சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருநாதர் அகத்தியர் பெருமான் அருளால் ஒவ்வொரு நாளும் நாம் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் . திருமூலர் பெருமான் அருளிய வழியில் தெளிவு பெற வேண்டும் . எப்படி தெளிவு பெறுவது என்றால் குருவின் திருமேனி கண்டு , குருவின் திருநாமம் செப்பி , குருவின் திருவார்த்தை கேட்டு , குருவின் திரு உரு சிந்தித்து என்று கூறுகின்றார் . இதில் நாம் குருவின் திருவார்த்தை கேட்டு என்ற நிலையில் ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகின்றோம். சித்தன் அருள் வலைத்தளத்தில் இருந்து அகத்தியர் வேதமாக அன்புடன் அகத்தியர் தொகுப்பின் சுருக்கத்தை இங்கே காண உள்ளோம் . இது பழத்தை உண்பதை விட பழச்சாறு உண்பது போலாகும் . இன்றைய சூழ்நிலையில் அனைவரும் பழச்சாறு உண்ண விரும்புகின்றோம் . அதே போன்று இன்றைய பதிவும் அமைத்துள்ளது .
அப்பனே,
இங்குள்ளவருக்கும், ஒவ்வொருவருக்கும் நான் பார்த்து ஆசிர்வதித்துவிட்டேன்
என்பேன், அவரவர் வழியில் செல்ல. அப்பனே, ஆனாலும் துன்பங்கள் நீங்காது, ஏன்
என்றால் இது கலியுகம். அகத்தியன் என்று சொன்னாலே மோட்சம்தான். ஆனாலும் சில
சில வினைகளால், கட்டங்கள் வரும், அதையும் நான் தீர்த்து வைத்துவிட்டால்,
பின் மனித பிறப்பிற்கு சரித்திரமே இல்லாமல் போய்விடும். இதனால் நன்கு
உணர்ந்து எதனை செய்வது என்றும், எதனை செய்யக்கூடாது என்பதும் எந்தனுக்கு
தெரியும். பின்பு சிறிது கட்டங்கள் வந்தாலும், அதுவும் நன்மைக்கே என்று
எடுத்துக்கொள். ஆனாலும் இன்பமே வந்துவிட்டாலும், மோக்ஷ கதியை அடைய
முடியாது. அப்பனே, அகத்தியனை வணங்குபவர்கள்,நிச்சயமாய் மோக்ஷகதியை
அடைவார்கள்.
அகத்தியன் இருக்கின்றான் என்ற ஒரு வார்த்தையை
சொல்லிவிடுங்கள். அனைவருக்கும், ஆசிகளாக, எந்தனுக்கு அகத்தியன்
இருக்கின்றான் என்று சொல்லிவிடுங்கள்.
அதை
செய்தால், இது நடக்கும், இதை செய்தால் அது நடக்கும் என்று கூட பணத்துக்காக
வருவார்கள். அப்பனே! இன்றே உரைக்கின்றேன், சூட்சுமமாக. யாரையும்
நம்பிவிடாதீர்கள். அப்பனே என்னை நம்பிவிட்டீர்களா, என்னையே நம்பி
விடுங்கள். அப்பனே, வழியை நல்ல வழியாக யாம் காண்பிக்கிறேன். அப்பனே,
தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என்
பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே
கோடி புண்ணியமாகும்.
அதை
செய்தால், இது நடக்கும், இதை செய்தால் அது நடக்கும் என்று கூட பணத்துக்காக
வருவார்கள். அப்பனே! இன்றே உரைக்கின்றேன், சூட்சுமமாக. யாரையும்
நம்பிவிடாதீர்கள். அப்பனே என்னை நம்பிவிட்டீர்களா, என்னையே நம்பி
விடுங்கள். அப்பனே, வழியை நல்ல வழியாக யாம் காண்பிக்கிறேன். அப்பனே,
தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என்
பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே
கோடி புண்ணியமாகும்.
என் மக்களே! இப்பொழுது கூட சொல்லிவிடுங்கள்
"அகத்தியன் இருக்கின்றான்" என. பின்பு, உங்கள் வேலையை பார்க்கத்
தொடங்குங்கள்.
அன்பு மட்டும்தான் இந்த மாய உலகில் சிறந்தது. ஆகவே அன்பை செலுத்துங்கள்,
போதுமானது.
மீண்டும் ஒருமுறை
உரைக்கின்றேன். அனைத்து திறமைகளும் உங்களிடத்தில் இருக்கின்றது. நீங்களே
பக்திமான்களாகலாம். அதை விட்டுவிட்டு, எதை எதையோ சென்று அடைந்தால்,
மீண்டும் தோல்விகள்தான் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், என்
மக்களே. அனைவருக்கும் ஆசீர்வாதங்களை கொடுத்து அனுப்புகின்றேன், இப்பொழுது.
இதனால்தான் யான் கூறுகிறேன், அகத்தியனை நம்பினால், பின் அகத்தியனை மட்டும்
வணங்கு என்று. பின், அகத்தியன் என்னும் பெயரை சொல்லி ஏமாற்றுவார்கள்.
பின்னர் பலப்பல வித்தைகளையும் மனிதர்கள் காண்பிப்பார்கள். பின், இனியும்
வருவார்கள் மனிதர்கள். யாரையும் நம்பிவிடக்கூடாது.
மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமா,
நீயே போய் செய்துவிடு, என்பேன்.
ஒழுங்காக வாழக் கற்றுக்கொள்ளுங்கள், இல்லையேல், யாங்களே, சித்தர்களே
அழித்து விடுவோம். ஏனென்றால், நீ ஒழுங்காக இறைவனை வழிபட்டால், ஒழுங்காக
வழிபட்டு சென்றுவிடு. மற்றவையெல்லாம் ஏன்? நீ என்ன இறைவனா? உன்னால் என்ன
செய்ய முடிகின்றது? மனிதா! என் கோபத்திற்கு ஆளாகாதே! நிச்சயமாய்
அழித்துவிடுவேன். இப்பொழுது கட்டளை இடுகின்றேன், அதை செய்கின்றேன், இதை
செய்கின்றேன் என்று பொய் பித்தலாட்டம் ஆடுகின்றீர்களே, ஆனால் நிச்சயம் யானே
அழித்து விடுவேன். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள், இனிமேலும்
எந்தனுக்கு கோபம் வந்தால், அனைத்தையும் அழித்துவிட்டு போவேன். ஈசனைவிட
எந்தனுக்கும் திறமைகள் அதிகமாக இருக்கின்றது. மானிடா, சொல்லுவதை மட்டும்
கேளுங்கள். மானிடா, உங்களால் என்ன செய்ய முடியும். யங்கள் தான் உங்களையே
காப்பாற்றுகின்றோம்.
"அப்பனே,
இன்னொரு விளக்கத்தையும் ஒரு சூட்சுமமாக விளக்குகின்றேன். யாரும்
விளக்கவில்லை. அப்பனே! பௌர்ணமி, அமாவாசை திதிகளில் இங்கு
அமர்ந்து/உறங்கினால் அப்பனே, உடுக்கை சத்தம் கேட்கும், அப்பனே! நடை பயணம்
கேட்கும், சலங்கை ஒலி கேட்கும். அப்பனே இங்கு திரிவார் என்பது திண்ணம்.
சிவபெருமான் இங்கு நடப்பதை கேட்கலாம். இது ஞானிகளுக்கு மட்டும்தான்
தெரியும். வேறு யாருக்கும் தெரியாது.
அப்பனே!
எவையென்று கூற! அப்பனே! இன்னொரு விளக்கத்தையும், மிக சூட்சுமமாக
விளக்குக்கின்றேன். இதையும் யாரும் விளக்கவில்லை. அப்பனே! இரவு இங்கு உலா
வந்து ஒரு காலம் அமர்ந்து, பின்னர் அண்ணாமலைக்கு வருவான். பின்னர் அங்கு
சுற்றி திரிவான் இறைவன். பின்பு ஏகாம்பரம் என்றழைக்க கூடிய காஞ்சிபுரம்
செல்வான். இங்கிருந்து காளத்திரி (காளஹஸ்தி) போவான். அதன் பின்னர்
அதிகாலையில் திருவானைக்காவில் நீராடுவான் இவன்" என்றார்.
இப்பவுர்ணமி அன்று (சித்திரா பௌர்ணமி)
கூட சித்தர்கள் தவத்தை மேற்கொள்வார்கள் என உறுதியாக கூறுகிறேன்.
இப்புவியில் என்ன என்ன நடக்கப் போகிறது என்று அறிவார்கள் சித்தர்கள்.
இதனால் இப்பவுர்ணமியை "சித்தர்கள் பௌர்ணமி" என்று கூட அழைக்கலாம். பின்
அனைவருக்கும் நல்மனதாய் சித்தர்கள் ஒவ்வொரு இடத்திலும் தவம் செய்வார்கள்
என்பேன்.
இப்பவுர்ணமியில் சில
சித்தர்கள் அண்ணாமலையில் வலம் வருவார்கள். மலை பகுதிகளிலும் இதுபோல்தான்,
ஓர் சித்தன் தவம் செய்வான். இப்படி பல இடங்களிலும் சித்தர்கள் தவம்
செய்வார்கள். எந்தெந்த விளைவுகள், இவ்வுலகில் மாற்றம் அடையச் செய்கிறது
என்று கூட ஒரு வாக்கு இருக்கிறது. இதனால்தான், எத்தனையோ பரிகாரங்கள்
உரைக்கினும், இப்பவுர்ணமியில் அதை செய்தாலும், பலனளிக்காது. பிரம்மா,
விஷ்ணு, சிவன் என்ற மூர்த்திகளிடம் பிரார்த்தனை செய்தாலும், அவர்கள் தலை
எழுத்தை சித்தர் வழியில் செல்ல மாற்றுவார்கள். ஏன் என்றால், இது
"சித்தர்களுக்கான பௌர்ணமி" என்று கூறப்படுகிறது.
பரிகாரங்களை
இங்கு(கோடகநல்லூர்) வந்து செய்கிற பொழுது, ராகு காலத்தில் வந்து செய்கிற
பரிகாரங்கள் பலனளிக்கும் என்பேன். நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நல்முறையாய்
ராகு கேதுக்களை கட்டுப்படுத்த இன்னொரு முறையையும் யான் சொல்கின்றேன். பிறை
என்று சொல்கிறார்களே "மூன்றாம் பிறை" அதை தொடர்ந்து நவமாதங்கள்
பார்த்துவிட்டால் ராகு, கேதுக்கள் நன்மை செய்துவிடும். இதை யார்
உணர்வார்கள். ஏன் என்றால், எதனையும் நீக்குவதற்கும், அடிக்கடி பெருமாள்
இங்கு வந்து அமர்ந்து விடுவார், யான் பார்த்தேன். யானும் வேங்கடவன் மலையில்
தங்கி இருக்கும் பொழுது, இவன்தனை இழுத்து, இழுத்து வரவேண்டியுள்ளது.
அதனால்தான் இப்பொழுது இங்கு வந்தேன் என்பேன்.
நல்முறையாய் வரும்
காலங்கள் மக்களுக்கு சரியானதாய் இல்லை என்றாலும், அகத்தியனை நம்பி, பின்
அவர்பின் தொடர்பவர்களுக்கு, பின் குறை இல்லாத வாழ்வே அகத்தியன் அளிப்பான்,
என்று நல்வாக்கு, பலிக்கும்.
இவ்வுலகில் நலமாக வாழ மூலாதாரமாக இருப்பது இறை சக்தி
ஒன்றுதான். இறை சக்தி இருந்தால், பின் நல் முறையாய் அனைத்தும் தேடி
வந்துவிடும். உங்கள் அனைவருக்கும் நல்முறையாய் இறை அருளை பெற்று தருவதற்கு,
மூலகாரணமே அகத்தியன் என்பேன்.
திருந்துவதாக மனிதன் ஒரு பொழுதும் ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனாலும் பிறரை
சரி செய்வான். அப்பனே! அதர்மம் ஒரு பொழுதும் நிலைக்காது என்பேன்.
அதனால்தான் தர்மமும் சிறிது ஓங்கட்டும். ஆனாலும் இப்புவியில் யான் இருந்து
என்மக்களை காத்துக்கொண்டுதான் இருக்கின்றேன். ஆனாலும், அவர்களுக்கே கூட சில
சமயங்களில், தீமைகள் நடந்து விடுகின்றது.
சனி
பலம் பெற்றவன், பல வழிகளிலும். ஆனாலும், ஈசனிடம் பல வரங்களை பெற்று, சனி
நியாயாதிபதியாக இருக்கின்றான். அதனால்தான், அவன்தனுக்கு அனைவரும்
பயப்படுகின்றனர். ஆனாலும், நியாயமாக, நீதியாக நடந்து கொண்டால் பயம் இல்லை
என்பேன். ஆனாலும், எதனை என்று கூற? ஈசனும் மனம் மகிழ்ந்து அமைதியாக இருந்து
விட்டான். இத்தனையும் சனி நிர்ணயித்து, பின்னர் அனைவருக்கும் கட்டங்களை
வழங்கினான். ஆனாலும், யான் அவன்தனை சென்று பார்த்தேன். ஈசனே என்று கூட அவனை
அழைத்தேன்!
அகத்தியா!
எதனால் என்பதை கூட யான் அறிந்தேன்! ஆனாலும், யான் 30 வருடங்கள் பார்த்துக்
கொண்டேதான் இருந்தேன் மனிதனை. ஆனாலும். மனிதர்கள் செய்யும் செயல்கள் சரி
இல்லை. சரி இல்லை என்பதுபோல், ஒழுக்கம் இல்லாமல் வாழ்கின்றனர் மனிதர்கள்.
உள்ளத்தில் ஒன்றும், பின் புறம் கூறுவதாக ஒன்றையும் செய்து கொண்டு, ஏமாற்று
வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். அதனிலும் பின்
நிர்ணயித்து, பொய் கூறுதலும், பொறாமையும் அதிகரித்துக் கொண்டுதான்
இருக்கின்றது. நியாயங்கள் இல்லை, தர்மங்கள் இல்லை, ஆனாலும், யான் வந்து,
பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். ஆனாலும் எதனை என்று கூற? என்வீட்டில்
(மகரம்) யான் அமர்ந்துவிட்டேன். யான் நியாயாதிபதியாகவும் இருந்து,
அனைவருக்கும் அவரவர்கள் தர்மத்தை செய்வதை பார்த்துத்தான் வரங்கள்
வழங்குவேன், என்பேன், என்பதைப்போல் அவன்தனும் சொல்லிவிட்டான். நிச்சயமாய்,
அவன்தானும் தீமையை குறைப்பதில்லை என்று கூறிவிட்டான்.
நீங்கள்தான்
எந்தனுக்கு வரம் தந்தீர்கள். நியாயாதிபதி எப்பொழுதும், இறங்கிவிடக் கூடாது
என்று கூட. யான் என் வீட்டில் அமர்ந்து கொண்டேன். பார்க்கின்றேன் ஒரு
கையும் கூட. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும் யான்
பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனாலும், எதை எப்பொழுது செய்வது என்று,
பின் ராகு, கேதுவிடம் கூட உரையாடினேன். உரையாடிவிட்டு, பின் அவர்களும்
ஒத்துக் கொள்ளவில்லை. எதனால் என்று பின் பார்த்தால், அவர்களும், அவரவர்
வீட்டில் அமர்ந்து பல கட்டங்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இது
ஈசன் கட்டளை.
இன்னொரு
சூட்சுமமும் யான் உரைக்கின்றேன், பரிபூரணமாக. கேட்டுக்கொள்ளுங்கள். ஈசன்
மீண்டும் கட்டளையிட்டான், கிரகங்களுக்கு. யான் உந்தனுக்கு
கட்டளையிடுகின்றேன். பின் எப்பொழுது, எதை செய்தாலும் உடனடியாக தண்டனை
கொடுத்துவிடு. இதைப்போல் பின் நிறுத்தி, நிறுத்தி வைத்தல் கூடாது.
மனிதர்கள் இச்சென்மத்தில் எந்த எந்த தவறுகளை செய்கிறார்களோ, அதற்கும்
தண்டனைகளை வாரி, வாரி வழங்கு, என கிரகங்களுக்கு ஈசன் கட்டளையிட்டுவிட்டான்.
அதனால்,
மனிதர்களே, ஒழுங்காக வாழ கற்றுக் கொள்ளுங்கள், என்பதைப்போல் இருக்கின்றது.
இனிமேலும் ஒழுக்கம் இல்லாமல் வாழக்கூடாது என்பேன். பின் உலகிலே ஏன்
இந்நோய்கள் வருகின்றது என்று பார்த்தால், எதனையும்/எதிலுமே பொருட்
படுத்தாமல், மனிதன், நான்தான், நான்தான் என்று சென்று கொண்டிருந்தான்.
அத்தனையும் ஈசன் தடுத்துவிட்டான். பின் இப்பொழுது கூட சொல்கின்றேன். பின்
நீதி கிடைக்கும் வரை, சனியும் எதையும் வாரி வாரி வழங்குவான். இந்த நோயும்
போகும் போகும் என கூறினாலும், அவரவர் உடலில் தங்கிவிட்டது. இதனை முன்பே
யாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இந்நோய் புதிதாக இல்லை
என்பேன். எவ்வாறு என்று நிர்ணயித்துப் பார்த்தால். மனிதன் வேறு வேறு
பெயர்களாக வைத்துக் கொண்டுதான் இருக்கின்றான். பின் எதனை என்று நம்புவது.
ஆனாலும் இது அறுநூற்று ஆண்டுகளுக்கு வந்து கொண்டேதான் இருக்கும்.
இருப்பினும், கிரகங்கள் தம் சொந்த இல்லத்தில் அமர்ந்து கொண்டு இன்னும் வாரி
வாரி வழங்குவார்கள் என்பேன்.
மனிதர்களே
ஒழுங்காக வாழக் கற்றுக் கொள்ளுங்கள், என்பேன். அவனவன் வேலையை ஒழுங்காக
செய்தால் ஒன்றும் ஆகாது என்பேன். இனிமேலும் எதனையும் நம்பிவிடாதீர்கள்.
ஏமாற்று வேலைகளை செயாதீர்கள் என்பேன். பின் தெரிந்தே செய்தால், கிரகங்கள்,
உடனேயே நோய்களை ஏற்படுத்தும். இப்பொழுதே எச்சரித்து விடுகின்றேன். யாராக
வேண்டுமானாலும் இருக்கட்டும் என்பேன். அவன் பெரும் சித்தனாகக்கூட
இருக்கட்டும் என்பேன். அப்பனே! இனி எதையும் தவறு செய்துவிடாதீர்கள்
இனியும். அன்பே தெய்வம் என அன்றே கூறி சென்றுவிட்டான். இறைவனிடம் அன்பை
செலுத்துங்கள். அது போதும்.
இனி
வரும் காலங்களில் இன்னும் நோய்கள் வரும். அதனையும் நேர்கொள்ள மூலிகை
மருந்துகளை கூறிவிட்டேன். அவைகளை உண்டு உங்களை காத்துக் கொள்ளுங்கள்,
என்பேன். இனிமேலும் பல சித்தர்களும் வருவார்கள் என்பேன். தர்மத்தை
நிலைநாட்ட, ஜீவ காருண்யத்தையும் பிடித்துக் கொண்டால் ஒரு குறையும் வராது.
ஒன்றை
மட்டும் உரைக்கின்றேன். தர்மத்தை, தர்மத்தின் பாதையில் நின்று
செய்யுங்கள். உந்தனுக்கு ஒரு குறை வந்தால் கூட எந்தனிடத்தில் கேள்.
அதற்க்கு யாம் பதிலளிக்கிறேன். மனிதர்களை பார்த்தால், தர்மம் செய்து
வாழ்வது போல்தான் இருக்கின்றது. ஆனாலும், என் பெயர் சொல்லி, சொல்லி
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையானவர்கள் யாரும் இங்கில்லை. நான்
சித்தன் என்று கூறிக்கொண்டிருந்தால், சித்தர்களே அவனை அழிப்பார்கள்.
அதனால். யாங்கள் போட்ட பிச்சையில்தான், நீங்கள் வாழ்ந்து கொண்டு
இருக்கிறீர்கள். அதனால் அப்பனே! எதையும், யான் செய்கின்றேன் என்று ஒரு
வார்த்தை கூட சொல்லிவிடாதீர்கள். அப்பனே, என்னை வைத்து பிறரை
ஏமாற்றிவிடாதீர்கள். பாவம் அது என்று கற்றுக்கொள்ளுங்கள். வாழக்
கற்றுக்கொள்ளுங்கள். எதனையும் கூறிவிடாமல் வாழ்வது நலம் என்பேன். அப்பனே,
உண்மையை கூறிவிட்டேன். நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள், வாழுங்கள்.
சனியின் பார்வை குறைவதும் இல்லை என்பேன். அதனால், எவை என்று கூற, சனியும்
நியாயாதிபதியாக இருந்து, நீதிபதியாக, அவன் ஆட்டத்தை தொடங்குவான். நான் என்ன
துரோகம் செய்துவிட்டேன், எனக்கு ஏன் வந்தது என்று கூட நீங்கள் ஆராயலாம்.
இஜ்ஜென்மத்தில் செய்த தவறுகளை ஆராயுங்கள். அதனால்தான் சனி தண்டனையை வாரி
கொடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனாலும், எம்மக்களை யான் காப்பாற்றுவேன்,
நிச்சயமாக. மறுபடியும் வாக்கை கூறுகின்றேன் - பத்து நாட்கள் பொருத்தே.
மனிதர்களின் கஷ்டத்திற்கு மனிதர்களே காரணம். யோசித்துப்பார் மனிதனே அகத்தியர் நல்முறையாக வாக்குகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இன்னும்
வரும் காலங்களில் பலவிதமான நோய்கள் வரும் என்ன விதமான நோய் என்று
தெரியாமலே போகும் அதற்கு போகன் ஆகிய மருந்துகள் உரைக்கின்றேன்.
அதன் பயன்படுத்தி நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
- கீழாநெல்லி
- அக்கரகாரம்
- மாசிக்காய்
- ஜாதிபத்திரி
இவற்றை நெய்யில் இட்டு ஐந்து கடுகளவு தினமும் உண்ண வேண்டும்.
- மலை நெருஞ்சி இலை
- முருங்கை இலை
- துளசி இலை
- புதினா இலை
- கறிவேப்பிலை
- காட்டுக் கொடித்தோடை
- குப்பைமேனி இலை
- கண்டங்கத்திரி இலை
- வில்வ இலை
இவற்றை இடித்து பொடித்து பனை வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வேண்டும்.
வாரம் ஒருமுறை மிளகு வெள்ளைப்பூண்டு உண்ண வேண்டும்.
இன்னும்
ஏராளமான மூலிகைகளை என்னால் உரைக்க முடியும் அவற்றைப் பயன்படுத்த
குருமந்திரம் தேவை ஆனால் அந்த குரு மந்திரம் சொல்லி விட்டால் மனிதன் அதை
பயன்படுத்தி காசு ஈட்டுவான்.
பொருள் சம்பாதிப்பதற்கு இதனை தவறான வழியில் பயன்படுத்துவான்.
இதனை தயார் செய்து வைத்திருந்தால் அவருக்கு குரு மந்திரம் தந்து உபதேசம் செய்வேன்.
இப்பொழுது குரு மந்திரம் கூறி விட்டால் அதனை பயன்படுத்தி மனிதன் காசாக்குவான்.
இவற்றை
நல்ல முறையில் அகத்தியர் பக்தர்கள் தயாரித்தால் அவர்களுக்கு குரு மந்திரம்
உபதேசம் செய்வேன். இந்த மருந்துகளை சேகரித்து பயன்படுத்துவதற்கும்
குருவின் திருவருள் தேவை குருவின் அருள் இல்லாமல் இதனை செய்ய முடியாது நல்
முறையாக செய்பவர்களுக்கு என்னுடைய குரு மந்திர உபதேசம் கொடுப்பேன்.
மனிதர்களை
நீங்கள் நேர்வழியில் நடப்பதுதான் உங்களுக்கு பலன் தரும் . மாயையில் சிக்கி
தவறு மேல் தவறு செய்யும் மனிதர்களுக்கு இனிவரும் காலம் கஷ்ட காலம் தான்.
அனைவரையும் பார்த்துக் கொண்டுதான்
இருக்கின்றேன். அவரவர் இஷ்டத்துக்கு ஏற்ப பணத்தைத்தான் மதிக்கின்றனர்.
ஆனாலும் நேரடியாக யான் வந்து நின்றாலும் அவன்தான் என்னையும் கண்டுகொள்வதே
இல்லை. இதற்குப் பெயர்தான் பக்தியா? பக்தி செலுத்த கோபங்கள், தாபங்கள்
விலக்க வேண்டும். என்றால்தான் என்னை அடையலாம்.
ஆனாலும் ஒருவர் கூட என்னை வேண்டும் என்று கேட்பதில்லை. ஒரு
இல்லோன் கூட இங்கு வந்து நிம்மதியாக வழிபட அனுமதிப்பதில்லை. அன்பை அன்றி
வேறு ஒன்றை யாங்கள் எதிர் பார்ப்பதில்லை.
இப்பிறவியிலேயே செய்த தவறுகளுக்கு தண்டனையை
இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்று விதி. யான் கட்டளை இட்டுவிட்டேன்
நவகிரகங்களுக்கு. நவகிரகங்கள் விடாது என்பேன். ஒவ்வொருவரும் மனசாட்சிப்படி
நடக்க நடக்க நன்மைகள் விளையும். தவறு செய்தால், அவன்தனுக்கு அப்பொழுதே
தண்டனையை யானே கொடுப்பேன் என்றேன்.
இதனையும்
(ராமேஸ்வரம்) பிடித்தமான ஸ்தலம் என்பதால், யானே தான் அமைத்துக் கொண்டேன்.
இதன் சரித்திரத்தை யாரும் சரியாக கணிக்கவில்லை என்பேன். எப்பொழுது ராமனும்
சீதையும் இங்கு வருவார்கள் என்பதும் எந்தனுக்கு தெரியும். சித்திரை
மாதத்தில் ராமனும், சீதையும் வந்து வணங்கி, பின் நல்முறையாய், இங்கே
உறைவார்கள். ராமனுக்கு விடிவுகாலம் இங்கிருந்துதான் ஏற்பட்டது என்பேன்.
இதனால், இறைவனை
பாடிப்பாடி தொழுதால் மட்டுமே, விடிவுகாலம் உண்டு என்பேன். வரும்
காலங்களில், பல குற்றங்கள் நடைபெறும் என்பேன். என்பேன்
மனமாற்றங்கள்
வேண்டாம் அப்பனே! அப்பனே, மனதுள், இறைவன் இருக்கின்றான் என்று பலமாக
பிடியுங்கள். இறைவன் இருக்கின்றான் என்று பிடித்தால் மட்டுமே, வரும்
காலங்களில் தப்பித்துக் கொள்ளமுடியும்.
என்றாலும், மனதைரியத்துடன், எது நடக்குமோ, அது நன்றாக நடக்கும் என்று இரு.
அனைத்தும் நன்மைக்கே. எதை இங்கு கொண்டு வந்தாய், கடைசியில் எதை கொண்டு
போகிறாய் என்று நினைத்தாலே, முக்தி நீ பெறுவாய். இதனுள்ளே வாழ்க்கையை
நன்றாக வாழ வேண்டும். வாழ வேண்டும், அதோடு நற்பண்புகளை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும். நற்பண்புகள் ஏற்படுத்தி, சில தீய வினைகள் அகல வேண்டும்.
அப்பனே!
ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன். நற்பண்பு, கருணை, இவை இருந்தால் மட்டுமே,
இவ்வுலகத்தில் இனி வாழ முடியும். பின் பொய், களவு, திருட்டு, பின் மனதை பல
வழிகளில் செலுத்தி விட்டீர்களானால், அழிந்து விடுவீர்கள். மனிதனை
அழிப்பதற்கு இங்கு யாரும் இல்லை. மனிதனை, மனிதன்தான் அழித்துக்
கொண்டிருக்கின்றான். இதுதான் உண்மை
ஒழுக்கமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். கற்றுக்
கொள்ளுங்கள். ஏதும் தேவை இல்லை. இறைவனை அன்பால் வணங்குங்கள். போதுமானது.
பொறுமை
காத்திருங்கள். அன்பு, கருணையோடு, பகைமை இல்லாமல் இறைவனை வணங்குங்கள்.
எல்லாமே நீதானப்பா இன்று இறைவனை நோக்கி வணங்குங்கள். போதுமானது.
இதனால்
அன்போடு அலையுங்கள். உங்களுக்கு தேவை எது என்று கூட எங்களுக்குத் தெரியும்.
நற்பண்புகளோடு இருந்தாலே போதுமானது. நாங்கள் ஓடோடி வருவோமப்பா.
அப்பா அகத்தீசா! எங்களுக்கு ஒன்றும் தெரியாது.
நீதான் அழைத்து செல்ல வேண்டும் என்று. அன்போடு வார்த்தை கூறும் யான், யான்
இருக்கின்றேன். அதை விட்டுவிட்டு, பின் காசுக்காக எதை எதையோ
செய்துவிட்டால், அப்பனே! நான் சொல்ல மாட்டேன், செய்துவிடுவேன். இப்பொழுது
கூட சொல்கின்றேன். யார் யார் எப்படி அழியப்போகிறீர்கள் இக்கலியுகத்தில்
என்று விளக்கமாக சொல்ல முடியும். கருணையோடு சொல்கின்றேன். பொய்,
பித்தலாட்டம் வேண்டாமப்பா! பொய் பித்தலாட்டமே அழிந்து விடும். ஏன்? உன்னை
மட்டும் அழிக்காது, பரம்பரையையை அழித்துவிட்டு போகும். தெரிந்து
கொள்ளுங்கள்.
உண்மை, நியாயம், தர்மம், அப்பனே உத்தமம், இவை போன்று, இதேபோன்று வாழ்ந்தால்தான் இனிமேலும் வாழ்க்கையை கடக்க முடியும் என்பேன்.
அதை
விட்டுவிட்டு பொய், பொய் கூறி அலைதல், ஏமாற்றுதல், பிறரை ஏமாற்றி பணம்
பறித்தல் இவையெல்லாம் செய்து கொண்டிருந்தால் அப்பனே பின் எவ்வாறு
என்பதையும் கூட பின் நீ அவனிடம் இருந்து பணம் பறித்தாயே அவன்தான் உயர்வானே
தவிர நீ ஏமாற்றப்படுவாய் கடைசியில்.
அப்பனே ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் வருங்காலங்களில் அப்பனே அவரவர் வினைக்கு ஏற்பவே கிரகங்கள் நிச்சயம் வேலை செய்யும் என்பேன்.
அப்பனே ஏமாற்றி விடாதீர்கள் ஏமாற்றி விடாதீர்கள்.
சித்தர்கள் பின் எப்பொழுதும்
பணத்திற்காக ஆசைப்படமாட்டார்கள் அப்பனே அப்பனே இவ்வுலகத்தில் சித்தர்கள்
வந்ததே அப்பனே பின் நல்வழிப்படுத்தி நல் ஒழுக்கமாக வாழ பின் வாழ்ந்து நல்
முறையாக பெயர் புகழும் வாழ்வதற்கே பின் ஏற்படுத்தி இருக்கின்றோம் யாங்கள்.
அப்பனே அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே எவை என்றும் கூட எங்கு பணம் அதிகம் இருக்கின்றதோ நிச்சயமாய் அங்கு யாங்கள் இருக்க மாட்டோம்.
அப்பனே
தர்மத்தைக் கடைப் பிடி அப்பனை அனைவரும் ஒன்றாக கடைபிடி பின் எவ்வாறு பின்
அனைவரும் சமம் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் சமம் என்ற
சொல்லுக்கு அப்பனே அப்பொழுதுதான் என்னுடைய அருளைப் பெற முடியுமே தவிர
அப்பனை மற்றவை எதைச் செய்தாலும் என் துன்பங்கள் தான் விளைவிக்கின்றேன்.
இப்பொழுதே
சொல்கின்றேனடா மனிதா மனிதா உணர்ந்துகொள் ஏமாற்றாதே பொறாமை கொள்ளாதே அப்பனே
என்னுடைய அடியவராக இருந்தாலும் பொறாமை கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள்
நிறையபேர் அப்பனே வேண்டாமாடா எச்சரிக்கின்றேன்.
அப்பனே
மனசாட்சி என்று ஒன்று இருக்கின்றது அதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
மனசாட்சிக்கு தகுந்தார் போல் நடந்தால் விளைவுகள் பலமாகும் என்பேன் அப்பனே
சித்தர்கள் யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம் அப்படி ஒன்றே ஒன்று
யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனை இனிமேலும் தவறு செய்தால் முதலில் நோயை
சிறிது ஏற்படுத்துவோம் அதன்பின்னே பலமாக்குவோம்.
அப்பனே நிச்சயமாய் விதியையும் என்னால் மாற்ற முடியும் அப்பனே தெரிந்துகொள்ளுங்கள்.
அன்பால் இறைவனை வணங்குங்கள் போதுமானது மற்றவை யான் செய்கின்றேன் அப்பனே அடுத்த வாக்கும் நல் முறையாக சொல்கின்றேன்.

இப்பதிவை
குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும்
பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும்.
அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை
பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை
கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம்
காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று
வருகின்றோம்
ஓம் குரு வழியே ஆதி ஆதி
ஓம் குரு மொழியே வேதம் வேதம்
ஓம் குரு விழியே தீபம் தீபம்
ஓம் குரு பதமே காப்பு காப்பு
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக :-