"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, September 19, 2021

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 21.09.2021 முதல் 06.10.2021 வரை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மகாளய  பட்சம் மிக மிக முக்கியமான வழிபாடு ஆகும். இன்றைய புரட்டாசி  மாத பௌர்ணமிக்கு பின்னர் நாளை முதல் மகாளய  பட்சம் வருகின்றது. நம்முடைய ஆதி வழிபாடாக முழுமதி வழிபாடும், மறைமதி வழிபாடும் நிறைந்து இருக்கின்றது.  அதான் பௌர்ணமி வழிபாடும், அமாவாசை வழிபாடும் ஆகும். பௌர்ணமி வழிபாடாக அண்ணாமலை கிரிவலம் நாம் சென்று வருவது வழக்கம். சென்ற ஆவணி பௌர்ணமியும் கிரிவலம் சென்று ,ஒவ்வொரு லிங்கத்திலும் தூய பசு நெய் கொண்டு விளக்கேற்றி, லோக ஷேமத்திற்காக வேண்டிக்கொண்டு வந்தோம். அடுத்து அமாவாசை வழிபாடு என்று பார்த்தோமானால் நாம் நம் தளம் சார்பில் செய்து வரும் மோட்ச தீப வழிபாடு ஆகும். ஆனால் குருவின் அருளாணைப்படி கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோட்ச தீப வழிபாடு நடத்தப்பட வில்லை என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனால் வழக்கம் போல் அன்னசேவை போன்ற ஏனைய சேவைகள் தொடர்ந்து வருகின்றது. 

தர்மம்

ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மூன்றும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது. பௌர்ணமி வழிபாடு குறிப்பாக இல்லறத்தின் தேவைகளுக்காக செய்ய வேண்டிய ஒன்றாகும். அமாவாசை வழிபாடு முக்தி போன்ற மறைபொருள் தேவைகளுக்கு செய்ய வேண்டியது. அதற்காக அமாவாசை வழிபாடு பற்றி அஞ்ச வேண்டாம். நம் முன்னோர் அருள், பித்ரு தோஷம் போன்றவற்றிற்கு அமாவாசை வழிபாடு சிறப்பாக அமைகின்றது.

நம்மைப்  பொறுத்தவரை அமாவாசை வழிபாடு நம் TUT குழுவின் உதவியின் மூலம் அன்னதானமாக நடைபெற்று வருகின்றது. முதலில் நாம் அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் துணையோடு அன்னதானம் செய்ய ஆரம்பித்தோம். கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் செய்த அன்னதானம், பின்பு சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் விரிந்தது. சென்ற மாதம் சைதையில் செய்தோம். இந்த மாதம் சென்னையை விட்டு, எம்பிரான் அருளும் திருஅண்ணாமலையில் செய்தோம். அனைத்தும் குருவருளால் மட்டுமே. நாம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. ஆனால் நடப்பவை அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இது அன்னதானத்தில் மட்டும் அன்று, உழவாரப் பணி ஆகட்டும், அகத்தியர் ஆயில்யம் பூஜை ஆகட்டும், தல யாத்திரை ஆகட்டும். அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு தொடங்கிய அன்னதான சேவை, நம் குழுவின் உறவுகளால், அமாவாசையில் செய்தாலும் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, அமாவாசை தோறும் அன்னசேவை எங்களால் முடிந்த ஒரு 10 பேருக்கு செய்து வருகின்றோம். இதோ அடுத்து புரட்டாசி   அமாவாசை வரப் போகின்றது. மறந்தவர்களுக்கு மகாளய  பட்சம் என்று பொதுவாக சொல்வார்கள். 

இன்னும் சற்று ஆழ்ந்து பார்க்கலாமா?

21.09.2021 முதல்  16.10.2021 வரை மகாளய  பட்சம் வருகின்றது. மகாளயம்' என்றால் பெரிய கூட்டம் என்று பொருள்.மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் காலமே(நேரமே) மகாளய பட்சம் ஆகும்

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள்,பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையை மகாளயம், மஹாளயம், மாவுளி அமாவாசை எனக்கூறுவர். 

அமாவாசைகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது இந்த மகாளயம் தான்.  மா என்றால் மிகப்பெரியது என்று பொருள் அதனால் தான் நம் முன்னோர்கள் மகாளயம் என்றார்கள். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். கடக்க முடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன் போல பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கும். 

எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக் கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் பாதுகாப்பு கவசத்துக்கு ஒப்பாகும். ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது.

பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களை குறிப்பதாகும்.மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும். மகான்கள் பாதி மாதம் பூமியில் வந்து வாழுகின்ற காலம் என்பதை மகாளயபட்சம் என்று கூறுகிறார். இந்நாள்களில் இறந்து போன முன்னோர்கள் ஆவி ரூபத்தில் கோயில்களின் தீர்த்தங்களில் நீராடி தங்களுடைய சக்திகளைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் சந்ததியினர் வாழிடங்களுக்குச் சென்று தங்களுக்கு அவர்கள் அளிக்கும் உணவினை ஏற்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.  

அதனால் இந்த நாள்களில் நீர்த்தார் நீர்கடன் அளிப்பதையும், வழிபடுவதையும் இந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதினைந்து நாள்களில் மாளய அமாவாசை முக்கிய நாளாகும்.

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும். மஹாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 2ம் தேதி பிரதமை திதியில் இருந்தே பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிக்கத் தொடங்கலாம். ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது. 

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் 
சேர்கின்றன. 

மகாளய பட்சத்தின் போது ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள்.

தர்ப்பணம் ஆரம்ப நாள் 21.09.2021 (செவ்வாய்க்கிழமை)



முதலாம்  நாள் - பிரதமை_பணம் சேரும்

இரண்டாம்  நாள் - துவிதியை_மகப்பேறு

மூன்றாம் நாள் - திரிதியை_நினைத்தது நிறைவேறுதல்

நான்காம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்

ஐந்தாம் நாள் - பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்

ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்

ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்

ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.

பத்தாம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.

பதினொன்றாம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி

பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்

பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.

பதினைந்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

இனி சென்ற ஆண்டில்  மகாளய பட்ச சேவையில் குருநாதர் அருளால் பணிக்கப்பட்டதை இங்கே பகிர விரும்புகின்றோம்.நாம் பெற வேண்டும் என்றால் கொடுத்துப் பழக வேண்டும். இதனை தான் நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் செய்து வருகின்றோம்.


தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் அடிநாதம் அன்னசேவை தான். ஆம். முதன் முதலில் நாம் அன்னசேவை செய்து தான் நம் குழுவை ஆரம்பித்தோம். இன்று உழவாரப்பணி, மோட்ச தீபம், ஆலய தரிசனம், ஜீவ நாடி சேவை, மலை யாத்திரை, சமூக சேவை, தீப எண்ணெய் சேவை என பல வழிகளிலும் நாம் தானம் செய்து வருகின்றோம். சென்ற ஆண்டில்  மகாளய பட்ச சேவையில் தினமும் அன்னசேவை குறைந்தது 10 நபர்களுக்கு செய்து வருகின்றோம். அதனை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.

02.09.2020 - 1 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

தக்காளி சாதம், கேரட், முட்டைக்கோஸ் பொரியல்

                                          





03.09.2020 - 2 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

 பசுவிற்கு அகத்தி கீரையும், வாழைப்பழமும்






04.09.2020 - 3 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 


12 அன்பர்களுக்கு பிசிபேலாபாத் இன்று மதியம் வழங்கினோம். 






05.09.2020- 4 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 


1. இன்றைய மகாளயபட்ச அன்னசேவை கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதியில் 21 அன்பர்களுக்கு காலை உணவாக குருவருளால் வழங்கினோம். 

2. அடுத்து நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் தரிசனம் பெற்றோம். இங்கு பித்ரு பூஜை, சிரார்த்தம் பொது சங்கல்பம் ஏற்கவில்லை. விரைவில் தனியாக இது பற்றிய செய்தி தருகின்றோம். 

3. அடுத்து செங்கல்பட்டு அகத்தியர் ஞான கோட்டத்தில் ஸ்ரீ அகத்திய பெருமான் தரிசனம் பெற்று, அடுத்த ஞாயிற்றுக் கிழமை அன்னசேவைக்கு நம் தளம் சார்பில் ரூ.2000 /- கொடுத்துள்ளோம். 






06.09.2020 - 5 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 


1. இன்றைய மகாளயபட்ச அன்னசேவை கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதியில் 12 அன்பர்களுக்கு காலை உணவாக குருவருளால் வழங்கினோம். 

2. அடுத்து பால்காரர் ஒருவருக்கு 50 கிலோ மாட்டுத் தீவனம் குருவருளால் வழங்கினோம்







07.09.2020 - 6 ஆம் நாள் மகாளய பட்ச சேவை

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 10 அன்பர்களுக்கு காலை உணவாக 4 இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி என வழங்கினோம்.மேலும் 3 அன்பர்களுக்கு குடை தானம் குருவருளால் செய்தோம். இதில்  ஒருவர் குப்பை பொறுக்குவதாக கூறி, நம்மிடம் உணவும், குடையும் பெற்றார். இரண்டாவதாக இஸ்திரி போடும் அன்பருக்கு குடை மட்டும் வழங்கினோம். அவர் தம் கடைக்கு பெரிய அளவில் குடை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். நாமும் வாங்கி தருவதாக கூறியுள்ளோம். மூன்றாவது செருப்பு தைக்கும் அன்பர் ஒருவருக்கு வழங்கினோம்.அவர் நமக்கு நன்றி தெரிவித்து, அப்போதைய வெயிலில் குடை பிடிக்க ஆரம்பித்து விட்டார்.

                                                                                                                                                                                                  










08.09.2020 - 7ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 11 அன்பர்களுக்கு காலை உணவாக 2 தோசை, 1 வடைகறி என வழங்கினோம்.





09.09.2020 - 8 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 11 அன்பர்களுக்கு மதிய உணவாக தயிர் சாதம், ஊறுகாய் என வழங்கினோம்.

இன்று காலையில் கோமாதாக்களுக்கு அகத்திக்கீரையும், வாழைப்பழங்களும் கொடுத்தோம்






10.09.2020 - 9 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 12 அன்பர்களுக்கு காலை உணவாக புளியோதரை சாதம், உருளைக்கிழங்கு சிப்ஸ் என வழங்கினோம்.

மாடம்பாக்கம் ஆதனூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு தேவைப்படும் பொருள்கள் கேட்டு உள்ளோம். விரைவில் நம் தளம் சார்பில் அந்த பொருள்கள் வாங்கி அங்கே கொடுக்க உள்ளோம்







11.09.2020 - 10 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 20 அன்பர்களுக்கு 4 இட்லி,சாம்பார், கேசரி
 என வழங்கினோம்.இவை நேற்று வல்லக்கோட்டை முருகன் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், காஞ்சி ஏகாம்பரஸ்வரர் கோவிலில் குருவருளால் வழங்கப்பட்டது. 

மேலும் கிளார் ஶ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் தீப எண்ணெய் தானமாக இலுப்பெண்ணெய் டின் ஒன்றும், பூசைப் பொருட்களாக வஸ்திரம், திருநீறு,மஞ்சள்,பன்னீர், அபிஷேகப் பொடி என வழங்கினோம். நம் குழு அன்பர்கள் அனைவருக்கும் பிரார்த்தனை செய்தோம்

இதே போன்று பூசைப் பொருட்கள் தூசி அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில் நேற்று வழங்கினோம். நேற்று அங்கே நடைபெற்ற ஶ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கல்யாணத்தில் பங்கு பெற்று ஆசி பெற்றோம். நாம் கொடுத்த வஸ்திரத்தை திருக்கல்யாண தம்பதியினர் கிரீடமாக அணிந்ததை கண்டு மகிழ்ச்சியுற்றோம்.
 











12.09.2020 - 11 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 10 அன்பர்களுக்கு 4 இட்லி, சாம்பார் என கூடுவாஞ்சேரி பகுதியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கினோம்.மேலும் இன்றைய சேவையில் பசுவிற்கு வாழைப்பழமும், அகத்திக் கீரையும் கொடுத்தோம்.





13.09.2020 - 12 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 10 அன்பர்களுக்கு 4 இட்லி, சாம்பார் என கூடுவாஞ்சேரி பகுதியில் அன்பர்களுக்கு  வழங்கினோம்.மேலும் செங்கல்பட்டு ஸ்ரீ அகத்தியர் ஞானக் கோட்டம் சென்று குருநாதரை வணங்கி, அங்கே ஒரு குடையும், ஒரு போர்வையும் நம் தளம் சார்பில் அன்பருக்கு கொடுக்க கூறியுள்ளோம்.

                                                                                                                                                                                                  





மேலும் இன்றைய செங்கல்பட்டு ஸ்ரீ அகத்தியர் ஞானக் கோட்டத்தின் அன்னதான சேவையில் நம் தளம் சார்பில் ஏற்கனவே சிறு தொகை கொடுத்து இருந்தோம்.





இதே போன்று இந்த ஆண்டும் நாளை முதல் நம் தளம் சார்பில் மகாளய பட்சம் குருவருளால் செய்ய உள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் இந்த தொண்டில் இணைய வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 02.09.2020 முதல் 17.09.2020 வரை - https://tut-temples.blogspot.com/2020/09/02092020-17092020.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html

பித்ரு தோஷம் நீங்க - நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/09/blog-post_7.html

மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

 பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

 தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

2 comments:

  1. ஓம்நமசிவய ஓம்அகத்தீசாயநம வாழ்கவளமுடன்

    ReplyDelete