள் ஜோதிப்பிழம்பாக ஒளி பெருக்கி நின்றார்.அப்படி நிற்க கண்டு அதிர்ச்சி முகம், ஆச்சர்யமும், பயத்துடன் உள்ளே சென்று கணவரிடம் விவரம் சொல்லி அழைத்து வந்து காண்பிக்க அங்கு வந்து பார்க்க சுவாமிகளை காணவில்லை .

தமக்கு அப்பெரியோரை காண பாக்கியமில்லையே என்றெண்ணி வருந்தி தேட ஆரம்பித்தனர்.பின் அத்தம்பதிகள் ஓரு வழியாக சுவாமிகளைச் சந்தித்தனர் .

அப்போது சுவாமிகள் உங்களுக்கு என்ன வேண்டுமென கேட்டார்.அதற்கு அவர்கள் தங்களுக்கு குழந்தைப்பேறு வேண்டுமெனக்கேட்க சுவாமிகள் தம் சட்டியில் இருந்த சோற்றை அத்தம்பதிகளை ஆசிர்வதித்து உண்ணச்செய்தார் .

பின் உங்களுக்கு மகன் பிறப்பான் அவன் சித்தனாக வளருவான் என்றார் சுவாமிகள். அத்தம்பதிகள்மிகுந்த சந்தோஷத்துடன் சென்றனர் . பின் அப்பெண்மணி கருவுற்று ஓர் அழகிய ஆண்மகனை ப்பெற்றார் .

அக்குழந்தை பின்னாளில் துறவறமேற்று “ஏகாம்பரசிவயோகி” என்ற நாமத்துடன் முக்தி அடைந்தாராம் . இப்படி பல அற்புதங்கள் சித்துக்கள் செய்தார்.

இந்த சமயத்தில் சீடராக சித்த நாத சுவாமிகள் என்பவரை ஏற்றுக்கொண்டார். இவரே தற்போதுள்ள மடத்தின் முதல் மடாதிபதி. ஒரு நாள் தம் சீடர் சித்த நாத சுவாமிகளை அழைத்து தாம் ஜீவசமாதி அடையப் போவதைக் கூறி அதற்கான ஏற்பாடுகள் செய்ய கட்டளையிட்டார். தம் சக்தியை இச் சிவலிங்கத்தில் ஏற்றிவிட்டதால் .இனி இச்சிவலிங்கமே தோபா சுவாமியாகும் எனக்கூறி தம் சீடர் சித்த நாத சுவாமிகள் அமைத்த ஜீவசமாதி குகைக்குள் சென்று பத்மாசனத்தில் அமர்ந்து ஸ்ரீ தோபா சுவாமிகள் ஜீவ சமாதியானார் . ஏராளமான அன்பர்கள் சிவனடியார்கள் புடை சூழ தேவார திருப்பதிகங்கள் பாடி தோபா சுவாமிகளை அபிஷேகித்து அக்குகைய மூடினர் .

ஸ்ரீதோபா சுவாமிகள் கூறியது போலவே ஓர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர் . அண்ணாமலை அண்ணலின் திருவடிகளுக்கு சமர்ப்பணம். என் குருநாதர் திருவடிகளுக்கு சமர்ப்பணம்.

ஸ்ரீதோபா சுவாமிகள் பற்றி பேசுவதென்றால் இந்த ஒரு பதிவு போதாது. பதிவின் முதலில் குருபூஜை அழைப்பிதழ் பகிர்ந்து உள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும் ,திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.

அருநிறை கடலே! கற்பகக் கனியே! அளவிலா இன்பசா கரமே!

குறுநிறை மணியே! தொளைபடா முத்தே! கோதிலா நற்குண மணியே!

பொருண் மலி சைவதீபமே என்று போந்தனன் விரைந்தருள் தெய்வத் 

தருநிகர் பவர்சேர் சைதைவாழ் தோபா சாமியே ஞானநா யகனே !

குருவே சரணம்.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104 ஆம் ஆண்டு குருபூஜை - 27.03.2022  - https://tut-temples.blogspot.com/2022/03/104-27032022.html

ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/68-27032022.html

ஓம் ஸ்ரீ குருவே சரணம்! - ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை - https://tut-temples.blogspot.com/2022/03/99.html

குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/8-13032022.html

 குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

 பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/11032022.html

 மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

No comments:

Post a Comment