"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, September 7, 2021

மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் 186 ஆவது குரு பூஜை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சித்தர்கள் நம்மை வாழ்விக்க வந்தவர்கள். பார்ப்பதற்கு பித்தர்கள் போன்று தோன்றலாம். சிவத்தை ஜீவனில் உணரும் போது பித்தம் தெளிந்து சித்தம் வெளிப்படும். சிலர் குருவாக, சிலர் சற்குருவாக, சிலர் சத்குருவாக என வாழையடி வாழையாய் ஞானம் போதிக்க வருபவர்கள். சென்னையில் மட்டுமா சித்தர் பரம்பரை உள்ளது என்று நினைத்த நமக்கு தமிழ் நாடு என்ற அளவில் விரிந்து பார்த்தோம். அத்தனையும் தாண்டி பாண்டிச்சேரியில் இன்னும் உயிர்ப்பாக சித்தர்களின் அருளை உணர முடிகின்றது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சித்தர்களின் பாதம் பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. தமிழ்நாடு முழுதுமே ஞான பூமி. சிவ பெருமானின் 64 திருவிளையாடல் தமிழ் நாட்டில் தானே நடைபெற்றது. இதனால் தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்றும் போற்றி வருகின்றோம். 

இந்த வரிசையில் நாம் பல சித்தர்கள்,மகான்கள், ஞானியர்கள் தரிசனம் நம் தளத்தில் பெற்று வருகின்றோம். இன்றைய பதிவில் இன்று  (08.09.2021) 186 ஆவது குருபூஜை காணும் மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பற்றி அறிய இருக்கின்றோம். மகப்பேறுவுக்கும், குரு பரிகாரத்துக்கும் சிறந்த தலம் என்று நாம் அறிந்த செய்தியை இனி காண உள்ளோம்.



திருவாரூரில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமி கோவில் தேரும் கமலாலய குளமும் புகழ் பெற்றவை. ஆனால் திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் சித்தர் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதிமடம். இது திருவாரூர் நகரின் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.




ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பிறந்த ஊர் திருச்சி அருகே கீழாலத்தூர். பெற்றோர் சிவ சிதம்பரம் பிள்ளை - மீனாம்பிகை. சுவாமிகள் திருவண்ணாமலை ஈசனின் அருளால் பிறந்தமையால் 'அருணாசலம்' என்றே பெயர் சூட்டினர்.

அருணாசலத்திடம் குழந்தைகளுக்கே உண்டான எந்த குணங்களும் இல்லை. பல நேரங்களில் பத்மாசனம் அமர்ந்து நிஷ்டையில் மூழ்கி விடுவார். பிறந்த குழந்தை 5 வயதாகியும் பேசவில்லை! இதை குறித்து பெற்றோர் மிகவும் கவலை கொண்டனர்.

ஒருநாள் அவர்களது வீட்டுக்குத் ஒரு துறவி வந்தார். அவரிடம் பெற்றோர் தங்கள் கவலையை தெரிவித்தனர். முற்றும் உணர்ந்த அந்தத் துறவி, தவத்தில் ஆழ்ந்திருந்த சிறுவன் அருணாசலத்தை நோக்கி பெற்றோரை பேசச் சொல்கிறார்.

அவர்களும், 'மகனே! ஏன் கண்களை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கிறாய்?' என கேட்டனர்.
சிறுவன் அருணாச்சலம் முதல் முதலாக வாய் திறந்து, 'சும்மா இருக்கிறேன்!' என்றான்.
இப்பொழுது துறவி, 'சும்மா இருக்கின்ற நீ யார்?' என்று கேட்க, 'நானே நீ! நீயே நான்!' என்று பதிலளித்தான்.


வியந்துபோன பெற்றோரிடம் துறவி, 'இவன் ஊமை அல்ல! உலகை உய்விக்க வந்த மகான்!!' என்று கூறி விடைபெற்றார்.




சுவாமிகள் பள்ளியில் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, நிஷ்டையில் ஆழ்ந்து விடுவார்! ஆசிரியரை கேட்டால், 'படித்தாயிற்று' என்று கூறுவார். அதை சோதிக்க ஆசிரியர் கேட்கும் அத்தனை 
கேள்விக்கும் பதில் சொல்வார்!

ஒருமுறை ஆசிரியருக்கு வந்த ஆபத்தை முன்கூட்டியே சொல்லி காப்பாற்றுகிறார்! சுவாமிகளின் ஞானத்தை அறிந்த ஆசிரியர் அவர் முன் அமர மறுத்தார். இதனால் சுவாமிகளும் பள்ளியை துறந்தார்.
வீட்டையும் துறந்து, நாடெங்கும் பல இடங்களில் உலவி பல அற்புதங்களை நிகழ்த்தினார். பக்தர்களால் குரு தக்ஷிணாமூர்த்தி என்று பக்தியோடு வழங்கப்பட்டார்.





சுவாமிகளின் மகிமைக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம். சுவாமிகளின் பக்தர் அருணாசலம் என்பவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பந்தல் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, உயரமான இடத்திலிருந்து கீழே தவறி விழுகிறார். சாரத்தில் இருந்து அவர் நழுவும் போதே, 
'தட்சிணாமூர்த்திக்கு அபயம்!!!' என்று ஒலித்தார்.

அதே நேரத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் குளக்கரையில் அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தி சுவாமிகள், திடீரென தனது வலது கையை உயரத் தூக்கி, கனமான ஒரு பொருளை இறக்கி வைப்பது போல் வைத்து விட்டு, 'தட்சிணாமூர்த்தியை நம்பினால், தட்சிணாமூர்த்தி என்ன செய்வான்?' என்கிறார்.
இதை நேரில் பார்த்த அன்பர்களுக்கு பொருள் விளங்கவில்லை. மறுநாள் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து அன்பர் அருணாச்சலம் ஓடிவந்து சுவாமிகள் காலில் விழுந்து, 'சுவாமி, நேற்று 30 அடி உயரத்திலிருந்து விழுந்தும் எனக்கு எந்த அடியும் இல்லை! யாரோ தாங்கிப் பிடித்து தரையில் இறக்கி வைப்பதைப் போல உணர்ந்தேன்!' என்று கூறினார். அப்பொழுதுதான் சுவாமிகளின் மகிமை மற்றவர்களுக்கு விளங்கியது.
1835 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 12 ம் நாள் உத்திரம் நட்சத்திரம் புதன்கிழமை குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் அன்பர்களிடம், 'முடிந்தது! முடிந்தது!! முற்றிலும் முடிந்தது!!!' என்று கூறி அகண்ட பரிபூரண சச்சிதானந்த இறைவனுடன் கலந்தார்.


அனைத்து சித்தர்களையும் போற்றுவோம்.ஏனெனில் சித்தன் போக்கு சிவன் போக்கு சிவன் போக்கு அல்லவா? 

திருவாரூரில் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி இருக்கும் இடத்தை காட்டும் Google Map Link கீழே உள்ளது.



Sri Guru Dhakshinamurthy Mutt
Madappuram, Thiruvarur, Tamil Nadu 610001


மீள்பதிவாக:-

ஓம் ஸ்ரீ கருணானந்தேஸ்வராய நமஹ - சாது ஸ்ரீ கருணாம்பிகை - 51வது குருபூஜை விழா  - https://tut-temples.blogspot.com/2021/08/51.html

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 115 ஆவது அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/08/115.html

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_10.html

குருவே சிவம் - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_22.html

ஸ்ரீ போகர் சித்தர் குரு பூஜை - 07.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/07062021.html

சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகளின் 23-ஆம் ஆண்டு குருபூஜை - 07.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/23-07062021.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் 121 ஆவது குருபூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/121.html

அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் 184 ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/05/184.html

 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 22.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/22022021.html

பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை 13 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் - 28.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/13-28022021.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருமாலிருஞ்சோலை தரிசனம் பெறலாமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_19.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சோலைமலை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_88.html

சோலைமலை வந்து கந்த பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_20.html

 களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_23.html

இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html 

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

 ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_28.html

ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_90.html

இன்றைய சித்திரை திருவாதிரையில்... விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_78.html


வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

No comments:

Post a Comment